category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
தமிழ் இணையத்திற்கு அரசு விழாக்களில் முக்கியத்துவம் அளிக்கப்படும் : இனியநேரு
கோவை : தமிழகத்தில் அரசு சார்பில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் தமிழ் இணையதளத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தேசிய தகவலியல் மைய தொழில் நுட்ப இயக்குனர் இனியநேரு கூறினார். "செம்மொழி மாநாடு நடக்கும் பகுதியில் கம்பியில்லா இணையதள வளாகமாக மாற்றுவதற்குரிய அனைத்துபணிகளையும் குறுகிய கால அவகாசத்தில் திட்டமிட்டு செயல்ப...
தமிழகம்
மின்னஞ்சல் குழுமத்தில் தமிழர்கள் உறுப்பினராக வேண்டுகோள்
கோவை : மின்னஞ்சல் குழுமத்தில் உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் இணைய வேண்டும் என்று சிங்கப்பூர் பாராளுமன்ற மொழி பெயர்ப்பு பிரிவில் உதவி இயக்குனராக பணிபுரியும் பழனியப்பன் இணைய மாநாட்டில் வேண்டுகோள்விடுத்தார்.  செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டில் பங்கேற்க வந்த பழனியப்பன் கூறியதாவது: தமிழுக்காக நடத...
தமிழகம்
30 லட்சம் மதிப்புள்ள துணியை திருடியவர் கைது
நாமக்கல் :  30 லட்சம் மதிப்பள்ள துணியை திருடியவர் கைது செய்யப்பட்டார்.  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள வாழரைகேட் பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர். இவர் திருசசெங்கோட்டில் 30 லட்சம் மதிப்புள்ள 90மீ ஏற்றுமதி தரம் வாய்ந்த காடா துணி தர்மபுரியில் இருந்து கொண்டு மறைத்து வைத்திருந்தார். இது குறித்து தர்மபுரியில் போலீச...
தமிழகம்
இணையதள கண்காட்சியில் அரசு போக்குவரத்து கழகங்கள்
கோவை : இணையதள கண்காட்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழங்கள் சார்பில் அரங்கு அமைக் கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் உள்ள 55 போக்குவரத்து கழக மையங்களில் எந்த இடத்திலிருந்து எந்த இடத்துக்கும் செல்ல பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது.பயணச்சீட்டுகளில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்ப...
தமிழகம்
மொபைலில் தமிழ்: பொள்ளாச்சியை சேர்ந்த ஸ்டான்போர்டு விஞ்ஞானி வேண்டுகோள்
கோவை: 'தமிழில் மொபைல் தொழில்நுட்ப சாதனங்களை உடனடியாக உருவாக்க வேண்டும்' என்று அமெரிக்க ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஆரோக்கியசாமி பால்ராஜ் தெரிவித்தார்.பொள்ளாச்சியில் பிறந்து, அமெரிக்காவில் புகழ்பெற்ற விஞ்ஞானியாக இவர் திகழ்கிறார். மொபைல்போன்களுக்கான 4-ஜி தொழில்நுட்பத்தின் தந்தையாக இவர் மதிக்கப்படுகிறார். இந்தியா...
தமிழகம்
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் எண் மாற்றம்
சென்னை : சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் எண் மாற்றம் செய்யப்பட்டு, வரும் ஜூலை முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.சென்னை எழும்பூரிலிருந்து தினமும், திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் 6123  என்ற அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் எண், வரும் ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து 6723 ஆக மாற்றப்படுகிறது...
இந்தியா
ஆந்திர அரசுக்கு அவப்பெயர்: ரோசய்யா ஆலோசனை
ஐதராபாத்:ஆந்திர நீர்ப்பாசனத் துறையில் முறைகேடுகள் நடப்பதாக அரசு மீது, தெலுங்கானா காங்கிரஸ் எம்.பி.,க்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ரோசய்யா, கட்சித் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் பொன்னல லட்சுமய்யா. போலவரம் மற்றும் பிரணஹிதா - செவல்லா...
இந்தியா
சாலையில் பொதுக்கூட்டம் நடத்த கோர்ட் தடை: மார்க்சிஸ்ட், பா.ஜ., கடும் எதிர்ப்பு
திருவனந்தபுரம்:சாலைகளில் பொதுக்கூட்டங்கள் நடத்த, கேரள ஐகோர்ட் சமீபத்தில் தடை விதித்தது. இந்த தடைக்கு, கேரள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.சாலைகளில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்க கோரி, கேரள ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட், சாலைகளில் பொதுக்கூட்டங்கள் நடத்த...
இந்தியா
விலை உயர்வில் உடன்பாடு இல்லை: மம்தா கடும் எதிர்ப்பு
புதுடில்லி:பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் பங்கேற்காமல் புறக்கணித்தார். பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. முன்னதாக, இது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் நடந...
தமிழகம்
காங்., எம்.எல்.ஏ., சுதர்சனம் மருத்துவமனையில் அனுமதி
கோவை:தமிழக சட்டசபை காங்., தலைவர் சுதர்சனம் நெஞ்சு வலி காரணமாகவும், ­­கவிஞர் அப்துல்ரகுமான் வயிற்றுவலி காரணமாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.செம்மொழி மாநாட்டில் பங்கேற்க மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழறிஞர்கள் கோவை வந்துள்ளனர்.தமிழக சட்டச...
தமிழகம்
மேலவை வாக்காளர் பட்டியல்: நவம்பர் 1ம் தேதி தகுதியேற்பு நாள்
சென்னை:மேலவைக்கு ஓட்டுப் போடுவதற்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற, இந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி தகுதியேற்பு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்களையும் பட்டியலில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் எந்த பல்கலையில் பட்டம் பெற்றிருந்தாலும் அவர்களும் பட்டியலில் சேர்க்கப்படுவர். தமிழகத்தில் மேல...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேட்டி : தற்போது காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி உறுதியாக உள்ளது. நாளை நடப்பதை யாராலும் அறிய முடியாது. தி.மு.க.,வில் பா.ம.க.,வைச் சேர்ப்பது தொடர்பாக துணை முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. இது அவர்களின் உட்கட்சிப் பிரச்னை. இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர...
தமிழகம்
தமிழ் மொழியின் சீரான வளர்ச்சிக்கு உதவும் இணையதளம் : கருத்தரங்கில் வெளிநாட்டு ஆய்வாளர் பேச்சு
கோவை : கோவையில் நடந்து வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இணையதளங்களில் தமிழ் வளர்ச்சி குறித்த கருத்தரங்கு, தமிழ் பயன்பாடு, மின் ஆளுமை போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இணையதளங்களில் வலம் வரும் தமிழ் மொழியால் சர்வதேச அளவில் தமிழ் பரவி வருகிறது. செம்மொழி மாநாட்டில், "இணையதொழில் நுட்பத்தில் தமிழ் மொழி மற்று...
