category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | வடமதுரையில் நான்கு ரோடு சந்திப்பில் விபத்து அபாயம்! | வடமதுரை: வடமதுரையில் நான்கு திசை ரோடுகள் சந்திக்கும் பகுதியில் விபத்து அபாயம் உள்ளது.திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை (எண் 45) நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வருகிறது. பெரும்பகுதி இடங்களில் ரோடு பணி நிறைவுற்றிருந் தாலும், கல்லாத் துப்பட்டி - வேல்வார்க் கோட்டை, மூக்கரபிள்ளையார் கோயி... |
தமிழகம் | பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, இலவச விளையாட்டு பயிற்சி; | திண்டுக்கல்: விளையாட்டுத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் கூறியதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆø ணயம் சார்பில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தடகளம், கால்பந்து, ஹாக்கி, நீச்சல் தொடர் ... |
தமிழகம் | பயிற்சி முகாம் | திண்டுக்கல்: பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதி மூலம் திறன் வளர்ப்பு அடிப்படை ஆதார பயிற்சி முகாம் துவக்க விழா நடந் தது. மாவட்ட கலெக்டர் வள்ளலார் துவக்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி தலைவர், கவுன்சிலர்கள், திட்டக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு, ஜூன் 18 வரை பஞ்சாயத்து ராஜ், சுற்றுப்புற சூழல், சுகாதாரம், மகளிர் சுயஉதவி... |
தமிழகம் | குத்தகை பாக்கி விவகாரம், மத்திய அதிகாரகுழு ஆய்வு...! | கொடைக்கானல்: வனத்துறைக்கு செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி விவகாரம் குறித்து,மத்திய குழு, டி.எப்.ஓ., ஆய்வு செய்தனர். கொடைக்கானலில் நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமையானது கோல்ப் கிளப் உள்ளது. இந்த கிளப் உறுப்பினர்கள் விளையாடுவதற்காக,வனத்துறைக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து, மைதானமாக்கி விளையாடி வருகின்றனர்.பல ஆண்டுகளாக... |
தமிழகம் | சென்னிமலை ரோட்டில் குறுகியபாலத்தில் வாகனங்கள்திணறல் | ஈரோடு: சென்னிமலை ரோட்டில் மயிலாடி அருகேயுள்ள குறுகிய பாலத்தை அகலப் படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். சென்னிமலையில் ஏராளமான விசைத்தறி, கைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் பெட்ஷீட், துண்டு ரகங்கள், திரைச்சீலைகள் வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி யாகின்றன.
இங்கு நெசவாளர்களுக்கென 1,010 ... |
தமிழகம் | கூடுதல் விலைக்கு உரம் விற்ற கடைகளின் லைசென்ஸ் ரத்து...கேரள மாநிலத்திற்கு உரங்கள் கடத்துவது அம்பலம்! | தேனி: கேரள எஸ்டேட்களுக்கு உரங்களை விற்ற கடை உட்பட கூடுதல் விலைக்கு ரசாயன உரங்களை விற்ற ஏழு உரக்கடைகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளன. முல்லை பெரியாற்றில் நீர் திறக்கப்படாததால் மாவட்டத்தில் முதல் போக சாகுபடியான குறுவை நெல் சாகுபடி தாமதமாகி வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் விதை நெல் தேவையான அள... |
தமிழகம் | அரசு பள்ளி மாணவர்களை சேர்க்க, உதவிபெறும் பள்ளி நிர்வாகம் முயற்சி ! | பெரியகுளம்: அரசு பள்ளி மாணவர்களை சான்றிதழ் இல்லாமல் சேர்க்க முயன்ற உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாகத்தை கண்டித்து ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் சேர்க்கப்படுவதால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் பெரியகுளம்... |
தமிழகம் | சோதனைக்கு சென்ற போலீசுக்கு ஊசி: போலி பெண் டாக்டர் கைது! | தேனி: போலி டாக்டரா என சோதனையிட சென்ற பெண் போலீசுக்கு ஊசி போட்ட போலி பெண் டாக்டர் கைது செய்யப் பட்டார். தேனி மாவட்டத்தில் இது வரை 43 போலி டாக்டர்கள் கைது செய்யப் பட்டுள்ள நிலையில் தொடர்ந்து போலி டாக்டர்கள் குறித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். தேனி அருகே லட்சுமிபுரத்தில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு கிளினிக் நடத்... |
தமிழகம் | இலவச காஸ் இணைப்பு ஒதுக்கீடு; | தேனி: இலவச காஸ் வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 2006-07 முதல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. முதல் ஆண்டில் 7,293 பேருக்கும், 2007-08ல் 16,833 பேருக்கும், 2008- 2009 ல் 12,630 பேருக்கும் காஸ் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 11,200 பேருக்கு வழங்க ஒதுக்கீடு செய்யப் பட்டதில் இதுவரை 4,581 பேருக்கு காஸ்... |
தமிழகம் | மின்சாரம் கணக்கெடுப்பதாக வீட்டுக்குள் புகுந்து திருட்டு | ஈரோடு: மின் கட்டணம் கணக்கெடுக்க வந்துள்ளதாக கூறி பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு நடந்தது. ஈரோடு சிதம்பரம் காலனியை சேர்ந்தவர் ராமதுரை (42); மூலப்பாளையம் மதுக்கடை பாரில் உதவியாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி(37) அருகில் உள்ள வீடுகளுக்கு வீட்டு வேலைக்கு சென்று விடுவார்.
