category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
தாழ்வாக செல்லும் மின் கேபிள்கள்
சாயல்குடி: சாயல்குடி உறைக்கிணறு பகுதியில் மின் கேபிள் தாழ்வாக செல்வதால் கூரைப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படும் நிலை உள்ளது. சாயல்குடி அருகே உள்ளது உறைக்கிணறு. இப்பகுதியில் பெரும்பாலும் கூரை வீடுகள் தான் . இங்குள்ள மின் கேபிள்கள் அனைத்தும் மிகவும் தாழ்வாகசெல்கின்றன . இதுவும் அறுந்து விழும் நிலையில் உள்ளது. வாகனங்கள் செல்ல...
தமிழகம்
பாலத்தில் உடைந்த தடுப்பு கட்டைகள் ஆபத்தை எதிர்நோக்கி திக்..திக்.. பயணம்
சிதம்பரம் : சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் உப்பனாற்று வடிகால் ஷட்டர் பாலத்தின் தடுப்பு கட்டைகள் உடைந்து ஆபத்தான நிலையில் வாகனங்கள் சென்று வர வேண்டிய நிலை தொடர்கிறது. சிதம்பரம் அருகே தண்ணீர் தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் டி.எஸ்.பேட்டை சாலையில் தெற்கு பிச்சாவரத்தில் 12 ஷட்டர்கள் ...
தமிழகம்
மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி பெரமனூர் மகாசக்தி மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் ஜூன் 24ம் தேதி நடக்கிறது. ஜூன் 23ம் தேதி காலை 6 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கி புண்யாஹவாஜனம், கலச ஆவாஹனம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை காட்டப்படுகிறது. மாலை 6 மணிக்கு முதல்கால யாகபூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், தி...
தமிழகம்
அனைவருக்கும் கல்வி இயக்க கருத்தாய்வுக் கூட்டம்
கிள்ளை : பரங்கிப்பேட்டை ஒன்றியம் தெற்கு பிச்சாவரம் நடுநிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கருத்தாய்வுக் கூட்டம் நடந்தது. சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரத்தில் நடந்த கருத்தாய்வுக் கூட்டத்தில் 19 பள்ளிகளைச் சேர்ந்த 37 ஆசிரியர்கள் பங்கேற்றனர். மைய ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் வரவேற்றார். மேற்பார்வையாளர் சிவச...
தமிழகம்
வசூல் வேட்டையில் கண்காணிப்பு போலீஸ்
ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் முதல் கைகாட்டி வரை தேசிய நெடுஞ்சாலையில் விபத் துக்களை தடுக்கும் வகையிலும், விபத்துக் குள்ளானவர்களை மீட்கும் வகையிலும் போலீஸ் கண்காணிப்பு பிரிவு செயல்படுகிறது. பகல் நேரத்தில் பணியில் இருக்கும் எஸ்.ஐ., சில மணி நேரத்தில் வீட்டுக்கு செல்வதால் ,இதில் பணியாற்றும் ஏட்டுகள் எஸ்.ஐ.,யாக விசுவரூபம் எட...
தமிழகம்
திருவதிகையில் மகா குருபூஜை
பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகையில் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகர் பரமாச்சாரியார் சுவாமிகள் சித்தர்மடம் கோவிலில் மகா குருபூஜை விழா 23ம்தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை சற்குருநாதரின் திருவுருவ படம் பண்ருட்டி சோமநாத சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு சித்தர் பீடம் வந்தடைகிறது. தொடர்ந்து மகா திருமஞ்சனம், திருமுறை விண்...
தமிழகம்
கோடை முடிந்தும் ஏற்காட்டில் குவியும் சுற்றுலா பயணிகள்
சேலம்: மிகவும் மிதமான சீதோஷ்ணநிலை நிலவுவதால் கோடைக்கு பிறகும், ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.தமிழகத்தின் முக்கிய கோடை வாசஸ்தலங்களில் ஏற்காடும் ஒன்று. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்ட மக்களின் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் க...
தமிழகம்
களை எடுக்கும் இயந்திரம் விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி வட் டார விவசாயிகளுக்கு செம்மை நெல் சாகுபடியில் களை எடுக்கும் இயந் திரம் செயல் விளக்கம் நடந்தது. குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சாகுபடியில் களை எடுக்கும் இயந்திர செயல் விளக்கம் நடந்தது. குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் அசோகன், புவனகிரி வேளாண்...
தமிழகம்
கடலூர் மாவட்டத்தில் ராகுல் பிறந்த நாள் விழா
சிதம்பரம் : கடலூர் மாவட்டத்தில் இளைஞர் காங்., சார்பில் ராகுல் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பல்வேறு இடங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள், எழுது பொருட்கள், காலணிகள் வழங்கப்பட்டன. ஒரு சில பகுதிகளில் கேக் வெட் டியும், கோவில்களில் சிறப்பு பூஜைகளும் நடத்தி அன்னதானம், மருத்துவமனையில் உள்ள ந...
தமிழகம்
மேட்டூர் அரசு கல்லூரி கட்டிடம் திறப்பு தாமதம் பள்ளியிலேயே பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள்
மேட்டூர்: பெரியார் பல்கலை, மேட்டூர் அரசு கலைகல்லூரிக்கு கட்டிடம் கட்டும் பணி தாமதம் ஆனதால், பள்ளி வகுப்பறையிலேயே மூன்று ஆண்டு பட்டபடிப்பை முடித்து மாணவர்கள் வெளியேறி விட்டனர். நடப்பாண்டிலாவது கல்லூரி கட்டிடத்தில் வகுப்பறை இயங்க வேண்டும் என்பது மாணவர்கள் கோரிக்கையாக உள்ளது.தமிழக அரசு, 2006 பட்ஜெட் கூட்டத்தில், "மேட்டூரி...
தமிழகம்
பஸ்சில் புகையால் பயணிகள் பதற்றம்
மண்டபம்: மண்டபம்-ராமநாதபுரத்திற்கு தினம் ஸ்ரீ பவானி என்ற தனியார் பஸ் இயங்குகிறது. வழக்கம் போல் மண்டபத்திலிருந்து காலை 11 மணிக்கு பஸ் புறப் பட்டது. உச்சிப்புளி அருகே சென்றபோது இஞ்சினில் புகை வர ,டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பதற்றமடைந்த பயணிகள் பஸ்சை விட்டு இறங்கினர். பின் மாற்று பஸ் மூலம் சென்றனர். உச்சிப்புளி போலீசார் க...
