category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | ஜெ.,பேரவை பொதுக்கூட்டம் | சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் விலைவாசி உயர்வு, தொடர் மின்வெட்டைக் கண்டித்து ஒன்றிய ஜெ.,பேரவை சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது.மாவட்ட ஜெ.,பேரவைச் செயலாளர் ஏரல் ரமேஷ் தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் ஆனந்தராஜ், ஒன்றிய செயலாளர் ராஜமோகன், ஸ்ரீவை.,ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் முருகன், ஐகோட் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்த... |
தமிழகம் | மீன்வள கல்லூரி ஆண்டு விழா | தூத்துக்குடி,: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆரா ய்ச்சி நிலையத்தில் ஆண்டு விழா நடந்தது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆண்டு விழா நடந்தது. ஆண்டுவிழாவினை முன்னிட்டு தனிநபர் பாட்டு போட்டி, விளம்பரம் செய்தல் போட்டி, தனிநப... |
தமிழகம் | பொதுக்குழுக் கூட்டம் | தூத்துக்குடி,: திருமந்திரநகர் உழவாரப்பணியின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.திருமந்திரநகர் உழவாரப்பணியின் பொதுக்குழுக் கூட்டம் முருகேசன் தலைமையில் தூத்துக்குடியில் நடந்தது. கூட்டத்தில் முருகேசன் தலைவராகவும், காளிராஜன் செயலாளராகவும், ரத்தினம் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். திருமந்திர நகர் உழவாரப்பணிக்குழு என்ற பெயர... |
தமிழகம் | இலவச நோட்டுகள் வழங்கும் விழா | பெரியதாழை: தட்டார்மடம் அருகேயுள்ள மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா பொத்தகாலன்விளை புனித வின்சென்ட் தே பவுல் சபையின் சார்பில் நடந்தது.சபைத்தலைவர் அந்தோணிதமிழ்செல்வன் தலை மை வகித்தார். நிகழ்ச்சியில் பங்குத்தந்தை பபியான்ஜோசப் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகளை வழங்கினார். நிகழ்ச... |
தமிழகம் | சாண்டி பொறியியல் கல்லூரி ஆண்டு விழா | தூத்துக்குடி : முள்ளக்காடு சாண்டி பொறியியல் கல்லூரி ஆண்டுவிழா நடந்தது. விழாவிற்கு ஸ்பிக் உதவி மேலாளர் மாரியப்பன் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார். சாண்டி கல்வி குழுமத்தின் தலைவர் செல்வராஜ், செயலாளர் ராஜரத்தினம் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் சிவகாமிசுந்தரி நன்றி கூறி... |
தமிழகம் | விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா | கோவில்பட்டி, : -கோவில்பட்டியில் மரம் வளர்ப்பதற்காக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தமிழகத்தில் தனியார் நிலத்தில் மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்த ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்றநிலையில் கோவில்பட்டி யூனியனில் மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஊக... |
தமிழகம் | மரக்கன்றுகள் நடும் விழா | திருச்செந்தூர்: முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் நெடுஞ்சாலை உட்கோட்டத்தினர் சாலையோரங்களில் மரக் கன்றுகளை நட்டினர். தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் நெடுஞ்சாலை உட்கோட்ட உதவிப் பொறியாளர் கோதண்டராமன் தலைமையில், சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலைப்பணியாளர்கள், திருச்செந்தூர்... |
தமிழகம் | சேதமடைந்த வாழைகளை தாசில்தார் ஆய்வு | பேய்க்குளம் : பேய்க்குளம் சுற்றுவட்டாரங்களில் சூறாவளி காற்றால் ஏற்பட்ட வாழை சேதங்களை சாத்தை., தாசில்தார் பார்வையிட்டார்.பேய்க்குளம் அருகே கோமானேரி மற்றும் கருங்கடல் உள்ளிட்ட பஞ்.,களில் ஏற்பட்ட வாழை மற்றும் வீடுகளில் ஏற்பட்ட சேதங்களை சாத்தை., தாசில்தார் ஹாரீஸ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.இதுகுறித்து அவர் கூறும்போத... |
தமிழகம் | உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் நடக்கும் பஸ் ஸ்டாண்டு ஓட்டல்களில் அரசு பஸ் நிற்க கோரிக்கை | தூத்துக்குடி : அரசு விரைவு பஸ்கள் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் பஸ் ஸ்டாண்ட் ஓட்டல்களில் மட்டுமே நிற்க வேண்டும் என்று அரசுக்கு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைவிடப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் துணைத்தலைவர் முத்துபெரியநாயகம் தலைமையில் நடந்தது. நடராஜன், அனந... |
தமிழகம் | நள்ளிரவில் டூவீலர் எரிந்தது | செங்குன்றம்: நள்ளிரவில் எரிந்து கிடந்த மர்மமான டூவீலர் சட்ட விரோத செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டு, பின் எரிக்கப்பட்டதா என்று போலீசார் விசாரிக்கின்றனர். செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் பல்சர் டூவீலர் முற்றிலுமாக எரிந்து கிடந்தது. அந்த டூவீலர் குறித்த விவரம் தெரியவில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த டூவீலர்... |
தமிழகம் | லோடு வேன் தீப்பிடித்து எரிந்ததால் ஏர்போர்ட்டில் பரபரப்பு | திரிசூலம்: ஏர் மொரிஷியஸ் விமானத்தில் சரக்குகளை இறக்குவதற்காக விமான ஓடுபாதைக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், சென்னை விமான நிலையத்தில், நேற்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மொரிஷியசிலிருந்து தினமும் காலை... |
தமிழகம் | பணத்தை பறிகொடுத்த ஆட்டோ டிரைவர் | விருகம்பாக்கம்: பஸ்சில் சென்ற, ஆட்டோ டிரைவர் 25 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் மருதமுத்து(37). சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகர் பகுதியில் வசிக்கும் இவர், சவுகார்பேட்டை பகுதியில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர், நேற்று முன்தினம... |
தமிழகம் | புழல் மத்திய சிறையில் மொபைல் பேட்டரிகள் சிக்கின | செங்குன்றம்: புழல் மத்திய சிறைக்குள், மொபைல் போனுக்கான புதிய பேட்டரிகள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. தமிழக சிறைகளில் மொபைல் போன், கஞ்சா மற்றும் சார்ஜர்கள் கடத்தப்படுவதும், வீசப்பட்டு கிடப்பதும் வழக்கமாகி உள்ளது. நேற்று புழல் மத்திய விசாரணை சிறை வளாகத்தில் உள்ள "கோரண்டைன்' செல் அருகே கிடந்த பாலிதீன் பையில், மொபைல்... |
