category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
டி.பி.ஐ., வளாகத்தில் தீ விபத்து
சென்னை: டி.பி.ஐ., வளாக ஜெனரேட்டரில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.நுங்கம்பாக்கம், கல்லூரி சாலையில் அமைந்துள்ள டி.பி.ஐ., வளாகத்தில் பள்ளிக் கல்வி இயக்குனரகம் உள்ளது. இதன் அருகில் அமைந்துள்ள தொழில்நுட்ப அலுவலகம் பின்புறம் சக்தி வாய்ந்த தானியங்கி ஜெனரேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. டி.பி....
தமிழகம்
சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் 1ம் தேதி வெளியீடு
சென்னை : சென்னை மாவட்டத்தில் 16 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வரும் ஜூலை 1ம் தேதி வெளியிடப்பட உள்ளது.கடந்த 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு அதன் பின் இரண்டு முறை இணைப்புகள் ஒருங்கிணைத்து 100 சதவீதம் சரிபார்க்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்...
தமிழகம்
வக்கீல்கள் பதவி உயர்வு
சென்னை : சென்னை சைதாப்பேட்டை, எழும்பூர், ஜார்ஜ் டவுன் கோர்ட் அரசு வக்கீல்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.சைதாப்பேட்டை 17வது கோர்ட்டில் பணியாற்றி வரும் அரசு வக்கீல் ஜெயரத்தினக்குமார் பதவி உயர்வு பெற்று, குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வு துறையின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். சைதாப்பேட்டை ஒன்பதாவது கோர்ட் அரச...
தமிழகம்
பயணிகள் ஆட்டோவாக இயங்கும் தனியார் ஆட்டோக்கள்
அம்பத்தூர் : சென்னை புறநகர் பகுதிகளில், தனியாருக்கு சொந்தமான ஆட்டோக்களும் பயணிகள் ஆட்டோவாக இயக்கப்படுகின்றன.அம்பத்தூர் அம்பேத்கர் சிலை அருகே ஆட்டோ ஸ்டாண்ட்டில், இயங்கும் ஆட்டோக்களில் பெரும்பாலானவை தனியார் ஆட்டோக்களாக உள்ளன. "பிரைவேட்' என குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி செல்கின்றன.பயணிகள் ஆட்டோக்க...
தமிழகம்
பெரியாறு, கோவிலாறு அணைகளில் மீன் வளர்ப்புக்கு: நீர்மட்டம் தரை தட்டியதே காரணம்
வத்திராயிருப்பு: பெரியாறு கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் இருமாதங்களுக்கு தரை தட்டியே உள்ளதால் மீன் வளர்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் சுற்றுலா மையமாக விளங்கும் பிளவக்கல் அணைகள் விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமின்றி மீன் வளர்ப்புக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மழை சீசனை ஒட்டி அங்குள்ள பெரியாறு, கோவிலாறு அணைக...
தமிழகம்
சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., தாலுகாவில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 20 எக்டேரில் தக்காளி, வாழைஉட்பட தோட்டபயிர்கள் சாகுபடிசெய்யப்படவுள்ளது. சொட்டு நீர் பாசனம் அமைக்க 65 சத மானியம், 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நீரில் கரையும் உரங்களும் மானியமாக வழங்கப்படுகின்றன. தேவைப்படும் விவசாயிகள் ஸ்ரீவி., த...
தமிழகம்
அசுர வேகத்தில் மினி வேன்கள் அலறும் பொதுமக்கள்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பஜார் பகுதிகளில் மினி வேன்கள், பஸ்கள் அதிக வேகத்தில் செல்வதால் பொதுமக்கள் பயத்தில் உள்ளனர். போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.அருப்புக்கோட்டையில் நகரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காய்கறிகள், விவசாய பொருட்களை நகருக்குள் கொண்டு வருவதற்கு மினி வேன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர...
தமிழகம்
பூட்டிய வீட்டில் திருட்டு
அம்பத்தூர் : அம்பத்தூர், கிருஷ்ணாபுரம் விரிவு, மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத். இவர் தனது குடும்பத்துடன், கடந்த 26ம் தேதி பெங்களூர் சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு இவரது வீடு திறந்து கிடந்தது. அக்கம் பக்கத்தினர் பார்த்து, அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து பார்த்தபோது, வீட...