தமிழகம்
சேத்தியாத்தோப்பில் செம்மொழி மாநாடு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
சேத்தியாத்தோப்பு : வளையமாதேவியில் செம்மொழி மாநாடு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி உலகத் தமிழ் கவிஞர் பேரவை சார்பில் உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாடு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் வேல்முருகன் தலைமையில் நடந்தது. அகில இந்திய மருந்தியல் குழு உறுப்பினர் அசோக்குமார், தலைமையாசிரியர் ர...
தமிழகம்
சிதம்பரத்தில் மாணவிகளுக்கு பாராட்டு விழா
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடந்தது. அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர்கள் அன்புக்கரசு, சே...
தமிழகம்
கண்மாய் கருவேல மரங்கள் டிராக்டர் மூலமாக கடத்தல்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் கருவேல மரங்கள் இரவு ,பகல் நேரங்களில் வெட்டப் பட்டு டிராக்டர் மூலமாக கடத்துவது தொடரும் நிலையில் இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ளது பெரிய கண்மாய். இங்கு கட்டு கருவேல மரங்கள் அடர்ந்து உள்ளன. தற்போது இந்த மரங்கள் இரவு ,பகல் நேரங்க...
தமிழகம்
தொண்டர்களை திரட்டும் பணி மும்முரம் : தி.மு.க., தமிழ் செம்மொழி மாநாட்டை அசத்த திட்டம்
சேலம்: கோவையில் நடக்கும் உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் திரளாக கலந்து கொள்வதற்காக தொண்டர்களை திரட்டும் பணியில் சேலம் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.கோவையில் ஜூன் 23ல் இருந்து ஜூன் 27 வரை உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது. தமிழக முதல்வர் கருணாநிதியின் தலைமையில் நடக்கும் இந்த விழாவை பிரம்ம...
தமிழகம்
அடிப்படை வசதி இல்லாத சேதுக்கரை குடிநீர் இல்லாமல் தவிக்கும் பக்தர்கள்
கீழக்கரை: சேதுக்கரைக்கு புனித நீராட செல்லும் பக்தர்கள் தாகத்திற்கு குடிநீர் கிடைக்காமல் தவியாய் தவிக்கின்றனர். தங்கும் விடுதி,கழிப்பறை மற்றும் உடை மாற்றும் அறை இல்லாததால் தொலை தூர பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். ராமபிரான், சீதையை மீட்க இலங்கை செல்வற்காக அனுமன் தலைமையில் வானரங்கள் கற்களால் பாலம் எழுப்பியதாக கூறப்படு...
இந்தியா
தனியார் பஞ்சு மில்லில் தீ விபத்து
சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு சொந்தமான பஞ்சு மில் ஒன்று உள்ளது. இந்த மில்லில் நள்ளிரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இத் தீ விபத்தில் விலைஉயர்ந்த பொருட்கள் மற்றும் இயந்திரங்களின் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது...
தமிழகம்
மாணவிக்கு பாராட்டு
கடலூர் : கடலூர் மாவட்ட அரசு ஆதிதிராவிடர் மகளிர் பள்ளிகள் அளவில் எஸ்.எஸ்.எல்.சி.,யில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியை தலைமை ஆசிரியர் பாராட்டினார்.விருத்தாசலம் கல்வி மாவட்டம், சேப்பாக்கம் அரசு மகளிர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவி ஆஷா தேவி எஸ்.எஸ். எல்.சி., பொதுத் தேர்வில் 467 மதிப்பெண் பெற்றார். ஆதி திராவிட நலப்பள்ளிகளில் ம...
தமிழகம்
ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் டெலிபோன் விசாரணையில் எரிச்சல்: பயணிகள் அதிருப்தி .
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் டெலிபோனில் விசாரணை செய்தால், சரியான பதில் கிடைக்காமல் எரிச்சலுடன் பேசுவதால் பயணிகள் அதிருப்தியடைகின்றனர். ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி, சென்னை, வாரணாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் கன்னியாகுமரி, வாரணாசி போன்ற ரயில்கள் குறிப்பிட்ட நாளில் ம...
தமிழகம்
இலவச சீருடை வழங்கும் விழா
தொண்டி: தொண்டியில் த.மு.மு.க., சார்பில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகம் வழங் கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் சாதிக்பாட்ஷா தலைமை வகித்தார். நர்சிங் பயிற்சி மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கபட்டது. மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான், துணை செயலாளர் அன்வர், மனிதநேயமக்கள் கட்சி பொருளாளர் சாகுல்ஹமீது ம...
தமிழகம்
விழிப்புணர்வு ஊர்வலம்
கீழக்கரை: கீழக்கரை அருகே நாடார் மஹாஜன சங்கத் தின் கீழ் இயங்கும் மாயாகுளம் சேர்மத்தாய் வாசன் நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப் புணர்வு ஊர்வலம் பள்ளி தலைமை ஆசிரியை சுகிபாலன் தலைமையில் நடந் தது. மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர். ஊராட்சி தலைவர் சிவக்குமார், பள்ளி கமிட்டி உறுப் பினர் முருகன் மற்றும...
தமிழகம்
நடுவீரப்பட்டு துவக்கப் பள்ளியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
நடுவீரப்பட்டு : பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடுவீரப்பட்டு அரசு ஆண்கள் துவக்கப் பள்ளியில் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ரூபாவதி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். முகாமில் கண், சித்தா, மகப்பேறு மற்றும் குழந் தைகள் மரு...
தமிழகம்
காணாமல் போன காவிரி குடிநீர்; பரிதவிக்கும் கிராம மக்கள்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கொட்டுப்புளி உள்ளிட்ட கிராமங்களில் காவிரி குடிநீரானது கானல் நீராக மாறும் நிலை தொடர்கிறது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ளது கொட்டுப்புளி உள்ளிட்ட கிராமங்கள் .இங்குள்ள மக்கள் குடிநீருக்காக ஐந்து முதல் ஏழு கி.மீ., தொலைவில் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலையில இருந்தனர். இந்நிலையில் ...
தமிழகம்
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு : தி.மு.க.,வினருக்கு பன்னீர்செல்வம் அழைப்பு
குறிஞ்சிப்பாடி : கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு கடலூர் மாவட்டத்தில் இருந்து அனைத்து தி.மு.க.,வினரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத் துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முதல்வர் கருணாநிதி தலைமையில் வரும் 23...
