text
stringlengths
0
2.93k
எங்கே போவேனோ, என்னை வார்த்தையில் கொன்றுவிட்டால்
தீராது வானின் வழி
எதிர்க்காற்றில் போகும் கிளி
இரை தேடி வாடும் வலி
கூடென்று காட்டும் விதி
பந்தாடுதே, என்னை வாழ்தலின் நியாயங்கள்
சம்பாதித்தே தீருமோ ஜென்மம்
கொலை போல தானா, பெண்கள் வீசிடும் வார்த்தையும்
வழிகின்றதே துக்கம் தான்..
….நீ என்னை நீங்கிவிட்டால்
எங்கே போவேனோ, என்னை வார்த்தையில் கொன்றுவிட்டால்
தெய்வங்கள் இங்கே இல்லை
இருந்தாலும் இரக்கம் இல்லை
கழுத்தோடு கல்லை கட்டி
கடலோடு போட்டாள் என்னை
மரணத்தை தானா, இந்த காதலும் கேட்குது
பொய் வேஷமே உள்ளதே எங்கும்
இல்லாமை தானா, இங்கு காதலை மாய்ப்பது
என் சூழ்நிலை கொல்லுதே ..
….நீ என்னை நீங்கிவிட்டால்
எங்கே போவேனோ, என்னை வார்த்தையில் கொன்றுவிட்டால்
கூண்டுக்குள் இருக்கும் பறவை நான்.. என் கண்ணிலே
ஒரு துண்டு வானம், நீதானடி..
எங்கே போவேனோ, என்னை வார்த்தையில் கொன்றுவிட்டால்
ஆண்: எப்படி இருந்த என் மனசு
அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா
பெண்: எப்படி இருந்த என் வயசு
அடி இப்படி மாறிப் போகிறது
உன் சொற்களில் என்ன சக்கரை இருக்கிறதா
ஆண்: உனது சிரிப்பின் ஒலியில் எனது
இளமை தவிக்கிறதே
பெண்: அலையும் உனது விழியை பார்த்தால்
பயமாய் இருக்கிறதே
ஆண்: அரிது அரிது இளமை அரிது விலகி போனால் நியாயமா
மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது (எப்படி இருந்த...)
(இசை...)
ஆண்: ஏய் சொட்டு சொட்டுத் தேனா நீ நெஞ்சில் விட்டுப் போனா
ஏங்குது என் மனம் துள்ளி துள்ளி தானா
பெண்: திட்டு கிட்டு வேணாம் ஏய் தில்லு முல்லு வேணாம்
தொட்டதும் பால்குடம் கெட்டு போகும் வீணா
ஆண்: அழகு என்பதே பருகத் தானடி
எனது ஆசைகள் தப்பா
பெண்: நெருங்கும் காலம்தான் நெருங்கும் நாள் வரை
நினைத்துக் கொள் எனை நட்பா
ஆண்: இரவோ பகலோ கனவோ நிஜமோ எதிலும் நீயே தானடி
மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது
(இசை...)
ஆண்: ஏய் கிட்ட வந்து நின்னா அது குற்றம் என்று சொன்னா
ஏனடி நீ ஒரு தீயில் செய்த பெண்ணா
பெண்: கொக்கு வந்து போனா அட நெஞ்சம் சொல்லும் தானா
சிக்கிட நான் ஒரு புத்தி கெட்ட மீனா
ஆண்: முறுக்குப் போலவே இருக்கும் காதுகள்
கடிக்கத் தூண்டுதே அன்பே
பெண்: துடுப்புப் போலவே இருக்கும் கைகளால்
அடிக்கத் தோன்றுதே அன்பே
ஆண்: நடையோ உடையோ ஜடையோ இடையோ
எதுவோ என்னைத் தாக்குதே
மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது
ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காராா
குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் ஜோட்டுக்காரா
யே ஏட்டி என் கோட்டிக்காரி
அடி ஏலா என் வேட்டைக்காரி
குத்தால சாரல் போல்