தமிழகம் | பெயின்ட் கம்பெனியில் தீ விபத்து | அம்பத்தூர்: தனியார் பெயின்ட் கம்பெனியில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. அம்பத்தூர்-மேனாம்பேடு சாலை, பட்டரைவாக்கத்தில் பிரபல தனியார் பெயின்ட் கம்பெனி உள்ளது. இங்கு நேற்று மாலை 6.30 மணியளவில் பணியாளர் அனைவரும் பணி முடித்து வீடு திரும்பினர். இரவு 7 மணியளவில் கம... |
தமிழகம் | பணத்திற்காக 20 பெண்களை ஏமாற்றிய வாலிபர் மீது மேலும் ஒரு பெண் புகார் | பரங்கிமலை; திருமணம் செய்துக் கொள்வதாக, ஆசை வார்த்தைகளை கூறி, 20 பெண்களை ஏமாற்றிய வாலிபர் மீது, மேலும் ஒரு பெண் நேற்று புகார் அளித்தார். திருமண தகவல் மைய புத்தகத்தில் உள்ள விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களிடம் மறுவாழ்வு தருவதாக ஆசை வார்த்தை கூறி பணத்தை பறித்த கோவை தாராபுரத்தைச் சேர்ந்த ரவிச்... |
தமிழகம் | சீனாவிற்கு செம்மரங்கள் கடத்தல்: நடுக்கடலில் மடக்கி பறிமுதல் | சென்னை: பர்னீச்சர் பொருட்கள் என்ற பெயரில் சென்னையில் இருந்து, சீனாவிற்கு கன்டெய்னர் மூலம் கப்பலில் கடத்தப்பட்ட 4.68 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை, மத்திய சுங்கத்துறை புலனாய்வுப் பிரிவினர் நடுக்கடலில் மடக்கி பறிமுதல் செய்தனர். இதில், கடத்தல்காரர்கள் யாரும் சிக்கவில்லை. விலை உயர்ந்த இசைக்கருவிகள் செய்யப் பயன்பட... |
தமிழகம் | டாக்டர் உட்பட மூவருக்கு அரிவாள் வெட்டு ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பலுக்கு வலை | சென்னை: டி.பி.சத்திரம் பகுதியில் டாக்டர், கார் டிரைவர் உள்ளிட்ட மூவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. சென்னை, கீழ்ப்பாக்கம் அடுத்த டி.பி.சத்திரம், வ.உ.சி. நகர், நியூ காலனியை சேர்ந்தவர் சியாம் சுந்தர் (40); மாநகராட்சி சுகாதாரத்துறையில் டாக்டராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடித்துவிட்டு, தனது... |
தமிழகம் | போலி ஆவணம் தயாரித்து ரூ.80 லட்சம் மோசடி: அக்கா, தங்கை கைது | பரங்கிமலை: போலி ஆவணம் தயாரித்து 80 லட்ச ரூபாய்க்கு நிலத்தை விற்பனை செய்த அக்கா, தங்கையை புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அடையார் இந்திரா நகரை சேர்ந்த சங்கரன் மகள் மஞ்சுளா (28), அவரது தங்கை ஆனந்தி (26). இருவரும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேடவாக்கம் சந்தோஷபுரத்தை சேர்ந்த அரிமுத்தையா... |
தமிழகம் | பி.எஸ்.என்.எல்., ரீசார்ஜ் கார்டுகள் திருட்டு | சிவகாசி : கடலூர் மாவட்டம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு, சிவகாசி முண்டக நாடார் தெருவில் உள்ள ஓரியண்ட் கலர் கிராப்ட் அச்சகத்தில் 2009 ஆகஸ்டில், ரூ.55 மதிப்பிலான பி.எஸ்.என்.எல்., மொபைல்போன் டாப்- அப் கார்டுகள் 70,000 அச்சடிக்க கொடுத்துள்ளனர். அச்சடிக்கப்பட்ட டாப்- அப் கார்டுகள் 10,000 கார்டுகள் வீதம் ஏழு பண்டல்களாக கட்... |
தமிழகம் | ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி மீனவர் பலி | காசிமேடு: ராயபுரம் அடுத்த பெரியகாசி குப்பத்தைச் சேர்ந்தவர் மோகன்(50). மீனவர் நேற்று முன் தினம் காலை, எண்ணூரிலிருந்து காசிமேட்டிற்கு ஷேர் ஆட்டோவில் பயணித்தார். காசிமேடு எல்லையம்மன் கோவில் அருகே சென்ற போது எதிரில் வந்த டிரெய்லர் லாரி, ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் மோகன் பலத்த காயமடைந்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில... |
தமிழகம் | உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் | மேட்டூர் :கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளன,'' என சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ராம் தெரிவித்தார்.மேட்டூரில் புதிய ரயில்வே ஸ்டேஷன் திறப்பு விழா நேற்று இரவு நடந்தது. நிகழ்ச்சியில், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ராம் தலைமை வகித்தார்.. மேட்டூர் புதிய ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நேற... |
தமிழகம் | ஆட்டோ டிரைவர் வீட்டில் திருட்டு | கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை மன்னப்ப முதலிதெருவைச் சேர்ந்தவர் அன்சர்(24); ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோவிற்கான தவணை தொகை செலுத்த, நேற்று முன்தினம் நண்பரிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி வந்து, வீட்டில் உள்ள டேபிள் டிராயரில் வைத்திருந்தார். நேற்று காலை எழுந்து பார்த்த போது, டேபிள் மீதிருந்த இரண்டு மொபைல்போன... |
தமிழகம் | ரவுடிகள் கைது | சென்னை: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இரண்டு ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.சென்னை நகரில் இது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க, பல தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரின் தேடுதல் வேட்டையில், குமரன் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதி யில் மாமூல் கேட்டு, தரமறுத்ததால் வெட்டி காயப்படுத்தி... |
தமிழகம் | தனியார் வாகன நிறுத்தங்களை கட்டுப்படுத்த மாநகராட்சி திட்டம் | சென்னை: நகரிலிருக்கும் தனியார் வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதை முறைப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நகரில் பல இடங்களில், தனியார் வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளது. இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு இடத்திற்கு ஏற்றார் போல் கட்டணம் வசூல் செய்வது, அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்வது, அடிக்கடி வாகன... |