தமிழகம்
மாங்காய் பறித்த முதியவர் தவறி விழுந்து சாவு
சிதம்பரம் : சிதம்பரம் அருகே மரத்தில் இருந்து விழுந்த முதியவர் இறந்தார். சிதம்பரம் அருகே மடப்புரம் காலனியைச் சேர்ந்தவர் ராமசாமி (65). இவர் வக்காரமாரி ஏரி அருகில் உள்ள மாமரத்தில் மாங்காய் பறித் தார். அப்போது கால் இடறி கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து வி.ஏ.ஓ., பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் ...
தமிழகம்
ஆசிரியர்கள் சம்பளத்தில் எல்.ஐ.சி., சேமிப்பு தொகை பிடிக்க மறுப்பு: அதிருப்தியில் ஆசிரியர்கள்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஒன்றியத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தில் எல்.ஐ.சி., பிடித்தம் செய்ய மறுப்பதால் சேமிப்பு தொகை செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தில் எல்.ஐ.சி., சேமிப்பு தொகை மாதம்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. இடையில் திடீரென பிடித்தம் செய்வது நிறுத்தப்பட்டு, மீண்டும் அரச...
தமிழகம்
பி.சி., எம்.பி.சி., விடுதியில் சேர விருப்பமா? மாணவ, மாணவியருக்கு கலெக்டர் அழைப்பு
திருச்சி: திருச்சி மாவட்டத்திலுள்ள பி.சி., எம்.பி.சி., மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளில் சேர்வதுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து திருச்சி கலெக்டர் (பொ) தட்ஷிணாமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.,), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி.,) மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த ம...
தமிழகம்
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வேளாண் கருவி வினியோகம்
திட்டக்குடி : மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வேளாண் கருவிகள் வழங்கப்பட்டன. மங்களூர் வட்டாரத்தில் 85 வருவாய் கிராமங்களில் பண்ணை மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதில் சிறப்பாக செயல்படும் 15 குழுக் களை தேர்வு செய்து ஒவ் வொரு குழுவுக்கும் முழு மானியத்தில் செம...
தமிழகம்
பொதுத்தேர்வு தனித்தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு விநியோகம்
திருச்சி: ஜூன், ஜூலை 2010 மேல்நிலை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தகுதியுடைய தனித்தேர்வர்களுக்கு இன்று பின்வரும் மயங்களில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படுகிறது.இதுகுறித்து அரசுத்தேர்வுகள் திருச்சி மண்டலத்துணை இயக்குனர் பவானி வெளியிட்ட அறிக்கை:அரசு மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி. அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல...
தமிழகம்
பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு கூட்டம்
கடலூர் : பள்ளித் தொகுப்பு கருத் தாய்வு கூட்டம் கடலூரில் நடந்தது. கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளியில் 2010-11ம் கல்வி ஆண் டிற்கான பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையக் கூட்டம் நடந்தது. பள்ளி முதல்வர் ஆக் னல் தலைமை தாங்கி, வாழ்த்தி பேசினார்.கடலூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆஷா கிறிஸ்டி எமரால்ட் முன் னிலை வகித்...
தமிழகம்
உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி திருச்சியில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
திருச்சி: உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டுமென்ற கோரிக்கையை நிறைவேற்ற தவறிய, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, திருச்சியில் அ.தி.மு.க., வக்கீல்கள் பிரிவு மற்றும் மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இதுகுறித்து அ.தி.மு.க., மாநகர் மாவட்டச் செயலாளர் மனோகரன் வெளியிட்ட அறிக்கை:உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட...
தமிழகம்
உத்தரவை மீறி கல்விக்கடன் வட்டி வசூலிக்கும் வங்கிகள், பெற்றோர்கள் தவிப்பு
பரமக்குடி: உயர் கல்விக்காக வங்கிகளில் கடன் பெற்றுள்ள மாணவர்களுக்கான வட்டியை அரசே செலுத்தி விடும் என கூறியுள்ள நிலையில் வங்கி மேலாளர்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வட்டி செலுத்தாத மாணவர்கள் அடுத்த செமஸ்டருக்கான தொகையை பெற முடியாமல் தவிக்கின்றனர். 2009-10 ம் கல்வியாண்டில் கல்விக்கடனுக்கான வட்டியை அரசே செலுத்து...
தமிழகம்
உதடு, அன்னப்பிளவு இலவச மருத்துவ முகாம்: திருச்சியில் நாளை துவக்கம்
திருச்சி: திருச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆகியவை சார்பில், உதடு மற்றும் உள் அண்ணம் பிளவுபட்டோருக்கான இரண்டு நாள் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாளை துவங்குகிற...
தமிழகம்
கழிப்பறை வசதியில்லாத அரசு பள்ளிகள்திறந்த வெளியை நாடும் அவலம்
கீழத்தூவல்: கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதியில்லாததால், திறந்த வெளியை நாடும் கட்டாயத்தில் மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. ஆனால் இதை பராமரிக்க போதுமான நிதியினை தொடர்ந்து வழங்காததால் அரசு பள்ளிகளில் உள்ள கழிப்ப...
தமிழகம்
துவரங்குறிச்சி பகுதியில் டூ வீலர் திருடிய வாலிபர் கைது
துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டூ வீலர்களை திருடிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.கடந்த சில மாதங்களாக துவரங்குறிச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான டூ வீலர்கள் திருடப்பட்டு வந்தது.திருச்சி எஸ்.பி., கலியமூர்த்தி உத்தரவின் பேரில், மணப்பாறை டி.எஸ்.பி., (பொ) சேதுராமன் மேற்பார்வையில் த...
தமிழகம்
ஒருவர் பலி
தொண்டி: தொண்டி அருகே புதுக்குடி கிராமத்தை சேர்ந்த சித்தையன் (35). இவர் வீட்டில் டிவியை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி இறந்தார். தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
வேன் கவிழ்ந்து 12பேர் படுகாயம்
பரமக்குடி: விருதுநகர் பாலாஜிநகரை சேர்ந்த சேர்ந்தவர்கள் ராமேஸ்வரத்திற்கு சென்றபோது, சத்திரக்குடி மாவிலங்கை அருகே வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த 12பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சத்திரக்குடி போலீசார் டிரைவர் சேவியரை(31) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
பெண் தற்கொலை
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே இலந்தைகுளம் மேலத்தெருவை சேர்ந்த ரமேஷ் மனைவி முனீஸ்வரி(29). கணவன் மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த முனீஸ்வரி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தேவிபட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் வியாபாரிகள் கடையடைப்பு
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக கூறி வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர். முதுகுளத்தூர் பஜார் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர் . ஆக்கிரமிப்புகளை போலீசார் உதவியுடன் அகற்றியபோதும், சிலர் கடைகளுக்கு முன் தற்காலிக நிழற் பந்தல்களை அமைத்து, மாலை...