தமிழகம்
புதிதாக 10 இன்ஜி., கல்லூரிகளுக்கு அனுமதி?
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக பொறியியல் கல்லூரி துவங்க, இதுவரை 10 கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ., கொண்டு வந்த புதிய விதிமுறைகளை எதிர்த்து தனியார் பொறியியல் கல்லூரிகள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதையடுத்து...
தமிழகம்
அமெரிக்காவில் தமிழுக்கு அங்கீகாரம் தமிழறிஞர்கள் முயற்சி
கோவை : செம்மொழி மாநாட்டில் பங்கேற்க பல அமெரிக்க தமிழ் அறிஞர்கள் வந்துள்ளனர். இவர்கள், தாங்கள் வாழும் மாநிலங்களில் தமிழ் கற்றுத் தர எடுக்கும் முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தனர். அமெரிக்காவில் இயங்கும் கொலம்பஸ் தமிழ்ச் சங்கம், தமிழர்களின் குழந்தைகள் தமிழை மறந்துவிடாமல் இருக்க, தன்னார்வத் தொண்டர்கள் மூலம் பல முயற்சிகளை எ...
இந்தியா
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு : கேரளாவில் பந்த்; போக்குவரத்து பாதிப்பு
திருவனந்தபுரம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் பந்த் நடத்தப்பட்டது. இதனால் இரு மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு இடங்களில் இடது சாரி அமைப்பினர் பல்வேறு போராட்டம் நடத்தினர். இடது சாரிகள் ஆளும் இவ்விரு மாநிலங்களிலும், பஸ் போக்குவரத்...
இந்தியா
நக்சல்கள் வன்முறையால் பாதிப்பு 5 ஆண்டுகளில்10 ஆயிரம் பேர் பலி
புதுடில்லி : கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுமக்கள், பாதுகாப்பு வீரர்கள் உட்பட 10 ஆயிரம் பேர் நக்சல் வன்முறையில் கொல்லப்பட்டுள்ளனர். நக்சல் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த உயிரிழப்பு கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. உள்துறை அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, அமைச்சகம் அளித்த...
தமிழகம்
தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடைகாலம் முடிவடையும் தருவாயில், தமிழகத்தில் சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. வெப்பம் அதிகரிப்பால், மாலை அல்லது இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றால் இரவு நேரத்தில் ...
தமிழகம்
கேரளாவில் பருவமழை ஒட்டன்சத்திரத்தில் குளிர்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயில் இருந்து வந்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் முந்திய வருடங்களை காட்டிலும் சற்று அதிகமாகவே இருந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்துள்ளதால் மேற்கு மலைத் தொடரின் அருகில் இருக்கும் ஒட்டன்சத்திரம் பகுதியி...
தமிழகம்
வாகனம் வழங்கும் விழா
பழநி: த.மு.மு.க., சார்பில் ரூ.3.30 லட்சம் மதிப்புள்ள வாகன அர்ப்பணிப்பு விழா நடந்தது. விழாவில் அன்பழகன் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம், நகராட்சி துணை தலைவர் ஹக்கீம், தி.மு.க., நகர செயலாளர் ஆ.வேலுமணி, தே.மு.தி.க., நகர தலைவர் வெங்கடசுப்ரமணி, த.மு.மு.க, மாநில தலைவர் ஜவாஹிருல்லா, மாநில செயலாளர் ஹாஜாகனி, மாவட்ட பொர...
தமிழகம்
பயிற்சி முகாம்
கொடைக்கானல்: கொடைக்கானல் தெரசா மகளிர் பல்கலை., யில் கல்வியியல் துறை, பல்கலை., மானியக்குழு சார்பில், சமுதாயத்தில் பின் தங்கிய மாணவிகளுக் கான சமவேலைவாய்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.பல்கலை., துணைவேந்தர் அருணாசிவகாமி தலைமை வகித்தார்.பேராசிரியை ராஜேஸ்வரி வரவேற்றார். மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், பதிவாளர் மணி பேசினர்.ம...
தமிழகம்
தற்கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்.வி.நகரைச் சேர்ந்த குமரகுரு(36), கிழக்கு ரதவீதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், ஆறு மாதங்களுக்கு முன் கடையை மூடி விட்டார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
விபத்தில் வாலிபர் பலி
வடமதுரை: குஜிலியம்பாறை-சின்னலுப்பை அடுத்துள்ள முத்தம்பாறை சின்னச்சாமி மகன் பெரியசாமி(25). டிராக்டர் டிரைவர். இவர் எரியோடு அருகே வரதராஜபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். நேற்று மதியம் அங்கிருந்து பைக் கில் புறப்பட்டு, திண்டுக் கல்- கரூர் ரோட்டில் சென்ற போது, அவ்வழியே வந்த அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்...
தமிழகம்
பெண்ணைகடத்தி திருமணம்
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே கோட்டநத்தத்தைச் சேர்ந்த மருதமுத்து. இவரது 17 வயது மகளை, இதே ஊரைச் சேர்ந்த கணேசன்(25) கடத்திச் சென்று திருமணம் செய்தார். இது தொடர்பாக மருதமுத்து மனைவி ராமாயி, வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். கணேசன் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த மாரியப்பன்(35), செல்லமுத்து(32) மீது வழக்கு ...
தமிழகம்
நகை பறிப்பு வாலிபர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்.எம்.காலனியைச் சேர்ந்த தேவராஜ் மனைவி அம்சலட்சுமி. யோக பயிற்சியாளரான இவரிடம் இருந்து, நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர் தாலிச் செயினை பறித்துச் சென்றார். விசாரித்த திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார், செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த காளிமுத்து(25)வை கைது செய்தனர். இவரிடம் இருந்து ஆ...
தமிழகம்
விபத்தில் 3 பேர் காயம்
வடமதுரை: வடமதுரை அருகேயுள்ள சித்துவார்பட்டியில் இருந்து மோர்ப்பட்டிக்கு வாடகை ஆட்டோவில் மாணிக்கம்(50), தர்மலிங்கம்(35), வசந்தா(28) உள்பட 7 பேர் சென்றனர். இவர்கள் சென்ற ஆட்டோ மீது எதிரே வந்த வேன் மோதியதில் ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மாணிக்கம், தர்மலிங்கம், வசந்தா ஆகியோர் படுகாயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக...