தமிழகம் | மூடு விழாவிற்கு தயாராகும் மதுராந்தகம் உழவர் சந்தை | மதுராந்தகம்: மதுராந்தகம் உழவர் சந்தை வியாபாரிகள் வராததால் மூடு விழாவிற்கு தயாராகி வருகிறது.மதுராந்தகம் மற்றும் செய்யூர் தாலுகாக்களுக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை விற்பதற்காக மதுராந்தகத்தில் உழவர் சந்தை அமைக்க அரசு முடிவு செய்தது. அதன்படி மதுராந்தகம் - சூணாம்பேடு சாலை கடப்ப... |
தமிழகம் | ரேஷன் அரிசி கடத்தியவர் கைது : வேன் பறிமுதல் | பொன்னேரி: சட்டவிரோதமாக ஆந்திர மாநிலத்திற்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்து, வேனை பறிமுதல் செய்தனர். ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் தமிழக ரேஷன் அரிசியை நான்கு ரூபாய்க்கு வாங்கி ஆந்திர மாநிலத்திற்கு சட்டவிரோதமாக கடத்திச் சென்று அதை பாலீஸ் செய்து 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழக ரேஷன் அரிசி கட... |
தமிழகம் | 6 பேர் கைது: போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் மோசடி மலேசியா செல்லும் முன் பிடிபட்டனர் | திரிசூலம்: போலி ஆவணம் மூலம், மலேசியா செல்ல முயன்ற ஆறு ராஜஸ்தானியர்களை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான், ஜெய்ப்பூரை சேர்ந்தவர்கள் ராஜேந்திரசிங் (32), தரம்வீர் சிங் (22), சந்திரபிரகாஷ் (26), ஆசிப்அலி (32), அசோக்குமார் (22), ரஞ்சித்சிங் (29). பத்தாவது வரை படித்துள்ள இவர்கள், வெளிநாட்டில் வேலை செய்வத... |
தமிழகம் | சுற்றுச்சுவர் கட்டும் பணி தாமதம், அபாய குழிகள் அதிகம் | மாமல்லபுரம்: கீரப்பாக்கம் மற்றும் பரமேஸ்வரமங்கலம் பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அபாய குழிகளாக மாறியுள்ளன. திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கல்பாக்கம் அடுத்த பரமேஸ்வரமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் சுற்றுச்சுவர் கட்டும் பணி இரண்டு மாதங்களுக்கு முன்பு து... |
தமிழகம் | தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தாமதம் | செங்கல்பட்டு: அச்சிறுப்பாக்கம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாகச் சென்றன. விழுப்புரத்திலிருந்து சென்னை சென்ற சரக்கு ரயில் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு தொழுப்பேடு அருகே சென்றபோது ரயிலில் அதிர்வு ஏற்பட்டது. அதை உணர்ந்த ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தினார். தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிரு... |
தமிழகம் | போதை ஆசாமி பலி: | பொன்னேரி அடுத்த சின்னகாட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(40). குடிப்பழக்கம் உடையவர். நேற்று வழக்கம்போல் அளவுக்கு அதிகமாகக் குடித்ததில் நாக்கு வறண்டு போனது. குமாரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவனையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சைப் பலனின்றி ... |
தமிழகம் | ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி | சென்னை அடுத்த பொன்னேரி அருகே கவரைப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் காவலாளியாக வேலை செய்து வந்தவர் கேம்பகதூர் சத்ரி(38). இவர், வடமாநிலத்தைச் சேர்ந்தவர். நேற்று காலை பணிக்காக திருவொற்றியூரிலிருந்து கவரைப்பேட்டைக்கு மின்சார ரயிலில் சென்றார். அப்போது கூட்ட நெரிசலில் விம்கோ நகர் - கத்திவாக்கம் ரயில் நிலையங்களு... |
தமிழகம் | ரூ.1.95 லட்சம் தங்கம், வைர நகை மாயம் | கோவை : பெண்ணிடம் 1.95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகை திருடப்பட்டது குறித்து போலீசார் சாரிக்கின்றனர். பெங்களூரு, என்.டி.ஐ., லே - அவுட்டை சேர்ந்தவர் கிரிதரா. இவரது மனைவி விஜயா(55). பள்ளி நடத்தி வருகிறார். தங்கையின் மகன் திருமணத்துக்காக கோவை வந்தார். ராம்நகர், சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் தனது ம... |
தமிழகம் | தொடரும் கடையடைப்பு : மருதமலையில் பக்தர்கள் அவதி | பேரூர் : மருதமலை பகுதியில் தொடரும் கடையடைப்பால், பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மருதமலை அடிவாரப்பகுதியில் சட்டக்கல்லூரி மாணவர்கள், கடை வியாபாரிகளுக்கிடையே நான்கு நாட்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது; இதில், நான்கு மாணவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, மாணவர்களை தாக்கியதாக பத்து வியாபாரிகளை போலீ... |
தமிழகம் | குற்றப்பிரிவு விசாரணைக்கு மோசடி வழக்கு மாற்றம் | கோவை : கே.எஸ்.மெர்க்கன்டைல் நிதி நிறுவன மோசடி வழக்கு, பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது.பீளமேடு- காளப்பட்டி ரோடு, நேரு நகரைச் சேர்ந்தவர் சசிரேகா(45); ஷேர் புரோக்கரான இவர், தனது வீட்டில் கே.எஸ்.மெர்க்கன்டைல் எனும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அதிக வட்டி, போனஸ் தருவதாக கூறி, 150 கோடி ரூபாய் வரை முதலீடு ப... |
தமிழகம் | வரதட்சணை கொடுமை: கணவர் கைது | ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவரைப் போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மகாதேவன்(26). இவருக்கும் செங்கல்பட்டைச் சேர்ந்த ஏழுமலை மகள் மணிமேகலை(22) என்பவருக்கும் இரண்டரை ஆ... |
தமிழகம் | கோவில் திருக்குடமுழுக்கு | கவரைப்பேட்டை: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரைப்பேட்டை கிராமத்தில் கங்கையம்மன் மற்றும் விநாயகர் நூதன கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடந்தது. விழாவில் இரண்டு நாட்கள் யாக பூஜை, ஹோமம், விசேட திரவிய ஹோமம் நடந்தது. விழாவில் பக்கத்து கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதா... |
தமிழகம் | ஐந்து மாதத்தில் 600 டூ வீலர் திருட்டு: மாநாடு நடக்கும்போது பாதுகாப்பு அவசியம் | கோவை : கோவையில் ஐந்து மாதங்களில் 600 டூ வீலர் திருட்டு போயுள்ளன. இதைத்தடுக்க போலீஸ் தனிப்படை அமைக்க வேண்டும். செம்மொழி மாநாட்டின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, வாகனங்கள் திருட்டுப்போவதை தடுக்க போலீசார், உஷார் நிலையில் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.