தமிழகம்
பொருந்தலூர் பஞ்.,ல் வயிற்றுப்போக்கு ஏழு பேர் சிகிச்சைக்கு அனுமதி
குளித்தலை: பொருந்தலூர் பஞ்சாயத்து பகுதியில் மக்கள் மீண்டும் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களில் ஏழு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.தோகமலை யூனியன், பொருந்தலூர் பஞ்சாயத்து பகுதியில் மீண்டும் வாந்தி, வயிற்றுப்போக்கால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பொருந்தாலூர் ஆதிதிராவிடர் தெருவில் வசிப்பவர்...
தமிழகம்
திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி விழா
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பை அடுத்த வடபாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில் பக்தர் கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சேத்தியாத்தோப்பை அடுத்த வடபாக்கம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 15 நாள் உற்சவம் நடந்தது. அம்மனுக்கு தினசரி சி...
தமிழகம்
அரசு பஸ் இயக்க கோரிக்கை
கிள்ளை : சிதம்பரத்தில் இருந்து நக்கரவந்தன்குடி, கோழிப்பள்ளம் வழியாக ராதாவிளாகத்துடன் திரும்பும் அரசு பஸ்சை முடசல் ஓடை வரை இயக்க பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரத்தில் இருந்து நக்கரவந்தன்குடி, கோழிப்பள்ளம், உத்தமசோழமங்கலம், ராதாவிளாகம் வழியாக கிள்ளை பிச்சாவரம் வரை அரசு பஸ் தடம் எண் 15-எ இயக்கப் பட் ட...
தமிழகம்
கட்டப்பட்ட சில மாதத்திலே விரிசலடைந்த புதிய கட்டடம்;அச்சத்தில் குழந்தைகள்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே காத்தாகுளத்தில் புதிதாக கட்டபட்ட சில மாதத்திலே குழந்தைகள் நல மைய கட்டடம் விரிசலடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது ஒரு லட்சம் மதிப் பீட்டில் , கடந்த சில மாதங்களுக்கு முன் குழந் தைகள் நல மைய கட்டடம் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டடம் இரண்டாக பிளவுற்று விரிசலடைந்து காட்சி தருகிறது. ...
தமிழகம்
வே.பாளையத்தில் ஈஷா அறக்கட்டளையின் கிராம மருத்துவமனை துவக்க விழா
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் ஈஷாவின் நான்காவது கிராமப்புற மருத்துவமனை துவக்க விழா நடந்தது.விழாவில் ஈஷா யோகா மையம் அறங்காவலர் முத்துசாமி வரவேற்றார். மருத்துவ செயல் திட்டங்கள் குறித்து ஈஷா கிராம மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ரதியா எடுத்து கூறினார். புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்து தலைவர்...
தமிழகம்
அ.தி.மு.க., வக்கீல் பிரிவு அவசர ஆலோசனை கூட்டம்
கரூர்: கரூரில் அ.தி.மு.க., வக்கீல் பிரிவு சார்பில் இன்று காலை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நீதிமன்ற வளாகத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இதுகுறித்த அவசர ஆலோசனை கூட்டம், மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்பாலானி தலைமை வகித்தார். வக்கீல் பிரிவு செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார். ...
தமிழகம்
மனவளக் கலை மன்ற பயிற்சி
பரமக்குடி: பரமக்குடி மனவளக் கலை மன்ற ஆன்மிக கல்வி மையத்தில் உடல் நலம், மனவளம் ஆகியவற்றுக்கான உடற்கூறு பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உள்ள தனிமனித அமைதி, குடும்ப அமைதிகுறித்த இலவச பயிற்சி பரமக்குடி அனுமார்கோவில் அருகில் உள்ள மன்றத்தில் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு நடைபெறவுள்ளது.
தமிழகம்
மேலமடையில் மாவட்ட கபடி போட்டி
கீழக்கரை: கீழக்கரை அருகே மேலமடையில் பறக்கும்தட்டு குழு சார்பில் கபடி போட்டி நடந்தது. ஊராட்சி தலைவர் சாந்தி தலைமை வகித்தார். ஊராட்சிமுன்னாள் உதவி தலைவர் முன்னிலையில் ஏர்வாடிஎஸ்.ஐ., தில்லை ராஜ் துவக்கி வைத்தார். மாவட்ட 52 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. கிராம தலைவர் கருப்பன்,முன்னாள் தலைவர் கருப்பையா,குழு கேப்டன் பால்ராஜ...
தமிழகம்
விடுதியில் தண்ணீர் வசதி இல்லை;பரிதவிக்கும் மாணவர்கள்.
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு மாணவர் விடுதியில் உள்ளவர்கள் குளிக்க, குடிக்க தண்ணீர் வசதி இல்லாமல் தவிக்கின்றனர். ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர் விடுதியில் குளிக்க, குடிக்க தண்ணீர் வசதி இல்லை.இது தொடர்பாக " தினமலர் 'இதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, தண்ணீர் வசதி செய்து...
தமிழகம்
கட்டிடங்களுக்கு திட்ட அனுமதிவழங்கஉள்ளாட்சிகளுக்கு அதிகாரம்: கலெக்டர்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி உள்ளாட்சிகள் வழங்கிட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.கலெக்டர் அமுதா வெளியிட்ட அறிக்கை:வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையின் நடப்பாண்டுக்கு மானிய கோரிக்கை மீதான அறிவிப்புகளில், "சென்னை பெருநகர் பகுதி நீங்கலாக தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் நான்கு குடியிருப்புக...
தமிழகம்
இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த லளிகம் கிராமத்தில் செங்குந்த மஹாஜன சங்கம் சார்பில் 15ம் ஆண்டு இலவச நோட்டு, புத்தகம் வழங்கும் விழா பாலதண்டாயுதபாணி கோவில் வளாகத்தில் நடந்தது.சங்க தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். ஊர் செட்டிகாரர் ரவிச்சந்திரன், காரியகாரர் கமலேசன், தர்மகர்த்தா மாணிக்கம், நிர்வாகிகள் சாம்பமூர்த்தி, சாமிநாதன் ஆ...
