category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
நாச்சியார்கோவில் ஆகாசமாரியம்மன் கோவிலில் நாளை பெரிய திருவிழா
கும்பகோணம்: கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் ஆகாசமாரியம்மன் கோவிலில் நாளை (27ம் தேதி) பெரிய திருவிழா நடக்கிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் ஆகாசமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மனுக்கு என்று தனி கோவில் கிடையாது. ஆனால், ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடக்கும் உற்சவங்கள் பக்திக்கு சிறந்த எடுத்துக்காட...
தமிழகம்
கும்பகோணம் அருகே தட்டுவண்டியுடன் டூவீலர் மோதல்: இருவர் படுகாயம்
கும்பகோணம்: கும்பகோணம் அருகே தட்டுவண்டியும், டூவீலரும் மோதிக்கொண்டதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். கும்பகோணம் சிங்காரத்தோப்பு அரசலாற்றுபடுகை பகுதியை சேர்ந்த குணசேகரன் (51). இவர் தட்டுவண்டி ஓட்டுகிறார். இவர் மாணிக்கநாச்சியார்கோவில் தொண்டைமான்குளம் அருகில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தட்டுவண்டி ஓட்டிக்கொண்டு வந்தா...
தமிழகம்
மகாசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த கொரநாட்டுகருப்பூர் மகாசக்தி மேற்கத்தி அம்மன் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த 2007ம் ஆண்டு பலத்த காற்றும், மழையும் பெய்த போது கொரநாட்டு கருப்பூரில் வேப்பமரம் ஒன்று அடியோடு சாய்ந்தது. அந்த மரத்தின் அடியில் மகாசக்தி அம்மன் சுயம்பு...
தமிழகம்
கோவில்களில் கேமரா மூலம் கண்காணிப்பு அசம்பாவித சம்பவங்களை தடுக்க ஏற்பாடு
சேலம்: தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதல்நிலைக் கோவில்களின் வளாகத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கேமரா மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என பத்து மண்டலங்களா...
தமிழகம்
சமூக விரோதிகளின் கூடாரமான காந்தி மைதானம் தண்ணீருக்கு தவிக்கும் விளையாட்டு வீரர்கள்
சேலம்: சேலத்தில் விளையாட்டு வீரர்களுக்கென்று இருக்கும் காந்தி மைதானம், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. சேலம் மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வம் உள்ள வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் சிறந்த பயிற்சி களமாக விளங்கி வருவது சேலம் காந்தி ஸ்டேடியம் தான். சேலம் மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுத் துறைகளில...
தமிழகம்
காதல் ஜோடி போலீஸில் தஞ்சம்
ஆத்தூர்: பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல்ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸில் தஞ்சம் புகுந்தனர். ஆத்தூர் அருகே ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பழனிசாமி (23). திருச்செங்கோடு விவேகானந்தா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் டிரைவராக பணி புரிந்து வருகிறார். அவருக்கும், அதே ஆசிரி...
தமிழகம்
அ.தி.மு.க., மாணவர் அணி சார்பில் 25 ஜோடிகளுக்கு சீர் வரிசை வழங்கல்
சேலம்: சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., மாணவர் அணி சார்பில் 25 புது மண ஜோடிகளுக்கு இலவச சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 62வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., மாணவர் அணி சார்பில் டவுன் வாசவி மகாலில் நேற்று 25 புது மண ஜோடிகளுக்கு பட்டு வேஷ்டி, சட்டை,...
தமிழகம்
காதலிக்க மறுத்த தகராறில் நான்கு பேர் மீது வழக்கு
திருவெண்ணெய்நல்லூர் : காதலிக்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அருங்குரிக்கை கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மகள் ஜோதி(19). பி.எட்., படித்து வரும் இவரை இதே ஊரைச் சேர்ந்த சாரங்கபாணி மகன் அய்யப்பன் (23) ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார...
தமிழகம்
கல்லூரியில் கம்ப்யூட்டர் திருடிய மாணவர்கள் கைது
ஓமலூர்: ஓமலூர் அருகே கல்லூரியில் கம்யூட்டர்கள் திருடிய இரண்டு மாணவர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஓமலூரை அடுத்த குப்பூர் பாலகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில், சில நாட்களுக்கு முன்னர் பதினெட்டு கம்யூட்டர்கள் திருட்டு போயின. கல்லூரி முதல்வர் ஞானசுந்தர் அளித்த புகாரின் அடிப்படையில் ஓமலூர் போலீஸார் வழக்கு பதிவ...
தமிழகம்
தாகூர் பள்ளி மாணவருக்கு தங்கப்பதக்கம்
ஆத்தூர்: மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த கராத்தே போட்டியில் ஆத்தூர் தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 6ம் வகுப்பு மாணவன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இண்டர்நேஷனல் செய்ஹா காய் ஹிடோரி யூ கராத்தே பெடேரேஷன் சார்பில் 12வது தேசிய கராத்தே போட்டி மஹாராஸ்டிரா மாநிலம் புனேவில் நடந்தது. புதுடில்லி, மத்த...
தமிழகம்
வழிமறித்து தாக்கிய 15 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி : வழிமறித்துத் தாக்கி மளிகை கடையை சூறையாடிய 15 பேரை கச்சிராயபாளையம் போலீசார் தேடுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் கச்சிராயபாளையத்தை அடுத்த மாதவச்சேரி சிவகங்கையில் தமிழரசு(36) என்பவர் மளிகைக் கடை வைத்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(44) என்பவருக்கும் இடப் பிரச்னையால் முன் விரோதம் இரு...
தமிழகம்
போலீஸ் போல நடித்து 9 சவரன் செயின் பறிப்பு
வடபழனி:நடந்து சென்ற பெண்ணிடம் போலீஸ் என கூறி, 9 சவரன் செயினை பறித்து சென்ற நபரை போலீசார் தேடுகின்றனர்.விருகம்பாக்கம் குமரன் காலனியை சேர்ந்தவர் சிவகாமி(54). நேற்று முன்தினம் மாலை வடபழனி பஸ் நிலையம் அருகே நடந்து சென்றார். சாதாரண உடையிலிருந்த நடுத்தர வயதான நபர், அப்பெண்ணை வழி மறித்தார்."இச்சாலையில் ரவுடிகள் நடமாட்டம் அதிக...