தமிழகம்
ரேஷன் கடைக்கு கட்டடம் தேவை
வடமதுரை: அய்யலூர் பேரூராட்சிக்குட்பட்ட குப்பாம்பட்டி, கொண்ணையம்பட்டி, கெங்கையூர், கஸ்பா அய்யலூர், களர்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, சந்தைப் பேட்டை ஆகிய ஆறு வார்டுகளைச் சேர்ந்த 1500 ரேஷன் கார்டுகளுக்கு அபிராமி ரேஷன் கடை உள்ளது. போதிய இட வசதியில்லாமலும், வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால் சில முறைகேடுகளுக்கும் வாய்ப்பாக அமை...
தமிழகம்
10 நாட்களாக குடிநீர் சப்ளையில்லைபுளியம்பட்டி கிராம மக்கள் மறியல்
பழநி: பழநி அருகே 10 நாட்களாக குடிநீர்சப்ளை இல்லாததை கண்டித்து மறியல் நடந்தது.தொப்பம்பட்டி ஒன்றியம், புளியம்பட்டி இந்திரா குடியிருப்பில் 50 வீடுகள் உள்ளன. இருநூறுக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். கடந்த 10 நாட்களாக குடிநீர் சப்ளையில்லை. அடிகுழாய் அருகே சாக்கடை ஓடுவதால், கழிவுநீர் கலந்த அடிகுழாயில் தண்ணீர் வருகிறது. சாக்கட...
தமிழகம்
முன்னறிவிப்பற்ற கட்டுப்பாடு காத்திருந்த பயணிகள் அவதி
திண்டுக்கல்: கோவை செம்மொழி மாநாட்டிற்கு, சில தடை செய்யப்பட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இவற்றால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் முதல் பஸ்களின் இயக்கத்தில், கட்டுப் பாடு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இரவு 10 மணிமுதல் காலை ஆறு மணிவரை, அரசு டவு...
தமிழகம்
ரத்த வகை கண்டறியும் முகாம்
வேடசந்தூர்: சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, மற்றும் திண்டுக்கல் ரத்த வங்கி இணைந்து இலவச ரத்த வகையை கண்டறியும் முகாமை வேடசந்தூரில் நடத்தியது.நகர தலைவர் சதக்கத் துல்லா தலைமை தாங்கினார். திண்டுக்கல் ரத்த வங்கி உரிமையாளர் இளங் கோவன் முன் னிலை வகித்தார். டெக்னிஷியன் பிரேம் குமார் வரவேற் றார். டாக்டர்கள் ஜேம்ஸ் சுந...
தமிழகம்
சேதமடைந்த தொகுப்பு வீடுகள் தங்க முடியாமல் மக்கள் அவதி
தாண்டிக்குடி,: சேதமடைந்த தொகுப்பு வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை உள்ளது.தாண்டிக்குடி ஊராட்சி கூடம் நகரில் 50க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்டது. தற்போது தொகுப்பு வீடுகளின் மேற்கூரை சேதமடைந்து மழை நீர் உள்ளே வருகிறது.சுவர்கள் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, கதவு, ஜன்னல் உள்ளிட்டவை சே...
இந்தியா
காரைக்காலில் மாங்கனி திருவிழா : ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு
காரைக்கால் : காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா நேற்று நடந்தது. விழாவில் பக்தர்கள் மாங்கனிகளை வீசி, இறைவனுக்கு தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர். சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக விளங்கும் காரைக்கால் அம்மையாருக்கு, காரைக்கால் கயில...
தமிழகம்
கருத்தரங்கு
தேனி: தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் செம்மொழி கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு முற்போக்கு சங்க எழுத்தாளர் இதயகீதன், மாவட்ட பொரு ளா ளர் மோகன்குமாரமங்கலம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். தலைமை ஆசிரியர் மகேஷ் நன்றி கூறினார்.
தமிழகம்
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
மூணாறு: மூணாறில் ஆப் சீசனி லும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துவிடும். தற்போதைய சீசன், ஆப் சீசன் என அழைக்கப் படுகிறது. செம்மொழி மாநாட் டிற்காக தமிழகத்தில் ஐந்து நாள் விடுமுறை விடப் பட்டுள்ளது. இதனால் சென்னை, திருச்சி, மதுர...
தமிழகம்
நீச்சல் போட்டி: மாணவி வெற்றி
பெரியகுளம்: மாநில அளவிலான நீச்சல் போட்டியில் லட்சுமிபுரம் ஸ்ரீரேணுகாவித்யாலயா மாணவி வைசாலி வெற்றி பெற் றார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடந்தது. இதில் 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். லட்சுமிபுரம் ஸ்ரீரேணுகா வித்யாலயா பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி வி.வைசாலி கலந்து கொண்டு, 100 மீட்...
தமிழகம்
மாணவியை கடத்த முயன்ற இருவர் கைது
போடி: போடியில் கல்லூரி மாணவியை காரில் கடத்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். போடி டி.வி.கே.கே., நகரை சேர்ந்த குப்புசாமி மகள் சரண்யா (21). தனியார் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது தம்பி வினோத்குமாருடன் (19) இருசக்கர வாகனத்தில் ஆஸ்பத்திரிக்கு சென்றுள் ளார...
தமிழகம்
கம்பத்தில் பாதாள சாக்கடை திட்டம் துவக்குவதில் தாமதம்
கம்பம்: கம்பத்தில் பாதாள சாக்கடை திட்ட ஆய்வுகள் முடிந்து, மதிப்பீடுகள் தயாரித்த பின்னும், பணிகள் துவக்குவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.கம்பத்தில் பாதாள சாக்கடை திட்ட ஆய்வு நடந்த போது, சுத்திகரிப்பு நிலையத்திற்கு இடம் அமைவதில் பிரச்னை ஏற் பட்டது. பின்னர் ஆங்கூர் பாளையம் ரோட்டில் பழைய குப்பை கிட்டங்கியில் இடம் ஒதுக்கப்பட...
தமிழகம்
ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு போடி நகராட்சி எச்சரிக்கை
போடி: போடி நகராட்சிக்கு சொந்தமான பூங்கா, மயானம், பொது உபயோக இடங்களை யாரும் வாங்கவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ கூடாது என நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. போடி நகராட்சி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா, பொது உபயோக இடங்கள், மயானங்கள், சிறுவர் விளையாடுமிடங்களை ஆகியவற்றை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் சிலர் ...