நேற்று காலை, வீட்டில் யாருமில்லாத ... |
தமிழகம் | நகை திருட்டு.., | தேனி: ஆண்டிபட்டி மீனாட்சிநாடார் தெருவை சேர்ந்தவர் பழனியாண்டவர்(35). இவரது வீட்டுக்கு மேக்கிலார்பட்டியை சேர்ந்த உறவினர் தண்டபாணி மனைவி தமிழ்(38) அடிக்கடி சென்று வந்துள் ளார். சில தினங்களுக்கு முன் வீட்டுக்கு வந்தவர் குழந்தைகளுக்கு காசு கொடுத்து அனுப்பி விட்டு பீரோவை திறந்து ஐந்தரை பவுன் நகையை திருடியதாக ஆண்டிபட்டி போலீச... |
தமிழகம் | கோயில்களில் திருட்டு..! | தேனி: வீரபாண்டி அருகே கருப்பதேவன்பட்டியில் உள்ள அம்மன் கோயில் கதவை திறந்து நான்கு வெண்கல மணிகள், குத்து விளக்கு உட்பட பொருட்களை திருடிச் சென்றனர். அதே நாளில் நாராயணபுரம் வீரம்மாள் கோயில் கதவு பூட்டை உடைத்து சென்ற திருடர்கள் வெள்ளியால் ஆன அம்மன் கண்மலர், வெள்ளி மூக்குத்தி, தோடு ஆகியவற்றை திருடிச்சென்றனர். வீரபாண்டி போலீ... |
தமிழகம் | மாநில எல்லையில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் | கூடலூர்: தமிழகப்பகுதியில் பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக சுகாதாரத்துறை மாநில எல்லையில் மருத்துவ முகாம் களை துவக்கியுள்ளது. முதற்கட்டமாக லோயர்கேம்ப், கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்களில் வருபவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட... |
தமிழகம் | பள்ளியில் கலை நிகழ்ச்சி | போடி: போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுகாதார கலை நிகழ்ச்சி உதவி தலைமையாசிரியர் சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் சரவணக்குமார் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் முத்துவிஜயன் வரவேற்றார். பெரியகுளம் நேசம் தொண்டு நிறுவன தலைவர் முருகன் கலை குழுவினர் மாணவ, மாணவிகளிடையே கலை நிகழ்ச்சிகள... |
தமிழகம் | உறை கிணறுகளில் நீர்மட்டம் குறைவால் குடிநீர் தட்டுப்பாடு! | வருஷநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள உறை கிணறுகளின் நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, முத்தலாம்பாறை, மந்திச்சுனை-மூலக்கடை, தங்கம்மாள்புரம், குமணந்தொழு, கோம்பைத்தொழு உட்பட 18 ஊராட்சிகள் கடமலை மயிலை ஒன்றியத்தில் உ... |
தமிழகம் | வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட நால்வர் கைது . | உத்தமபாளையம்: உத்தமபாளையம் பகுதியில் தொடர் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அனுமந்தன் பட்டி அருகே ஊத்துக்காடு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு சிவன் கோயில் அருகே பெட்டிக்கடை முன்பு தூங்கிக்கொண்டிருந்த சிவன்காளை என்பவரை தாக்கிவிட்டு கும்பல் ஒன்று பொருட்களை திருடிச்சென்றது.... |
தமிழகம் | பஸ் மோதி ஒருவர் பலி | உத்தமபாளையம்: அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி(30). இவர், அதிகாலையில் அனுமந்தன்பட்டி-கோவிந்தன் பட்டி ரோட்டில் கழிவறைக்கு சென்றார். கம்பத்திலிருந்து கன்னியாகுமரிக்கு சென்ற அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலே யே முனியாண்டி பலியானார். டிரைவர் பாலசுப்ரமணியனை கைது செய்து உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வ... |
தமிழகம் | இந்தாண்டு போனஸ் எப்படியிருக்கும்? பரிதவிக்கும் பனியன் தொழிலாளர்கள் | திருப்பூர் : நூல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால், ஒட்டுமொத்த பின்னலாடை உற்பத்தியும் சரிந்து வருகிறது. இதனால், மூன்று மாதத்திற்கு முன்னதாகவே பனியன் தொழிலாளர் போனஸ் பிரச்னை தலைதூக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் பின்னலாடை தொழில் மூலம், ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியும், 6,000 கோடி ரூபாய்க்கு உள்நாட்... |
தமிழகம் | நிரந்தர படிவத்தில் ஜாதிச்சான்று வழங்கல் | திருப்பூர் : வெள்ளைத்தாளில் ஜாதிச்சான்று பெற்ற மாணவர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி நிரந்தர படிவத்தில் ஜாதிச்சான்று வழங்கப்பட்டது. திருப்பூர் தாலுகா அலுவலகத்தில் நிரந்தர ஜாதிச்சான்று படிவம் தீர்ந்து போனதால், வெள்ளை காகிதத்தில் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெள்ளை காகிதத்தில் சான்று பெற்று கவுன்சிலிங் விண்ணப்பித்... |
தமிழகம் | மேயர் வார்டில்குறை: துணைமேயர் உடன்சென்றார் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ | ஈரோடு: மேயர் வார்டில் புகுந்து துணை மேயர் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ., குறைகேட்டனர். நேற்று முன்தினம் ஏழாவது வார்டில் மேயர் நடத்திய குறை கேட்பு ஆய்வுக்கு, நேற்று துணை மேயர் பதிலடி தந்தார். ஈரோடு மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. 15 தி.மு.க., எட்டு அ.தி.மு.க., ஆறு காங்கிரஸ், 13 சுயேச்சை மற்றும் ஒரு தே.மு.தி.க., வுன்சி... |
தமிழகம் | பெருமாள் கோவில் இடிப்பு | கோவை : ரோட்டின் ஓரத்தில் அமைந்திருந்த பெருமாள் கோவிலை நேற்று மாநகராட்சியினர் இடித்து தள்ளினர். கோவை வடவள்ளி, பி.என்.புதூர் ரோட்டின் ஓரத்தில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இத்திருக்கோவிலை ரோட்டை அகலப்படுத்தும் பணிக்காக, இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதையடுத்து, நேற்று மாலை ஜே.சி.பி., இ... |
தமிழகம் | நாவல்பழம் கிலோ ரூ.160! | தேனி: நாவல் பழத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் கிலோ 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொடைக்கானல் பகுதியில் இருந்து நாவல் பழத்தை விற்பனைக்கு கொண்டுவரும் வியாபாரிகள் இவற்றை நல்ல விலைக்கு விற்று லாபம் அடைகின்றனர். பத்து கிலோ, 20 கிலோ என விற் பனைக்கு கொண்டு வந்து வைத்த ஒரு மணி நேரத் திலே விற்று தீர்ந்துவிடுகி... |
தமிழகம் | பொது மக்கள் திடீர் மறியல் | கோவை : சாக்கடை கழிவுநீர் செல்ல தோண்டப்பட்ட குழி மூடப்படாததால், சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். கோவை செல்வபுரம், என்.எஸ்.கே.வீதியில் சாக்கடை கட்ட ஏழு அடி ஆழம், இரண்டு அடி ஆகலத்துக்கு குழி தோண்டப்பட்டது. அப்போது, மண் ரோட்டிலேயே கொட்டப்பட்டது.இதனால், ரோடு நடந்து செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. அ... |
தமிழகம் | பேராசிரியர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு | பெ.நா.பாளையம் : கோவை கவுண்டம்பாளையத்தில், கல்லூரி பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகளைத் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கவுண்டம்பாளையம் லூனா நகரில் வசிப்பவர் டேவிட் ஜோசப்ராஜ்(30); கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர். கடந்த 11ம் தேதி, நாகர்கோவில் சென்ற இவர், நேற்று காலை வீடு திரும்பினார். வீ... |