தமிழகம்
நெரிசலில் தவிக்கும் பாப்பாரப்பட்டி
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த பாப்பாரப்பட்டியில் குறுகிய சாலை வசதியிருப்பதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி வருகிறது.பாப்பாரப்பட்டி நகரின் முக்கிய சாலையான மூன்று ரோடு சந்திப்பு சாலையில் இருந்து பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் குறுகிய சாலையாக இருப்பதால், அடிக்கடி இப்பகுதியில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டு வ...
தமிழகம்
கவியரங்கம்
காரைக்குடி: உலக தமிழ் செம்மொழி மாநாடுக்காக, கலைவாணி தமிழ்கூடம் மற்றும் நேஷனல் கேட்டரிங் கல்லூரி இணைந்து, காரைக்குடியில் கவியரங்கம் நடத்தின. தாளாளர் சையது வரவேற்றார். பேராசிரியர் அய்க்கண் தலைமை வகித்தார். கலைவாணி வித்யாலயா, எஸ்.எம்.எஸ்.வி., தே.பிரித்தோ, சுந்தரம் செட்டியார் குருகுல பள்ளி மாணவ, மாணவியர், தலைமை ஆசிரியர்கள்...
தமிழகம்
அரசு கல்லூரியில் சேர்க்கை கவுன்சிலிங்
காரைக்குடி: அழகப்பா அரசு கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் அறிக்கை: பட்டப்படிப்பில் விளையாட்டு வீரர், முன்னாள் ராணுவத்தினர், மாற்று திறனாளி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும் 28ம் தேதி நடக்கிறது. பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஜூலை 2 ம் தேதி நடக்...
தமிழகம்
என்.எஸ்.எஸ்., முகாம்
சிவகங்கை: மன்னர் மேல்நிலை பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில், சிவகங்கை சிவன் கோயிலில் உழவார பணி நடந்தது. பள்ளி முகவாண்மை குழு தலைவர் மதுராந்தகி நாச்சியார் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், கோயில் கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் செல்வக்குமரன் ஏற்பாடுகளை செய்தார்.
தமிழகம்
விவசாயிகளின் மனுக்களுக்கு முன்னுரிமை: கலெக்டர் உத்தரவு
சிவகங்கை : விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க, கலெக்டர் மகேசன் காசிராஜன் உத்தரவிட்டார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், "பயிர் காப்பீடு பிரிமியம் செலுத்திய விவசாயிகளுக்கு, இழப்பீட்டு தொகையை விரைவாக வழங்க வேண்...
தமிழகம்
அரசின் அறிவிப்போ இலவச காஸ் அடுப்பு திட்டம் கட்டாய வசூலில் மக்கள் பிரதிநிதி, அலுவலர்கள்
சிவகங்கை : இலவச காஸ் அடுப்பு திட்டத்தில் பயனாளிகளிடம் 450 ரூபாய் வரை மக்கள் பிரதிநிதிகள் முதல் அதிகாரிகள் வரை கட்டாய வசூலில் ஈடுபடுவதால், அரசின் இலவச திட்டத்தின் மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு வாரியாகவும், கிராம ஊராட்சிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் குடும்பத்தினரில், காஸ் சிலிண்ட...
தமிழகம்
உழவர்களுக்கு பயிற்சி
சிவகங்கை : உழவர் மன்ற உறுப்பினர்களுக்கு, காளையார்கோவில் அருகே கல்லுவழி கிராமத்தில் பயிற்சி நடந்தது. விவசாயி ஆபிரகாம் தோட்டத்தில், இயற்கை முறை சாகுபடி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. "தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஸ்பிரிங்லர் முறையில் விவசாயம் செய்ய வேண்டும். பயிருக்கு உரமாக சாணத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனால்,...
தமிழகம்
டூவீலர் மரத்தில் மோதி ஒருவர் பலி
இளையான்குடி : தாயமங்கலம் அருகே கீழத்துறையூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (38 ). நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு, சுசுகி டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) இளையான்குடி நோக்கிசென்றார். கண்ணமங்கலம் அரசு போக்குவரத்து கழக குடோன் அருகே சென்றபோது, ரோட்டோர மரத்தில் மோதி காயமுற்றார். இளையான்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை...
தமிழகம்
தொடர் உண்ணாவிரதம் மாற்று திறனாளிகள் முடிவு
சிவகங்கை : டாஸ்மாக்கில் பணிபுரியும் மாற்று திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. டாஸ்மாக் மாற்று திறன் பணியாளர் சங்க மாநில தலைவர் நாச்சியப்பன் கூறியதாவது: சங்க செயற்குழு கூட் டம் திருச்சியில் நடந்தது. "அரசு நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு...
தமிழகம்
சங்கரன்கோவில் அருகே அறுந்து கிடந்த மின்கம்பி மீது மொபெட் ஏறியதில் மின்வாரிய ஊழியர்கள் இரண்டு பேர்பலி
சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் அருகே நேற்று அதிகாலை அறுந்து கிடந்த மின் கம்பி மீது மொபட் ஏறியதில் மின்வாரிய ஊழியர்கள் இரண்டு பேர் மின்சாரம் தாக்கியதில் உடல் கருதி பரிதாபமாக இறந்தனர். சங்கரன்கோவில் அருகே உள்ளது பெரியகோவிலான்குளம் கிராமம். நேற்று அதிகாலை இங்குள்ள டிரான்ஸ்பார்மரில் தீ பிடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து மின்...
தமிழகம்
பல்கலை தேர்வு முடிவு வெளியீடு
காரைக்குடி : அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளில் நடந்த பி.எஸ்சி., மனை அறிவியல், நுண்ணுயிரியல், ஆய்வு தொழில்நுட்பவியல், மண்ணியியல், உயிர் வேதியியல், வணிகவியல், கம்ப்யூட்டர் பயன்பாட்டியலில் வணிகவியல் (மாலைநேரம்), கணிதம், வேதியியல், விலங்கியல்; பி.ஏ., பொருளாதாரம், சுற்றுலா மேலாண்மை, உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முட...