தமிழகம்
மூலப்பொருள் விலை உயர்வால் நசிகிறது கயிறு தயாரிக்கும் தொழில்
தேனி: மூலப்பொருட்களின் விலை உயர்வால் தேனி மாவட்டத்தில் கயிறு தயாரிக்கும் தொழில் நசிந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் கயிறு தயாரிக்க பயன்படும் தென்னை நார்களின் விலை 35 கிலோவிற்கு 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. 35 கிலோ நார்களில் இருந்து 170 கயிறு தயாரிக்கலாம். பணியாளர்களை வேலைக்கு வைத்து 170 கயிறு தயாரிக்க 300 ரூபாய் சம்பளமும...
தமிழகம்
ஆண்டிபட்டி நகரில் ரோடு வசதி தேவை
ஆண்டிபட்டி,: ஆண்டிபட்டி கடை வீதியில் ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டிபட்டி கடை வீதியில் இரு புறமும் சாக்கடை வசதி இல்லை. சிறிதளவு மழை பெய்தாலும் அதிகப்படியான நீர் வடிந்து வந்து ரோட்டை சேதப்படுத்தி விடுகிறது. பல்வேறு கிராமங்களில் இருந்து அன்றாடம் கடை வீதி பகுதிக்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வாரச் சந்தை கூடு...
தமிழகம்
பெரியகுளம் கிளைச்சிறையில் உணவு தயாரிக்கும் கைதிகள்
பெரியகுளம்: பெரியகுளம் கிளைச் சிறையில் சமையல் பணியாளர் பணியிடம் நிரப்பப் படாததால் கைதிகள் உணவு சமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையத்தில் கிளை சிறைகள் உள்ளன. இரு கிளைச் சிறைகளிலும் மாதம் தோறும் 30க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப் படுகின்றனர். காலையில் கஞ்சியும், மதிய நேரத்தில் சாப்பாடு, ...
இந்தியா
ரூ.2,000 கோடி கேட்டு திடீர் உண்ணாவிரதம்
ஐதராபாத் : பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி கட்டணத்தொகையை திரும்ப தரக்கோரி, ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத் தலைவர் கிருஷ்ணய்யா, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆந்திர முதல்வர் ரோசய்யா பதவி ஏற்றது முதல் ஏராளமான பிரச்னைகள் பூதாகரமாகி வருகின்றன. பிற்படுத்தப்பட்டோர் மற்...
தமிழகம்
கம்பத்தில் போக்குவரத்தை சீரமைப்பதில் புது சிக்கல்
கம்பம்: போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் போலீசாருக்கு சிக்கல்கள் எழுந்து வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களையும், வாகன ஒட்டிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. கம்பத்தில் போலீசார் மெயின் ரோட்டில் காமயகவுண்டன்பட்டி விலக்கு, டிராபிக் சிக்னல், அரசமரம், காந்திசிலை ஆகிய இடங்களில் நின்று, போக்குவரத...
தமிழகம்
பயிற்சி முகாம்
தேனி: கம்பத்தில் ராம்கோ குழுமத்தின் கிளை நிறுவனம் ஸ்ரீராம்கோ பயோ டெக் சார்பில் திசு வாழை வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. நிறுவனத்தலைவர் சிங் தலைமை வகித்தார். விற் பனை பொதுமேலாளர் பிரகாஷ்ராவ், பசுமை கூட மேலாளர் ஆனந்தகிருஷ் ணன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் "ஜி.பி.' என்னும் புதிய திசுவாழை கன்றுகளை அறிமுக...
தமிழகம்
மாற்றுத்திறனாளிக்கு கடன் உதவி வழங்கல்
தேனி: காது கேட்காத, வாய் பேச முடியாத பெண், சிறுதொழில் தொடங்க ஒரு லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது. தேனியில் பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்க திட்டத்தில் நேற்று காலை கலெக்டர் முத்துவீரன் தலைமையில் சிறு தொழில் தொடங்க பயனாளிகள் தேர்வு நடந்தது. இதில் 69 பேர் பங்கேற்றனர். 32 பேருக்கு 80 லட்சம் ரூபாய் கடன் வழங்க உத...
தமிழகம்
நோயுடன் தவிக்கும் முதியவர்
தேனி: தேனியில், ஆதரவற்று நோய் தாக்கிய நிலையில் ரோட்டோரம் கிடக்கும் முதியவரை காக்க தன் னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வரவேண் டும். தேனி அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே முதியவர் ஒருவர் ரோட் டோரம் சில நாட்களாக படுத்துக் கிடக்கிறார். இவரது கால்களில் கொப் புளங்கள் வெடித்து புண்ணாகி நீர் வடியும் நிலையில் ஈ மொய்த்துக் கொண்டிருக...
இந்தியா
ஆர்.கே.லட்சுமணன் உடல்நிலை சிறிது முன்னேற்றம்
மும்பை : மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், பிரபல கார்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணன் உடல்நிலை தேறி வருவதாக, நெருங்கிய உறவினர் தெரிவித்தார். பிரபல கார்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணன், கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு...
தமிழகம்
பஸ்ஸ்டாண்டிற்குள் வராத பஸ்களால் இடையூறு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வழியாக செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்வதால் போக்குரவத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. கொச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. தேனியில் இருந்து மதுரை, மதுரையிலிருந்து தேனி நோக்கி செல்ல...
தமிழகம்
உண்ணாவிரத போராட்டம்
உத்தமபாளையம்: உயர்நீதி மன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரியும், வக்கீல்களின் சேமநல நிதியினை ஐந்து லட்சமாக உயர்தக் கோரியும் உத்தம பாளை யம் வக்கீல்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடை யாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட் டத்திற்கு சங்க துணைத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செய லாள...
தமிழகம்
ஜமாபந்தி நிறைவு
உத்தமபாளையம்: உத்தமபாளையம் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு பெற்றது. இதில் பிர்கா வாரியாக மொத்தம் ஆயிரத்து 480 மனுக்கள் பெறப்பட்டது. உடனடி தீர்வாக தேர்வு செய்யப் பட்ட 356 மனுக்களுக்கு நேற்று முதியோர் உதவித் தொகை, திருமண உதவி, உட்பட நலத்திட்ட உதவி களை ஆர்.டி.ஓ., மோகன தாஸ் வழங்கினார். தாசில்தார் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்ட...
தமிழகம்
பாராட்டு விழா
பெரியகுளம்: தேனி மாவட்ட முஸ்லிம் கல்வி மற்றும் தர்ம பரிபாலன டிரஸ்ட் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாரட்டுவிழா பெரியகுளத்தில் நடந்தது.டிரஸ்ட் தலைவர் சர்புதீன் தலைமை வகித்தார். ஜமாத்தலைவர்கள் மற்றும் பள்ளிவாசல் இமாம்கள் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகராட்சி ...