தமிழகம்
ஆனி பவுர்ணமி விரதம்
சேலம்: சேலம் மராட்டா சில்வர் ரீபைனர்ஸ் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் க்வாட்டர்ஸ் முன் உள்ள ஆலமரத்தில் ஆனி மாத பவுர்ணமி வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கற்புக்கரசி சாவித்திரி எமதர்மனிடம் போராடி, தனது கணவர் சத்தியவானின் உயிரை மீட்ட தினமான ஆனி பவுர்ணமியில் இவ்வழிபாடு கடைபிடிக்கப்படுகிறது. ப...
தமிழகம்
வேலை செய்த நிறுவனத்தில் திருடிய பலே ஆசாமி கைது
செஞ்சி : வேலை செய்த நிறுவனத்தில் இருந்து பிளாஸ்டிக் கிரேடுகளை திருடிச் சென்ற ஊழியரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கன்னலத்தில் முகமது சாதிக்(34) என்பவர் குளோபல் கிரீன் கம்பெனி என்ற பெயரில் மருந்து தயாரிக்க பயன்படும் காய்களை விவசாயிகளிடம் வாங்கி வருகிறார். இவரது குடோனில் இருந்த 1.25 லட்சம் ...
தமிழகம்
அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை கட்டி அகற்றம்
சேலம்: சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையில் நேற்று எண்டாஸ்கோஃபி சிகிச்சை மூலம் நான்கு பெண்களுக்கு கர்ப்பப்பை கட்டி அகற்றப்பட்டது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மகப்பேறு துறை சார்பில் எண்டாஸ்கோஃபி சிகிச்சை மற்றும் பயிலரங்கத்தை கண்காணிப்பாளர் டாக்டர் மோகன் துவக்கி வைத்தார் சென்னை மருத்துவமனை எண்டாஸ்கோ...
தமிழகம்
போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்க விசா பெற முயற்சித்த நால்வர் கைது
சென்னை : போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்க விசா பெற முயன்ற இரண்டு பெண்கள், ஒரு ஏஜன்ட் உள்ளிட்ட நால்வரை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் அமரித்சிங் (26). இவரது மனைவி சுக்வீர் கவுர் (20). பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் நரேஷ்கவுர் (43). இவர்களில் இளம் தம்பதியினரான அமரித்சிங் மற்றும் சுக்வீர் கவுர் ஆக...
தமிழகம்
பஸ்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
சேலம்: சேலத்தில் இரவு நேர பஸ்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோவையில் நடந்து வரும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டு பிரசுரம் வினியோகித்த நக்ஸல் ஆதரவு அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரு தினங்கள...
தமிழகம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை
நாகர்கோயில்: குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழையால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். குமரிமாவட்டத்தில் தக்கலை, வடச்சேரி, கிருஷ்ணன் கோயில், பார்வதிபுரம் ஆகிய பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாலையோர மரங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து ...
தமிழகம்
பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இயற்கை உரத்தொட்டிகள் அகற்றம்
ப.வேலூர்: ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு சொந்தமான டத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இயற்கை உரத் தொட்டிகளை, நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகள், மக்கும் குப்பை, மக்கா குப்பை எனத் தனித்தனியாக பிரி...
தமிழகம்
மீனவர்கள் மாயம்: மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் காணாமல் போனதால். அவர்களை கண்டுபிடித்து மீட்கக்கோரி மீனவர் கூட்டமைப்பினர், மார்க்.கம்யூ. கட்சியினர் கலெக்டர் அலுவலவகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். குமரிமாவட்டம் , முட்டம் மற்றும் கேரளா பகுதியினைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் மீன்பி...
தமிழகம்
உஞ்சனை பாலம் அகலப்பணி வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சி
நாமக்கல்: திருச்செங்கோடு அருகே உஞ்சனையில் குறுகலாக இருந்த ஆற்றுப்பாலம், சாலை அகலப்படுத்தப்படுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு 40 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. கோவை, ஈரோட்டில் இருந்து நாமக்கல்லுக்கு திருச்செங்கோடு வழியாக பஸ்கள் வருகின்றன. தவிர, த...
தமிழகம்
ராஜவாய்க்காலில் அனுமதியின்றி பதிக்கப்பட்ட குழாய் அகற்றம்
ப.வேலூர்: ஜேடர்பாளையம் ராஜவாய்க்காலில் தண்ணீர் எடுக்க பதிக்கப்பட்ட குழாய்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜே.சி.பி., மூலம் அகற்றினர். ப.வேலூர் அருகே ஜேடர்பாளையம் வழியாக காவிரி ஆற்றில் ஒரு பகுதியில் ராஜவாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்காலில் அனுமதியின்றி தனிநபர் யாரும் தண்ணீர் எடுக்கக் கூடாது. இச்சூழலில் கோப்பணம்பாயைத்தை ...
தமிழகம்
பாவை பாலிடெக்னிக் வாரிய தேர்வில் சிறப்பிடம்
ராசிபுரம்: ராசிபுரம் பாவை பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் ஏப்ரல் 2010ல் நடந்த அரசு வாரியத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். கம்ப்யூட்டர் துறையில் மாணவன் கலைவேந்தன் 600க்கு 597 மதிப்பெண்ணும் மாணவி உஷாதேவி 593 மதிப்பெண்ணும், மணிகண்டன் 592 மதிப்பெண்ணும் பற்றுள்ளனர். அதே துறையில் இரண்டாம...
தமிழகம்
லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
திருச்செங்கோடு: நல்லூர் கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக் பள்ளியில் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. சங்க அமைச்சரவை ஆலோசனை குழு துணை தலைவரும் கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் தாளாளருமான ரங்கசாமி தலைமை வகித்தார். சங்க பட்டயத் தலைவராக சண்முகசுந்தரம், தலைவராக ராஜன், செயலாளராக ஆசிரியர் குமார், பொருளாளராக ...
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து வழங்கும் விழா
நாமக்கல்: நாமக்கல் நவோதயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியருக்கு அனைத்து மத பிரமுகர்கள் ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். பொருளாளர் தேனருவி, இயக்குனர்கள் சிருமாறன், கதிரேனுன், மலர்மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின், அனைத்து மதத்தினர் சார்பி...
