category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | கூட்டுறவு மேலாண்மையில் எம்.பி.ஏ., கேட்டரிங் பயிற்சி | மதுரை: மதுரை திருநகரில் உள்ள பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.காம் (சி.ஏ.,) மற்றும் கேட்டரிங் பயிற்சிக்கான விண்ணப் பங்கள் வினியோகிக்கப்படுகின்றன.
வாரத்தில் சனி, ஞாயிறுகளில் பாடம் நடத்தப்படுகிறது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ., செமஸ்டர் கட் டணம் 10 ஆயிரம் ரூபாய், பிற படிப்புகளுக்கான செமஸ்டர் கட... |
தமிழகம் | இலவச காப்பீட்டுத் திட்டம்முகாம் நடக்குமிடங்கள் | மதுரை: அரசின் இலவச காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இரண்டாம் சுற்றில் சிறப்பு முகாம் நடக்கும் இடங்கள் வருமாறு : ஜூலை 26ல் முடுவார் பட்டி மற்றும் கைத்தறி நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஜூலை 29ல் ஏ. வெள்ளாலபட்டி, சாப்டூர், 30 ல் காஞ்சரம்பேட்டை, விக்கிரமங்கலம், ஜூலை 31 ல் தும்பைபட்டி, எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாத... |
தமிழகம் | கொட்டாம்பட்டியில் சிறுவன் மீட்பு | கொட்டாம்பட்டி: ராமநாதபுரம் மாவட் டம் வெளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லாடசாமி. இவரின் மனைவி முருகேஸ்வரி. இவர் களுக்கு கார்த்திக் (14), முத்துக்குமார்(12) ஆகிய குழந்தைகள் இருந்தனர்.
லாடசாமி குடித்துவிட்டு தினமும் முருகேஸ்வரியை அடித்ததால் அவருடன் வாழவிரும்பாமல் கடந்த மாதம் தெம்மாங்குடியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் ... |
தமிழகம் | கோவிலாங்குளம் ஊராட்சி தலைவர் தேர்தல் முடிவு | செக்கானூரணி: செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத் தேர்தல் ஜூலை 22ல் நடந்தது. ஜெயராஜ், காசிமாயன், அன்பழகன் ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தேர்தல் அலுவலர் கோமதிநாயகம் தலைமையில் காலை 8 மணிக்கு எண்ணிக்கை துவங்கியது.
இதில் 926 ஓட்டுகள் வித்தியாசத்... |
தமிழகம் | பொதுக்குழு கூட்டம் | மதுரை: மதுரையில் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கள் கழக, பொதுக் குழு கூட்டம், மாவட்ட தலைவர் பவுன்ராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்தில் நேரடி நியமன முறையை நீக்குதல், தேர்தல் தொடர்பான பணிகளை தலைமையாசிரியர் களுக்கு வழங்கக்கூடாது, என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள் பசீர் அகமதுகான், மாசான... |
தமிழகம் | பக்தர் பேரவை கூட்டம் | மதுரை: மதுரையில் திருக்கோவில் பக்தர் பேரவை கூட்டம், மாநில பொதுச் செயலாளர் சுந்தரவடிவேல் தலைமையில் நடந் தது. மீனாட்சி கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் உழவாரப்பணிகளை நடத்துதல், பேரவையில் அதிக உறுப்பினர் களை சேர்த்தல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் வெயில் முத்து, செல்வகுமார், ச... |
தமிழகம் | சங்க கூட்டம் | மதுரை: மதுரையில், கல்லுபட்டி மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு சங்க கூட்டம் நடந்தது. செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் முருகேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வெற்றிவேல் முருகன், மாவட்ட தலைவர் சுப்பையா, கல்லுபட்டி ஒன்றிய செயலாளர் தங்கவேல் பங்கேற்றனர். கல்லுபட்டி பகுதியில் சாக்கடை வசதி ஏ... |
தமிழகம் | யோகாவால் இளமையோடு வலம் வரும் 80 வயது இளைஞர் பயிற்சி | கிருஷ்ணகிரி: யோகா மற்றும் கட்டுப்பாடான உணவு பழக்க முறை காரணமாக தனக்கு வந்த ஆஸ்துமா, கேன்சர் உள்ளிட்ட நோய்களை விரட்டி 80 வயதிலும் இளைஞர் போல் கிருஷ்ணகிரி சேர்ந்த முதியவர் வலம் வருகிறார்.கால சக்கரத்தின் வேகத்தில் இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் வேலைக்கு செல்வோர் தங்கள் கால்களில் சக்கரத்தை கட்டி கொண்டது போல் பரபரப்புடன் கால... |
இந்தியா | 10 ஆயிரம் படுக்கை விரிப்புகள் காணிக்கை | நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக, 10 ஆயிரம் படுக்கை விரிப்புகளை பாம்பே டையிங் நிறுவனம் காணிக்கையாக அளித்துள்ளது.திருமலையில் பக்தர்கள் தங்கும் ராம்பகீசா, சப்தகிரி, வராகசுவாமி, சுதர்சன் விடுதிகளில் படுக்கை விரிப்புகள் இல்லை. இதனால் குளிர்காலத்தில் பக்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.பக்... |
தமிழகம் | மின் வாரியத்திற்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தல் | மதுரை: மதுரையில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஏ.ஐ.டி.யூ.சி., அமைப்பின் மாநில மாநாடு 2 நாட்கள் நடந்தது. மாநில பொதுசெயலாளர் கணேசன் தலைமை வகித்தார். சண்முகையா பாண்டியன், பாலசுந்தரம் முன்னிலை வகித்தனர். தங்கப்பாண்டியன் வரவேற்றார். சி.ஐ.டி.யூ., பொதுசெயலாளர் பிச்சை, டி.யூ.சி.சி., இந்திய தலைவர் சிவசங்கர், பொதுசெயலாளர் திவாரி ... |
தமிழகம் | மாற்று திறனாளிகளுக்கு நிதி | மதுரை: மதுரை மாவட்ட தாட்கோ மூலம் இந்து ஆதிதிராவிட உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் புரிய தேவையான பொருட் களை வாங்க, 10 ஆயிரம் ரூபாய் முழுமானியம் வழங்கப்பட உள்ளது. மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் இந்நிதி வழங்கப்படும்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 18 வயது முதல் 45 வயதுக்குட்பட... |
தமிழகம் | மேற்கு மண்டல குறை தீர் கூட்டம் | மதுரை: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல மக்கள் குறை தீர் கூட்டம், மேயர் தேன்மொழி தலைமையில், கமிஷனர் செபாஸ்டின், துணை மேயர் மன்னன் முன்னிலையில் நடந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குடிநீர், பாதாள சாக்கடை, தெரு விளக்கு வசதிகள் கேட்டு, பொதுமக்கள் மனு கொடுத்தனர். ""பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புகளை விரைந்து பெற்றுக்கொ... |
தமிழகம் | சங்க நிர்வாகிகள் தேர்வு | மதுரை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பேரையூர் கிளை கூட்டம் சவுந்திர பாண்டியன் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் நாகையன், செயலாளர் கூடலிங்கபெருமாள், துணைத் தலைவர் மூக்கையா, நிர்வாகிகள் பாண்டியன், ராஜமாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர். பேரையூர் கிளை சங்கத்திற்கு சவுந்திரபாண்டியன் தலைவராகவும், அன்னகுமார் செயலாளராகவு... |