தமிழகம் | ஊராட்சி துணைத்தலைவர் வீட்டில் 37 பவுன் நகை திருட்டு: கோவில் நகைகளும் தப்பவில்லை | கிணத்துக்கடவு : கோவை அருகே கிணத்துக்கடவு, மன்றாம்பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் வீட்டின் பூட்டை உடைத்து, கோவில் மற்றும் வீட்டு நகைகள் 37 பவுன், மூன்றாரை கிலோ வெள்ளியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மன்றாம்பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் மயில்சாமி (46); இங்குள்ள மாரியம்மன் கோவில் தர்மகர்த்தாவாகவும் உள்ளார். வீட்டில் தனது நக... |
தமிழகம் | முல்லைப் பெரியாறு பிரச்னை; விவசாயிகள் பேச்சுவார்த்தை.., | கூடலூர்: பெரியாறு அணைப்பிரச்னை தொடர்பாக தமிழக விவசாயிகளை அழைத்து கேரள மக்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். பெரியாறு அணைப்பிரச்னை முடிவுக்கு வராத நிலையில் சுப்ரீம் கோர்ட் அமைத்த ஐவர் குழு நேற்று முன்தினம் டில்லியில் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. இந்நிலையில், நேற்று தமிழக விவசாயிகளை அழைத்து கேரளாவில்... |
தமிழகம் | கோர்ட்டை புறக்கணிக்க முடிவு | கோவை : ஐகோர்ட் வழக்கு மொழியாக தமிழை, அமல்படுத்த வலியுறுத்தி வக்கீல்கள், நாளை கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தமிழை ஐகோர்ட் வழக்கு மொழியாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையில் வக்கீல்கள் சிலர் தொடர் உண்ணாவிரதம் மேற் கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழகம், புதுச்சேரியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம், உண்... |
தமிழகம் | செம்மொழி மாநாடு: போக்குவரத்து வசதி எப்படி? வெளியூர் மக்களுக்கு வழிகாட்ட உதவி மையம் | உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் கோவைக்கு வருவோர், எந்தெந்த சாலைகள் வழியே வரலாம்; நகரில் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் எந்தெந்த இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன, என்ற விபரங்களை மாநகர போலீசார் நேற்று வெளியிட்டனர். வெளியூர் மக்களுக்கு வழிகாட்ட விமான நிலைய... |
தமிழகம் | பள்ளிகளில் நூலக பாடவேளை தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி | தேனி: பள்ளிகளில் நூலக பாடவேளை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்டத்தில் உள்ள கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு நூலகங்களில் சென்று படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் "நமது உலகம்' நூலக திட்டத்தில் அவர்கள் நூலகங்களில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு வருகின்... |
தமிழகம் | தங்க கூரை அருகே வழிபட அனுமதி | கோவை : கோவையின் சபரிமலை என்றழைக்கப்படும் சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் தங்கமேற்கூரை அருகே நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய, சிறப்பு அனுமதியை கோவில் நிர்வாகம் வழங்கியுள்ளது. சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் ஐயப்பன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்... |
தமிழகம் | புதிய பஸ் ஸ்டாண்ட்: இன்று முதல் அனுமதி | கோவை : மேட்டுப்பாளையம் ரோடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் எதிரே அமைந்துள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் பொதுமக்கள் பயன் பாட்டுக்கு இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது. கோவை - மேட்டுப்பாளையம் ரோடு அரசு போக்குவரத்து கழகத்திற் எதிரே உள்ள பகுதியில் ஏழு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டட திறப்பு விழா ந... |
தமிழகம் | குட்டி யானை இறந்தது | பந்தலூர் : முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பென்னை வனப்பகுதியில், நோயால் பாதிக்கப்பட்டிருந்த குட்டி யானை இறந்தது. யானைக்குட்டி உணவு ஏதும் உட்கொள்ளாமல், மிகவும் சோர்வான நிலையில் எழ முடியாமல் படுத்து கிடந்தது. அதற்கு, குளுகோஸ் ஏற்ற வனத்துறையினர் ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து யானைக்குட்டியின் உடல் நிலையை கண்காணித்து வ... |
தமிழகம் | தேர்தல் ஆயத்த மாநாடு ஜூலை 6ல் நடக்கிறது | தேனி: அனைத்து மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கும் தேர்தல் ஆயத்த மாநாடு ஜூலை 6ல் சென்னையில் நடக்கிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் 2010 ல் சுருக்க திருத்தப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதுபார்க்கப்பட்டு 100 சதவீதம் முழு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. புதிதாக சேர்க்... |
தமிழகம் | வருஷநாடு மலையில் வைரக்கல் இருப்பதாக ஏமாற்றி பல லட்சம் பணம், நகை மோசடி! ஊராட்சி தலைவர் மீது வழக்கு; | தேனி: வருஷநாடு மலையில் வைரக்கல்-நாகரத்தினக்கல் இருப்பதாக கூறி கிராம மக்களிடம் பல கோடி ரூபாய் நகை-பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார் ஊராட்சி தலைவர் உட்பட மேலும் எட்டு பேரை தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, துள்ளுக்குட்டி நாயக்கனூரை சேர்ந்தவர் கிருஷ்ணன்(60). ஒன்றரை ஆண்டு... |
தமிழகம் | வரதட்சணை கொடுமை,4 பேர் மீது வழக்கு! | ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் அருகே பாட்டக்குளத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி. கீழ ராஜகுலராமனை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர்களிருவரும் கடந்த 2008 மார்ச் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது வரதட்சணையாக 7 பவுன் நகை, 10 ஆயிரம் ரொக்கம், 15ஆயிரம் பெறுமான பாத்திரங்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. மேலும் ... |
தமிழகம் | பள்ளி அருகே கதிரடிக்கும் களம்,மாணவர்கள் பாதிக்க வாய்ப்பு.., | சத்திரப்பட்டி: கோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அனந்தப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அருகே புறம்போக்கு இடத்தில் கதிர் அடிக்கும் களம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது களம் அமைப்பதற்கான வானம் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு பள்ளி ஆசிரியர்களும், அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்து ... |
தமிழகம் | மகளிர் சுய உதவிக்குழு தர மதிப்பீட்டு முகாம். | விருதுநகர்: மாவட்டத்திலுள்ள குழு அமைத்து ஆறுமாதங்கள் முடிவடைந்த சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதிக்கடன் இணைப்பு பெற தர மதிப்பீட்டு முகாம் நடக்கவுள்ளது. இதில் ஒன்றியம் வாரியாக மகளிர் திட்ட உதவி அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், வங்கி பிரதிநிதிகள் ஆகியோர் தர மதிப்பீடு செய்ய உள்ளனர். இன்று, அருப்புக் கோட்டை, விருது... |
தமிழகம் | பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா | ஈரோடு: பி.எஸ்.என்.எல் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஈரோடு டெலிஃபோன் பவன் முன், தர்ணா போராட்டம் நடந்தது. பஞ்சப்படி 78.2 சதவீதத்தை இணைக்க வேண்டும். பி.எஸ்.என்.எல்., 3-ஜீ மற்றும் போர்டு வயர்லெஸ்ஸுக்கு செலுத்தவேண்டிய கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மொபைல் இணைப்புகள் தர தேவையான கருவிகள் வாங்க வேண்டும்.