தமிழகம்
விழிப்புணர்வு முகாம்
பெரியகுளம்: பெரியகுளம் வட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம் சார்பில் கண் தான விழிப்புணர்வு முகாம் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடந் தது. செயலாளர் முத்துப் பாண்டி, பொருளாளர் சேக் ஆகியோர் முன்னி லை வகித்தனர். டாக்டர் உலகநாதன், தி.மு.க., மாவட்ட செயலாளர் மூக் கையா, நகர செயலாளர் முரளி, வர்த்தக பிரமுகர் ரங்கராஜன், தேவஅன்பு, வ...
தமிழகம்
பிரேமானந்தா சாமியாருக்கு மருத்துவ சிகிச்சை : பரோலில் விடுவிக்கக் கோரிய மனு மீது உத்தரவு
சென்னை : ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வரும் பிரேமானந்தா சாமியார் மருத்துவ சிகிச்சை பெற, பரோலில் விடுவிக்கக் கோரிய மனு மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கில் பிரேமானந்தா சாமியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடலூர் சிறையில் உள்ளார். கடந்த 16 ...
தமிழகம்
பஸ் வசதி இல்லாத பெருமாள் கவுண்டன்பட்டி
போடி,: போடி- பெருமாள்கவுண்டன்பட்டிக்கு பஸ் வசதி இல்லாததினால் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் பள்ளி, கல்லூரி, ஆஸ்பத்திரி உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளுக்கு ஆறு கி.மீ., கடந்து போடிக்கு செல்ல வேண்டும். போட...
தமிழகம்
மாயூரநாத சுவாமி கோயில் ஆனிப் பெருந் திருவிழா தேரோட்டம்
ராஜபாளையம்: மாயூரநாதசுவாமி கோயில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. முதலில் வந்த பெரிய தேரில் மாயூரநாதசுவா...
தமிழகம்
பாராட்டு விழா
ராஜபாளையம்: ராஜபாளையம் என்.ஏ.ராமச்சந்திர ராஜா குருகுலம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களும், ஆசிரியர்களும் திருவள்ளுவரின் உருவத்தை வண்ண கோலமாக வரைந்து மலர்களால் அலங்கரித்தனர். ஜெயலட்சுமி ராமச்சந்திர ராஜா டிரஸ்ட் தலைவர் கிருஷ்ணமூர்த்தி...
தமிழகம்
இலவச மருத்துவ முகாம்
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டியில் வரும் முன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். டாக்டர்கள் கருணாகரப்பிரபு, பூங்கொடி, கலைச்செல்வி, அங்கயற்கண்ணி சிகிச்சை அளித்தனர். 804 பேர் பங்கேற்றனர். அரசின் உயிர் காக்கும் உயர் சிகிச்சை திட்டத்தின் கீழ் மேல் சிகிச்...
தமிழகம்
கும்பாபிஷேகம்
அருப்புக்கோட்டை: பாலையம்பட்டியில் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட செங்கமல தாயார் சமேத வேணுகோபால சுவாமி கோயிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது. அனுக்ஞை, புண்யாகவசனம், யாகசாலை மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. புண்ணிய தீர்த்தங்களுடன் விமானங்களுக்கும், மூலஸ்தானத்திற்கும் சம்ப்ரோஷனம் செய்யப்பட்டது. கோபாலபு...
தமிழகம்
பருத்தி விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
ஸ்ரீவில்லிபுத்தூர்: பருத்தி விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஸ்ரீவி., சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வறட்சியிலும் கிணறுகளில் இருந்த குறைந்தளவு தண்ணீரை பயன்படுத்தி, விவசாயிகள் கடந்த மாசி பட்டத்தில் பருத்தி நடவு செய்தனர். கடந்தாண்டு பருத்திக்கு குவிண்டாலுக்கு 3,500 ரூபாய் வரை கிடைத்ததால், இந்தாண்டும் அ...
தமிழகம்
சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்குள் இனி கடைகள் ஒதுக்கீடு இல்லை
சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண் டிற்குள் இனி கடைகள் ஒதுக்கீடு செய்யப்படமாட்டாது.சிவகாசி நகராட்சி துணைத்தலைவர் அசோகன் கூறியதாவது: சிவகாசி நகராட்சியில் தினமும் 45 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. குப்பைகளை பாரைப்பட்டி உரக்கிடங்கிற்கு கொண்டு சென்று, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கலவை உரம் தயாரிக்க 10 லட்ச ரூபாய் செலவ...
தமிழகம்
இலவச சீருடைவழங்கும் விழா
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தெற்கு தெரு தேவாங்கர் துவக்கப் பள்ளியில் இலவச நோட்டுகள் ,சீருடை வழங்கும் விழாற்கு பள்ளி செயலர் உத்தானுமல்லையா தலைமை வகித்தார். நன்கொடையாளர்கள் சவுண்டையன், வீரபாரதி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார். நன்கொடையாளர்கள் சத்தியபிரபா, கனகவேல், தேவநாராயணன், சாந்தி, கமலசரஸ்வ...
தமிழகம்
விழிப்புணர்வு பிரசாரம்
நரிக்குடி: நரிக்குடி ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் குறையறைவாசித்தான்,நல்லுக்குறிச்சி,மீனாக்குளம்,முத்தனேரி, சாத்திசேரி, இருஞ்சிறை, பனைக்குடி உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள பெற்றோர்கள் மத்தியில் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது. ஓடம் தொண்டு நிறுவனர் ஜெயராஜ், கஸ்தூரிப...
தமிழகம்
மாணவர்கள் ஊர்வலம்
விருதுநகர்: விருதுநகர் எம்.எஸ்.பி. நகராட்சி நடு நிலைப் பள்ளியின் சார்பில் இடைநிற்றல் மாணவர்களுக்காகவும், 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் கல்வி கற்கவேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் ஊர்வலம் நடந்தது. பள்ளியின் கல்விக் குழு தலைவர் வி.மகேந்திரன் துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சுஜாதா மற்றும் முத்துகாமாட்சி ச...
தமிழகம்
விழிப்புணர்வு பேரணி
சாத்தூர்: படந்தால் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார்.உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முத்துராஜ் கூடுதல், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சத்தியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார்.ஊர்வலத்தில் மாணவ ம...