தமிழகம் | தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம் | உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் நெடுமாறன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் பிரிவு தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் சுந்தரராஜன் மற்றும் மாவட்ட ,ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்த... |
தமிழகம் | நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் | மதுரை: மதுரை மேற்குபொன்னகரம் நுகர்வோர் பாதுகாப்பு மைய கூட்டம் நடந்தது. டாக்டர் ஜெகதீஸ்வர் தலைமை வகித்தார். டாக்டர் லத்தீப் சத்தார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தீயணைப்பு நிலையங்களில் சுழல் ஏணிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சினிமா தியேட்டர்களில் குளிர்சாதனம், குடிநீர... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | மேலூர்: வீட்டு மனை பட்டா கோரியும், நயத்தான்பட்டி ஏழைகாத்தம்மன் நகரில் குடியிருக்கும் மக்களை மிரட்டி நில ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மா. கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலூர் பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட குழு உறுப்பினர் அடக்கி வீரணன் தலைமை வகித்தார். நன்... |
தமிழகம் | கீதை திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி | மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெற்காடிவீதி தெய்வநெறிக்கழகம் சார்பில், பள்ளி, கல்லூரி, மாணவ மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, கீதை பாராயணம், குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. பள்ளியளவில், திருவாசக, சிவபுராண பாராயணம், ஸ்ரீமத் பகவத்கீதை 2 வது அத்தியாயம் ஒப்புவித்தல் போட்டி ஆக.18, 19 ல் நடைபெற உள்ளது.
ஒன்று முதல் ... |
தமிழகம் | சிமென்ட் ஆலைக்கு மதுரை பிளாஸ்டிக் கழிவுகள் | திருநகர்: மறுசுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக பயன்படுத்த ராம்கோ சிமென்ட் தொழிற்சாலையில் புதிய இயந்திரம் அமைக்கப்பட்டு, நேற்றுமுதல் செயல்பட துவங்கியது. ஐந்து மாவட்டங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் நேற்று அங்கு கொண்டு செல்லப்பட்டன. மதுரை மாவட்டத்தில் உள்ள 12 பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மூன்று ... |
தமிழகம் | கோழிப்பண்ணையாளர் போராட்டம் வாபஸ் | கோவை: ஒரு கிலோ கறிக்கோழிக்கு ரூ.3.25 விலை தருவதாக, சுகுணா நிறுவனம் உறுதி கூறியதால், கறிக்கோழி வளர்ப்பு சங்கத்தினர் நேற்றிரவு போராட்டத்தை கைவிட்டனர். ஒப்பந்த அடிப்படையில் கறிக்கோழி வளர்க்கும் பண்ணையாளர்கள், சுகுணா நிறுவனத்திடம் கிலோ கறிக்கோழிக்கு இரண்டு ரூபாய் பெற்றுவந்தனர். அதை உயர்த்தி வழங்கக்கோரியும், அதை சுகுணா நிறு... |
தமிழகம் | மராத்தி மொழியில் கணக்கெடுப்பு படிவம்:பல்லடம் நகராட்சியில் அதிர்ச்சி | பல்லடம்:பல்லடம் நகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்கான படிவம் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்காக கூடுதலாக தருவிக்கப்பட்ட படிவம் தமிழில் இல்லாமல், முழுக்க முழுக்க மராத்தி மொழியில் இருப்பதால் பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பல்லடம் நகராட்சிப் பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி கடந்த... |
தமிழகம் | பனிமய மாதா பேராலய திருவிழா நாளை துவக்கம் | தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக, தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்றது தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம். மிகப்பழமை வாய்ந்த இதன் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடக்கும். இந்தாண்டிற்கான திருவிழா, நாளை த... |
தமிழகம் | மாற்றுத்திறனாளியை மணந்த இளம்பெண் | அவிநாசி:திருமணம் செய்து கொண்டு வாழ, நல்ல மனம் இருந்தால் போதும். ஊனம் ஒரு தடையல்ல என்பதை உணர்த்தும் விதமாக இரு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளியை இளம்பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவிநாசி அருகே சென்னிமலைக்கவுண்டன்புதூர் - ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த ஷேக் முஹமதுவின் மூன்றாவது மகன் ரியாஸ்பாபு (22). இரண்டு வயதில்... |
தமிழகம் | பாசனப்பகுதியில் மினரல் வாட்டர் தொழிற்சாலை | உடுமலை:அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம் மூலம் பயன்பெறும் 5 ஆயிரம் ஏக்கர், இருபோக நஞ்சை நிலங்கள் பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் மினரல் வாட்டர் தயாரிப்பு தொழிற்சாலையை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.உடுமலை தாசில்தார் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள... |
தமிழகம் | உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டி:வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் | உடுமலை:உடுமலை ஒன்றியத்திலுள்ள இரண்டு ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது.உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு கடந்த 3ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. உடுமலை ஒன்றியத்தில் ஐந்து ஊராட்சிகளில், ஆறு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பு மனு பெறப்பட்டது. இதில், நான்கு வார்டு உற... |
தமிழகம் | அவிநாசி அருகே 2,500 கோழிகள் பரிதாப சாவு | அவிநாசி:அவிநாசி அருகே கோழிப்பண்ணையில் 2,500 கோழிகள் திடீரென்று இறந்தன.அவிநாசி ஒன்றியம், ஆலத்தூர் துண்டுக்காட்டை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் தனது தோட்டத்தில் ஒன்பது பண்ணை அமைத்து 20 ஆயிரம் கோழிகளை வளர்த்து வருகிறார். இன்னும் ஓரிரு தினங்களில் கோழிகளை, தனியார் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய நிலையில், நேற்று முன்தினம் மதியம் ... |
தமிழகம் | வேளாண் பல்கலையை சுற்றி 37 கண்காணிப்பு கேமராக்கள் | கோவை:கோவை வேளாண் பல்கலையை, துணைவேந்தரின் அறையில் இருந்தபடி கண்காணிக்க, 37 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.கோவை வேளாண் பல்கலையில் பல்வேறு ஆராய்ச்சிப் படிப்புகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் வேளாண் வளர்ச்சி பணிகள் மற்றும் முக்கிய ஆராய்ச்சித் திட்டங்கள் இங்கு நடைபெறுவதால், பல்கலை வளாகத்தின் செயல்பாடுகள், பல்கலையிலும் ... |