கோவை மாநகரில் தினம் நான்கு முதல் ஏழு வாகனங்கள் மாயமா... |
தமிழகம் | துடியலூர் பேரூராட்சி சார்பில் பெண்களுக்கு வளைகாப்பு | பெ.நா.பாளையம் : துடியலூர் பேரூராட்சி சார்பாக சமுதாய கூடங்கள், வணிக வளாக அலுவலக கூடுதல் கட்டடம், பூங்கா திறப்பு விழா, 300 பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் துடியலூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம் தலை... |
தமிழகம் | கார் மீது வேன் மோதல்: 14 பேர் காயம் | காஞ்சிபுரம்: கார் மீது மோதிய வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 14 பேர் பலத்த காயமடைந்தனர். காஞ்சிபுரத்திலிருந்து தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றி வந்த வேன் நேற்று பகல் 2.30 மணிக்கு பொன்னேரிக்கரை அருகே சென்றது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிரே வந்த மாருதி சிவிப்ட் கார் மீது மோதி, சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ள... |
தமிழகம் | ரேஷன் அரிசி கடத்தியவர் கைது | குறிச்சி : மொபட்டில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். 280 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மதுக்கரையை அடுத்த திருமலையாம்பாளையம் பிரிவில், நேற்றுமுன்தினம் இரவு நெடுஞ்சாலை ரோந்து பணி போலீஸ் எஸ்.ஐ., நடராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டார். அவ்வழியே வந்த மொபட் மற்றும் ஸ்கூட் டரை நிறுத்தி சோதனை செய்தனர். இரு வாகனங்... |
தமிழகம் | லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை எதிரொலி: சுகாதார நிலைய பாங்க் கணக்கு முடக்கம் | பெ.நா.பாளையம் : துடியலூரில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். கணக்கில் காட்டப்படாத 77 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். தொடர்ந்து சுகாதார நிலையத்தின் பாங்க் கணக்கை முடக்கி வைக்க, சென்னை பொது சுகாதார இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
துடியலூரில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார... |
தமிழகம் | கே.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் அசத்தல் | அன்னூர் : அன்னூர் கே.ஜி.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 82 பேரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி மவுன ரஞ்சிதம் 482 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இ ப்பள்ளியில் 470 மதிப்பெண்களுக்கு மேல் 12 பேரும், 400க்கு மேல் 56 பேரும் பெற்... |
தமிழகம் | ரேஷன் பொருட்களில் குறையா? 11ம் தேதி குறை கேட்கும் கூட்டம் | திருவள்ளூர்: பொது வினியோக திட்டம் சம்பந்தமான முறையீடுகள் இருப்பின் பொதுமக்கள் வரும் 11ம் தேதி தங்களது வட்டங்களில் நடக்கும் குறை கேட்கும் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட ஏழு வட்டங்களில் (தாலுகா) வரும் 11ம் தேதி பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் நடைபெறும். இதில் பொ... |
தமிழகம் | நள்ளிரவில் மகள் மாயம்: தந்தை புகார் | திருவள்ளூர்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ்(39). இவர் குடும்பத்துடன் ஆரணி அடுத்த போந்தவாக்கம் கண்டிகையிலுள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மகள் மீனாட்சி(18). இவர் இரண்டாம் தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் பால்ராஜ் எழுந்து பார்க்கும்போது, தூங்கி கொண்டிர... |
தமிழகம் | நேர்மையான ஆட்டோ டிரைவருக்கு வெகுமதி | திருவள்ளூர்; ஆட்டோவில் தவறவிட்ட, 30 சவரன் நகைப் பையை போலீசில் ஒப்படைத்த, ஆட்டோ டிரைவருக்கு காஞ்சி சரக டி.ஐ.ஜி., ராமசுப்பிரமணியன் வெகுமதி வழங்கி பாராட்டினார். ஐதராபாத் சந்திரகிரி காலனியில் வசிப்பவர் முரளிதரன் மனைவி அனிதா(32). திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கிராமத்தில் உள்ள, இவரது தாய் வீட்டுக்கு, கடந்த 5ம் தேதி காலை வந்தார்... |
தமிழகம் | தொழிலாளிக்கு விபத்து நஷ்டஈடு | வால்பாறை : வால்பாறை அருகே பணியின் போது இறந்த தொழிலாளிக்கு விபத்து நஷ்டஈடு வழங்கப் பட்டது. வால்பாறை அடுத்துள்ள முருகாளி எஸ்டேட்டை சேர்ந்தவர் அஞ்சலை. இவர் கடந்த 08.06.2008ம் ஆண்டு தேயிலை பறித்துக் கொண்டிருந்த போது வழுக்கி விழுந்து தலை, கை, கால் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.இவருக்கு விபத்து நஷ்டஈடு வழங்க கோரி தொழ... |
தமிழகம் | பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: 960 மாணவர்கள் விண்ணப்பம் | பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 960 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மூன்று மற்றும் அதற்கு குறைவான பாடத்தில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு வரும் ஜூலை முதல் தேதி முதல் சிறப்பு துணைத்தேர்வு நடக்கிறது. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள... |
தமிழகம் | சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி | ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். நெல்லி, தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் அழகர், ராமகிருஷ்ணன், ரமேஷ், சுரேந்திரன், விஷ்ணுசங்கர் ஏற்பாடு செய்தனர்.* உலக சுற்... |
தமிழகம் | வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றை முழுமையாக தூர்வார வலியுறுத்தல் | வால்பாறை : வால்பாறை வாழைத் தோட்டம் ஆற்றை முழுமையாக தூர்வார வேண்டும் என்று காங்., கோரிக்கை விடுத்துள்ளது.வால்பாறை டவுன் மத்தியப்பகுதியில் அமைந்துள்ளது வாழைத்தோட்டம். இந்தப்பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
சோலையாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான வாழைத்தோட்டம் ஆறு டவுன் வழியாக செல்... |
தமிழகம் | நெகமத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ.32.80 | பொள்ளாச்சி : நெகமத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில் ஒரு கிலோவுக்கு அதிகபட்சமாக 32.80 ரூபாய் விலை கிடைத்தது.நெகமம் சுற்றுப்பகுதி விவசாயிகள் 18 பேர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்திற்கு 121 மூட் டை கொப்பரையை கொண்டு வந்தனர். மொத் தம் 3 வியாபாரிகள் கொப்பரையை தரம் பிரித்து ஏலம் கூறினர். ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சண... |