தமிழகம்
த.மு.மு.க., விழிப்புணர்வு கூட்டம்
ராசிபுரம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ராசிபுரம் அச்சுக்கட்டி தெரு பள்ளிவாசல் அருகில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் ஷேக் காஜா மொய்தீன் தலைமை வகித்தார். நகர தலைவர் ராஜாமுகமது வரவேற்றார். மாவட்ட தலைவர் சபியுல்லா, மாவட்ட செயலாளர் பாபு, மாவட்ட பொருளாளர் யாசின்பாஷா ஆகியோர் ...
தமிழகம்
இறந்த கோவில் மாடு நல்லடக்கம்
நாமக்கல்: நாமக்கல் அருகே வில்லிபாளையத்தில் உயிரிழந்த கோவில் மாட்டை கிராம மக்கள் குளிப்பாட்டி, வழிபாடு நடத்தி, ஊர்வலமாக கொண்டு சென்று அடக்கம் செய்தனர். நாமக்கல் அருகே வில்லிபாளையத்தில் ராமர் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில் ஸ்வாமி மாடு வளர்க்கப்பட்டு வந்தது. அந்த மாடு நேற்று மதியம் உயரிழந்தது. மாட்டுக்கு கிராம மக்கள் அல...
தமிழகம்
கருத்தரங்கு ­கூட்­டம்
நாமக்கல்: நாமக்கல் அடுத்த எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தழும்பில்லா அறுவை சிகிச்சை குறித்து மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான கருத்தரங்கம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் முருகேசன் வரவேற்றார். மருத்துவ அலுவலர்கள் சிவக்குமார், லலிதா, வெங்கடேசன், சுகாதார மே...
தமிழகம்
குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி உண்ணாவிரதம்
பள்ளிப்பாளையம்: குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி பள்ளிப்பாளையம் காகித ஆலை முன், நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருந்தனர். பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட பாரதிநகர் அருந்ததியர் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் நிலத்தடி நீர், கழிவு நீரால் மாசுபட்டதால், மக்கள் கு...
தமிழகம்
மாநாடு நோக்கி கரைபுரண்ட மக்கள் அலை! மாபெரும் நிகழ்வு இது; கூடுதல் டி.ஜி.பி., பேட்டி
கோவை : தமிழகமே கோவை மாநகரை நோக்கி படையெடுத்ததை போன்ற மக்கள் வெள்ளம், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்கை நேற்று முற்றுகையிட்டிருந்தது. அவிநாசி சாலையில் அலை, அலையாக மக்கள் காலை முதல் இரவு வரை நடைபயணத்தை தொடர்ந்ததால், எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே காட்சியளித்தது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாள் ந...
தமிழகம்
டிரைவரிடம் பணம் பறிக்க முயன்ற இருவர் கைது
ப.வேலூர்: வேலகவுண்டம்பட்டி அருகே, கார் டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இரு வாலிபர்களை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர். நாமக்கல் அருகே வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி (30). வாடகைக்கு கார் ஓட்டும் அவர், நேற்று முன்தினம் மாலை புத்தூர் அருகே காரை நிறுத்தி, உள்ளே அமர்ந்திருந்தார். அங்கு வந்த...
தமிழகம்
விவசாயி மீது தாக்குதல் 30 பேர் மீது வழக்குபதிவு
ப.வேலூர்: நிலப்பிரச்னை தொடர்பாக விவசாயியை தாக்கிய 30 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ப.வேலூர் அருகே சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி தங்கராசு (38). அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி தண்டபாணிக்கும் இடையே நிலப் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று தங்கராசு அவரது வி...
தமிழகம்
புதிய நிர்வாகிகள் தேர்வு
ராசிபுரம்: ராசிபுரத்தில் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவராக கார்த்திகேயன், செயலாளராக பாலகிருஷ்ணன், பொருளாளராக உமாதேவி, செயற்குழு உறுப்பினர்களாக செந்தில்குமார், மாதம்மாள், ரஹீம், நல்லதம்பி, ராஜேஸ்வரி, பாலமுருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு நகர பிரமுகர்கள்...
தமிழகம்
அசத்தும் இணையதள அரங்குகள்
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இணையதள கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.கண்காட்சியில் உள்ள ஸ்டால்களில் தமிழ் விசைப்பலகை, கண்பார்வை இல்லாதவர்கள் கம்ப்யூட்டர் மூலம் தமிழ் மொழியில் தகவல்களை பெறும் வகையில் உயர்தொழில்நுட்பத்துடன்கூடிய சாப்ட்வேர்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் தமிழ் உணர்வு டீ ஷர்ட்டுகள்
கோவை : செம்மொழி மாநாட்டில் தமிழ் உணர்வை வெளிப்படுத்தும் நூறுசதவீதம் தமிழ் என்ற பெயரில் டீ ஷர்ட்டுகள் விற்பனையானது.தமிழகம் முழுக்க உள்ள கல்லூரிகளில் படிக்கும் தமிழில் ஆர்வம் கொண்ட தமிழ் மாணவர்கள் இணைந்து இந்த ஏற்பாட்டினை செய் திருந்தனர்.தமிழகம் முழுக்க உள்ள தமிழ் கூட்டமைப்பு சென்னையை சேர்ந்த முகில்சந்திரன் வழிநடத்தி செல...
தமிழகம்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.9 லட்சம் செலவில் பெயர் பலகை திறப்பு
விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் நியான் விளக்கு (முகப்பு பெயர் பலகை) பொருத்தப்பட்டது. முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த மார்ச் 7ம் தேதி முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரால் திறந்து வைக்...
தமிழகம்
பள்ளி மீது மாணவர்கள் புகார் ஆய்வு நடத்த உத்தரவு
ஈரோடு: பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் அனுப்பிய புகாரால், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தி, புதிய கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக, உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு,...
தமிழகம்
ஜூன் 29ல் உடனடி தேர்வு 1,451 மாணவர்கள் பங்கேற்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 29ல் துவங்கும் ப்ளஸ் 2 சிறப்பு உடனடித்தேர்வில் மொத்தம் 1,451 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 20 ஆயிரத்து 658 மாணவ, மாணவியர் ப்ளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில் மொத்தம் 19 ஆயிரத்து 431 பேர் தேர்ச்சி பெற்றனர். "மூன்று மற்றும் அதற்கு குறைவான பாடங்களில் தோல்வியடைந்தவர்க...