தமிழகம் | பஸ் கண்ணாடி உடைப்பு :இருவருக்கு வலை | அன்னூர்:அன்னூரில் அரசு பஸ் கண்ணாடியை கல் வீசி உடைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஊட்டியிலிருந்து அரசு போக்குவரத்து கழக பஸ் நேற்று ஈரோடு சென்று கொண்டிருந்தது. மதியம் 1.45 மணிக்கு அன்னூரை அடுத்த குன்னத்தூராம்பாளையம் செல்லும்போது, எதிரே கருப்பு நிற மோட்டார் பைக்கில் இருவர் வேகமாக வந்தனர். பைக்கின் பின்புறம் உட்கார்ந்... |
தமிழகம் | சம ஓட்டு வாங்கியும் தோற்றது தி.மு.க.; ஜெயித்தது ம.தி.மு.க., | மேட்டுப்பாளையம்:ஊராட்சி வார்டு தேர்தலில் தி.மு.க., மற்றும் ம.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள், ஒரே அளவு ஓட்டு வாங்கினர்; குலுக்கலில் ம.தி.மு.க.,காரர் வெற்றி பெற, கோபித்துக் கொண்டு போனார் தி.மு.க., ஆதரவு வேட்பாளர். காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இலுப்பநத்தம் ஊராட்சி எஸ்.புங்கம்பாளையம் 2வது வார்டு உறுப்பினராக இருந்தவர்... |
தமிழகம் | ஈஷா குடும்பத் திருவிழா:குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி புகார் | கோவை:ஈஷா குடும்பத் திருவிழா கோவையில் இன்று நடக்கிறது.ஈஷா பவுண்டேஷன் அறிக்கை:ஈஷா அறக்கட்டளை மூலம் கோவை நகரில் கடந்த 1989 முதல் பல்வேறு பகுதிகளில் ஈஷா யோகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதில், பல்வேறு நிலைகளில் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர், கடந்த 22 ஆண்டுகளாக பயனடைந்து வருகின்றனர். இந்த யோகா பயிற்சி பெற்றவர்களின் ச... |
தமிழகம் | விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் | பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் வரும் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர்ப்புகூட்டம் நடக்கிறது.பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் அறிக்கை வருமாறு:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்ப்புகூட்டம் வரும் 30ம் தேதி காலை 11.00 மணிக்கு சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும... |
தமிழகம் | மின் வாரியம் சிறப்பு முகாம் மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு | பொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்த நெகமம் மின்வாரிய கோட்டத்தில் இரண்டு நாள் நடந்த சிறப்பு முகாம் மேலும், 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட் டுள்ளது.நெகமம் மின்வாரிய அலுவலக கோட்ட அலுவலகத்தில் கடந்த 23 மற்றும் 24ம் தேதியில் மின்நுகர்வோர் பெயர் மாற்ற சிறப்பு முகாம் நடந் தது. நெகமம் தெற்கு, வடக்கு, கிழக்கு கிராமங்கள், காட்டம்பட்டி, கி... |
தமிழகம் | நிலம் கையகப்படுத்துதல் கிடையாது: "தினமலர்' செய்தி எதிரொலி | கோவை:சூலூர் விமானப்படைத்தளத்துக்கு எந்த இடமும் கையகப்படுத்த மாட்டாது என, மாவட்ட கலெக்டர் உமாநாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். சூலூர் விமானப்படைத் தளத்துக்கு இடம் கையகப்படுத்தப்படுவதாக, சூலூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து சூலூர் பகுதியில் உள்ள சூலூர் மற்றும் செலக்கரிச்சல் நில வருவாய் ஆய்வாளர்கள், காங்கயம்பாளையம், அப்பநா... |
தமிழகம் | மரம் வெட்டிய கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை | பெ.நா.பாளையம்:கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் ஒப்பந்தத்தில் குறிப்பிடாத மரம் வெட்டப்பட்டதை கண்டித்து, பா.ஜ., கட்சியினர் சாலை மறியல் செய்ய முயற்சித்தனர். இது தொடர்பாக கான்ட்ராக்டர் மீது நெடுஞ்சாலைத் துறை போலீசில் புகார் செய்துள்ளது.
கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டை 49 கோடியே 69 லட்ச7 ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி கடந்த... |
தமிழகம் | குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு தர தாமதம்; அலுவலகம் முற்றுகை | அன்னூர்:குடிநீர் மேல்நிலைத்தொட்டிக்கு மின் இணைப்பு தர தாமதம் செய்வதை கண்டித்து மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள அருகம்பாளையத்தில் 1,500 பேர் வசிக்கின்றனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 4.50 லட்சம் ரூபாய் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத... |
தமிழகம் | அவிநாசி அருகே 2,500 கோழிகள் பரிதாப சாவு | அவிநாசி:அவிநாசி அருகே கோழிப்பண்ணையில் 2,500 கோழிகள் திடீரென்று இறந்தன.அவிநாசி ஒன்றியம், ஆலத்தூர் துண்டுக்காட்டை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் தனது தோட்டத்தில் ஒன்பது பண்ணை அமைத்து 20 ஆயிரம் கோழிகளை வளர்த்து வருகிறார். இன்னும் ஓரிரு தினங்களில் கோழிகளை, தனியார் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய நிலையில், சம்பவத்தன்று திடீரென்று ஒ... |
தமிழகம் | மஞ்சவாடி பஞ்., தலைவர் பதவி தி.மு.க., கைப்பற்றியது | தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட மஞ்சவாடி பஞ்சாயத்து தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றியது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 12 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், ஏழு பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தர்மபுரி யூனியன் இலக்கியம்பட்டி பஞ்சாயத்த... |
தமிழகம் | காந்திய அஹிம்சா பயிற்சி வகுப்பு | தர்மபுரி: தர்மபுரி அடுத்த கம்பைநல்லூர் விக்டேரியா மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட மஹாத்மா காந்தி நற்பணி மன்றம் சார்பில் காந்திய அஹிம்சா பயிற்சி வகுப்பு மற்றும் மாணவர் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது. தலைமையாசிரியர் சதீஸ் தலைமை வகித்து, மாணவர்களின் அறிவுத்திறன் பயிற்சியை துவக்கி வைத்தார். அண்ணாதுரை நற்பணி மன்ற கோட்பாடுகள்... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கருவூலம் முன் கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு கருவூலக் கணக்குத்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் சுப்பிரமணி வரவேற்றார். பொருளாளர் மாதேஷ் முன்னிலை வகித்தார். "கருவூலத்துறையில் பல்வேறு நிலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வ... |