தமிழகம்
வரவேற்பு குழுஅமைக்கும் கூட்டம்
விருதுநகர்: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் 10 வது மாநில மாநாட்டை விருதுநகரில் ஜூலை மாதம் நடத்திட வரவேற்பு குழு அமைக்கும் கூட்டம் நடந்தது. எம். சுப்பிரமணியன் வரவேற்புக் குழு தலைவராகவும்,வி. குருசாமி செயலாளராகவும்,பி. ரவீந்திரன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மாநிலத்தலைவர்இளங்கோ, துணைத்தலைவர்கள்...
தமிழகம்
பக்தர்களிடம் கட்டாய வசூல்: பூசாரிகள் மீது புகார்
சிவகாசி: கூடமுடையார் அய்யனார் கோயிலில் பக்தர்களிடம் கட்டாய வசூல் செய்வதாக பூசாரிகள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.சிவகாசி தாலுகா, எம்.புதுப்பட்டியில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கூடமுடையார் அய்யனார் கோயில் உள்ளது. இக் கோயிலில் கூடலிங்க சுவாமியும், பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் பல சமுதாயத்தினரின் குல தெய்வங்களான ர...
தமிழகம்
டாஸ்மாக் கடையை தாக்கியோர் மீது வழக்கு
தளவாய்புரம்: ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரத்தில் இருந்த டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்றக்கோரி, அப்பகுதியினர் நேற்று முன்தினம் கடை முற்றுகையிட்டனர். சிலர், கடையின் பெயர் பலகை, மேற்கூரையை தாக்கி சேதப்படுத்தினர். மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஒன்றிய அ.தி.மு.க., கவுன்சிலர் சிங்கராஜ், தயாளதுரை, அய்யர், வேல்சாமி, சிங்கராஜ், கும...
தமிழகம்
அரசு பஸ் டிரைவரின் லைசென்சை திருப்பி வழங்க ஐகோர்ட் உத்தரவு
மதுரை : பெரியகுளம் அருகே நடந்த விபத்து வழக்கில், அரசு போக்குவரத்து கழக டிரைவரிடம் பறிமுதல் செய்த டிரைவிங் லைசென்சை ஒரு வாரத்திற்குள் திருப்பி வழங்கும்படி, தேனி வட்டார போக்குவரத்து அலுவலருக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம் தொட்டணம்பட்டியை சேர்ந்த சக்திவேல் தாக்கல் செய்த ரிட் மனு: தேனியில் அரசு ப...
தமிழகம்
அருப்புக்கோட்டையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு : தாகம் தீர்க்கவில்லை தாமிரபரணி
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் வைகை மற்றும் தாமிரபரணி தண்ணீர் சரியாக வராததால் நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் வைகை ஆற்றிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நகரின் குடிநீர் தேவை அதிமானதால் புதிய குடிநீர் திட்டமான தாமிரபரணி கூ...
தமிழகம்
மாவட்டத்தில் தீக்குச்சி மரங்கள் வளர்க்க திட்ட கமிஷன் ஆய்வு
விருதுநகர்: மாவட்டத்தில் தீக்குச்சிகள் உற்பத்திக்கான மரங்கள் வளர்க்க ஏற்பாடு செய்வதற்கு திட்ட கமிஷன் அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளதாக கலெக்டர் வி.கே. சண்முகம் தெரிவித்தார். இந்திய தீப்பெட்டி உற்பத்தியில் 60 சதம் விருதுநகர் மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. முக்கிய மூலப்பொருளான தீக்குச்சிகள் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இரு...
தமிழகம்
ரத்தான முகாம்
விருதுநகர்,: விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லூரியில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு ரத்த தான முகாம் நடந்தது.கல்லூரியின் தலைவர் எஸ்.வி. பரமானந்தம் தலைமை வகித்தார். முதல்வர் மாணிக்கவேல் முன்னிலை வகித்தார்.செயலாளர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். முகாமில் 105 மாணவ,மாணவிகள் ரத்ததானம் வழங்கினர். ஏற்பாடுகளை செஞ்...
தமிழகம்
தினமலர் செய்தி எதிரொலி : ஸ்ரீவி.,யில் வடக்கு ரதவீதி சீரமைக்கும் பணி துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., வடக்கு ரதவீதியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களை செப்பனிடும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் துவக்கினர்.ஸ்ரீவி., நகராட்சியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க 2007 நவம்பரில் 24 கோடி ரூபாயில் வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் துவங்கியது. இப்பணிக்காக குழாய் பதிக்க ஸ்ரீவி., வடக...
தமிழகம்
வைத்தீஸ்வரன் கோவிலில் ரயில் நிற்க கோரி வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை : சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவிலில் விரைவு ரயில்கள் நிற்க உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி ரயில்வேக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறையை சேர்ந்த வக்கீல் கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு: வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி ரயில் நிலையங்களில் விரை...
தமிழகம்
திருக்கோளக்குடியில் தேரோட்டம்
திருப்புத்தூர்: திருக்கோளக்குடி திருக் கோளநாதர் ஆத்மநாயகி கோயிலில், ஆனி தேரோட்டம் நடந்தது.கடந்த 16 ம் தேதி கொடியேற்றத்துடன் உத்ஸவம் துவங்கியது. தினமும் சுவாமி திருவீதி உலா, கடந்த 20 ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 5.45 மணிக்கு தேரில் சுவாமி எழுந்தருளினார். சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் ...
தமிழகம்
மருத்துவ பரிசோதனை
சிவகங்கை: சிவகங்கை சமுதாய கல்லூரி சார்பில், ஆட்டோ டிரைவர்களுக்கு அடிப் படை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.ஆட்டோ சங்க தலைவர்கள் பழனிச்சாமி, சாமியப்பா, கவுரி, மாதவன் தலைமை வகித்தனர். ரத்த அழுத்தம் உள்ளிட்ட சோதனை செய்யப்பட்டது. கல்லூரி ஆசிரியர்கள் விமல்ராஜ், உதயராணி ஏற்பாடுகளை செய்தனர்.
தமிழகம்
ஊராட்சி கிளார்க் சஸ்பெண்ட் : ஐகோர்ட் ரத்து செய்தது
மதுரை : தேனி மாவட்டம் காமராஜபுரம் ஊராட்சி கிளார்க்கை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்து, அவரை மீண்டும் பணிஅமர்த்த, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தேனியை சேர்ந்த தங்கப்பாண்டி தாக்கல் செய்த ரிட் மனு: காமராஜபுரம் ஊராட்சி கிளார்க் ஆக பணிபுரிந்த என்னை, கையாடல் புகார் தொடர்பாக சஸ்பெண்ட் செய்து, போடி பி.டி.ஒ., உத்தரவிட்டார். அத...