தமிழகம்
செம்மொழி மாநாடு தமிழ் வளர்ச்சிக்கு வித்திடும்! பொது மக்கள் கருத்து
கோவை : கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர்களின் பெருமையை உலகம் முழுவதும் நிலை நாட்டவும் நிச்சயம் வித்திடும் என்று பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கடந்த 23ம் தேதியில் இருந்து நடக்கிறது. தினமும் காலை 9.00 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கும் ம...
தமிழகம்
திருக்கல்யாண வைபவ பெருவிழா
ஈரோடு: அத்தாணி ஆனந்தவல்லி உடனமர் சமேத சந்திரசேகர சிவாலய கும்பாபிஷேக ஏழாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் திருக்கல்யாண வைபவ பெருவிழா நடந்தது. திருமணம் தடைபட்ட ஆண், பெண்களுக்கான சிறப்பு பூஜை, செவ்வாய், களத்திர தோஷம் சிறப்பு பூஜை, தொழில், குழந்தை கல்வி, குடும்ப பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு பரிகாரங்களும், அர்ச்சனையும் நடந...
தமிழகம்
விமான நிலைய அதிகாரி மாயம்
ஈரோடு: தஞ்சை விமான நிலைய அதிகாரி மாயமானார். மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்தவர் சேவா ராம் சைனி (45); தஞ்சை விமான நிலைய இளநிலை வாரன்ட் அதிகாரியாக பணிபுரிந்தார். மன நல சிகிச்சைக்காக ஜூன் 23ம் தேதி மயிலாடுதுறை - மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூரு சென்றார். ஆனால், அவர் பெங்களூரு போய் சேரவில்லை. ஈரோடு ரயில்வே போலீஸார் அவ...
தமிழகம்
அந்தியூரில் பருத்தி ஏலம் துவக்கம்
ஈரோடு: அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏல விற்பனை துவங்கியது. வாரந்தோறும் திங்கள்கிழமை இங்கு பருத்தி ஏலம் நடக்கும். உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள், நூற்பாலை உரிமையாளர்கள் கலந்து கொண்டு பருத்தி கொள்முதல் செய்வர். ரகம் வாரியாக பிரித்த பருத்தியை, விவசாயிகள் விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வந்து, விற்...
தமிழகம்
மாணவர் பேரணி
ஈரோடு: மொடக்குறிச்சி யூனியன் அய்யக்கவுண்டன்பாளையம் யூனியன் துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது. தலைமையாசிரியர் வத்சலா துவக்கி வைத்தார். உதவி தலைமையாசிரியை ராதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
தமிழகம்
செம்மொழி மாநாடு நாளை நிறைவு பெற்றாலும் அரங்குகளை காண ஜூலை 4 வரை அனுமதி
கோவை : செம்மொழி மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் ஜூலை 4 வரை காண வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாளை மாநாடு நிறைவு பெற்றாலும், மேலும் ஒரு வாரத்துக்கு எந்த கெடுபிடியும் இல்லாமல் கண்காட்சி அரங்குகள் மற்றும் அலங்கார ஊர்திகளை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்ட...
தமிழகம்
அமெரிக்காவில் தமிழுக்கு அங்கீகாரம் தமிழறிஞர்கள் முயற்சி
கோவை : செம்மொழி மாநாட்டில் பங்கேற்க பல அமெரிக்க தமிழ் அறிஞர்கள் வந்துள்ளனர். இவர்கள், தாங்கள் வாழும் மாநிலங்களில் தமிழ் கற்றுத் தர எடுக்கும் முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தனர்.அமெரிக்காவில் இயங்கும் கொலம்பஸ் தமிழ்ச் சங்க ஒருங்கிணைப் பாளர் அனுகணேஷ் கூறியதாவது:கடந்த பதினைந்து ஆண்டுகளாக, கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் இயங்கி வர...
தமிழகம்
இரண்டு மணி நேர மின்வெட்டு தளர்வு
கோபிசெட்டிபாளையம்: தமிழக அளவில் அமலில் இருந்து வரும் இரண்டு மணி நேர மின்வெட்டு சற்று கோபியில் தளர்த்தப்பட்டுள்ளது. செம்மொழி மாநாடு முடிந்த பிறகு, மீண்டும் மின் தடை ஏற்படுமோ என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது. பருவ மழை ஏமாற்றம், காற்றாலைகளில் மின் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் இரண்டு மணி நேர மின்வெட்டு அம...
தமிழகம்
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் நாசா விஞ்ஞானி வலியுறுத்தல்
கோவை : அமெரிக்க விண்வெளித்துறையில், பல விண்வெளித் திட்டங்களில் முக்கிய பொறுப்பை ஏற்றிருக்கும் தமிழர் நா.கணேசன். தமிழ் இலக்கியங்களிலும், இலக்கணத்திலும், எழுத்துச் சீர்மை பிரிவிலும் தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். இவர் இல்லத்தில் வைத்திருக்கும் மொழி, இலக்கியம் சார்ந்த நூற்களின் தொகுதியைக் கண்டால், இது என்ன பல்க...
தமிழகம்
மண், கல் லாரிகளால் மற்றவர்களுக்கு ஆபத்து
தாராபுரம்: மண், கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் கொண்டு மூடாமல் செல்வதால் மற்றவர்கள் விபத்துக்கு ஆளாகின்றனர். தாராபுரம், ஆச்சியூர், வீராட்சிமங்கலம், தளவாய்பட்டணம், திருமலையம்பாளையம், அலங்கியம் உள்பட பல்வேறு கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட செங்கல் உற்பத்தி சூளைகள் உள்ளன. மணக்கடவு, செல்லாம்பாளையம், மூலனூர், கணபதிப...