தமிழகம்
வேன் டிரைவர், கிளீனரை கட்டி போட்டு ரூ.73 ஆயிரம் கொள்ளை
விருதுநகர்: விருதுநகர் அருகே வேன் டிரைவர், கிளீனரை கட்டிப் போட்டு, 73 ஆயிரம் ரூபாயை இருவர் கொள்ளையடித்துச் சென்றனர்.ஈரோடு மாவட்டம், சூரம்பட்டியில் உள்ள பேக்கரியில் சேகர்(25) வேன் டிரைவராகவும், மோகன்(19) கிளீனராகவும் வேலை பார்க்கின்றனர். இருவரும் பேக்கரி பொருட்களை பல ஊர்களில் விற்று விட்டு, மார்த்தாண்டத்திலிருந்து ஜூலை ...
தமிழகம்
அரிவாள் வெட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர்: அத்திக்குளத்தை சேர்ந்தவர் சேர்ந்த ரகுராமன்(29). இவரது மனைவியிடம் அதே பகுதியை அழகு கண்ணன்(21) தவறான கண்ணோட்டத்துடன் பேசினார். இதையறிந்த ரகுராமன், அழகு கண்ணனை அரிவாளால் வெட்டினார். ஸ்ரீவி., டவுன் போலீசார், ரகுராமனை கைது செய்தனர்.
தமிழகம்
கிரிக்கெட் விளையாட்டில் மோதல்
காஞ்சிபுரம் : கிரிக்கெட் விளையாட்டின்போது ஏற்பட்ட மோதலில், நண்பரை தாக்கிய நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் பல்லவா நகரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி.இவரது மகன் அருண்கார்த்திக்(22).நேற்றுமுன்தினம் மாலை தனது நண்பர்கள் ஆனந்தபாபு(28), பெரியசாமி(24), செந்தில்குமார்(23), ராஜ்(23) ஆகியோருடன், கலெக்டர் அலுவலக வளா...
தமிழகம்
பைக் எரிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., நாச்சியார் வடக்கு மாட வீதியை சேர்ந்தவர் ரமேஷ். ஜூன் 25 ம்தேதி இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இவருடைய பைக் தீப்பிடித்து சேதமடைந்தது. டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணை விலை உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காந்தி ரோடில் நேற்று கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரப் பொருளாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் ராமதாஸ், ஒய்.எம்.நாராயணசாமி உட்பட ப...
தமிழகம்
ரேஷன் விற்பனையாளர் சஸ்பெண்ட்
விருதுநகர்: விருதுநகர் கூட்டுறவு இணைப்பதிவாளர் ரவிக்குமார் ரேஷன் கடைகளை ஆய்வு செய்தார். அப்போது எண்டப்புளி ரேஷன் கடையில் சோதனை செய்த போது விற்பனையில் 3 ஆயிரத்து 281 ரூபாய் 60 காசு முறைகேடு செய்திருப்பதை கண்டறிந்தார். விற்பனையாளர் வெங்கடேஷை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
தமிழகம்
ஆனந்தவள்ளி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு
தாம்பரம் : ஊரப்பாக்கம், ஆனந்தவள்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.தாம்பரத்தை அடுத்த ஊரப்பாக்கத்தில், 1997ம் ஆண்டு முதல், "கே.கே.கல்வி அறக்கட்டளை' சார்பில் ஆனந்தவள்ளி பள்ளி ...
தமிழகம்
நூதன முறையில் நகை திருடிய மூவருக்கு காப்பு: 17 சவரன் மீட்பு
பேரம்பாக்கம் : நகை கடையில் நகை வாங்குவதுபோல் நடித்து, நூதன முறையில் நகைகள் திருடிய இரு பெண்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 17 சவரன் நகைகளை மீட்டனர்.திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(42). திருவள்ளூர் சாலையில் நகை கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு கடந்த டிசம்பர் 21ம் தேதி மூ...
தமிழகம்
மத்திய கூட்டுறவு வங்கியில் பணிவேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 63 பணியிடங்களை நிரப்ப, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பட்டியல் அனுப்பியுள்ளது.இப்பணியில் சேர பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் கூட்டுறவு பயிற்சியில் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு 40. மிக...
தமிழகம்
பட்டாசு ஆலைதீ விபத்து காயம் 1
சிவகாசி: விஸ்வநத்தத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் அங்கு நடேஷ் பட்டாசு ஆலை வைத்திருக்கிறார். இங்கு நேற்று காலையில் மாரனேரி பழனி (25), அலுமினியப் பவுடரை எடை போட்டுக்கொண்டிருந்தார். அப்போது பவுடர் தவறி கீழே விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதில் பழனி காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிவகாசி டவுன் போலீசார் விசார...