தமிழகம் | கல்விக்குழு நாள் விழா | தர்மபுரி: தர்மபுரி யூனியன் அ.கொல்லஅள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் கிராம கல்விக்குழு நாள் விழா நடந்தது. பஞ்சாயத்து தலைவர் மீனா தலைமை வகித்தார். துணை தலைவர் புரட்சிகொடி முன்னிலை வகித்தார். தலைலமையாசிரியர் உமாதேவி வரவேற்றார். செயல்வழி கற்றல் மூலம் மாணவர்கள் கல்வி கற்ற முறை பற்றி உதவி ஆசிரியை உமா மகேஸ்வரி மற்றும் சந்திரசேகரன... |
தமிழகம் | ஈஷா குடும்பத் திருவிழா | கோவை: ஈஷா குடும்பத் திருவிழா கோவையில் இன்று நடக்கிறது. ஈஷா பவுண்டேஷன் அறிக்கை: ஈஷா அறக்கட்டளை மூலம் கோவை நகரில் கடந்த 1989 முதல் பல்வேறு பகுதிகளில் ஈஷா யோகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த யோகா பயிற்சி பெற்றவர்களின் சந்திப்பான ஈஷா குடும்பத் திருவிழா, கோவை, மருதமலை ரோடு, பி.என்.புதூரில் உள்ள ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத... |
தமிழகம் | இளைஞர் கலை விளையாட்டு விழா | தர்மபுரி: தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான இளைஞர் கலை மற்றும் விளையாட்டு விழா இன்று (ஜூலை 22) காலை 10 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் அமுதா தலைமை வகிக்கிறார். துணை இயக்குனர் (சுகாதாரம்) அய்யனார் வரவேற்கிறார். எம்.பி., தாமரைச்செலவ்ன, எம்.எல்.ஏ., வேலுசாமி, நகராட்சி தலைவர் ஆனந்தகுமார் ராஜா ஆகியோர் முன்னில... |
தமிழகம் | இடைத்தேர்தல் முடிவுகள்; காங்., - தி.மு.க.,வெற்றி | பேரூர்: வேடபட்டி பேரூராட்சி இடைத்தேர்தலில், 58 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் காங்., வேட்பாளர் வெற்றி பெற்றார். வேடபட்டி பேரூராட்சி 11வது வார்டு கவுன்சிலராக இருந்த செந்தில்குமார் இறந்ததை அடுத்து அந்த வார்டில் கடந்த 22ம் தேதியன்று இடைத்தேர்தல் நடந்தது. செந்தில்குமாரின் தம்பி கணேஷ்குமார், காங்., வேட்பாளராக போட்டியிட்டார். இத... |
தமிழகம் | ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.13.39 லட்சத்துக்கு எள் ஏலம் | தர்மபுரி: பென்னாகரம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 13 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள எள் ஏலம் நடந்தது. பென்னாகரம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் எள் ஏல விற்பனை கடந்த 20ம் தேதி துவங்கியது. மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் கோவிந்தசாமி தலைமையில், வேளாண் துணை இயக்குனர் (வேளாண், வணிகம்) நாகராஜன், விற்பனை குழு செயலாள... |
தமிழகம் | குனியமுத்தூர் நகராட்சி தேர்தலில் சுயேச்சை வெற்றி: கோஷ்டி கானத்தால் காங்., தோல்வி | குறிச்சி: குனியமுத்தூர் நகராட்சி இடைத்தேர்தலில், காங்.,கட்சியினர் இரு கோஷ்டியாக போட்டியிட்டதில், நகராட்சித்தலைவரின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் உமாராணி பெற்றி பெற்றார்.
குனியமுத்தூர் நகராட்சி 15வது வார்டு கவுன்சிலராக (காங்.,) இருந்த விஸ்வநாதன், கடந்தாண்டில் இறந்தார். காலியான கவுன்சிலர் பதவிக்கு கடந்த 22ம் தேதி ஓட்ட... |
தமிழகம் | கற்கும் பாரத மையம் திறப்பு | காரிமங்கலம்: காரிமங்கலம் யூனியன் நாகனம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் கற்கும் பாரதம் கற்போர் மையம் திறப்பு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் பழனியம்மாள் முனுசாமி மையத்தை திறந்து வைத்தார். பள்ளி ஆசிரியர்கள் பால்ராஜ், வெண்ணிலா, கற்கும் பாரத மைய ஒருங்கிணைப்பாளர்கள் முரு... |
தமிழகம் | எருமாம்பட்டி பஞ்., தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி | காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் பஞ்சாயத்து யூனியன் எருமாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றியது. காவேரிப்பட்டணம் யூனியன் எருமாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவி, பாரூர், கீழ் குப்பம் பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் நடந்தது. எருமாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் பெரியசாமி, அ.தி.ம... |
தமிழகம் | மாணவிகள் மூவர் மாயம் | பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் அடுத்தடுத்து காணாமல் போன மூன்று பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடையை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் 17 வயது பெண் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை. இவரை, "காரமடை தொட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த பிரதீப்(23) என்பவர் கடத்தி சென்... |
தமிழகம் | கைதான கொ.மு.க., நிர்வாகி விடுவிப்பு | கோவை: கொ.மு.க.,வினர் போராட்டம் எதிரொலியாக, கைது செய்யப்பட்ட கட்சி நிர்வாகியை போலீசார் விடுவித்தனர். கணபதி, காமராஜர்புரத்தை சேர்ந்த செல்லதுரை, கொ.மு.க., வார்டு பொறுப்பாளர் ராஜசேகரின் பிளாஸ்டிக் கம்பெனியில் பணிபுரிந்தார். செல்லதுரை தற்கொலை செய்த நிலையில் அவரது மனைவி மாரியம்மாள் போலீசில் புகார் செய்தார். அதில், "தனது கணவர... |
தமிழகம் | 17 இடங்களில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் | தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் 17 இடங்களில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் நடப்பாண்டில் 119 கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து யூனியன்களிலும் கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வ... |
தமிழகம் | ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு | தர்மபுரி: தர்மபுரி ஒன்றியம் வே.முத்தம்பட்டி குறுவள மையத்தில் சமூக அறிவியல் பாடத்துக்கான எளிய படைப்பாற்றல் கல்வி பயிற்சி நடந்தது. தர்மபுரி ஒன்றிய வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆனந்தன், துரைமுருகன், குறுவள மைய ஒருங்கிணைப்பாளர் சித்துராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். சமூக அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை குறி... |
தமிழகம் | மாணவன் காயம்: ஆசிரியை மீது புகார் | பெ.நா.பாளையம்: மாணவனை அடித்து காயப்படுத்தியதாக தரப்பட்ட புகாரின் பேரில், தனியார் பள்ளி ஆசிரியையிடம் போலீசார் விசாரிக்கின்றனர். கவுண்டம்பாளையம் அருகே உள்ள டி.வி.எஸ். நகரில் தனியார் பள்ளி இயங்குகிறது. இங்கு பணியாற்றி வருபவர் ஆசிரியை அம்சவேணி. இவர், இதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் பால குருவை(8) பிரம்பால் அ... |