தமிழகம் | அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக 3ம் ஆண்டு நிறைவு விழா | தர்மபுரி: தர்மபுரியை அடுத்த லளிகம் அங்காள பரமேஸ்வரி அம்மன் பங்காளிகள் கோவில் கும்பாபிஷேக நிறைவு மூன்றாம் ஆண்டு விழாவையொட்டி இலவச சித்த மருத்துவ முகாம் பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
அம்மனுக்கு சிறப... |
தமிழகம் | ஸ்ரீவி.,ராஜகோபுர பாலாலயம் | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட வடபத்ரசாயி கோயில் ராஜகோபுர பாலாலய பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயில் ராஜகோபுரம் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.இதற்காக ராஜகோபுரம், மூலஸ்தானம்,... |
தமிழகம் | எள் அறுவடைக்கு பின் தொழில் நுட்பம் வேளாண் துறை அறிவுரை | தர்மபுரி: எள் அறுவடைக்கு பின் செய்ய வேண்டிய தொழில் நுட்பம் குறித்து வேளாண் துறை அறிவுரை அளித்துள்ளனர்.வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) (வேளாண், வணிகம்) நாகராஜன், வேளாண் அலுவலர் (வேளாண், வணிகம்) தாம்சன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாப்பாரப்பட்டி, கோடிஅள்ளி, எஸ்.குள்ளாத்திரம்பட்டி, ரங்காபு... |
தமிழகம் | எங்கே போனது மனிதாபிமானம்? அரசு மருத்துவமனையில் அவலம் | பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களாக மழையில் நனைந்து, குளிர்காற்றில் நடுங்கி மயங்கி கிடந்தவருக்கு உதவ டாக்டர்கள், செவிலியர்கள் யாரும் முன்வரவில்லை. மனித உயிரை காக்க வேண்டிய அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று கிடந்தவருக்கு உதவ யாரும் முன்வராததால் மனிதாபிமானம் ன்னும் இருக்கிறதா? என்று கேள்வி எழுந்து... |
தமிழகம் | டிரைவர் கழுத்தை அறுத்த மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை | தர்மபுரி: பென்னாகரம் அருகே கார் டிரைவர் கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்ற இரு மர்ம நபர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு சந்தாபுரத்தை சேர்ந்தவர் டிரைவர் நவீன் (28). இவருக்கு சொந்தமான டாடா சுமோ காரை வாடகைக்கு விட்டு வருகிறார். கடந்த 5ம் தேதி இருவர் ஒகேனக்கல் செல்ல காரை வாடகைக்கு கேட்டுள்ளனர். கா... |
தமிழகம் | பள்ளி வாகனங்களுக்கு கட்டுப்பாடு கடைபிடிக்காதோருக்கு எச்சரிக்கை | விருதுநகர்: கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பள்ளி வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. பள்ளி வாகனங்களில் "ஹைவே எல்லோ கலர்' அடித்திருக்க வேண்டும். பள்ளி வாகனம் என எழுயிருக்க வேண்டும். பள்ளி என்றால் குழந்தைகள் படம், கல்லூரி என்... |
தமிழகம் | அமிர்தா பல்கலையில் பி.டெக்., கலந்தாய்வு | கோவை : எட்டிமடையிலுள்ள அமிர்தா பல்கலையில் பி.டெக்., படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது;வரும் 12ல் நிறைவடைகிறது. பல்கலை மாணவர் சேர்க்கை தலைவர் பேராசிரியர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:பல்கலை சார்பில் ஆண்டுதோறும் மூன்று இன்ஜி., கல்லூரிகளுக்கு தேசிய அளவிலான பி.டெக்., நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ... |
தமிழகம் | பொள்ளாச்சி அருகே கார் கவிழ்ந்து மூவர் பலி | பொள்ளாச்சி : தனியார் பஸ்சில் உரசி, கார் கவிழ்ந்ததில் திருப்பூரைச் சேர்ந்த இரண்டு பனியன் கம்பெனி உரிமையாளர்கள் உட்பட மூன்று பேர் இறந்தனர்.திருப்பூர் அடுத்த சோலபாளையத்தைச் சேர்ந்தவர்கள் ராமசாமி (50); பாலகிருஷ்ணன் (44); மகேஸ்வரன் (37); பனியன் கம்பெனி நடத்தி வருகின்றனர்.மூவரும் நேற்று இடம் பார்ப்பதற்காக பொள்ளாச்சிக்கு ஹூண்... |
தமிழகம் | விபத்தில் காயம் அடைந்த சேலம் வாலிபர் பரிதாப சாவு | தர்மபுரி: தர்மபுரி அருகே அரசு பஸ் மோதியதில், காயம் அடைந்து சிகிச்சை பெற்ற சேலம் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணன் (38). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள மாமியார் வீட்டுக்கு மனைவி கவிதா மற்றும் குழந்தைகளுடன் கடந்த 24ம் தேதி பைக்கில் தர்மபுரி வழியாக சென்றார... |
தமிழகம் | ஸ்ரீவி.,யில் கடும் வறட்சி: லாரிகளில் குடிநீர் சப்ளை செய்ய வலியுறுத்தல் | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி.,யில் கடும் வறட்சி நிலவுவதால் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்.ஸ்ரீவி., நகராட்சியும் குடிநீரை ஏழு நாளுக்கு ஒரு முறை ஒன்றரை மணி நேரம் மட்டுமே சப்ளை செய்து வருகிறது. இந்த குடிநீரும் மேடான பகுதிகளுக்கு சரி வர கிடைக்கவில்லை. நிலத்தடி நீர் இல்லாததால் போர் வெல்களிலும் தண்ணீர் இல்லாத நிலை... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டுப் பணிகள்; துணை முதல்வர் இன்று ஆய்வு | கோவை : செம்மொழி மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்ய, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று கோவை வந்தார்.கோவையில் வரும் 23ம் தேதியில் இருந்து 27 வரை நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மாநாட்டுப் பந்தல், கண்காட்சி அரங்கம் மற்றும் ஆய்வரங்கப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மாநாட்டுக... |
தமிழகம் | இலவச நோட்டு வழங்கல் | அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை திருநகரம் செங்குந்தர் துவக்க, உயர்நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு சென்னை வாழ் செங்குந்தர் நண்பர்கள் குழு சார்பாக இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது. குழு தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். உறவின்முறை தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர்கள் ராமர், ராஜாமணி, கணேசன், காளிமுத்து கலந்து ... |
தமிழகம் | போலி எப்.ஐ.ஆர்., பதிவு செய்து துணிகர மோசடி: மாஜி எஸ்.ஐ.,- பனியன் அதிபர் உள்பட மூவர் கைது | கோவை : வாகன விபத்து நடந்ததாக ஜோடித்து போலி எப்.ஐ.ஆர்., பதிவு செய்த வழக்கில் மாஜி போலீஸ் எஸ்.ஐ., மற்றும் இன்சூரன்ஸ் மோசடியில் ஈடுபட்ட பனியன் கம்பெனி அதிபர் உள்ளிட்ட மூவரை, கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்தனர்; பனியன் கம்பெனி அதிபர் மகன் தலைமறைவானார்.