தமிழகம்
மின்னொளியில் பூங்காக்கள்: கீர்த்திலால் ஜூவல்லரி ஏற்பாடு
கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி வடகோவை மேம்பாலம் பூங்கா மற்றும் கே.ஜி.கார்டன் பூங்காக்களை கீர்த்திலால் ஜூவல்லரி நிறுவனத்தார் மின்விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.இந்நிறுவனத்தார் கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள பூங்காக்களை பராமரித்து வருகின்றனர். இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மொழியை செம்மொழியாக கடந்த 20...
தமிழகம்
சமச்சீர் கல்வியில் களப்பயிற்சி
கோபிசெட்டிபாளையம்: சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களின்படி மாணவ, மாணவியர்க்கு களப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நடப்பாண்டு ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகமாகியுள்ளது. அடுத்தாண்டு அனைத்து வகுப்புக்கும் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட உள்ளது. "அனைவருக்கும் கல்வி இயக்கம்' மூலம், ஒன்றாம்...
தமிழகம்
மர்மமான முறையில் இறந்த சிறுத்தை வனத்துறை விசாரணை
வால்பாறை : வால்பாறை அருகே சிறுத்தை மர்மமான முறையில் இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். வால்பாறை அடுத்துள்ள தாய்முடி எஸ்டேட் தேயிலை காட்டில் சிறுத்தை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் பசுவராஜ் தலைமையில் வனச்...
தமிழகம்
களை கட்டியது ஆழியாறு அணை மழையால் ரம்மியமான சூழல்
பொள்ளாச்சி : கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வந்த தமிழ் அறிஞர்கள், ஆழியாறு அணையை சுற்றி பார்க்க ஆர்வம் காட்டுவதால், ஆழியாறு பகுதி களைக்கட்டியுள்ளது.கோவையில், உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாடு கடந்த 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. மாநாட்டில், பங்கேற்க வெளிநாடுகளை சேர்ந்த பல்வேறு அறிஞர்கள் வந்துள...
தமிழகம்
உலகத் தமிழ்ச் செம்மொழி அமர்வரங்கில் இன்று...
கோவை : இன்று நீதியரசர் வள்ளிநாயகம், ஆளுடையபிள்ளை உள்ளிட்டோர் பங்குபெறும் அமர்வரங்கம் கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது. கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் நான்காம் நாளான இன்று அமர்வரங்கம் நடைபெறுகிறது. மாநாட்டின் இரண்டாம் நாள் நடந்த அமர்வரங்கில் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் ஆ.சிவதாணுபிள்...
தமிழகம்
மின்னஞ்சல் குழுமத்தில் தமிழர்கள் உறுப்பினராக வேண்டுகோள்
கோவை : மின்னஞ்சல் குழுமத்தில் உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் இணைய வேண்டும் என்று சிங்கப்பூர் பாராளுமன்ற மொழி பெயர்ப்பு பிரிவில் உதவி இயக்குனராக பணிபுரியும் பழனியப்பன் இணைய மாநாட்டில் வேண்டுகோள்விடுத்தார். செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டில் பங்கேற்க வந்த பழனியப்பன் கூறியதாவது: தமிழுக்காக நடத்...
தமிழகம்
அமராவதி அணையில் தண்ணீர் திறக்க கோரிக்கை
உடுமலை : அமராவதி அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில் நெல் சாகுபடி முதற்கட்ட பணிகளுக்காக உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில் அணையின் நீர் மட்டம் அகலபாதாளத்திற்கு சென்றது. இதனால், ஜூன் 1ல் ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. அ...
தமிழகம்
சர்க்கரை துறை ஆணையர் அமராவதி சர்க்கரை ஆலையில் ஆய்வு
உடுமலை : அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சர்க்கரை துறை ஆணையர் விக்ரம் கபூர் ஆய்வு நடத்தினார்.உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட கரும்பு விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர். ஆலை அரவைக்கு, விவசாயிகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பெறப்படுகிறது.2009-10ம் ஆண்டு அரவை பட...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் இன்றைய தமிழ் இணைய மாநாடு அமர்வுகள்
கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நடைபெறும் தமிழ் இணைய மாநாடு அமர்வுகளின் இன்றைய நிகழ்வுகள்:காலை 9.00 மணி முதல் 10.00 மணி முதல் முரசொலி மாறன் அரங்கில், இந்திய மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏ.குமரன் மற்றும் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷனின் மைக்கேல் எஸ்.காப்லன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். சுஜாதா...
தமிழகம்
கோவில் திருவிழா
உடுமலை : உடுமலை ஜல்லிபட்டி விநாயகர், கருப்பராயன், உச்சிமாகாளியம்மன், பிடாரியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், முனியம்மன் கோவில்கள் திருவிழா நடந்தது. விழாவையொட்டி,ஏப்.,30ம் தேதி முதல் விநாயகர், கருப்பராயன் திருவிழா, உச்சி மாகாளியம்மன் கும்பம் தாளித்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள், அலங்கார உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. அம்மன் எழு...
தமிழகம்
கோவில் கும்பாபிஷேகம்
உடுமலை : உடுமலை அருகேயுள்ள எலையமுத்தூரில் மதுரை வீரன், பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கி, கும்ப ஸ்தாபனம் உட்பட சிறப்பு பூஜைகள் முதல் கால யாக பூஜையில் நடந்தது. இரண்டாம் கால யாக பூஜையில் பிரம்மசுத்தி, ரக்ஷாபந்தனம் உட்பட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. ...
தமிழகம்
மாநாடு நோக்கி கரைபுரண்ட மக்கள் அலை! மாபெரும் நிகழ்வு இது; கூடுதல் டி.ஜி.பி., பேட்டி
கோவை : தமிழகமே கோவை மாநகரை நோக்கி படையெடுத் ததை போன்ற மக்கள் வெள் ளம், உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டு அரங்கை நேற்று முற்றுகையிட்டிருந்தது. அவிநாசி சாலையில் அலை, அலையாக மக்கள் காலை முதல் இரவு வரை நடைபயணத்தை தொடர்ந்ததால், எங்குபார்த்தாலும் மக்கள் தலைகளாகவே காட்சியளித்தது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாள்...
தமிழகம்
17 எஸ்.ஐ.,க்கள் திடீர் இடமாற்றம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 17 எஸ்.ஐ.,க்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., ருக்மாங்கதன் கே.கே.சத்திரத்திற்கும், செவ்வாப்பேட்டை எஸ்.ஐ., குமரன் சோழவரத்திற்கும், திருவாலங்காடு எஸ்.ஐ., சேகர் கடம்பத்தூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். ஆர்.கே.பேட்டை எஸ்.எஸ்.ஐ.,...