தமிழகம் | நாய் கடித்து சிறுமி உள்ளிட்ட 4 பேர் காயம் | தர்மபுரி: பென்னாகரம் அருகே நாய் கடித்ததில், சிறுமி உள்ளிட்ட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். பென்னாகரம் அடுத்த நெருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அர்சுணன் (14), தங்கபாலு (16), ராஜேந்திரன் (17) ஆகிய மூன்று பேரும் நேற்று முன்தினம் மாலை பள்ளி அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற நாய் அர்சுணனை வி... |
தமிழகம் | பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவருக்கு போலீஸ் "வலை' | தர்மபுரி: தம்பி மனைவி மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றியவரை போலீஸார் தேடி வருகின்றனர். பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளியை அடத்த உப்பாரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சகுந்தலா. முருக்கு, மிச்சர் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவரது மகன்கள் சக்திவேல், பரமேஸ்வரன் இருவருக்கும் திருமணமாகி ஒரே வீட்டிலல் வசித்து வருகின்றனர். சக்திவேல... |
தமிழகம் | டி.எஸ்.பி., பதவியேற்பு | பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் சப்-டிவிஷன் புதிய டி.எஸ்.பி.,யாக ராஜாராம் பதவி ஏற்றுக் கொண்டார். இவர், கோவை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். ஏற்கனவே, இங்கு டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த மாரியப்பன், சிவகங்கைக்கு மாறுதலாகி சென்றார். |
தமிழகம் | மகளிர் மேம்பாட்டு திட்டம் குறித்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆய்வு | தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் கோபால் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் அனைத்து மகளிரும் சேர்ந்து பயன்பெறும் வகையில் 1,4000 குழுக்கள் உருவாக்க திட்டமிடப்பட்ட... |
தமிழகம் | குடிநீர் திட்டத்தில் இணைப்பு பெற விண்ணப்பம் வரவேற்பு | தர்மபுரி: பென்னாகரம் டவுன் பஞ்சாயத்தில் சின்னாறு குடிநீர் திட்டத்தில் இணைப்பு பெற பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பென்னாகரம் பகுதயில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 4 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பில் சின்னாறு குடிநீர் திட்ட பணிகள் நடந்தது. பணிகள் முடிந்து சமீ... |
தமிழகம் | குழந்தை வளர்ச்சி திட்ட கருத்தரங்கு | தர்மபுரி: அரூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் குழந்தை வளர்ச்சி திட்ட கருத்தரங்கு நடந்தது. மாவட்ட திட்ட அலுவலர் புஷ்பலதா தலைமை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் குணசுந்தரி வரவேற்றார். டவுன் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி, பி.டி.ஓ.க்கள் ரவிச்சந்திரன், மலா, உதவி தொடக்க கல்வி அலுவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை ... |
தமிழகம் | மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் | அரூர்: அரூர் அருகே தென்பெண்ணையாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். அரூர் கீழ் செங்கம்பாடி தென்பெண்øணாற்றில் அனுமதியின்றி மணல் எடுத்து கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. தாசில்தார் நல்லுசாமி தலைமையில் வருவாய் துறையினர் நேற்று முன்தினம் தென்பெண்ணையாற்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.... |
தமிழகம் | கோழிப்பண்ணையாளர் போராட்டம் வாபஸ் | கோவை:ஒரு கிலோ கறிக்கோழிக்கு ரூ.3.25 விலை தருவதாக, சுகுணா நிறுவனம் உறுதி கூறியதால், கறிக்கோழி வளர்ப்பு சங்கத்தினர் நேற்றிரவு போராட்டத்தை கைவிட்டனர். ஒப்பந்த அடிப்படையில் கறிக்கோழி வளர்க்கும் பண்ணையாளர்கள், சுகுணா நிறுவனத்திடம் கிலோ கறிக்கோழிக்கு இரண்டு ரூபாய் பெற்றுவந்தனர். அதை உயர்த்தி வழங்கக்கோரியும், அதை சுகுணா நிறுவ... |
தமிழகம் | அங்கப்பிரதட்சணம் எண்ணிக்கை குறைக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு | திருமலை: திருப்பதி கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வோரின் எண்ணிக்கை யை குறைக்க திருப்பதி கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதி கோவிலுக்கு லட்சணக்கில் தரிசனம் செய்ய வருவர். இவர்களில் பலர் தங்கள் வேண்டுதலை பல்வேறு வழிகளில் நிறைவேற்றுவர் . அதில் ஒன்று அங்கப்பிரதட்சணம்.... |
தமிழகம் | வீ.சத்திரத்தில் சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிப்பு | ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நெடுஞ்சாலைத் துறை இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட நான்கு மாடிக் கட்டிடம், நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று இடிக்கப்பட்டது. வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த சண்முகம் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகில் நான்கு மாடி கட்டிடம் கட்டினார். 12க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டன. 12 ஆண்டுகளுக்கு... |
தமிழகம் | மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி | ஈரோடு: மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், கொங்கு மண்டல அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கோவை, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், நீலகிரி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 110 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது: மாணவர்கள் தாங்கள் கற்ற... |
தமிழகம் | ஈரோடு வ.உ.சி., பூங்காவில் ஜூலை 30ல் புத்தகத் திருவிழா | ஈரோடு: ஈரோடு புத்தகத் திருவிழா வ.உ.சி., பூங்காவில் ஜூலை 30ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் கூறியதாவது: ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் ஜூலை 30ம் தேதி துவங்கும் புத்தகத் திருவிழாவில், 168 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. "தமிழர் வரலாற்று அரங்கம்' என்ற அரங்... |
தமிழகம் | இடைத் தேர்தல்: இரு வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி | ஊட்டி:நீலகிரியில், நான்கு இடங்களில் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில், அதிகரட்டி பேரூராட்சியில் தி.மு.க., வேட்பாளர், ஜக்கனாரை சிற்றூராட்சியில் தி.மு.க., ஆதரவு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றனர்.
நீலகிரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு, இடைத் தேர்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டு, தேர்தல் ஆணைய அட்டவணைப் படி... |
தமிழகம் | பவானி கோவில் விழா | ஈரோடு: பவானி பச்சியம்மன் கோவில் ஆடித் திருவிழா நேற்று துவங்கியது. நேற்று முன்தினம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஜூலை 30ல் காசி விஸ்வநாதர் விசாலாட்சி அலங்காரம், மகாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. ஆகஸ்ட் 6ல் மீனாட்சி அம்பாள் அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. ஆகஸ்ட் 9 ஆடி அம... |
தமிழகம் | காங்., ஆர்ப்பாட்டம் | ஈரோடு: காங்கேயம் எம்.எல்.ஏ., விடியல் சேகர் கைதை கண்டித்து காங்கிரஸார் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கேரளா மாநிலம் நெய்யாறு அணையின் இடதுகரை கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்தில் திருநெல்வேலி எம்.பி.,... |
இந்தியா | தீ விபத்து:துபாய் விமானம் தரையிறக்கம் | மங்களூரூ: மங்களூரூ விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு ஏர்இந்திய விமானம் ஒன்று இரவு9.30புறப்பட்டது. இதில் சுமார் 134 பயணிகள் பயணம் செய்ய துவங்கினர். அப்போது விமான கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போனில் விமானத்தின் வால் பகுதியில் தீ பிடித்துள்ளததாக தகவல் வந்தது. இதனையடுத்து விமானம் அவசரஅவசரமாக தரையிறக்கப்பட்டது. சோதனையின் முட... |
தமிழகம் | அரசு ஊழியர் விளையாட்டில் பசுவப்பட்டி ஆசிரியர் வெற்றி | ஈரோடு: ஈரோடு மாவட்ட அளவில் அரசு அலுவலர்க்கான தடகள போட்டியில் 3,000 மீட்டர் ஓட்டத்தில், ஆண்கள் பிரிவில், பசுவப்பட்டி பள்ளி ஆசிரியர் முதல் பரிசு பெற்றார். தமிழக அரசு அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன. ஆண், பெண் பிரிவினருக்கு தனித்தனியாக 30, 40, 50 வயதுக்குட்பட்டோர், 50 வயதுக்கு மேற்பட்டோர் ... |
தமிழகம் | மின் இணைப்பு பெயர் மாற்ற கவுந்தப்பாடியில் சிறப்பு முகாம் | ஈரோடு: மின் இணைப்பு பெயர் மாற்ற கவுந்தபாடியில் வரும் 29, 30ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது. ஈரோடு செயற்பொறியாளர் சுப்பிரமணியம் அறிக்கை: பல தாழ்வழுத்த மின் இணைப்புகள், பழைய உரிமையாளரின் பெயரிலேயே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட மின் இணைப்புகள் தற்போதைய உரிமையாளர்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ள ஏதுவாக வரும் 29ம் தேதி ம... |
தமிழகம் | இன்ஜி., மாணவர்களுக்கு நாளை ஆயத்த பயிற்சி | ஈரோடு: ஈரோடு பாரதி இளைஞர் பாசறை சார்பில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேரப்போகும் மாணவர்களுக்கு இலவச ஆயத்த பயிற்சி கருத்தரங்கம் ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. கருத்தரங்குக்கு வேளாளர் கல்லூரி தாளாளர் சந்திரசேகர் தலைமை வகிக்கிறார். கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவ... |
தமிழகம் | காலிங்கராயன் பாசன சபை கூட்டம் | ஈரோடு: காலிங்கராயன் பாசன சபை கூட்டம் கொம்பனைபுதூர் அம்மன் கலை அரங்கத்தில் நடந்தது. ஏப்ரல் 30 வரை கடைக்கோடி வரை தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல, வாய்க்கால் முழுவதும் படர்ந்துள்ள வெங்காயத் தாமரை, ஊனான் கொடி, பசறி போன்ற செடி கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும். காலிங்கராயன் வாய்க்காலில் கலக்கும் தோல் சாய கழிவுகள் முழுவதும் நிற... |
தமிழகம் | ஜவுளி பதனிடுவோர் சங்க கூட்டம் | ஈரோடு: ஈரோடு ஹேண்டிகிராஃப்ட் டெக்ஸ்டைல் பிராசசர்ஸ் அசோசியேஷன் கூட்டம் நடந்தது. கைவினை தொழில் வகையை சார்ந்த இத்தொழில், மிகச்சிறிய அளவு முதலீட்டில் குடிசைத் தொழிலாக நடப்பதால், ஆர்.ஓ., அமைப்பதில் இருந்து விதி விலக்கு வழங்க வேண்டும். கடலில் கலக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். இத்திட்டத்தில் தொழிற்சாலைகள் செலுத்தும் ப... |
தமிழகம் | வேளாண் பல்கலையில் விவசாயிகளுக்கு பாடங்கள் | ஈரோடு: வேளாண் பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் சார்பில், விவசாயிகளுக்கு 22 வகையான பாடங்கள் நடத்தப்படுகிறது. பள்ளிப் படிப்பைத் தொடர இயலாதவர்கள், சுயதொழில் துவங்க முயல்பவர்கள், கிராம மகளிர், விவசாயிகள், கிராமப்புற மற்றும் நகர்புற இளைஞர்களின் நலன் கருதி, வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில், க... |
தமிழகம் | அரசு கலைக் கல்லூரியில் 28ம் தேதி கலந்தாய்வு | ஊட்டி:ஊட்டி அரசு கலைக் கல்லூரியில், மாணவர் சேர்க்கை தொடர்பான முதுகலை மற்றும் கலை அறிவியல் பிரிவுகளுக்கு 28ம் தேதியும், இளங்கலை இளம் அறிவியல், வணிகவியல் பிரிவுக்கு 30ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் சதாசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உச்சநீதிமன்ற தீர்ப்பை முன்னிட்டு, கல்லூரிக... |
தமிழகம் | மாற்று திறனாளிகளுக்கு கல்வி கட்டண விலக்கு | ஈரோடு: அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு 2010-2011ம் நிதியாண்டில், தனி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்து, அரசு ஆணையிட்டுள்ளதாக, ஈரோடு மாவட்ட கலெக்டர் சுடலைக்கண்ணன் கூறினார். அவரது அறிக்கை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக... |
தமிழகம் | விநாயகர் விசர்ஜன விழா:சிறப்பு யாகத்துக்கு முடிவு | ஊட்டி:ஊட்டியில், செப்.,11 முதல் 20ம் தேதி வரை நடத்தப்படும் விநாயகர் விசர்ஜன விழாவில், சிறப்பு யாகத்துக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.ஊட்டி அனைத்து இந்து சமுதாய மற்றும் வியாபாரிகள் தொழிலாளர்கள் நல சேவா சங்கம் சார்பில், ரெக்ஸ் மணி வெளியிட்டுள்ள அறிக்கை:சங்கம் சார்பில், 23வது ஆண்டு விநாயகர் விசர்ஜன விழா நடத்தப்படுகிறது. ஊட்... |