தமிழகத்தில், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் விபத்து இழப்பீடு ... |
தமிழகம் | இரண்டு நாள் பயணமாக கோவை வந்தார் ஸ்டாலின் | கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு பணிகளை ஆய்வு மேற்கொள்ள துணை முதல்வர் ஸ்டாலின் நேற்றுமாலை கோவை வந்தார்.கோவை அருகே உள்ள காளப்பட்டி பேரூராட்சியின் தலைவர் பையாக்கவுண்டர் தி.மு.க.,வில் இணையும் விழா மற்றும் செம்மொழி மாநாட்டுப் பணிகளை பார்வையிடவும், துணை முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கோவை வந்தார்.விமான நிலையத்தில் ... |
தமிழகம் | விழிப்புணர்வு ஊர்வலம் | விருதுநகர்: மேலக்கோட்டையூர் சின்னையாபுரம் தேவசகாயம் அன்னத்தாயம்மாள் மேல்நிலைப் பள்ளியில் மரம் வளர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ஊர்வலத்தை தலைமை ஆசிரியை பிரேமாஜூலியட் துவக்கி வைத்தார். பின்னர் மரக் கன்றுகள் நடப்பட்டன. ஆசிரியர்கள் கிரகலட்சுமி, சுந்தரபாண்டியன், சண்முகசுந்தரம், ராமசாமி... |
தமிழகம் | கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் ம.தி.மு.க.,வினர் கைது | தர்மபுரி: இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி தலைமை தபால் அலுவலகம் முன் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட ம.தி.மு.க.,வினரை போலீஸார் கைது செய்தனர்.மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை வகித்தார். அவைத்தலைவர் சாமிக்கண்ணு, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் முன்னி... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டு பணிகள் 7 நாளில் முடியும்! மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உறுதி | கோவை : செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை மாநகராட்சியில் நடைபெறும் பணிகள் அனைத்தும் வரும் 15ம் தேதிக்குள் முடிவடையும் என்று மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உறுதி கூறியுள்ளார்.
கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 118 கோடி ரூபாய் மதிப்பில் உள் கட்டமைப்பு மற... |
தமிழகம் | அடிப்படை வசதிகள் கோரி மறியல்:108 பேர் கைது | சிவகாசி: விஸ்வநத்தம் ஊராட்சி, சிவகாமிபுரம் காலனி, முருகன் காலனியில் அடிப் படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் சார்பில் மறியல் போராட் டம் சாத்தூர் ரோட்டில் நகர செயலாளர் தேவா தலைமையிலும், பைபாஸ் ரோட்டில் ஊர் நாட்டாண்மை பெரியசாமி தலைமையில் நடந்தது. போக்குவரத்து அரைமணிநேரம் பாதிக்கப்பட் டது. மண்டல துணை தாசில்தார் மைக்... |
தமிழகம் | காவிரி ஆற்றில் மூழ்கிய தொழிலாளி பிணம் மீட்பு | தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கிய நாமக்கல் தொழிலாளியின் பிணம் மீட்கப்பட்டது. õமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி காந்தி நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுதாகர் (22). இவர் தனது நண்பர்கள், உறவினர்கள் 20 பேருடன் கடந்த 7ம் தேதி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். ஒகேனக்கல் நாகர்கோவில் அருகே நண்பர்களுடன் சுதாகர் குளித்து க... |
தமிழகம் | எம்.பி., எம்.எல்.ஏ., உட்பட 260 பேர் கைது | விருதுநகர்: இலங்கை அதிபர் ராஜ்பக்ஷே டெல்லிக்கு வருவதைக் கண்டித்து விருதுநகர் தேச பந்து மைதானத்தில் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப் பாட்டம் நடந்தது.மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எம். சண்முகசுந்தரம் தலைமை வகித் தார்.தென்காசி தொகுதி எம்.பி.லிங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம். எல்.... |
தமிழகம் | வாசக சாலைக்கு பூட்டு 12 பேர் மீது வழக்கு | ராஜபாளையம்: ராஜபாளையம் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ். தர்மாபுரத்தில் உள்ள காந்திஜி வாசக சாலை மற்றும் நூலக வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தார். முதலில் அனுமதியளித்த வாசகசாலை நிர்வாகம், பின் மறுத்தது. ஆத்திரமடைந்த ராமராஜ் மற்றும் மன்ற உறுப்பினர்கள் 11 பேர் வாசக சாலைக... |
தமிழகம் | அதிகாரிகளை அரசியல்வாதிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு | மடத்துக்குளம் : மணல் கடத்திய வண்டிகளை விடுவிக்க, வருவாய்த்துறையினரை அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உடுமலை ஆர்.டி.ஓ., சோமசேகரன் தலைமையில் மடத்துக்குளம் தாசில்தார் லியாகத் அலி, வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன், வி.ஏ.ஓ.,க்கள் தனுஷ்கோடி, ராஜேஸ்வரி மற்றும் தண்டல்காரர்களுடன் குழுவாக மடத்துக்குளம் பகுதியில் ... |
தமிழகம் | ஏலத்தில் நிலக்கடலை விலை உயர்வு | அவிநாசி : சேவூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத் தில் நடந்த நிலக்கடலை ஏலத்தில் விலை அதிகரித்துள்ளது. இந்த வாரம் 325 மூட்டை வரத்தாக இருந்தது. முதல் ரகம் ரூ.3,350 முதல் ரூ.3,550 வரையும், இரண்டாம் ரகம் ரூ.2,940 முதல் ரூ.3,260 வரையும் ஏலம் போனது.ஒழுங்குமுறை விற் பனை கூட கண் காணிப்பாளர் நடராஜன் கூறுகையில், ""இந்த ஏலத்தில் 90 விவ... |
தமிழகம் | உதவி தொடக்கக் கல்வி ஆபிஸிற்கு புது கட்டடம் கட்டுவது எப்போது? | காரியாபட்டி: இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காரியாபட்டியில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் தொடங்கி 28 ஆண்டுகள் ஆகிறது. வாடகைக்கு கட்டடம் கிடைக்காததால், நான்கு ரோடு அருகில் இருந்த ஒருங்கிணைந்த சத்துணவு கூட கட்டடத்தில் அலுவலகம் துவக்கப்பட்டத... |
தமிழகம் | நார், நாராக கிழிந்தன, வாழை இலைகள்: பல்லடம் விவசாயிகள் மத்தியில் சோகம் | பல்லடம் : பல்லடம் பகுதியில் கடந்த சில நாட்களாக அடித்த பலத்த காற்றில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாழை இலைகள் நார், நாராக கிழிந்து சேதம் அடைந்தன. காற்று தொடர்ந்து வீசுவதால், இலை கிழிவு அதிகரித்து வருகிறது; விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் பகுதியில் கரடிவாவி, சோமனூர், தெற்குபாளையம், வஞ்சி பாளைய... |
தமிழகம் | காலாவதி பொருட்கள் பறிமுதல் | விருதுநகர்: விருதுநகரிலுள்ள பலசரக்கு கடைகள் மற்றும் ஓட்டல்களில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேஷ்,மோகன்குமார் ஆய்வு செய்தனர். காலாவதி நெய் மற்றும் டீ பாக்கெட்டுகள், தயாரிப்பு,விலை போன்ற விபரங்கள் இல்லாத மைதா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். ஓட்டல்களில் பிரிட்ஜில் வைத்து விற்கப்பட்ட இரண்டு நாளைக்கு முன் தயாரிக்கப்ப... |