அரசு மற்றும் பொதுத்... |
தமிழகம் | சிவகாசியில் வேலைக்கு செல்வோரின் வீட்டில் தொடரும் திருட்டு சம்பவங்கள்...! | சிவகாசி: வேலைக்கு செல்வோரின் வீடுகளை நோட்டமிட்டு திருடும் கும்பலை ஒடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்போர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி காந்திநகர், பொதிகை நகர், செல்வம் நகர் பகுதிகளில் அரசு பணியாளர்கள், தொழில் அதிபர்கள் பலர் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள பல வீடுகளில் கணவன், மனைவி... |
தமிழகம் | வெம்பக்கோட்டை அணை ஷட்டர் சீரமைப்பு பணி ஒருவாரத்தில் துவக்கம்... | சிவகாசி: வெம்பக்கோட்டை அணை ஷட்டர் சீரமைப்பு பணி ஒரு வாரத்தில் துவங்கவுள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெம்பக்கோட்டை அணை நீர் பாசன வசதிக்கும், சிவகாசி நகராட்சி குடிநீர் தேவைக்கும் பயன்பட்டு வருகிறது. 7.5மீட்டர் உயரமுடைய அணையில் 5.5 மீட்டர் வரை நீர்தேக்கி பயன்படுத்தலாம். கடந்த காலங்களில் சிவகாசி நகரா... |
தமிழகம் | கார் மோதி தலையாரி பலி | விருதுநகர்: விருதுநகர் அருகேயுள்ள செவலூரைச் சேர்ந்தவர் மயில்வாகணன்(50).கூரைக்குண்டு தலையாரியாக இருந்தார். இவர் நேற்று முன்தினம் மாலையில் கலெக்டர் அலுவலகம் சென்று விட்டு சைக்கிளில் நான்கு வழிச்சாலையை கடக்கும்போது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். கூரைக்குண்டு கிராம நிர்வாக அதிகாரி பால்ராஜ் செய்த புகார்படி சூலக்க... |
தமிழகம் | புகார் செய்ய வந்தவர்களை, தாக்கிய 5 பேர் கைது; | விருதுநகர்: விருதுநகர் அருகேயுள்ள கல்போது கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி(44).இவரது மருமகள் தங்கபாண்டீஸ்வரியை அதே ஊரைச் சேர்ந்த பாண்டி(23) கேலி செய்துள்ளார். இது குறித்து கருப்பசாமியும் அவரது தந்தை தங்கவேலும் போலீசில் புகார் செய்ய வந்தனர். அப்போது சேவியர்,பாண்டி உட்பட ஐந்து பேர் அவர்களை வழிமறித்து கம்பால் தாக்கி, கத்... |
தமிழகம் | ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்! | விருதுநகர் கச்சேரி ரோட்டிலுள்ள கே.கே. நகரைச் சேர்ந்தவர் காந்திராஜன் (57).இவருக்கு விருதுநகர் தாலுகா அலுவலகம் பின்புறம் இடம் உள்ளது. இந்த இடத்தை பிளாட் போட்டு விற்பதற்காக காந்திராஜன் கற்களை ஊன்றி இருந்தார். கெப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த கண்ணனும், மங்கலத்தைச் சேர்ந்த கண்ணாடி முருகனும் ஊன்றி இருந்த கற்களைப் பிடுங்கி எரிந... |
தமிழகம் | டிராபிக் எஸ்.ஐ.,யுடன், தகராறு செய்தவர் கைது! | அருப்புக்கோட்டை: திருமங்கலம் அருகேயுள்ள எம். புளியங்குளத்தைச்சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (36). அருப்புக்கோட்டையிலுள்ள ஒரு தனியார் நூற்பு மில்லில் ஜீப் டிரைவராக இருக்கிறார்.இவர் நேற்று முன்தினம்இரவு 8.10 மணிக்கு அண்ணாதுரை சிலை அருகே ஜீப்பை நிறுத்தியிருந்தார். அப்போது அப்பகுதியில் டிராபிக் எஸ்.ஐ. பூபதிராஜ் போக்குவரத்தை ஒழுங... |
தமிழகம் | மூலனூரில் ரூ. 27 லட்சத்துக்கு பருத்தி ஏலம் | மூலனூர்: மூலனூர் விற்பனை கூடத்தில் 27 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது. மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. திருப்பூர், கோவை, அன்னூர், புளியம்பட்டி, பல்லடம், சூலூர், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பருத்தி வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
மூலனூர், புதுப்பை, பட்டுத்... |
தமிழகம் | இளம் பெண் கடத்தல் | சாத்தூர்: சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தை சேர்ந்தவர் பாண்டித்தேவர் மகன் கோபால் (42) இவர் மகள் சாந்தி (16) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) கடந்த ஜூன் 13 தேதி துலுக்கன்குறிச்சியை சேர்ந்த சுந்தர் ராஜ் மகன் மூர்த்தி என்பவர் கடத்தி சென்று விட்டதாக வெம்பக் கோட்டை போலீசில் கோபால் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரித்து வர... |
தமிழகம் | சத்துணவு பணியாளர் சங்க கூட்டம் | ஈரோடு: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம், ஈரோடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது. வரும் 19ம் தேதி ஈரோடு தமயந்தி பாபு சேட் திருமண மண்டபத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் பத்தாவது மாவட்ட மாநாடு நடத்துவது. அன்று மதியம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது. மாவட்டத் தலை... |
தமிழகம் | வாலிபர் மீது தாக்குதல் 3 பேர் கைது | சாத்தூர் அருகே நல்லாம்பட்டி காலனியை சேர்ந்தவர் ராமையா மகன் மாரிமுத்து (22) இவர் வீட்டின் முன்பு குளித்தார்.அப்போது சோப்பு நுரை பக்கத்து வீட்டுக்காரர் பாண்டியராஜன் (30),மீது பட்டதால் ஆத்திரமடைந்த பாண்டியராஜன் அவரது சகோதரர் ராஜபாண்டி (32), தகப்பனார் நடராஜன் (57), மாரிமுத்தை அடித்து உதைத்தனர். காயமடைந்த மாரிமுத்து போலீசில... |
தமிழகம் | கணவன் மனைவி தற்கொலை | ராஜபாளையம்: திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி அருகே சங்குபுரத்தை சேர்ந்தவர் ராமர்(45). இவரது மனைவி மஞ்சுளா மாடத்தி(40). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடால் ராமருக்கும் மஞ்சுளா மாடத்திக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், இருவரும் நேற்று மாலை ராஜபாளையம் சஞ்சீவி மலை கிழக்கு பகுதியில் உள்ள நரிப்பாற... |
தமிழகம் | பயிற்சி முகாம் | ஈரோடு: சமச்சீர் கல்வி குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சமச்சீர் கல்வி ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புக்கு அறிமுகமாகியுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், சமச்சீர் கல்வியில் செயல்வழி கற்றல் அட்டைகளில் மாற்றம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 127 பள்ளி ... |