தமிழகம் | கல்லூரிகள் அளவில் விளையாட்டு போட்டி | ஈரோடு: ஈரோடு மாவட்ட கல்லூரி மாணவ, மாணவியர்க்கான தடகளப் போட்டி, ஈரோடு வ.உ.சி., பூங்காவில் நேற்று துவங்கியது. 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றினர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் இப்போட்டி நடக்கிறது. 100 மீட்டர், 200 மீட்டர், 400 ... |
தமிழகம் | புத்தாக்கப்பயிற்சி | ஊட்டி:ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வகுப்பு, ஊட்டியில் நடத்தப்பட்டது.ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களை சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியை, மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி ஊட்டியில் துவக்கி வைத்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள... |
தமிழகம் | உள்ளாட்சி இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி | ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான இடைத்தேர்தலில், அம்மாபேட்டை, சென்னிமலை, புன்செய்புளியம்பட்டியில் தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஈரோடு மாவட்டத்தில், எட்டு கிராம பஞ்சாயத்து வார்டுகள், சென்னிமலை, அம்மாபேட்டை பஞ்சாயத்து யூனியனை சேர்ந்த இரண்டு வார்டுகள், புஞ்சைபுளியம்பட்டி மூன்றாம் நிலை நகராட்... |
தமிழகம் | கூடலூரில் வினாடி- வினா:மாவட்ட போட்டிக்கு தேர்வு | கூடலூர்:கூடலூரில் நடத்தப்பட்ட வினாடி-வினாப் போட்டியில், மாணவ, மாணவியர் திறமையை வெளிப்படுத்தினர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கூடலூர் வட்டார அளவிலான வினாடி-வினாப் போட்டி, கூடலூர் ஐடியல் மெட்ரிக்., பள்ளியில் நேற்று நடத்தப்பட்டது. துணைத் தலைவர் பாதுஷா வரவேற்றார். நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பிரிவுகளில் நடத்தப்பட... |
தமிழகம் | மனைப்பட்டா கேட்டு காங்கேயத்தில் மறியல் | சென்னிமலை: பட்டா வழங்கக் கோரி காங்கேயத்தில் மறியல் நடந்தது. காங்கேயம் அருகே வீரணம்பாளையம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில், 1994ல் 500 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் எவரும் குடியேறாத நிலையில், இந்த இடத்தில் உள்ளூர்க்காரர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வீரணம்பாளையம் மக்கள் கோரினர். நேற்று மதியம் 3 ம... |
தமிழகம் | பள்ளத்தில் சிக்கியது பஸ் | பந்தலூர்:பந்தலூர் குந்தலாடி பெக்கி பகுதி சாலையோர குழியில் சிக்கிய அரசு பஸ், மீட்கப்பட்டது.நேற்று, கூடலூரிலிருந்து பாட்டவயல் சென்ற அரசு பஸ், பாட்டவயல் பகுதியிலிருந்து கூடலூர் சென்றுக் கொண்டிருந்தது. முக்கட்டி-குந்தலாடி சாலை பெக்கி பகுதியில், எதிர்பாராதவிதமாக சாலையோர குழியில் சிக்கியது; பயணிகள் இறக்கி விடப்பட்டனர். கிரேன... |
தமிழகம் | மாவட்ட பள்ளிகளில் கிராம கல்விக்குழு நாள்:திறமையை வெளிப்படுத்தி மாணவர்கள் அசத்தல் | ஊட்டி:நீலகிரி மாவட்ட பள்ளிகளில், கிராம கல்விக் குழு நாள் கொண்டாடப்பட்டது.ஊட்டி மெயின்பஜார் நகராட்சி துவக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியர் தேவன் வரவேற்றார். தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். கணித உபகரணங்களை பயன்படுத்தி கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற செயல்பாடுகளை, மாணவர்கள் செய்து காண்பித்தனர். தமிழ், ஆங்கில... |
தமிழகம் | காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் | ஈரோடு: காஸ் நுகர்வோர் புகார்களை நிவர்த்தி செய்ய குறைதீர் கூட்டம் நடக்கிறது. ஈரோடு மாவட்ட கலெக்டர் சுடலைக்கண்ணன் அறிக்கை: காஸ் சிலிண்டர்கள் பதிவு செய்வதில் தாமதம் அல்லது முறைகேடுகள், எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவதில் ஏற்படும் காலமாதமம் உள்ளிட்ட, நுகர்வோரின் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கும் எரிவாயு முகவர்களின... |
தமிழகம் | மின்னொளியில் கிரிக்கெட் | குன்னூர்:நீலகிரி மாவட்டத்தில் முதன் முறையாக மின்னொளியில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது; குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் கன்டோன்மென்ட் விளையாட்டு மைதானத்தில், சச்சின் கோப்பை கிரிக்கெட் போட்டி, இன்று துவக்கப்பட உள்ளது. நீலகிரியில் முதன் முறையாக இரவு நேரத்தில் மின்னொளியில் நடத்த ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
போட்ட... |
தமிழகம் | பட்டா பெயர் மாற்ற ஆகஸ்டில் சிறப்பு முகாம் | ஈரோடு: பட்டா பெயர் மாற்ற தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடக்கின்றன. ஈரோடு மாவட்ட கலெக்டர் சுடலைக்கண்ணன் அறிக்கை: ஈரோடு மாவட்டத்தில் பட்டா பெயர் மாறுதல் கோரி பல்வேறு மனுக்கள் வந்தவண்ணம் உள்ளன. பொது மக்களின் நலன் கருதி பட்டா மாறுதல் கோரிக்கைகளை உடனுக்குடன் முடிவு செய்ய, தாலுகா வாரியாக, பட்டா மாறுதல் சிறப்பு முகாம் ந... |
தமிழகம் | கல்வி வளர்ச்சி நாள் விழா | ஈரோடு: விஜயமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியர்க்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. பெருந்துறை யூனியன் தலைவர் திருநாவுக்கரசு பரிசு வழங்கினார். தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். சாரணர் இயக்க பொறுப்பாளர் உலகந... |
தமிழகம் | "டாஸ்மாக்' ஊழியர் மாநாடு | ஈரோடு: டாஸ்மாக் தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், நேற்று திருச்சியில், வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடந்தது. ஈரோடு மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் ஏழு பஸ்களில் நேற்று திருச்சி சென்றனர். அ.தி.மு.க., புறநகர் மாவட்ட செயலாளர் தோப்பு வெங்கடாசலம், வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். அண்ணா தொழிற்சங்... |