தமிழகம்
மாநாட்டில் நோட்டீஸ் வினியோகம் எதிரொலி புறநகர் பஸ்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
பெ.நா.பாளையம் : கோவையில் நடந்து வரும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சில தமிழ் அமைப்புகள் மாநாட்டுக்கு எதிராக நோட்டீஸ் வினியோகம் செய்தன. இவர்களை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கோவை புறநகர்களில் இயங்கும் பஸ்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கடந்த 23ம் துவங்கி, நடந்த...
தமிழகம்
பெண்களிடம் பணமோசடி: நிறுவன பெண் மேலாளர் கைது
திருவள்ளூர்: நூதன முறையில் பெண்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த நிறுவன பெண் மேலாளரை போலீசார் கைது செய்தனர்; மண்டல மேலாளரை தேடுகின்றனர். திருவள்ளூர் அய்யனார் அவென்யூ பகுதியில் எவர்கிரீன் பவுன்டேஷன் என்ற தனியார் நிறுவனத்தின் கிளை இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் மேலாளராக திருவள்ளூர் அடுத்த மேல்மணம்பேடு கிராமத்தைச் சேர...
தமிழகம்
செம்மொழி மாநாட்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் ஓடும்
மேட்டுப்பாளையம் : செம்மொழி மாநாட்டை முன்னிட்டு மேட்டுப்பாளையம் - கோவை இடையே ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கும், கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் ஞாயிற்றுக்கிழமை இந்த ரய...
தமிழகம்
20 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
திருத்தணி: திருத்தணி அக்கய்ய நாயுடு தெருவைச் சேர்ந்தவர் மங்கம்மாள்(38). ராமாபுரத்தைச் சேர்ந்தவர் வேலு(28). இவர்கள் இருவரும் 20 ரேஷன் அரிசி மூட்டைகளை ஆந்திர மாநிலத்துக்கு கொண்டு செல்ல திருத்தணி ரயில் நிலையம் வந்தனர். இந்த அரிசி மூட்டைகளை மும்பை மெயில், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஆந்திராவுக்கு கடத்தத் தயாராக இருந்தனர...
தமிழகம்
மாநாட்டில் பங்கேற்க ஐகோர்ட் நீதிபதிகள் வருகை
கோவை : கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டில் சென்னை மற்றும் ஆந்திர ஐகோர்ட் நீதிபதிகள் ஐந்து பேர் பங்கேற்கின்றனர்.உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று இம்மாநாட்டில் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் இளங்கோ, வாசுகி, தமிழ்வாணன், கர்...
தமிழகம்
ஆள் கடத்தல் வழக்கு: கோர்ட்டில் நால்வர் சரண்
திருவள்ளூர்: சென்னை கொடுங்கையூரில் ஆள் கடத்தல் வழக்கில் நால்வர் திருவள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தனர். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் சைமன்ராஜ்(30); ஆட்டோ டிரைவர். இவரை 21ம் தேதி இரவு மர்ம நபர்கள் கடத்தி சென்றதாக அவரது மனைவி ரம்யா சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து மாநகர கமிஷனர் உத்தரவ...
தமிழகம்
மூடாத பாதாள சாக்கடை பள்ளம்: நகர மக்கள் அவதி
திருவள்ளூர்: நகராட்சிக்கு உட்பட்ட, ராஜாஜிபுரம் பகுதியில் பாதாள சாக்கடைக்கென தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாததால், அப்பகுதி மக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்டது ராஜாஜிபுரம். இப்பகுதியில் உள்ள தர்மலிங்கம் தெருவில், பாதாள சாக்கடை அமைக்கும் பணி இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கியது. இதற்கென இத்தெர...
தமிழகம்
காளிங்க பூவராகவசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பள்ளிப்பட்டு: காளிங்க பூவராகவசாமி கோவிலில் இரண்டாம் பிரமோற்சவ விழாவில், நேற்று பூதேவி ஸ்ரீதேவியுடன் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பள்ளிப்பட்டு அடுத்த மேல் பொதட்டூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளிங்க பூவராகவசாமி கோவிலில் இரண்டாம் பிரமோற்சவ விழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வா...
General
கிளிநொச்சியில் அடுத்த மாதம் இலங்கை மந்திரிகள் ஆலோசனை
கொழும்பு:இலங்கை மீடியா துறை அமைச்சர் கெகலியா ரம்புக்வெல்லா கூறியதாவது: இலங்கை முழுவதும் ஒரே குடையின் கீழ் செயல்படுகிறது என்பதை உணர்த்தும் வகையிலும், மதம், மொழியால் வேறுபாடு இல்லை என்பதையும் காட்டுவதற்காக, இங்கு கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும்,இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும், அமைச்சரவை கூட்டத்தை நடத்துவது என முடிவு எட...
தமிழகம்
காஞ்சியில் ஈக்கள் தொல்லை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரில், ஈக்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரில் நகராட்சி சார்பில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. நகர வீதிகளில், ஆங்காங்கே குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன. வீடுகள், ஓட்டல்கள் ஆகியவற்றிலிருந்து வீசப்படும் கழிவுப் பொருட்கள், சாலையிலேயே கொட்டப்படு...
தமிழகம்
ரேஷன் அரிசி பறிமுதல் ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
பந்தலூர் : கேரள மாநில பஸ்சில் கடத்தி செல்லயிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளிலிருந்து, கேரள மாநிலம் செல்லும் பஸ்களில் ரேஷன் பொருட்கள் கடத்திச் செல்வதாக, கூடலூர் ஆர்.டி.ஓ., ஹரிகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. ஆர்.டி.ஓ., தலைமையில் வருவாய் துறையினர், சோலாடி சாவடியில் சோதனை நடத்தினர்....
தமிழகம்
ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால் அதிருப்தி! விலையை அதிகாரிகள் கூட்டியதாக டீலர்கள் குற்றச்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஆவின் பால் அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதல் விலைக்கு விற்கப்படுவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் அதிகாரிகள் விலை கூட்டியதாக, டீலர்கள் தரப்பில் குற்றசாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் நகர மக்களுக்கு, பாலுசெட்டி சத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஆவின் பால் பண்ணையிலி...