தமிழகம் | மகளை தந்தை கடத்தியதாக, காதலன் போலீசில் புகார்..., | காரியாபட்டி: காரியாபட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (32). சுமோ டிரைவராக உள்ளார். இதே ஊரில் உள்ள திருவேங்கிடம் மகள் சாந்தி(27). இவர்கள் இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இந்த விஷயம் சாந்தி வீட்டாருக்கு தெரிந்தது. இந்நிலையில் சாந்தியின் விருப்பத்திற்கு மாறாக அவரை தந்தை திருவேங்கடமே கடத்தியுள்ளார். தனது மகளை முதல் மர... |
தமிழகம் | மாணவர் பேரணி | ஈரோடு: ஈரோடு பெரியவலசு அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தேவராஜா தலைமை வகித்தார். வீரப்பன்சத்திரம் நகராட்சி தலைவர் மல்லிகா நடராஜன் கல்வி விழிப்புணர்வு குறித்து பேசினார். கவுன்சிலர்கள் ராஜேந்திரன், சேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் சார்பில் த... |
தமிழகம் | பாராட்டு விழா | சேத்தூர்: சேத்தூர் அருகே சுந்தரராஜபுரம் ஆதி திராவிடர் நல அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. நாட்டாண்மைகள் அழகர், ராஜையா தலைமை வகித்தனர். ஊராட்சி தலைவர் ராசையா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட ஆ... |
தமிழகம் | நிர்வாகிகள் தேர்வு | சிவகாசி: சிவகாசியில், மாவட்ட ஆணழகர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. காளீஸ்வரி குரூப் ஆப் இன்டஸ்ட்ரீஸ் இயக்குனர் ஆறுமுகச்செல்வன் தலைவராகவும், சுந்தரேஸ்வரன் செயலாளராகவும், துணைத்தலைவராக சோமசுந்தரம், ராஜக்கனி, பொருளாளராக முருகன், இணைச்செயலாளர்களாக விஜயராகவன், மாரிமுத்து, சரவணக்குமார், கவுரவ ஆலோசகர்களாக கண்ணன், வேல்முரு... |
தமிழகம் | பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் :அரசு உத்தரவு | விருதுநகர்: தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி சர்ச்சைகள் ஏற்படுத்தி வருகிறது. இதனை தவிர்க்கும் விதமாக அரசு அனைத்து பள்ளி, கல்லூரி வாகனங்களில... |
தமிழகம் | தென் மேற்கு பருவமழை மாவட்டம் தோறும் வெள்ள கட்டுப்பாட்டு அறை அமைக்க உத்தரவு! | விருதுநகர்: தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை காரணமாக ஏற்படும் வெள்ள சேதங்களை தவிர்க்க அனைத்து மாவட்டங்களிலும் வெள்ள கட்டுப்பாட்டு அறை துவக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிமடைந்துள்ளது. இதில் தமிழகப்பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெள்ள பெருக்கு ஏற்பட்டால் சேதங்களை தவிர்ப்பதற்கு முன் எ... |
தமிழகம் | ஸ்ரீவி.யில் தீவிரவாதிகள் நடமாட்டம் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவார செண்பகதோப்பு பகுதியில் புகுந்த நபர்கள் தீவிரவாதியா என கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டிய ராஜபாளையம், செண்பக தோப்பு பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன் அதிரடிப்படையினர் தீவிரவாதிகள் தங்... |
தமிழகம் | பணத்திற்காக கடத்தப்பட்டவரை போலீசார் மீட்டனர்: 4 பேர் கைது ! | ராஜபாளையம்: ராஜபாளையத்தில் பணத்திற்காக கடத்தப்பட்டவரை போலீசார் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். ராஜபாளையம் அருகே ஜமீன்கொல்லங்கொண்டானை சேர்ந்தவர் முருகன். இவர் ராஜபாளையம் மங்காபுரம் தெருவை சேர்ந்த காளிராஜிடம்(28) போலீஸ் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வாங்கி ம... |
தமிழகம் | நடப்பது செம்மொழி மாநாடு; மது எதற்கு? | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது மதுக்கடைகள் செயல்படுவதால், சாலை விபத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் நேரிடும் அபாயம் உள்ளது. மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிமாவட்ட மக்களின் பாதுகாப்பு கருதி, "டாஸ்மாக்' மதுக்கடைகளை ஐந்து நாட்கள் மூட, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
கோவையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, வரும் ... |
தமிழகம் | 60 ஆண்டுகள் பழமையான பாலத்தில் ஆபத்து பயணம் | பவானி: பவானியில் பழமையான வாய்க்கால் பாலம் சேதமடைந்துள்ளதால், கனரக வாகனங்களில் செல்பவர்கள் பீதியடைந்துள்ளனர். பவானியில் காலிங்கராயன் அணைக்கட்டு அருகே வாய்க்காலை கடக்கும் வகையில் 60 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் நீண்ட காலமாகவே பராமரிப்பு செய்யாத நிலையில், பாலத்தின் அடிப்பகுதி ஆங்காங்கே பெயர்ந்து, சேதமடைந... |
தமிழகம் | ஆண்டாள் கோயில் தேர் சக்சகரங்கள் சீரமைப்புக்கு பின் பொருத்தப்பட்டன ; | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேர் சகரங்கள் 1.25 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு நேற்று பொருத்தப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரின் சக சக்கரங்களின் அடிப்பகுதி தட்டையாக இருந்ததால் தேர் ஓடும் போது வேக தடுப்பு கட்டைகள் அதிகளவில் சேதமடைந்தது. மேலும் தேரோடும் வீதிகளும் பெயர்ந்து சேத... |
தமிழகம் | சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: 4 தொழிலாளர்கள் பலி 4 பேர் கவலைக்கிடம் | சிவகாசி: சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் பலியாகினர். 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். சிவகாசி - எம்.புதுப்பட்டி செல்லும் மெயின் ரோடு வடபட்டியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பி.ஆர்.சி., பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். மாலை 4.30 மணிக்கு... |
தமிழகம் | பட்டாசு ஆலையில் விதி மீறல்கள்! | * கோழிப்பண்ணை இருந்த இடத்தில் பட்டாசு அறைகளாக மாற்றி பட்டாசு தயாரிப்பு செய்துள்ளனர்.* கோழிப் பண்ணைக்காக போட்ட நீளமான சிமென்ட் தரையில் பட்டாசுகள் காயவைக்ககும் பிளாட்பாரம் ஆக பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனால் ஒரு அறையில் விபத்து ஏற்பட்டவுடன் மற்ற இரண்டு அறைகளிலும் விரைவாக தீ விபத்து ஏற்பட்டது. * பட்டாசு அறைகளுக்கு செல்லும... |