தமிழகம் | இலவச காஸ் அடுப்பு வழங்கல் | அரியலூர்: ராயம்புரம்-சென்னிவனம் கிராமங்களில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. அரியலூர் தாலுகா, ராயம்புரம் மற்றும் சென்னிவனம் கிராமங்களில், நடந்த தமிழக அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழாக்களுக்கு, அரியலூர் துணை தாசில்தார் தண்டபாணி தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர்கள் ராயம்புரம் செல்வராஜ், சென்னிவனம் ஏழிசைவல... |
தமிழகம் | கரூர் காளியம்மாள் கல்வியியல் கல்லூரியில் 6ம் ஆண்டு விழா | கரூர்: கரூர் காளியம்மாள் மற்றும் ஆசி கல்வியியல் கல்லூரியில் ஆறாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. கல்லூரி தாளாளர் முத்துசாமி தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர்கள் ராஜாமணி பழனிசாமி, கதிர்வேல், சுப்பிரமணி, உமாராணி முன்னிலை வகித்தனர். ஆங்கிலத்துறை பேராசிரியர் சிந்துலதா வரவேற்றார். ஆங்கில மொழி ஆலோசகர் ராஜகோபாலன் பங்கேற்று ... |
தமிழகம் | குளித்தலை ரேஷன்கடைகளில் கரூர் டி.எஸ்.ஓ., திடீர் ஆய்வு | குளித்தலை: குளித்தலை நகராட்சி பகுதியில் இயங்கும் எட்டு ரேஷன் கடைகளில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் வெள்ளியங்கிரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, நுகர்வோரை கடையில் வெகுநேரம் காக்க வைக்காமல் உடனடியாக பொருட்களை வழங்க வேண்டும். அலுவலக கூட்டங்களுக்கு சென்றால் தகவல் பலகையில் தெரிவித்து செல்ல வேண்டும் என விற்பனையாளர்க... |
தமிழகம் | மரவள்ளி சாகுபடி அதிகாரிகள் ஆய்வு | குளித்தலை: தோகமலை அருகே மரவள்ளி கிழங்கு சாகுபடி முறைகளை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தோகமலை யூனியன் பச்சனம்பட்டியில் தோட்டக்கலைத்துறையின் துல்லிய பண்ணைத் திட்டத்தில், சொட்டுநீர் பாசனம் அமைத்து மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கு சாகுபடியை கரூர் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கந்தசாமி, வேளாண... |
தமிழகம் | மகனைக் கொன்று தாய் தற்கொலை : குடும்பத்தகராறில் நிகழ்ந்த பரிதாபம் | லாலாப்பேட்டை: கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே குடும்பத்தகராறில், மனமுடைந்த பெண், ஆறு வயது மகனை குளத்தில் வீசிக் கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்டார். லாலாப்பேட்டை அடுத்த பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து புதுப்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் தனபால். இவரது மனைவி தனலட்சுமி (29). இவர்களுக்கு சவுரிஷ் (9), சக்திவேல் (6)... |
தமிழகம் | தமிழகத்தில் ரூ.100 கோடி மதிப்பில் 1,200 கோயில்களில் குடமுழுக்கு: பெரிய கருப்பன் | திருநெல்வேலி : தமிழகத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பில் விரைவில் 1,200 கோயில்களில் குட முழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் பேசினார்.
கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயிலில் 42.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மேம்பாடு பணிகள் திறப்பு விழா நேற்று நடந்தது. இத... |
தமிழகம் | வெங்கமேட்டில் கைத்தறி மற்றும் விசைத்தறி நலவாரியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் | கரூர்: கரூர் வெங்கமேட்டில், கைத்தறி மற்றும் விசைத்தறி நலவாரியம் குறித்த விழிப்புணர்வு நடந்தது. கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர் நல வாரியத்தில் 18 வயதுக்கு மேற்பட்டு 60வயதுக்குள் உள்ள அனைவரும் சேரலாம். வாரிய உறுப்பினர்களுக்கு ஃபோட்டோவுடன் கூடிய அட... |
தமிழகம் | குற்றாலம் சாரல் திருவிழா கோலாகல ஆரம்பம் : கோவா, பஞ்சாப் மாநில கலை நிகழ்ச்சிகள் | திருநெல்வேலி : குற்றாலம் சாரல் திருவிழாவில் கோவா, பஞ்சாப் மாநில கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நடிகர்கள் பாண்டியராஜன், இடிச்சபுளி செல்வராஜ், இசையமைப்பாளர் கங்கை அமரன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
குற்றாலம் சாரல் திருவிழா நேற்று கோலாகலமாக ஆரம்பமானது. விழாவின் 2வது நாளான இன்று (25ம் தேதி) மாலை 5.30... |
தமிழகம் | வீட்டு வசதி வாரிய வாடகை குடியிருப்புகளை சொந்த வீடு உள்ள அரசு ஊழியர்கள் ஆக்கிரமிப்பு | ஓசூர்: ஓசூர் தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் மூலம் அரசு ஊழியருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாடகை வீடுகளில் 40 சதவீதம் பேர் சொந்த வீடு உள்ளவர்கள் குடியிருக்கும் அவலம் உள்ளது. ஓசூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய கட்டுப்பாட்டின் கீழ் அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை மற்றும் தர்மபுரி ஆகிய இடங்களில்... |
தமிழகம் | கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு பஸ்சில் "குவா குவா' | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூருக்கு அரசு பஸ்சில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பஸ்சில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. சூளகிரி அடுத்த சின்னமடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சீனிவாசன். இவரது மனைவி சுசீலா (22). கர்ப்பிணியான சுசீலா தனது தாய் துளசியுடன் பிரசவத்துக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரை ப... |
தமிழகம் | பணியில் உள்ளவர்கள் பட்டப்படிப்பில் சேர அழைப்பு | கிருஷ்ணகிரி: கலெக்டர் அருண்ராய் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி, எம்.எஸ்.ஆஃபீஸ்., டேலி ஆகிய வேலை வாய்ப்பு அளிக்கூடிய பயிற்சிகள் நடத்தப்படுகிறது. இந்த வேலை வாய்ப்பு பயிற்சி பெறுபவர்களும் மற்ற பொதுமக்களும் பயன்பெறும்... |
தமிழகம் | கி.கிரி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவு அறிவிப்பு | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக இருந்த மூன்று ஒன்றிய கவுன்சிலர், நான்கு பஞ்சாயத்து தலைவர், 17 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் மற்றும் ஒரு டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு இ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.