தமிழகம்
குழந்தை திருமணம்: உடந்தையாக இருப்போருக்கு 2 ஆண்டு சிறை
சிவகங்கை: குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் மகேசன் காசிராஜன் அறிக்கை:மாவட்டத்தில் கொத்தமங்கலம், பாப்பாகுடி, முளக்குளம் கிராமங்களில் 16 வயதிற்குட்பட்ட நான்கு பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக புகார் வந்தது. ச...
தமிழகம்
காவு வாங்க காத்திருக்கும் மின்கம்பிகள் தரிசாகும் விவசாய நிலம்
திருப்புவனம்: திருப்புவனம் பகுதி விவசாய நிலங்களில், மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால், விவசாயிகள் பரிதவிக்கின்றனர். திருப்புவனம் கிழக்கு, மேற்கு மின்வாரிய அலுவலகத்தில் பணியாளர் பற்றாக்குறையால், பழுதடைந்த கம்பங்களை மாற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பி...
தமிழகம்
மானாமதுரையில் செம்மண் வளம் கொள்ளை ; பாரம்பரிய மண்பாண்ட தொழிலுக்கு ஆபத்து
மானாமதுரை: மானாமதுரையில் கண்மாய் தூர் வார பெறப்பட்ட அனுமதி மூலம், அரசு நிலங்களில், செம்மண் கொள்ளை கனஜோராக நடக்கிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிப்பதோடு, முத்திரை பதித்து வரும் மண்பாண்ட தொழிலும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பில், தமிழக அளவில் பிரசித்தி பெற்றது மானாமதுரை. இங்கு செம்மண், கரிசல்,...
தமிழகம்
சர்வேயர் பணியிடம் காலி
திருப்புவனம்: திருப்புவனம் பிர்க்காவில் சர்வேயர் பணியிடம், கடந்த எட்டு மாதமாக காலியாக இருப்பதால், பட்டா மாறுதலில் சிக்கல் நீடிக்கிறது. கொந்தகை பிர்க்கா சர்வேயர் கூடுதல் பொறுப்பாக உள்ளார். இவரை தேடி விவசாயிகள் அலைய வேண்டியுள்ளது. இப்பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும்.
தமிழகம்
நிதி நிறுவனத்தில் மோசடிஊழியர் மீது வழக்கு
சிவகங்கை: நிதி நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்த, சிவகங்கை காந்தி வீதி மங்களேஸ்வரனை (35), போலீசார் தேடி வருகின்றனர்.காரைக்குடி, ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் நிறுவனத்தில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் வாங்க கடன் வழங்கப்படுகிறது. கடன் தொகையை வசூலிக்கும் ஏஜன்டாக, சிவகங்கையில் இவர் பணிபுரிந்தார். வாடிக்கையாளர்க...
தமிழகம்
சிதிலம் அடைந்த பெருமாள் சிலை மீட்பு
திருப்புவனம்: தினமலர் இதழ் செய்தியை தொடர்ந்து, திருப்புவனம் வைகை ஆற்றில் கிடந்த பெருமாள் சிலையை, வருவாய் துறையினர் மீட்டனர். கடந்த 15 நாட்களுக்கு முன் லாடனேந்தல் வைகை ஆற்றில் மணல் அள்ளியபோது, பழங்கால பெருமாள் சிலை கிடைத்தது. இயந்திரம் மூலம் தூக்கிய போது, இரண்டாக உடைந்தது. அதை அப்படியே விட்டுவிட்டனர்.இது குறித்து தினமலர...
தமிழகம்
அடிப்படை வசதி இல்லாத அதிகரை
திருப்புவனம்,: கழுகேர்கடை ஊராட்சி அதிகரை கிராமத்தினர் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுகின்றனர்.இந்த ஊராட்சியில் கழுகேர்கடை, அதிகரை, தட்டான்குளம் கிராமங்கள் உள்ளன. அதிகரையில் 300 வீடுகள் உள்ளன. அடிப்படை வசதிகள் இன்றி கிராமத்தினர் பரிதவிக்கின்றனர். குடிநீர் மோட்டார் பழுதடைந்து ஒரு மாதமாகியும் சரி செய்யப்படவில்லை.இதனால், ...
தமிழகம்
மனைவியை அடித்து கொன்றவர் கைது
சிவகங்கை: சிவகங்கை டி.புதூரில் மனைவியை அடித்து கொன்ற ராஜசேகர் (45), நேற்று கைது செய்யப்பட் டார். இவர், அடிக்கடி குடித்து விட்டு மனைவி மகேஷ்வரியை (40) துன்புறுத்தினார். கடந்த 23 ம் தேதி மதியம் 1.30 மணிக்கு, குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டார். மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். மனைவி விழுந்ததை பார்த்து அவரும...
தமிழகம்
பெட்ரோல் விலை உயர்வு:அ.தி.மு.க., கண்டனம்
சென்னை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலை உயர்வால், ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர் என, அ.தி.மு.க., செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தி.மு.க., அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்...
தமிழகம்
கண்டதேவி தேரோட்டம் இந்த ஆண்டும் இல்லை
தேவகோட்டை,: கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில், ஆண்டுதோறும் ஆனி கேட்டை நட்சத்திரத்தில், தேரோட்டம் நடக்கும். வடம் பிடிப்பதில் எழுந்த பிரச்னையால், சில ஆண்டுகள் தேரோட்டம் நடக்கவில்லை. கடந்த 2005 ல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓடியது. கடந்த 2007ல் திருப்பணிகளுக்கான பாலாலயம் நடந்தது. இதனால் தேரோட்டம் நிறுத்தப் பட்டது. இது...
தமிழகம்
மகளிர் திட்ட கருத்தரங்கு
காரைக்குடி; மகளிர் திட்டம் சார்பில் வங்கியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், தன்னார்வ நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு கருத்தரங்கு காரைக்குடியில் நடந்தது.திட்ட அலுவலர் சீனிவாசன் வரவேற்றார். கலெக்டர் மகேசன் காசிராஜன் பேசுகையில்,""மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பொருளாதார கடன், சுழல்நிதி, நேரடி கடனாக 70 கோடி ரூபாய் வழங்க வங்கியாளர்கள்...
தமிழகம்
பயணிகள் காயம்
திருப்புவனம்: ரமேஸ்வரம்- மதுரை அரசு பஸ், நேற்று மாலை 5 மணிக்கு திருப்புவனம் வழி சென்றது. திருப்புவனம் புதூரில், தூதை மணல் குவாரியில் இருந்து சென்ற லாரி, திடீரென பிரேக் போட்டதால், பின்பக்கமாக பஸ் மோதியது. இதில் பஸ் டிரைவர் வெள்ளைச்சாமி உட்பட 18 பயணிகள் லேசான காயம் அடைந்தனர்.