தமிழகம் | போலீஸாருடன் அ.தி.மு.க.,வினர் வாக்குவாதம் | தர்மபுரி: தர்மபுரியில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் கைதான ம.தி.மு.க.,வினரை பார்க்க சென்ற அ.தி.மு.க.,வினருக்கும் போலீஸாருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி தலைமை தபால் அலுவலகம் முன் ம.தி.மு.க., சார்பில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இ... |
தமிழகம் | முதல் போக நெல் சாகுபடி பணி துவங்குவதில் சிக்கல்: அமராவதியில் பாசனத்துக்கு தண்ணீர் இல்லை | உடுமலை : அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப் படாததால், நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது. ஆண்டுதோறும் போதிய மழை இல்லாததால், அமராவதி அணைக்கு நீர் வரத்து குறைவு பிரச்னையால், எதிர்காலத்தில், இப்பகுதிகளில், இரண்டு போக சாகுபடி, ஒரு போக சாகுபடியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடுமலை அருகே... |
தமிழகம் | ரோட்டரி சங்க கூட்டம் | விருதுநகர்: விருதுநகரில் ரோட்டரி சங்க கூட்டம் முன்னாள் தலைவர் அய்யாச்சாமி தலைமையில் நடந்தது. கே.ராம்தாஸ் ரோட்டரி கிரேஸ் வாசித்தார். ஜி. ராதிகா பேசினார். செயலாளர் நிர்மலா நன்றி கூறினார். |
தமிழகம் | அடையாள அட்டை வழங்கல் | விருதுநகர்: திருநெல்வேலி கலை பண்பாட்டுத்துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புறக்கலைஞர்கள் 22 பேருக்கு நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. மேலும் உறுப்பினரின் குழந்தைக்கு கல்வி உதவித்தொகையாக 1,500 ரூபாயக்கான காசோலையை கலெக்டர்(பொறுப்பு) கணேசன் வழங்கினார். |
தமிழகம் | மீண்டும் துவங்கியது காற்றாலை மின் உற்பத்தி: படிப்படியாக அதிகரிப்பு | உடுமலை : மீண்டும் காற்று வீசத்துவங்கியுள்ளதால், காற்றாலை மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காடு கணவாய் வழியாக வரும் காற்றை மையமாக கொண்டு, உடுமலை பகுதிகளில் அந்தியூர், குடிமங்கலம் வட்டாரம், கிணத்துக்கடவு அருகேயுள்ள இடையர்பாளையம், பல்லடம் அருகேயுள்ள கேத்தனூர் மற்றும் ... |
தமிழகம் | காணாமல் போன சிறுவன் கொலை: கிணற்றில் சடலம் வீச்சு | திருப்பூர் : திருப்பூரில் நான்கு தினங்களுக்கு முன் காணாமல் போன சிறுவனின் சடலம் நேற்று கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டது. சிறுவனை கொன்ற மர்ம நபர்கள், சாக்குமூட்டையில் உடலை கட்டி, கிணற்றுக்குள் வீசியுள்ளனர்.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு எம்.எஸ்., நகரை அடுத்து ராதா நகர் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து. பனியன்... |
தமிழகம் | பெண்ணிடம் நகை பறிப்பு | விருதுநகர்: விருதுநகர் மணி நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி சுதாராணி(35). இவர் நேற்று காலை 11 மணிக்கு எப்.எப். ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த இருவர் சுதாராணியை கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்திலிருந்த ஒன்பது பவுன் நகையை பறிக்க முயன்றனர். அப்போது சுதாராணி நகையை கையால் பிடித்துக... |
தமிழகம் | திருமண வரவேற்பு விழா | தர்மபுரி: தர்மபுரியில் முன்னாள் எம்.பி., சேகர் இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது. தர்மபுரி முன்னாள் எம்.பி.,யும், சப்தகிரி பத்மாவதி கல்லூரி நிறுவனங்களில் தலைவர் சேகர், சாரதா மகள் வெற்றிக்கொடிக்கும், சென்னை வக்கீல் ஜெகசந்திரன், கஜலட்சுமி தம்பதியரின் மகன் நவீன்குமாருக்கும் கடந்த 2ம் தேதி சென்னை மேயர் ராமநாதன் திருமண மண்ட... |
தமிழகம் | விபத்தில் ஒருவர் பலி | ராஜபாளையம்: ஆலங்குளம் கூலித் தொழிலாளி சிவசுப்பிரமணியன்(21). இவரும் கொங்கன்குளத்தை சேர்ந்த உறவினர் முத்துக்கிருஷ்ணனும்(40) நேற்று மதியம் 2 மணியளவில் சூப்பர் ஸ்பிளண்டரில்(ஹெல்மெட் அணியவில்லை) பி.ஏ.சி.ஆர். சாலையில் சென்றனர். பி.எஸ்.கே. நகர் அருகே சென்ற போது, எதிரே வந்த வேகன் ஆர் கார் மோதியது. சிவசுப்பிரமணியன் சம்பவ இடத்தி... |
தமிழகம் | நகை திருடிய பெண் கைது | சாத்தூர்: தாயில்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி மனைவி ஜக்கம்மாள்(27). சம்வத்தன்று இவர் வீட்டிற்கு தாயில்பட்டி அண்ணாகாலனியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி கலா (40) வந்தார். ஜக்கம்மாள் கலாவிற்கு டீ வாங்கி வர கடைக்கு சென்றபோது பீரோவில் இருந்த நகைகளை திருடிக் கொண்டு கலாவை வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர். |
தமிழகம் | தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு | திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து உயர் நிலைப்பள்ளிகள், நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. மேல்நிலை வகுப்பு துவங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே, இப்பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட குடிமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி; தாராபுரம் எலுகம்வலசு... |
தமிழகம் | பொன்னேரி குளத்துக்கு தண்ணீர் வழங்க கோரிக்கை | உடுமலை : குடிமங்கலம் ஒன்றியம், பொன்னேரி ஊராட்சிக்கு அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. திட்டத்தின் கடைக்கோடியில் பொன்னேரி இருப்பதால் போதுமான குடிநீர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கிடைப்பதில்லை. இதனால், உள்ளூர் நீராதாரங் களை பயன்படுத்தி பொன்னேரி, சுண்டக்காம்பாளையம், அய்யம்பாளையம... |
தமிழகம் | மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு | கலிங்க மேட்டுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ஜெயப்பாண்டி (32). சொத்து தகராறில் தனது சித்தப்பாவை அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாப்பம்மாள்(70) சண்டையை விலக்கிவிட்டார். ஆத்திரம்மடைந்த ஜெயபாண்டி, பாப்பம்மாளை அரிவாளால் வெட்டினார். வலது கையில் வெட்டு காயத்துடன் பாப்பம்மாள் ஆஸ்... |
தமிழகம் | பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 15ல் வழங்க ஏற்பாடு | திருப்பூர் : பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ், வரும் 15ம் தேதி முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 23ம் தேதி முதல் ஏப்., 9ம் தேதி வரை நடந்தது.
திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 13 ஆயிரத்து 831 மாணவர்கள், 14 ஆய... |
தமிழகம் | உதவித்தொகைக்கு உத்தரவு வழங்கல் | திருப்பூர் : கருங்காளிபாளையத்தைச் சேர்ந்த பழனி மனைவி தெய்வாள். இவர், விவசாய தொழிலாளர்களுக்கான கூலி உதவித்தொகை கோரி கடந்த வாரம் விண்ணப்பித்திருந்தார். நகரப்பகுதியில், லத்தியா என்பவர், விதவை உதவித்தொகை கோரி விண்ணப்பித்திருந்தார். இவ்விருவருக்கும், மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், உதவித்தொகை வழங்குவதற்கான உத்தரவு வழங்கப்பட்... |
தமிழகம் | தொழிலாளி மாயம் | சிவகாசி: சுக்கிவார்பட்டியில் உள்ள ஒரு கம்பெனியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த எட்டு பேர் கடந்த 3ம்தேதி வேலைக்கு வந்தனர். இதில் மே 25ம்தேதி ஐந்து பேர் ஊருக்கு திரும்பினர். மீதமுள்ள மூன்று பேரில் ஜான்பூர் மாவட்டம், லகான்பூரை சேர்ந்த லூபாவான்(50) என்பவரை காணவில்லை. கம்பெனி இன்ஜினியர் ரஞ்சித்குமார் புகாரின் பேரில் திருத்தங்கல்... |
தமிழகம் | பொதுப்பணித்துறை நோட்டீஸ்; மக்கள் உண்ணாவிரதம் | திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 41வது வார்டு சுகுமார் நகர், சத்யா நகர் பகுதியில் நீர்வழிப் புறம்போக்கில் குடியிருப் பவர்களை, காலி செய்யக்கோரி பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இவ்விவகாரத்தில் வெளிப்படையான அணுகுமுறை வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.த... |
தமிழகம் | லஞ்ச ஒழிப்பு போலீசை கண்டதும் சிவகாசி ஆர்.ஐ., தப்பியோட்டம் | சிவகாசி: சிவகாசியில் லஞ்ச பேரம் நடத்திக் கொண்டிருந்த வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், லஞ்ச ஒழிப்புபோலீசாரை கண்டதும் தப்பியோடி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி வருவாய் ஆய்வாளர்(ஆர்.ஐ.,) பாலசுப்பிரமணியம். இவர், பிடிபடும் திருட்டு மணல் லாரிகளை விடுவிப்பதற்காகவும் மற்றும் வருமானம், இருப்பிடம் உள்ளிட்... |
தமிழகம் | உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தும் மீளாத நொய்யல் நிவாரணம் கிடைக்காமல் விவசாயிகள் ஏக்கம் | சென்னிமலை: திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றப்படும் கழிவு நீரால் நஞ்சாகி விட்ட நொய்யல் நதியில், உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து எட்டு மாதத்துக்கு பிறகும் சாய நீர்தான் ஓடுகிறது. நிவாரணம் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மல... |
தமிழகம் | ஆய்வாளர் பணியிடம் காலி | பல்லடம் : பல்லடம் நகராட்சியில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணி, இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள தால், சுகாதார பணிகள் கடுமையாக தேக்கம் அடைந்துள்ளன.பல்லடம் நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றிய தேவராஜ், இரு ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெற்றார். காலியான அப்பணிக்கு, இதுவரை புதிதாக சுகாதார ஆய்வாளர் நியமிக்கப்படவி... |
தமிழகம் | திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு | திருப்பூர் : திருப்பூர் தாலுகாவில் மூன்று திருநங்கைகளுக்கு நேற்று புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. திருப்பூர் தாலுகாவில் வசிக்கும் திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப் பட்டு வருகின்றன. இரண் டாம் கட்டமாக, நெருப் பெரிச்சல் பகுதியில் வசிக் கும் ஒன்பதுபேர் விண்ணப் பித்து இருந்தனர்.இவர்களில் மூவருக்கு புதிய ரேஷன் கார... |
தமிழகம் | ஜனாதிபதி 19ல் ஊட்டி வருகை | ஊட்டி : கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி துவங்குகிறது. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மாநாட்டை துவக்கி வைக்கிறார். இதையொட்டி 19ல் ஊட்டி வரும் ஜனாதிபதி, 20,21ம் தேதிகளில் ஊட்டி சுற்றுலா ஸ்தலங்களை பார்வையிடுகிறார். 22ம் தேதி வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில... |
தமிழகம் | துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் | ஊட்டி : சம்பளம் முறையாக வழங்கப்படாததை கண்டித்து நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கமிஷனரின் உறுதிமொழிக்கு பின்னர் மீண்டும் பணிக்கு திரும்பினர்.
ஊட்டி நகராட்சியில் 280 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இதில் 100 ஆண்கள் மற்றும் 180 பெண்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், துப்புரவு ப... |
தமிழகம் | எம்.ஜி.ஆர்., சிலை சிக்னல் மீண்டும் திறப்பு நெரிசலின்றி பயணித்த வாகனங்கள் | ஈரோடு: போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கித் தவித்ததால், எம்.ஜி.ஆர்., சிலை சிக்னல் மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று வாகனங்கள் நிம்மதியாக பயணித்தன. ஈரோடு எம்.ஜி.ஆர்., சிலை அருகே பிரப் ரோடு, ஈ.வி.என்., ரோடு, பெருந்துறை ரோடு, நசியனூர் ரோடு, மேட்டூர் ரோடு ஆகியவை சந்திக்கின்றன.
ஐந்தாண்டுக்கு முன் இங்கு சிக்னல் இல்லை. ஈ.வி.... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.