தமிழகம்
மலேரியா எதிர்ப்பு மாதம்
தாயமங்கலம் : தாயமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மலேரியா நோய் பாதிப்பு, தடுக்கும் முறை குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். பேச்சு, கட்டுரை போட்டி,வினா- விடை நடத்தி பரிசுகள் வழங்கினர். மருத்துவ அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமாரி தலைமை வகித்தார். விழிப்புணர்வு ஊர்...
தமிழகம்
கோவில் உண்டியல் கொள்ளை
ஓசூர்: தளியை அடுத்த குருப்பட்டியில் சனிஸ்வரர் கோவில் உள்ளது. குருப்பட்டி, மதகொண்டப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள் தினம் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு செல்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து, அங்கு இருந்து உண்டியலை உடைத்துள்ளனர். அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்...
தமிழகம்
குழந்தை திருமணம்: கலந்து கொள்வோருக்கும் சிறை உறுதி
சிவகங்கை : குழந்தை திருமணத்தை நடத்துவோர் மட்டும் இன்றி, அதில் கலந்து கொள்வோருக்கும் தண்டனை கிடைக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் மகேசன் காசிராஜன் அறிக்கை:கண்ணங்குடி ஒன்றியம் தேவன்தாவு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தை திருமணம் குறித்து, மதுரையை சேர்ந்த அமைப்பு மூலம், மா...
தமிழகம்
ஓசூர் நகராட்சியை கண்டித்து 28ல் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
ஓசூர்: ஓசூர் நகராட்சியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததை கண்டித்து வரும் 28ம் தேதி தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாவட்ட செயலாளர் சந்திரன் வெளியிட்ட அறிக்கை: ஓசூர் நகராட்சி நிர்வாகம் மக்கள் பிரச்னை தீர்ப்பதில் தொடர்ந்து அலட்சிய போக்கை காட்டி வருகிறது. நகராட்சியை கண்டித்தும், மூன்று நா...
தமிழகம்
மண்ணெண்ணெய் வினியோகம் : கார்டுதாரருக்கு எச்சரிக்கை
காரைக்குடி : சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர், ரேஷன் கார்டுகளில் முத்திரை குத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழங்கல் பிரிவு தாசில்தார் முருகேசன் கூறியதாவது: காரைக்குடி தாலுகாவில் 100 ரேஷன் கடைகளில், 80 ஆயிரத்து 818 கார்டுகள் உள்ளன. ஒரு சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு மூன்று லிட்டர், சிலிண்டர் இல்லாதோருக்கு ஆறு லிட...
தமிழகம்
அரசு மகளிர் கல்லூரியில்மாணவியர் சேர்க்கை கவுன்சலிங்
கிருஷ்ணகிரி: பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர் சேர்க்கைக்கான கவுன்சலிங் வரும் 28ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது.கல்லூரி முதல்வர் தனலட்சுமி வெளியிட்ட அறிக்கை:பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2010-11ம் கல்வி ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 28ம் தே...
தமிழகம்
தாயமங்கலத்தில் டாக்டர்கள் இன்றி நோயாளிகள் அவதி
இளையான்குடி : தாயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இன்றி கர்ப்பிணி, நோயாளிகள் அவதி அடைகின்றனர். இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு சிகிச்சை பெற 200 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். கர்ப்பிணிகளுக்கு மத்திய, மாநில அரசு பல்வேறு நிதி உதவிகளை அளிப்பதால்,...
தமிழகம்
அஞ்செட்டி- ஒகேனக்கல்லுக்கு ரூ.1.29 கோடியில் இரு வழிச்சாலை
ஓசூர்: அஞ்செட்டி மலைப்பகுதி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒகேனக்கலுக்கு ஒரு கோடியே 29 லட்சத்தில் இரு வழி தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி, பிலிகுண்டு வழியாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஒகேனக்கலுக்கு மலைப்பகுதி வழியாக செல்கிறது. ஓசூர், பெங்களூரு மற்றும...
தமிழகம்
வித்யா மந்திர் பள்ளி மாணவர் இன்ஜி., தர வரிசையில் முதலிடம்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் நவீன், எஸ்.சி., பிரிவில் இன்ஜினியரிங் ரேங்க் தர வரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.சென்னையில் கடந்த 18ம் தேதி இன்ஜினியரிங் கவுன்சலிங் மாணவர்கள் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. இரண்டு மாணவிகள், எட்டு மாணவர்கள் 200க்கு 200 கட...
தமிழகம்
திருவள்ளுவர் பல்கலை சார்பில் மினி மாரத்தான் ஓட்டம்
வேலூர்: கோவையில் உலக தமிழ் செம் மொழி மாநாடு நடப்பதை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் மினி மாரத்தான் ஓட்டம் வேலூரில் நடந்தது.வேலூர் கோட்டை மைதானம் காந்தி சிலையில் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ., காந்தி மினி மராத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்தார். கலெக்டர் ராஜேந்திரன், எ...
தமிழகம்
கும்பாபிஷேக விழா
திருவண்ணாமலை: திருவண்ணாமலை யோகிராம் சூரத்குமார் ஆஸ்ரமத்தில் ஆறாம் ஆண்டு மஹா கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது.நேற்று காலை ஹோம பூஜை நடந்தது. யோகி ராம் சூரத்குமாரின் அனுபவ சொற்பொழி, மாலையில் தேவார பாடல், இன்னிசை கச்சேரி நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து காண்டனர்.தொடர்ந்து இன்று (21ம் தேதி) காலை மஹா அபிஷேகம், பக்தர்கள் பஜ...
தமிழகம்
பஞ்., தலைவர் சிறை வைப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பஞ்சாயத்து தலைவரை அறையில் பூட்டி சிறை வைத்தவர் கைது செய்யப்பட்டார்.திருவண்ணாமலை அடுத்த கருமாரப்பட்டி பஞ்சாயத்து தலைவராக நாகராஜ் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த டேங்க் ஆபரேட்டர் சிவகுமார், மணியன், சோலை, ஆகியோர் தங்களுடை...
தமிழகம்
வி.ஏ.ஓ., வுக்கு கொலை மிரட்டல் மணல் லாரி அதிபருக்கு வலை
திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே வி.ஏ.ஓ., க்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரி உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.போளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி மணல் திருட்டு நடந்து வருகிறது. இதை தடுக்க திருவண்ணாமலை கலெக்டர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். போளூர் தாசில்தார் செல்வராசு, துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்...