தமிழகம்
பெட்ரோல் விலை உயர்வு:அரசு திரும்பப் பெற வேண்டும்
சென்னை:சென்னை வந்த பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு விமான நிலையத்தில் பத்திரிகையாளரிடம் கூறியதாவது:ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களைப் பாதுகாக்கவும்,பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் தவறிவிட்டது. குறிப்பாக வரலாறு காணாத விலை வாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், காஸ் போன்றவற்றின் ...
தமிழகம்
கருத்தரங்கு
காரைக்குடி: அமராவதி புதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் ஆன்மிக கருத்தரங்கு நடந்தது.முதல்வர் செல்வராணி தலைமை வகித்தார். சிங்கப்பூர் தாவோ இயக்கத்தை சேர்ந்த கல்வியியல் தொழில்நுட்ப வல்லுனர் நியு, அறிவியல் சார்ந்த ஆன்மிகம் குறித்து பேசினார். மாஸ்டர் லாய் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தமிழகம்
சிலிண்டருக்கு எஸ்.எம்.எஸ்.,ல் பதிவு
காரைக்குடி: சமையல் காஸ் வாடிக்கையாளர்கள், எஸ்.எம்.எஸ்., மூலம் சிலிண்டருக்கு பதியும் சேவை, காரைக்குடியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம், தாலுகா அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., சிவஞானம் தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜாராம் வரவேற்றார். "புது காஸ் இணைப்பு வழங்கும் போது அடுப்பு வாங்...
இந்தியா
கவுரவ கொலையில் ஈடுபட்ட 3 இளைஞர்களுக்கு காவல்
காஜியாபாத் : டில்லியில் நடந்த கவுர கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும், 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி காஜியாபாத் கோர்ட் உத்தரவிட்டது. டில்லி அருகே உள்ள வாஜீர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அக்னித்(22). இவரது சகோதரி மோனிகா. இவருக்கும், வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்த குல்தீப் என்ற இளைஞருக்கும் காத...
தமிழகம்
புல்வநாயகி கோயில் தேரோட்டம்
பாகனேரி: பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயில், ஆனி திருவிழா, கடந்த 17ம் தேதி துவங்கியது. தினமும் அம்மன் வீதி உலா வந்தார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வெளி வரும் சாமுண்டீஸ்வரி புறப்பாடு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.தேரோட்டம்: நேற்று காலை 9 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார். மாலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது; இரவு ...
தமிழகம்
சத்துணவு ஊழியர் சங்க கூட்டம்
பரமக்குடி; பரமக்குடியில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகேசன் அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் மணிமொழி, ரேவதி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி ஜூலை ஒன்பதில் மாவட்ட தலைநகரில் 24 ...
தமிழகம்
விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்பால் கரிமூட்டம் தொழிலில் விவசாயிகள்
கீழக்கரை: மாவட்டத்தில் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்பை தொடர்ந்து, ஏராளமான விவசாயிகள் விளை நிலத்தை விற்று மாற்று தொழிலை நாடுகின்றனர். இவர்களில் சிலர் கரிமூட்ட தொழிலை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.ஏர்வாடி,திருப்புல்லாணி, திருவாடானை,பரமக்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் , கருவேல மரங்களை வெட்டி விற்பதிலும்,கரிமூட்டம் போடுவ...
தமிழகம்
நெசவாளர் சங்க பொது கூட்டம்
பரமக்குடி: எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில் இந்திய கம்யூ., சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில், இந்திய கம்யூ., மாநில குழு உறுப்பினர் ராமச்சந்திரன் பேசினார். மாவட்ட செயலாளர் ராஜன், கைத்தறி சங்கமாநில செயலாளர் ராதா, துணை செயலாளர்கள் சுப்ரமணியன், ராமமூர்த்தி பங்கேற்றனர்.
தமிழகம்
போலீஸ் ஸ்டேஷனில் இரவு நேர பஸ்கள்
திருவாடானை; உலக தமிழ் மாநாட்டை யொட்டி அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் இரவு நேர பஸ்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடிவு செய்யபட்டது. திருவாடானை பகுதியிலிருந்து மதுரை செல்லும் அரசு பஸ்கள் தொண்டி, ஓரியூர் பகுதிகளில் இரவில் நிறுத்தபட்டிருக்கும். நேற்று முன்தினம் திடிரென்று இப்பஸ்களை அருகில் உள்ள போலீஸ்ஸ்டேஷனில் நிறுத்த உத்த...
தமிழகம்
பெட்ரோல் விலையின் ஏறுமுகத்தை ஏற்க முடியாது: இல்லத்தரசிகளுக்கு இடியான காஸ் விலை
ராமநாதபுரம்: பெட்ரோல், டீசல் விலையில் மீண்டும் ஏறுமுகம் ஏற்பட்டுள்ள நிலையில், காஸ் மற்றும் மண்ணெண்ணெய் விலை ஏற்றம் இல்லத்தரசிகளுக்கு இடியாக அமைந்துள்ளது. மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் சமீப காலங்களாக ஏறுமுகத்தை சந்தித்து வருகிறது. ஓரிரு ரூபாய்களால் ஏற்றி இன்று, வாங்க முடியாத அளவுக்கு விலை எகிறிவிட்டது. பணம் ...
தமிழகம்
சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறும் ஏர்வாடி பஸ் ஸ்டாண்ட் : ரூ.65லட்சம் பாழ்
ஏர்வாடி: ஏர்வாடியில் 65லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற் குள், பஸ்கள் செல்லாதால் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.ஏர்வாடி தர்காவிற்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மெயின் ரோடு பகுதியில் நிறுத்தப்படுவதால், போக் குவரத்து நெ...
தமிழகம்
ஐ.டி.ஐ.,யில் ரத்ததான முகாம்
பரமக்குடி; பரமக்குடி ஐ.டி.ஐ., என்.எஸ்.எஸ்., சார்பில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுதல் மற்றும் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு தன்னார்வ ரத்ததான முகாம் நடந்தது. பயிற்சி அலுவலர் ரமேஷ், நுகர்வோர் பாதுகாப்பு கழக முன்னாள் தலைவர் டாக்டர் ராமதாஸ், ரத்த வங்கி மருத்துவர் சகாய ஸ்டீபன்ராஜ், கான் முன்னிலை வகித்த...