தமிழகம் | காங்., எம்.எல்.ஏ., மீது புகார்: வக்கீலுக்கு போலீஸ் சம்மன் | விழுப்புரம்: தண்டவாளம் தகர்ப்பு தொடர்பாக காங்., எம்.எல்.ஏ., மீது புகார் கொடுத்த வக்கீலுக்கு, கியூ பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். விழுப்புரம் வக்கீல்கள் கண்ணன், பாபு ஆகியோர், ரயில் பாதை தகர்ப்பு சம்பவத்தில், ராமநாதபுரம் காங்., எம்.எல்.ஏ.,ஹசன் அலிக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரிடமும் தனிப்படையினர் விசாரணை நடத்த ... |
தமிழகம் | எக்ஸல் கல்லூரி பட்டமளிப்பு விழா | ஈரோடு: குமாரபாளையம் எக்ஸல் கல்வியியல் கல்லூரி மற்றும் கந்தசாமி கல்வியியல் கல்லூரிகளின் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. எம்.எட்., மாணவியர் சுகந்தி, மேரி ரீட்டா மார்டினா ஆகியோர் பாட வாரியாக மாநில முதலிடம் பெற்றனர். 200 பி.எட்., மற்றும் 25 எம்.எட்., மாணவ, மாணவியர்க்கு பட்டம் வழங்கி, கோவை பாரதியார் பல்கலைக்கழக முன... |
தமிழகம் | அங்கன்வாடி ஊழியருக்கு ஜமாபந்தியில் சீருடை | கரூர்: தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியின் போது கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கலெக்டர் சீருடை வழங்கினார். இதுகுறித்து கலெக்டர் உமாமகேஸ்வரி பேசியதாவது: சென்னையில் நடந்த அரசு ஊழியர்கள் மாநாட்டில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சீருடை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன... |
தமிழகம் | ஆசிரியர்களுக்கு தகுதி காண் பருவம் நிறைவு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் | திருநெல்வேலி : ஆசிரியர்களுக்கு தகுதி காண் பருவம் நிறைவு செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் தனசிங் ஐசக் மோசஸ், மாவட்ட தலைவர் குமேரசன், செயலாளர் சண்முகப் பாண்... |
தமிழகம் | அரசின் சமச்சீர் கல்வி புத்தகங்களுக்கும் ரூ.3,000 வசூல் : வகுப்பு ஆசிரியர்கள் மூலம் கட்டண கொள்ளை | திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் அரசின் இலவச சமச்சீர் கல்வி புத்தகங்களுக்கும் 3,000 ரூபாய் முதல் 5,000 வரை கட்டண கொள்ளை நடந்து வருகிறது. வகுப்பு ஆசிரியர்கள், பாங்குகள் மூலம் கட்டண வசூல் வேட்டை நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தனியார், மெட்ரிக் பள்ளிகளில் தொடர்ந்து கல்வி கட்டண... |
தமிழகம் | பள்ளியே இல்லாத குளித்தலை நகராட்சி முடங்கி கிடக்கும் கல்வி வரி தொகை | குளித்தலை: குளித்தலை நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் பள்ளிகளே இல்லாததால், வசூலிக்கப்படும் கல்வி வரி பயன்படுத்த முடியாமல் முடங்கி கிடக்கிறது. யூனியன் பள்ளிகளை, நகராட்சிக்கு அளிக்க அரசுக்கு தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். குளித்தலை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இங்கு குளித்தலை யூனியன் பள்ளிகளாக மாரியம்மன் கோவில... |
தமிழகம் | தலைமையாசிரியருக்கான பயிற்சி முகாம் அனைவருக்கும் கல்வி இயக்கம் ஏற்பாடு | லாலாப்பேட்டை: அனைவருக்கும் கல்வி இயக்க கரூர் மாவட்ட திட்ட அலுவலர் சிவஞானம் மற்றும் உதவி திட்ட அலுவலர் பரமானந்தம் ஆகியோர் உத்தரவில் கிருஷ்ணராயபுரம் வட்டார மையத்தில் தலைமையாசிரியர்கள் கூட்டம் நடந்தது. வட்டார மேற்பார்வையாளர் கண்ணகி தலைமை வகித்து, செயல்வழி கற்றல் வகுப்புகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறை சார்ந்த குறிப்புகள... |
தமிழகம் | சாலையோரம் கவிழ்ந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு | கரூர்: பாமாயில் ஏற்றி சென்ற டேங்கர் லாரி ஒன்று நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்ததில் ஐந்து மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோட்டில் இருந்து விருதுநகருக்கு பாமாயில் ஏற்றி சென்ற ஈஷர் டேங்கர் லாரி ஒன்று கரூர் சுக்காலியூர் செக்போஸ்ட் அருகே நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது.
கவிழ்ந்த லாரியில் பாமாயில் இருந்த தகவல் அறிந... |
தமிழகம் | அ.தி.மு.க.,வின் குறைகேட்பு முகாம் கரூர் மாவட்டத்தில் நாளை துவக்கம் | கரூர்: கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மக்கள் குறை கேட்பு சிறப்பு முகாம் நாளை துவங்குகிறது. முகாம் தோறும் மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி, மற்றும் கரூர் எம்.பி., தம்பிதுரை ஆகியோர் கட்சி கொடியேற்றி, மக்களிடம் மனு பெறுகின்றனர். முதற்கட்டமாக தாந்தோணி நகர பகுதியில் ஒத்தையூர் கிராமத்தில் காலை 6.30 மணிக்கு முகாம் துவங்குகிற... |
தமிழகம் | ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் தூரத்தை குறைத்திட வலியுறுத்தப்படும் : பீட்டர் அல்போன்ஸ் | கடையநல்லூர் : தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 5 கி.மீ. தூரம் என்பதை 3 கி.மீ.தூரமாக குறைத்திட சட்டசபையில் வலியுறுத்தப்படும் என நயினாரகரத்தில் குளத்து பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
கடையநல்லூர் யூனியன் நயினாரகரம் பஞ்.,சில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளு... |
தமிழகம் | க.பரமத்தியில் சிறப்பு கிராமசபை கூட்டம் | க.பரமத்தி: க.பரமத்தி யூனியனுக்குட்பட்ட முப்பது பஞ்சாயத்துகளிலும் கலைஞர் வீட்டு வசதி திட்டத்துக்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட தெருக்களின் விபரம் அந்தந்த பஞ்சாயத்துகளில் சேகரிக்கப்பட்டு இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படுவது குறித்த விபரம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கார்வழி பஞ்சாய... |
தமிழகம் | மாணவர்களுக்கான சொல்திறன் போட்டி | கரூர்: கரூர் லஷ்மி நடராஜன் வித்யா நிகேதன் (எல்.என்.வி.என்.,) பள்ளி மாணவர்கள் சென்னையில் நடந்த தேசிய அளவிலான ஆங்கில சொல்திறன் போட்டியில் மூன்று பிரிவுகளில் சிறப்பிடம் பிடித்தனர்.