தமிழகம்
கடையநல்லூர் பாப்பான் கால்வாயில் நாளை ஆக்ரமிப்பு அகற்றம்
கடையநல்லூர் : கடையநல்லூரில் பாப்பான் கால்வாயில் காணப்படும் ஆக்ரமிப்புகள் நாளை (22ம் தேதி) அகற்றப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். கடையநல்லூர் கருப்பாநதி அணைக்குட்பட்ட பாப்பான் கால்வாய் மூலமாக சுமார் 5 ஆயிரத்து 500 ஏக்கர் பிசான சாகுபடிகள் மேற்கொள...
தமிழகம்
தே.மு.தி.க., கம்ப்யூட்டர் பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
அரியலூர்: அரியலூர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில், செயல்படும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் , பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.பயிற்சி மைய ஆசிரியர் ஜோதி வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழை வழங்கிய, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் ராமஜெயவேல் பேசியதாவது: அரியலூரில் கடந்த மூன்று ஆண்...
தமிழகம்
செந்துறை ஒன்றிய வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு
அரியலூர்: செந்துறை பஞ்சாயத்து ஒன்றிய வளர்ச்சி பணிகளை, மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றிய வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு செய்யவதற்காக சென்ற மாவட்ட கலெக்டர் ஆபிரகாம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், செந்துறை பஸ் ஸ்டேண்டு அருகே உள்ள சித்தேரி வலுப்படுத்தும் பணியை...
தமிழகம்
அரியலூர் கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கவுன்சலிங் இன்று துவக்கம்
அரியலூர்: அரியலூர் அரசினர் கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இன்று துவங்குகிறது.இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) தியாகராஜன் விடுத்த அறிக்கை:அரியலூர் அரசினர் கலைக்கல்லூரியின் 2010-2011ம் கல்வியாண்டுக்கு, மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இன்று முதல் துவங்குகிறது. இக்கல்லூரியின் முதல் ஷிப்டில் ப...
தமிழகம்
மதுபாராக மாறிய ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து மையம்
தேவதானப்பட்டி : சில்வார்பட்டியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மையத்தின் வளாகத்தை குடிமகன்கள் மதுபாராக பயன்படுத்தி வருகின்றனர். தேவதானப்பட்டியில் இருந்து வைகை அணை செல்லும் மெயின் ரோட்டில் சில்வார்பட்டி அமைந்துள்ளது. இதனால் வாகன போக்குவரத்து அதிகமாக உள் ளது. சில்வார்பட்டியை மையப்படுத்தி நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, எருமலை...
தமிழகம்
வல்லக்கடவுவில் மருத்துவ முகாம்
தேனி : தேனி நலம் ஆஸ்பத்திரி சார்பில் இடுக்கி மாவட் டம் வல்லக்கடவுவில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜ்குமார் தலைமையில் டாக்டர் பாரதி மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். 96 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஐந்து பேருக்கு சர்க் கரை நோய், 23 பேருக்கு ரத்த அழுத்தம் கண்டறியப...
தமிழகம்
பெரம்பலூரில் தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம்
பெரம்பலூர்: பெரம்பலூர் நகர, கிளை தே.மு.தி.க., செயலாளர்கள் கூட்டம் சோழா மீட்டிங் ஹாலில் நடந்தது. கூட்டத்துக்கு நகர செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். அவைத்தலைவர் அப்பாய் கார்த்திக், நகர துணை செயலாளர் ரவி, ரெங்கநாதன், சுந்தரம், தமிழரசி, சரவணன், நந்தினி, ராஜகோபால் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பெரம்பலூர் எம்.எல்.ஏ., த...
தமிழகம்
மொபைல் கடையில் திருடியவர்கள் கைது
தேனி : தேனி பஸ்ஸ்டாண்டில் ஜோ மொபைல் ஸ்டோர் நடத்தி வருபவர் விஜி (35). இவரது கடையில் நேற்று காலை தாடிச்சேரியை சேர்ந்த பாலமுருகன் (43), அருள்லிங்கம் (51) மொபைல் வாங்குவது போல் நடித்து ஐந்து மொபைல்களை திருடிச் சென்றனர். விஜி இவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தார். எஸ்.ஐ., மீனாட்சி வழக்கு பதிவு செய் துள்ளார்.
தமிழகம்
பெரம்பலூர் அருகே நடந்த விபத்துக்களில் 3 பேர் பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நேற்று நடந்த சாலை விபத்துக்களில் மூன்று பேர் பலியாகினர்.அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு மகன் செந்தில்குமார் (30). இவர் தனது ஹீரோ ஹோண்டா டூவீலரில் பெரம்பலூருக்கு சொந்த வேலையாக வந்து விட்டு மீண்டும் அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். டூ வீலர் கவுல்பாளை...
தமிழகம்
புதிய அழ்குழாய்கள் அதிகாரிகள் ஆய்வு
தேவதானப்பட்டி : பெரியகுளம் ஒன்றியப் பகுதியில் புதிதாக போடப்பட்டுள்ள ஆழ்குழாய்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு தேனி மாவட் டத்தில் கோடை காலத்தில் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பிரச்னை ஏற்படும் கிராமங்களில் குடிநீர் நிலைகள் பற்றி ஆய்வு செய்யப் பட்டது. தொடர் நடவடிக்கையாக பெரியகுளம் ஒன்றியத்தில் மேல்மங்க...
தமிழகம்
ஒன்றிய செயலாளர் நியமனம்
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அ.தி.மு.க., ஒன்றிய செயலாளராக பால்பாண்டியன் நியமனம் செய்யப்பட் டுள்ளார். இவர் 1972ம் ஆண்டு முதல் அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினராகவும், 1998 முதல் 2001 முடிய ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளராகவும் இருந் துள்ளார். தற்போது மீண்டும் ஒன்றிய செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார். அ.தி.மு.க., ஒன்றிய, நகர, சார்பு அண...
தமிழகம்
இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
தேனி : தேனி மாவட்டத்தில் மூன்று இன்ஸ்பெக்டர்களுக்கு டி.எஸ்.பி.,களாக பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது. தேனி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் விஜயன், தேனி மாவட்ட போக்குவரத்து டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி திருச்சி ஆயுதப்படை டி.எஸ்.பி.,யாகவும், பெரியகுளம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வின்செ...
