text stringlengths 0 2.93k |
|---|
என் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி |
சில நாழிகை நீ வந்து போனது |
என் மாளிகை அது வெந்து போனது |
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே |
(மின்னலே............) |
கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே - உன் |
கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே |
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே - இங்கு |
சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே |
கண்ணீரில் தீவளர்த்துக் காத்திருக்கிறேன் - உன் |
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன் |
(மின்னலே............) |
பால்மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா - ஒரு |
பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா |
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா - நான் |
காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா |
கண்ணீரில் தீவளர்த்துக் காத்திருக்கிறேன் - உன் |
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன் |
(மின்னலே.........) |
ரகசிய கனவுகள் |
இவன் பேரை சொல்லும் போது- எந்திரன் |
சின்ன சின்ன தூரல் வந்து |
என்னை பந்தாடப் |
காதல் வந்தால் சொல்லி |
காதல் வந்தால் சொல்லி அனுப்பு |
உயிரோடிருந்தால் வருகிறேன் |
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய |
கரையில் கரைந்து கிடக்கிறேன் |
சுட்ட மண்ணிலே மீனாக |
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி |
(சுட்ட) |
கண்ணீர் கலந்து, கண்ணீர் கலந்து |
கடல் நீர் மட்டும் கூடுதடி |
(காதல் வந்தால்...........) |
உயிரைத் தவிர சொந்தம் இல்லையே |
காதலிக்கும் முன்பு |
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே |
காதல் வந்த பின்பு |
சாவை அழைத்துக் கடிதம் போட்டேன் |
காதலிக்கும் முன்பு |
ஒரு சாவைப் புதைக்க சக்தி கேட்கிறேன் |
காதல் வந்த பின்பு |
உன்னால் என் கடல் அலை உறங்கவே இல்லை |
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை |
கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும் |
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி |
உன் இறுக்கம் தான் என் உயிரைக் கொல்லுதடி.. கொல்லுதடி |
(காதல் வந்தால்..............) |
பிறந்த மண்ணை அள்ளித் தின்றேன் |
உன்னைக் காணும் முன்பு |
நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன் |
உன்னைக் கண்ட பின்பு |
அன்னை தந்தை கண்டதில்லை நான் |
கண் திறந்த பின்பு |
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் |
உன்னைக் கண்ட பின்பு |
பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை... |
அதற்குள் அது முடிவதா? விளங்கவே இல்லை.. |
நான் கரையாவதும், இல்லை நுரையாவதும் |
வளர் பிறையாவதும், உன் சொல்லில் உள்ளதடி... |
உன் இறுக்கம் தான் என் உயிரைக் கொல்லுதடி... கொல்லுதடி |
என்னவளே அடி |
என்னவளே அடி என்னவளே |
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் |
எந்த இடம் அது தொலைந்த இடம் |
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் |
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று |
உந்தன் காலடி தேடி வந்தேன் |
காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று |
உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன் |
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து |
இரு கண்விழி பிதுங்கி நின்றேன் |
(என்னவளே.................) |
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் |
இன்று வசப்படவில்லையடி |
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா |
ஒரு உருண்டையும் உருளுதடி |
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் |
ஒரு நிமிஷமும் வருஷமடி |
கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல் |
ஒரு கலக்கமும் தோன்றுதடி |
இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி |
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும் |
உன் வார்த்தையில் உள்ளதடி |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.