மதுரையில் நடந்த மாநில அளவிலான "வோர்ட் வார்த் இண்டர்நேஷனல் ஸ்பெல் பீ' போட்டியில், எல்.என்.வி.என்., பள்ளியின் 22 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தக... |
தமிழகம் | யூனியன் கவுன்சில் கூட்டம் | க.பரமத்தி: க.பரமத்தி யூனியன் கவுன்சில் சாதாரண கூட்டம் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமலை, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னையன், துணை தலைவர் மணி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 2010 மற்றும் 2011க்கு 28 லட்சத்து 57 ஆயிரத்துக்கான் உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொ... |
தமிழகம் | விஷம் குடித்த இளம்பெண் உடல் எரிப்பு கரிவலம் அருகே 5 பேர் மீது வழக்கு | திருவேங்கடம் : கரிவலம்வந்தநல்லூர் அருகே விஷம் குடித்து இறந்த இளம்பெண்ணின் உடலை போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் எரித்து விட்டதாக நாட்டாண்மை உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சரகம் பனையூர் கிருஷ்ணன்கோவில் தெருவில் வசித்து வந்தவர் கோயில்பிள்ளை மகள் அன்னைதிரே... |
தமிழகம் | தமிழ் வளர்ச்சியில் சமயங்களின் பங்கு முக்கியமானது பக்தி மார்க்கத்தில் முதன்மையானவர்கள் நாயன்மார்கள் | திருநெல்வேலி : தமிழ் வளர்ச்சியில் சமயங்களின் பங்கு முக்கியமானது. மனித வாழ்வின் குறிக்கோளான பேரின்பத்தை அடைய வழிகாட்டியவர்கள் மகான்கள் என்றும், பக்தி மார்க்கத்தில் முதன்மையானவர்கள் நாயன்மார்கள் என நெல்லையில் நேற்று நடந்த "சிவ லீலா' நாம சங்கீர்த்தன உபன்யாசத்தின் போது சேங்காலிபுரம் தமோதர தீட்சதர் பேசினார்.
நெல்லை சங்கீத ச... |
தமிழகம் | ஓசூர் நகராட்சியில் சொத்து வரி ரூ.6 கோடி நிலுவை நிதி நெருக்கடியால் வளர்ச்சி பணி பாதிப்பு | ஓசூர்: ஓசூர் நகராட்சியில் சொத்து வரியை குறைத்தும் பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் வரி செலுத்த ஆர்வம்காட்டாமல் இழுத்தடித்து வருவதால், 6 கோடி ரூபாய் வரிபாக்கியுள்ளது. இதனால், நகராட்சியின் வளர்ச்சி பணிகள் தேக்கமடைந்து வருகிறது.தமிழகத்தில் அரசுக்கு அதிக வருவாய் தரக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளில் ஓசூர் நகராட்சியும் ஒன்று.... |
தமிழகம் | கி.கிரியில் விவசாயியை தாக்கிய கட்டணம் வசூலிப்பாளர் கைது | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சந்தைபேட்டை காய்கறி சந்தையில் விவசாயியை தாக்கிய சுங்க கட்டணம் வசூலிப்பாளரை போலீஸார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி சந்தை பேட்டை காய்கறி சந்தையில் விவசாயிகள் கொண்டு வரும் காய்கறி மூட்டைகளுக்கு நகராட்சியின் மூலம் டெண்டர் எடுத்துள்ளவர்கள் மூலம் சுங்க வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. குத்தகைதாரர்கள் சுங்க ... |
தமிழகம் | எக்கூர் அரசு பள்ளி தரம் உயர்வு | ஊத்தங்கரை: ஊத்தங்கரை யூனியன் எக்கூரில் அரசு உயர்நிலைப்பள்ளி துவக்க விழா நடந்தது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாஸ்கரன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் (பொறுப்பு) சுப்பிரமணி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் மார்ஸ், தி.மு.க., ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்பறையை எம... |
தமிழகம் | கல்வி விழிப்புணர்வு பேரணி | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம் கிட்டம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு மற்றும் தீவிர மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது.கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் மாதம்மாள் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை செண்பகவல்லி முன்னிலை வகித்தார். பஞ்சாயத்துதலைவர் கோவிந்தம்மாள், வக்கீல் முருகேசன் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்... |
தமிழகம் | தி.மு.க., பொதுக்கூட்டம் | ஓசூர்: ஓசூர் நகர தி.மு.க., சார்பில் இன்று தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது.நகர செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட அறிக்கை: ஓசூர் நகர தி.மு.க., சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை யொட்டி ராம்நகர் அண்ணா சிலை அருகே இன்று பொதுக்கூட்டம் நடக்கிறது. நகர செயலாளர் விஜயகுமார் தலைமை... |
தமிழகம் | மாலைநேர கல்லூரி இன்று திறப்பு | மதுரை: மதுரை காமராஜ் பல்கலை மாலைநேரக் கல்லூரி இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு பி.சி.ஏ., பி.எஸ்சி (ஐ.டி.,), பி.காம்., பி.பி.ஏ., மற்றும் எம்.எஸ்சி.,(சி.எஸ் அண்ட் ஐ.டி.,), எம்.சி.ஏ., எம்.காம் (சி.ஏ.,) வகுப்புகள் இன்று துவங்குகிறது. இக்கல்லூரியில் 2010 -11க்கான, பி.சி.ஏ., பி.எஸ்சி (ஐ.டி.,), பி.காம்., பி.பி.ஏ., மற்றும் எம்.எஸ்சி... |
தமிழகம் | மாணவிகள் தற்கொலை முயற்சி | மதுரை: மதுரை சின்ன அனுப்பானடியை சேர்ந்த கணேசன் மகள் புவனேஸ்வரி (16), முருகன் மகள் விஜயலட்சுமி (16). இருவரும் தெப்பக்குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலை பள்ளி பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தனர். சிறப்பு துணை தேர்விலும் தோல்வி அடைந்து, அதே பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர். நேற்று பகல் 3 மணிக்கு ஆசிரியைகள் தேடிய... |
தமிழகம் | உண்டியல் வசூல் ரூ.1 லட்சம் | மதுரை: மதுரை மாநகராட்சி ராஜாஜி சிறுவர் பூங்கா முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை கமிஷனர் செபாஸ்டின் தலைமையில் நடந்தது. மாநகராட்சி திரு.வி.க. பள்ளி என்.எஸ்.எஸ்.,மாணவர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காணிக்கையாக 1 லட்சத்து 2 ஆயிரத்து 37 ரூபாய் வசூலாகியிருந்தது. அறநிலையத் துறை ஆய்வாளர் பாலமுரளி பங்கேற்றார். |
தமிழகம் | சிறுமி உள்ளிட்ட இருவர் மாயம் | ஓசூர்: ஓசூரில் வீட்டு வேலை செய்து வந்த சிறுமி உள்பட இருவர் திடீரென்று மாயமாகினர்.ஓசூர் லட்சுமிநகரை சேர்ந்தவர் எழில்ராஜ். இவர் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் கடலூர் நாச்சிப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் மகள் திவ்யா (13) தங்கி வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த 15ம் தேதி குழந்... |