தமிழகம்
மரத்தில் கார் மோதி மாணவன் பலி : விழுப்புரம் மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்
விக்கிரவாண்டி : விழுப்புரம் அருகே விபத்தில் இறந்த பள்ளி மாணவனின் உடலை பெற் றோர், அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். உடலை தானம் வழங்கக் கூடாது என நூற்றுக்கணக் கான மாணவர்கள், மருத்துவமனை வளாகத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் அடுத்த டி. கொசப்பாளையம் கிராமத் தில் நிலா அறக்கட்டளை செயல்ப...
தமிழகம்
உதவித் தொகை பெற விருப்பமா?: முகாமில் பங்கேற்க அழைப்பு
புதுக்கோட்டை: மத்திய அரசின் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டம், ஆதரவற்ற விதவையர் உதவித்தொகை திட்டம், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகைத் திட்டம் ஆகியவற்றின் மூலம் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தின் பயன்பெற தகுதியுடைய பயனாளிகளை தேர்வு செய்யும் விதமாக வருவாய் க...
தமிழகம்
தே.மு.தி.க.,ஆலோசனை கூட்டம்
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் தொகுதி அளவிலான தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி அமைப்பாளர் முருகன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் பாலாஜி வரவேற்றார். சட்டசபை தேர்தலுக்கான திட்டமிடல், செயல்படுத்துதல், புதிய உறுப்பினர்களை சேர்த்து அடை யாள அட்டை வழ...
தமிழகம்
மன்னர் கல்லூரி கவுன்சலிங் ஜூன் 28ம் தேதி துவக்கம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் வரும் 28ம் த்ததி ஆரம்பித்து ஜூலை இரண்டாம் தேதிவரை தொடர்ந்து நடக்கிறது.இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் 2010-11ம் ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை பாடப் ரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை...
தமிழகம்
விபத்தில் முதியவர் பலி
ஆண்டிபட்டி : அனுப்பபட்டியை சேர்ந்தவர் ராமராஜ்(64). நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு போலீஸ் ஸ்டேஷன் எதிரில் ரோட்டை கடக்க முயன்றார். மதுரையிலிருந்து போடி செல்லும் தனியார் பஸ் ராமராஜ் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்து தேனி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் வழக...
தமிழகம்
ரோட்டிற்கு நிதி ஒதுக்கீடு
வருஷநாடு : க.மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வருஷநாடு முதல் வாலிப்பாறை செல்லும் ரோடு பல ஆண்டுகளாக பழுதடைந்தும், வண்டி, வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருந்தது. இந்த ரோட்டினை புதுப்பிக்க நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் 28.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் எனவும் ஒன்றிய தலை...
தமிழகம்
நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா
தேனி : வடுகபட்டியில் இமை அறக்கட்டளை சார்பில் நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது. இமை அறக்கட்டளை இயக்குனர் மாரியப்பன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் ரமேஷ்குமார் வரவேற்றார். தேனி மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்க செயலாளர் பாலாஜி முன் னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பெரியகுளம் சார்பு நீதிபதி மோகன், வடுகபட்டி...
தமிழகம்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று துவங்குகிறது
லண்டன்: டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று துவங்குகிறது. வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கு பெற உள்ளனர்.மேலும் டென்னிஸ் வீரர்கள் ஒவ்வொரு வரும் தங்களுடைய கனவு போட்டியாக கருதுவது இந்த விம்பிள்டன் போட...
இந்தியா
கூண்டுகளில் கல்நண்டு வளர்ப்பு அமோகம் ! தரம் பிரிக்கும் பணிகள் தீவிரம்
காரைக்காலில் கூண்டு முறையில் வளர்க்கப்பட்டு வரும் கல் நண்டுகள், விமானத்தில் பறப்பதற்குத் தயாராகி வருகின்றன. இதற்காக, நண்டுகளைத் தரம் பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காரைக்கால் கருக்களாச்சேரியில், மத்திய அரசின் ராஜிவ்காந்தி நீர் வாழ் உயிரின வளர்ப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கொடுவா மீன், இறால்...
தமிழகம்
தேனி காஸ் ஏஜென்சிக்கு நோட்டீஸ் குறைகேட்பு கூட்டத்தில் உத்தரவு
தேனி : தேனி காஸ் ஏஜென்சிக்கு நோட்டீஸ் அனுப்ப குறைகேட்பு கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. டி.எஸ்.ஓ., தர்மராஜ் முன்னிலை வகித்தார். காஸ் ஏஜென்சிகளின் உரிமையாளர்கள், நுகர்வோர் பங்கேற்றனர். டி.ஆர்.ஓ., பேசுகையில், இந்த ஆண...
இந்தியா
மருத்துவ காப்பீட்டுக்கு வருமான சான்றிதழ்: நிபந்தனையை தளர்த்த அரசுக்கு கோரிக்கை
புதுச்சேரி : கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர்கள் மருத்துவக் காப்பீடு திட் டத்தில் பதிவு செய்ய, வருமான சான்றிதழ் கேட்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. கிராம ஊராட்சி மன் றத் தலைவர்களின் கூட் டமைப்பு துணை அமைப்பாளர் ஜெகந்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள கட்டுமான மற் றும் ...
இந்தியா
திவ்ய நற்கருணை சிறப்பு பவனி
புதுச்சேரி : வில்லியனூர் புனித லூர்து அன்னை ஆலயத் தில் நேற்று நடந்த திவ்ய நற்கருணை சிறப்பு பவனியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். திவ்ய நற்கருணை விழாவையொட்டி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின், திவ்ய நற்கருணை அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் வீதியுலாவாக புறப்பட்டு மாதா கோவில் வீதி, ஒதியம் பட்டு வீதி வழியாக சென்று ...
தமிழகம்
தேனியில் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்
தேனி : தேனியில் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக் கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனி அல்லிநகரம் நகராட்சியில் வைகையாற்றில் அமைக்கப்பட் டுள்ள உறைகிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீரை சுத்திகரிப்பு செய்ய எந்த வசதியும் செய்யப்படவில்லை. சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாததால் மக்களுக்கு சு...
இந்தியா
அனிமேஷன் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான ஓவியப் போட்டி
புதுச்சேரி : வில்லியனூரில் அனிமேஷன் விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான ஓவியப் போட்டி, வரும் 4ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி பூரான்கள் இயக்கத் தலைவர் போன்ஸ் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய பூரான்கள் இயக்கம் சார்பில் அனிமேஷன் விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான ஓவியப் போட்டி, வரும் 4ம் தேதி வில்லியனூரில் நடக்கிறது. இதில், ...