தமிழகம்
வங்கி கிளை திறப்பு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெருவில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், 753வது கிளை திறப்பு விழா நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட இரண்டாவது நீதிமன்ற முதன்மை நீதிபதி எத்துராஜ், வங்கிக் கிளையை திறந்து வைத்தார். வங்கி துணைப் பொது மேலாளர் சிவராம், உதவிப் பொது மேலாளர் சீதாராமன் முன்னிலை வகித்தனர். கவுன்சில...
தமிழகம்
அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து அரசு அலுவலகங்கள் முற்றுகை
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் கோட்டைப்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோட்டைப்பட்டி ஊராட்சியில் கண்ணன் காலனி, இருளப்பன் நகர், ஆண்டாள்சாமி நகர் உட்பட குடியிருப்பு பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த புக...
தமிழகம்
அரசு பணிக்கு 5,109 டாக்டர்கள் காத்திருப்பு : ஜூலை 15 முதல் போராட்டம்
மதுரை : தமிழ்நாடு அரசு தேர்வாணையம் ஒன்றரை ஆண்டுகளாக தேர்வு முடிவு வெளியிடாததால், 5,109 டாக்டர்கள் அரசு பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர். அரசு பணியில் தேர்வாணையத்தால் டாக்டர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதில், தாமதமாவதை தடுக்க, அவ்வப்போது வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் டாக்டர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். சிறப்பு தேர்வு...
தமிழகம்
இளம்பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி: வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
செங்கல்பட்டு: வீட்டின் முன், கோலம் போட்டுக்கொண்டிருந்த இளம்பெண்ணை மானபங்கப்படுத்தி கொலை செய்ய முயன்ற வாலிபருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கேளம்பாக்கம் அடுத்த மேலைக்கோட்டையூரைச் சேர்ந்தவர் வைரம். இவரது மகள் லட்சுமி(18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி, ஏகாதசி அன்று இ...
தமிழகம்
இலவச சிகிச்சை முகாம்
விருதுநகர்: முத்துராமன்பட்டியில் நாயக் வி. ராஜூ மற்றும் மரிய பாக்கியம் நினைவு அறக்கட்டளை சார்பில் இலவச ஆயுர்வேத அக்குபிரஷர் சிகிச்சை முகாம் நடந்தது. ஹர்ஷத் பார்மர், 30 பேருக்கு ஆயுர் வேத சிகிச்சை அளித்தார். நிர்வாகி ஆர். ஜேம்ஸ் பாஸ்வெல்,யோகா பயிற்சியாளர் முத்து மாரீஸ் வரி ஏற்பாடு செய்தனர்.
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
ராஜபாளையம்: பெட்ரோல் டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்காசி தொகுதி எம்.பி., லிங்கம் தலைமை வகித்தார்.நகர செயலாளர் ரவி, மேற்கு ஒன்றிய செயலாளர் வனராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துமாரி முன்னிலை வகித்தனர். மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரோஜா, நிர்வாகிக...
தமிழகம்
சுடுகாடு பராமரிப்பை தவிர்க்கும் உள்ளாட்சிகள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
ராஜபாளையம்: சுடுகாட்டை பராமரிப்பது நகராட்சியா, ஊராட்சியா என்பதை முடிவு செய்து, உரிய வசதிகளை செய்துதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜபாளையம் டவுன் காந்தி சிலை ரவுண்டானாவுக்கு வடக்கே 29 தெரு மக்கள் பயன்படுத்தும் சுடுகாடு, மதுரை ரோட்டில் காயல்குடி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. இந்த சுடுகாடு ராஜபாளையம் நகர...
தமிழகம்
இலவச நோட்டு வழங்கல்
தாயில்பட்டி: வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது. உதவி தொடக்கக் கல்வி அலுவலர் செந்தமிழ்செல்வி தலைமை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் முத்துக் கொத்தாளத்தன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கே. திலகராஜ் வரவேற்றார். சுப்ரீம் அட்டை மில் நிறுவனர் குமரே...
தமிழகம்
சங்க கூட்டம்
நரிக்குடி,: நரிக்குடியில் இந்திய மாணவர் சங்க கூட்டம் நடந்தது. தலைவர் கண்ணன் தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். கல்வி நிலையங்களில் நிலவும் கல்விச்சூழல் குறித்து விவாதித்தனர்.