தமிழகம் | ஓசூரில் தொழிலாளி தற்கொலை | ஓசூர்: ஓசூர் அடுத்த கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சீனிவாசன் (25). இன்னும் திருமணமாகவில்லை. இவர் அப்பகுதியை சேர்ந்த சிவண்ணா என்பவரது வீட்டில் தங்கி தோட்ட வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் சீனிவாசன் விஷம் குடித்த நிலையில் தோட்டத்தில் மயக்கி கிடந்தார்.சிவண்ணா உடனே அவரை சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில... |
தமிழகம் | எழுமலை பள்ளி தரம் உயர்வு அதிகாரிகள் குழு ஆய்வு; | எழுமலை: மதுரை மாவட்டம் எழுமலை அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியை, மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவது குறித்து அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். எழுமலையில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள், எழுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க வேண்டும். அந்தப்ப... |
தமிழகம் | வீட்டுமனை வழங்க நடவடிக்கை | மதுரை: மதுரை ஆரப்பாளையம் மெயின் ரோடு பகுதியில் காலியிடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் குடியிருந்தவர்களின் வீடுகளை கடந்த 2004ம் ஆண்டு ஆக்கிரமிப்பு என கூறி இடித்துவிட்டனர். பாதிக்கப் பட்டோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இப்பகுதியில் இருந்த 42 பேருக்கும் வீட்டுமனை வழங்க கோர்ட் தடையாக இருக்காது என உத்தரவிட்டது. இதையடுத்த... |
தமிழகம் | ஆண்டாள் கோயில் தேர் சக்சகரங்கள் சீரமைப்புக்கு பின் பொருத்தப்பட்டன | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேர் சகரங்கள் 1.25 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு நேற்று பொருத்தப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரின் சக சக்கரங்களின் அடிப்பகுதி தட்டையாக இருந்ததால் தேர் ஓடும் போது வேக தடுப்பு கட்டைகள் அதிகளவில் சேதமடைந்தது. மேலும் தேரோடும் வீதிகளும் பெயர்ந்து சேத... |
தமிழகம் | மாணவருக்கு நிபந்தனை ஜாமீன் | மதுரை: ஐகோர்ட்டில் தமிழில் வாதாட அனுமதி கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில், மதுரையில் நேற்று ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 95 பேரை போலீசார் கைது செய்தனர். இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உமாகேஸ்வரி, சட்டக் கல்லூரி மாணவர் உட்பட 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மற்ற 88... |
தமிழகம் | லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை ரத்து | மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில், நோயாளிகளிடமும், உறவினர்களிடமும் லஞ்சம் வாங்கிய ஆறு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு பிறப்பு முதல் இறப்பு வரை ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தால் 500 ரூபாய், பெண் குழந்தைக்கு 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வ... |
தமிழகம் | கைவிடப்பட்ட காலாவதி பொருட்கள் அழிப்பு | எழுமலை: காலாவதி பொருட்களை அழிக்கும் நடவடிக்கை பேரையூர் பகுதியில் கைவிடப்பட்டுள்ளது. சுகாதார துறையினர் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். பேரையூர் பகுதிகளில் பல கடைகளில் காலாவதி பொருட்களே விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக பாட்டில், பாலிதீன் பைகளில் விற்கப்படும் இனிப்பு வகைகள் கெட்டு போன பின்னரும் விற்பனை செய்யப்ப... |
தமிழகம் | காதலிக்க மறுத்த மாணவியை எரித்து கொன்ற வாலிபர் கைது | சேலம்: காதலிக்க மறுத்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். சேலம் அஸ்தம்பட்டி கோர்ட் ரோடு ராஜா நகரை சேர்ந்தவர் காமராஜ். அவர் மாநகராட்சியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அவரது மகள் ஹேமா(21), திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரியில் இன்ஜினியரிங் பட்டபடிப்பு படித்து வந்தார். அதே... |
தமிழகம் | சோழவந்தான் நெல்கொள்முதல் நிலையம் மூடல்,விவசாயிகள் சோகம் | சோழவந்தான்: சோழவந்தானில் நெல்கொள்முதல் நிலையம் மீண்டும் திறக்க இப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான், பேட்டை, ஆண்டிமேடு, வடகரைகண்மாய், ரிஷபம், குருவித்துறை, நாச்சிக்குளம், விக்கிரமங்கலம் பகுதிகளில் கர்நாடகபொன்னி, செல்லப்பொன்னி, ஏ.டி.டி.,45 ஆகிய ரக நெல் பயிர்கள் பயிரிடுவது வழக்கம். விவசாயிகளின... |
தமிழகம் | புத்துணர்வு | மதுரை: இந்தியாவிலேயே மதுரையில் தான் இரும்பு வாசர்கள் அதிகமாக தயாராகிறது. ஆனால் தொழிலில் நீண்ட அனுபவம் இருந்தாலும், யாருக்குமே இதுவரை தொழிலுக்கான வங்கிக்கடன் கிடைக்கவில்லை. மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் 40 ஆண்டுகளாக, இரும்பு வாசர் தயாரிக்கும் கம்பெனிகள் இயங்கிவருகின்றன. இங்கு 60 கம்பெனி உள்ளன. மதுரையில் 125 கம்பெனிகள் மூலம்... |
தமிழகம் | புதுப்பெண் கடத்தல் போலீஸில் புகார் | சங்ககிரி: சங்ககிரி தாலுகா, தேவூர் கத்தேரி சாமியாம்பாளையத்தை சேர்ந்த பாப்பாள் மகள் யுவராணி(17). திருச்சி சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த நாராயணனுக்கும், யுவராணிக்கும் கடந்த 7ம் தேதி திருமணம் நடந்தது. 10ம் தேதி புதுமணத்தம்பதியரை விருந்து நிகழ்ச்சிக்கு பாப்பாள் அழைத்து வந்தார். 13ம் தேதியன்று மளிகை பொருட்கள் வாங்குவதற்காக, வெளி... |
தமிழகம் | விவசாய அதிகாரி வேண்டுகோள் | மதுரை: வாடிப்பட்டி வட்டாரத்தில் குறுவை நெல் சாகுபடி தாமதமாகி வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் குறுகிய கால பயிர் வகைகளான பயறு வகைகளையும், சிறுதானியங்களையும் பயிரிட்டு லாபம் பெறலாம். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயறு வகைகள் மற்றும் உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் வினியோகிக்கப்படுகிறது. அவற்றை விவசாயிகள் பெற்... |
தமிழகம் | இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் | மதுரை: ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் இலவச தையல் இயந்திரம், அயர்ன் பாக்ஸ் மற்றும் தச்சுக் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்.எட்டாம் வகுப்பு படித்த பெண்கள் தையல் இயந்திரம் பெறுவதற்கும், புதிரை வண்ணார் வகுப்பினர் அயர்ன் பாக்ஸ் பெறுவதற்கும், தச்சுப் பயிற்சி பெற்றோர் அதற... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.