தமிழகம்
அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் சேர்க்கை துவக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்திலுள்ள சத்தியா அம்மையார் நினைவு ஆதரவற்ற அரசு குழந்தைகள் காப்பகத்தில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. இக்காப்பகத்தில் விதவை தாய்மார்களின் குழந்தைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் குழந்தைகள், தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற குழந்தைகள், பெற்றோர் ஒருவர் மட்டுமே உள்ளவரின் குழந்த...
தமிழகம்
பைக் திருட்டு: மர்ம நபருக்கு வலை
மதுராந்தகம்: பைக்கை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுராந்தகம் பாரத ஸ்டேட் வங்கி பின்புறம் வசிப்பவர் உதயகுமார். நேற்று முன்தினம் இரவு தனது ஹீரோஹோண்டா பைக்கை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். நள்ளிரவு வந்த மர்மநபர்கள் பைக்கை திருடிச் சென்றனர். காலையில் உதயகுமார் பார்த்தபோது, பைக் மாயமாகி இருந்தது. ...
தமிழகம்
பூட்டிய வீட்டில் திருட்டு
திருப்போரூர்: திருப்போரூரில் பூட்டிய வீட்டில் புகுந்து, 10 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு சாரதா நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டின் முதல் தளத்தில், ஆலத்தூர் அபெக்ஸ் கம்பெனி மேலாளர் பிரசாத்(38), குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 23ம்...
தமிழகம்
பக்கிங்காம் கால்வாயில் ஆட்டோ
மாமல்லபுரம்: சதுரங்கப்பட்டினம் அருகே, ஆட்டோ பக்கிங்காம் கால்வாயில் கவிழ்ந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சதுரங்கப்பட்டினம் அடுத்த பெருமாள்சேரி கிராமம் அருகே பக்கிங்காம் கால்வாயில், நேற்று ஆட்டோ ஒன்று(டி.என்.05.ஒய்-8150) கவிழ்ந்து கிடந்தது. இது குறித்து, அப்பகுதி மக்கள் சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு தக...
தமிழகம்
பஸ்சில் கூடுதல் கட்டணம் கிரிவல பக்தர்கள் அவதி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஸ் நிலையத்திலிருந்து, திருவண்ணாமலை செல்லும் பஸ்சில் இடம் பிடிக்க, ஐந்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஏராளமானோர் செல்கின்றனர். பக்தர்கள் வசதி கருதி, காஞ்சிபுரம் மண்...
தமிழகம்
தேக்கு மரம் கடத்த முயன்ற மூவர் கைது
கூடலூர் : முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து தேக்கு மரம் கடத்த முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் ஸ்ரீ வஸ்தவா உத்தரவின் பேரில், முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறையினர் நேற்று முன்தினம் முதல் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தெப்பக்காடு வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி...
தமிழகம்
நெய்குப்பம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு
வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த நெய்குப்பம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். வாலாஜாபாத்தில் நெய்குப்பம், கிதிரிப்பேட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கிதிரிப்பேட்டையில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மூன்று மேல்நிலை நீர்தேக்கத் தொட்...
தமிழகம்
புலிகள் காப்பகத்தில் வன குற்றங்களை தடுக்க சிறப்பு கண்காணிப்பு பணி துவக்கம்
கூடலூர் : முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவ மழை காலத்தில் வன குற்றங்களை தடுக்க, வனத்துறையினர் சிறப்பு ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.முதுமலை புலிகள் காப்பகத்தில் வனக்குற்றங்கள் ஏற்படுவதை தடுக்க, புலிகள் காப்பக இயக்குனர் ராஜீவ் ஸ்ரீவஸ்தா உத்தரவுபடி, புலிகள் காப்பக துணை இயக்குனர் அமிர் ஆஜா தலைமையில், வன துறையினர் ஒருங்க...
தமிழகம்
வாலாஜாபாத்தில் டெலிபோன்கள் செயலிழப்பு: பொதுமக்கள் அவதி
வாலாஜாபாத்: வாலாஜாபாத் பகுதியில் பி.எஸ்.என்.எல்., டெலிபோன்கள் செயல்படாததால் பொதுமக்கள் கடும் அவதிப்படுன்றனர். காஞ்சிபுரம், வாலாஜாபாத் பகுதியில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை மின்நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங...
தமிழகம்
தராசுகளுக்கு முத்திரை பணி
கோத்தகிரி : கோத்தகிரி பகுதி வியாபாரிகள், தராசுகளுக்கு முத்திரையிட்டு பயன்பெற அழைப்பு விடப்பட்டுள்ளது.கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமானந்தன், செயலர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கை:கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தில், தராசுகளுக்கு முத்திரையிடும் பணி நடத்தப்பட்டு வருகிறது. "பி' கோட்டாவில...
தமிழகம்
சூதாட்டம்: மூன்று வாலிபர்கள் கைது
காஞ்சிபுரம்: சூதாட்டம் விளையாடிய, மூன்று பேரைப் போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில், சிலர் சூதாட்டம் விளையாடுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சூரியமூர்த்தி தலைமையில், போலீசார் நேற்றுமுன்தினம் மாலை திடீர் சோதனை நடத்தினர். அப்போது...
தமிழகம்
ஏகாம்பரநாதர் கோவில் மண்டபத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நான்கு கால் மண்டபம் ஆக்கிரமிக்கப்படுவது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவில்களில் குறிப்பிடத்தக்கது ஏகாம்பரநாதர் கோவில். பஞ்ச பூத ஸ்தலங்களில் ப்ருத்வி ஸ்தலமாக திகழ்கிறது. ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரம் முன்பாக நான்கு கால் மண்டபம் மற்...
தமிழகம்
திருப்போரூர் கோவில் பிரசாதக்கடை 9 லட்சம் ரூபாய்க்கு ஏலம்
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரசாதக் கடை 9 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஓராண்டுக்கான பிரசாதக் கடை ஏலம் கோவில் அலுவலகத்தில் நேற்று முன்தினம், சோளிங்கர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வீரபத்திரன் தலைமையில் நடந்தது. கந்தசுவாமி கோவில் செயல் அலுவலர் கோதண்டராமன்...
இந்தியா
காரைக்காலில் மாங்கனி திருவிழா ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு
காரைக்கால் : காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா நேற்று நடந்தது. விழாவில் பக்தர்கள் மாங்கனிகளை வீசி, இறைவனுக்கு தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர். சிவபெருமானால் அம்மையே என்று அழைக் கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக விளங்கும் காரைக்கால் அம்மையாருக்கு, காரைக்கால் கயி...
தமிழகம்
புதிதாக 10 இன்ஜி., கல்லூரிகளுக்கு அனுமதி?
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக பொறியியல் கல்லூரி துவங்க, இதுவரை 10 கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ., கொண்டு வந்த புதிய விதிமுறைகளை எதிர்த்து தனியார் பொறியியல் கல்லூரிகள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதையடுத்து, ...
இந்தியா
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கு 265 இடங்கள்
புதுச்சேரி : தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கு 265 இடங்கள் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை பெறுவது தொடர்பாக இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வனத் துறை கருத்தரங்கக் கூடத்தில் நேற்று நடந்தது. முதல்வர் வைத்திலிங்கம், சுகாதாரத் துறை அமை...
தமிழகம்
வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
செய்யூர்: மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள், தானம் செய்யப்பட்டதன் மூலம் ஏழு பேர் பயன் பெற்றனர். சூணாம்பேடு அடுத்த கயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குணா. இவரது இரண்டாவது மகன் பிரபாகரன்(22). பிளம்பர். கடந்த 15ம் தேதி, சென்னை மாதவரத்தில் இரண்டாவது மாடியில் வேலை செய்தபோது தவறி கீழே விழுந்தார். பலத்த கா...
இந்தியா
மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்
புதுச்சேரி : மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க சிறப்பு முகாமிற்கு தொழிலாளர் துறை ஏற்பாடு செய்துள்ளது.தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி அரசின் வேலைவாய்ப்பகம், தனியார் நிறுவனங்களில் மாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. ந...
இந்தியா
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி : ஸ்டேட் வங்கியின் நிர்வாகத்தை கண்டித்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் 800 கிளைகளின் ஊழியர்கள், நிர்வாகத்தின் முடிவுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதுசம்பந்தமாக தொ...
இந்தியா
வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம்
புதுச்சேரி : வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி வரும் 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்க உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காமராஜர் நகர், முத்தியால்பேட்டை, ராஜ்பவன் ஆகிய சட்டசபை தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள அதிகார...
இந்தியா
தொழிலாளர்களின் வைப்பு நிதி தொகைகளை சந்தாதாரர் வங்கி கணக்கில் சேர்க்க நடவடிக்கை
புதுச்சேரி : தொழிலாளர்களின் வைப்பு நிதி தொகைகள் நெப்ட் மற்றும் கோர்பேங்கிங் முறையில் நேரடியாக சந்தாதாரர்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி வருங்கால வைப்பு நிதி ஆணையர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:உழந்தை கீரப்பாளைய...
இந்தியா
ரத்த தான முகாம்
புதுச்சேரி : மெட்லைப் காப்பீட்டுக் கழகம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.முகாமை சபாநாயகர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கிளை மேலாளர் கண்ணன் தலைமை தாங்கி னார். உழவர்கரை நகராட்சி சேர்மன் ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மெட் லைப் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய் தனர்.முகாம் ஏற்பா...
இந்தியா
விஷ்ணு சகஸ்ரநாமபாராயணம்
புதுச்சேரி : விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சி சிருங் கேரி சாரதாம்பாள் கோவிலில் நாளை நடக்கிறது.  புதுச்சேரியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று மாலையில் சத்சங்கமாக விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடத்தப் பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பக்தரின் இல்லத்தில் பாராயணம் நடத்தப்படுகிறது.இதன்தொடர்ச்சியாக நூறு அடி சாலைய...
தமிழகம்
போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்க விசா பெற முயற்சித்த நால்வர் கைது
சென்னை: போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்க விசா பெற முயன்ற இரண்டு பெண்கள், ஒரு ஏஜன்ட் உள்ளிட்ட நால்வரை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் அமரித்சிங் (26). இவரது மனைவி சுக்வீர் கவுர் (20). பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் நரேஷ்கவுர் (43). இவர்களில் இளம் தம்பதியினரான அமரித்சிங் மற்றும் சுக்வீர் கவுர் ஆகி...
தமிழகம்
பார்த்தசாரதி கோவிலில் யோக நரசிம்மர் கோலம்
திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், யோக நரசிம்மராக நரசிம்ம சுவாமி காட்சியளித்தார். இரவு ஹனுமந்த வாகன உற்சவம் நடந்தது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், ஆனிமாத பிரம்மோற்சவத் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன், கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவின், முக்கிய நிகழ...
தமிழகம்
காலமானார்
சென்னை: பத்திரிகையாளர் ராதாராஜ், மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். போலீஸ் செய்தி, ரோஜா இதழ்களில் பொறுப்பாசிரியராக பணியாற்றியுள்ள ராதாராஜ், தினமலர் வாரமலரிலும் நிறைய துணுக்கள் எழுதியுள்ளார்.இவருக்கு மனைவி மாலா மற்றும் மகள்கள் சுஷ்மிதா, ஏகமிதா ஆகியோர் உள்ளனர்.
தமிழகம்
சென்னை நகர் முழுவதும் நேற்று திடீர் ரெய்டு! ஒரே நாளில் 300 சிலிண்டர்கள் சிக்கின...
சென்னை: சென்னை நகர் முழுவதும் நேற்று ஒரு நாள் நடத்தப்பட்ட சோதனையில் வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட 300 வீட்டு உபயோக சிலிண்டர்கள் சிக்கின. சென்னை முழுவதும் உள்ள 80 லட்சம் மக்களில் பெரும்பாலானோர் தற்போது காஸ் அடுப்பு பயன்படுத்துகின்றனர். காஸ் வினியோகிக்கும் நிறுவனங்கள் வீட்டு உபயோகத்திற்கு, வணிக உபயோகத்திற்கு என தனி...