தமிழகம்
குழித்துறை நகராட்சி அவசர கூட்டம் : தி.மு.க., - பா.ஜ., கவுன்சிலர்கள் மோதல்
மார்த்தாண்டம்: குழித்துறை நகராட்சி அவசர கூட்டத்தில் வாவுபலி பொருட்காட்சி ஏலம் விவாதத்திற்கு வந்த போது தி.மு.க., கவுன்சிலரும், பா.ஜ., வை சேர்ந்த நகராட்சி துணைத்தலைவரும் கட்டி பிடித்து மோதி கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. குழித்துறை நகராட்சி அவசர கூட்டம் சேர்மன் பொன்.ஆசைதம்பி தலைமையில் நடந்தது. ஆணையாளர் லோகநாதன், இன...
தமிழகம்
போதைப் பொருட்களை தடைசெய்யக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்: போதைப் பொருட்களை தடைசெய்யக்கோரி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழக பெண்களின் நீண்டகால கோரிக்கையாக போதைப்பொருள் ஒழிப்பு இருந்து வருகிறது. பல விபத்துக்களுக்கும் போதைப் பொருட்களே காரணமாகின்றன. 30 சதவீத விபத்துக்கள் மது போதையால் நடக்கின்றன. 44 சதவீத தீக்காயங்களும், 34 சதவ...
தமிழகம்
குளச்சல் அருகே காப்பகத்தில் இருந்த 16 மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு
குளச்சல்: குளச்சல் அருகே முறையான அனுமதி இன்றி நடத்தப்பட்ட இரண்டு காப்பகங்களில் இருந்த 16 மாணவர்களும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.குளச்சல் அருகே உள்ள கல்லுக்கூட்டத்தில் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த இரண்டு சிறுமிகளிடம் சில்மிஷம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரையடுத்து மனித இன தீங்கு மற்றும் கொட...
தமிழகம்
சிவகங்கை கொலை வழக்கில் தேடிய மூவர் கோர்ட்டில் சரண்
திருச்சி: சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்தில் நடந்த கொலை வழக்கில் தொடர்பாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த மூவர் திருச்சி நீதிமன்றத்தில்  சரணடைந்தனர்.சிவகங்கை மாவட்டம் புத்தடிப்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ் (26). இவர் கடந்த 25ம் தேதி தனது டூவீலரில் சொக்கநாதபுரம் என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் பின்தொடர்ந்து...
தமிழகம்
நஷ்டஈடு வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
திருவள்ளூர் : சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தில் கால்வாய் அமைக்க நிலம் வழங்கிய 18 கிராம விவசாயிகளுக்கு ஐகோர்ட் உத்தரவுபடி நஷ்ட ஈடு வழங்கக்கோரி, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல் செய்தனர்.ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சாய்கங்கா கால்வாய் மூலம் தமிழகத்திற்கு க...
தமிழகம்
திருமண ஏக்கம்:வாலிபர்தற்கொலை
திருத்தணி : திருத்தணி அடுத்த எல்லப்பநாயுடுபேட்டையைச் சேர்ந்தவர் கொல்லாபுரி; இவரது மகன் பாலாஜி(25). இவர், வேலைக்கு போகாமல் தன் அண்ணன் ரவி வீட்டில் தங்கி இருந்தார். தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அண்ணனிடம் கூறினார்."நல்ல வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்து கொள்' என்று ரவி கூறினார். வேலை கிடைக்காமல் திருமணம் நடக்காது என...
தமிழகம்
குறைந்த கூலி வழங்குவதால் பெண்கள் சாலை மறியல்
அரக்கோணம் : சித்தேரி கிராம ஏரியில் 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு குறைந்த கூலி வழங்குவதால் அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்திலுள்ள ஏரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 150 பெண்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு குறைந்த கூ...
தமிழகம்
ஆந்திர - தமிழக எல்லையில் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை
திருத்தணி : ஆந்திர - தமிழக எல்லையில் வந்து செல்பவர்களின் வாகனங்களை நிறுத்தி, பன்றிக் காய்ச்சல் நோய் இருக்கிறதா என்பது குறித்து, பரிசோதனை முகாம் நேற்று துவங்கியது.திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச் சாவடியில் கார், வேன், பஸ் மற்ற வாகனங்களில் வந்து செல்பவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரவாமல் இருக்க நேற்று பரிசோதனை நடத்தப்பட்...
தமிழகம்
சரக்கு லாரி கட்டணம் ஜூலை 1 முதல் உயர்வு
மதுரை : பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, வரும் 1ம் தேதி முதல் சரக்கு லாரி கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தப் போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மதுரை தலைவர் சாத்தையா, செயலர் சாகுல் ஹமீது தெரிவித்துள்ளதாவது: கடந்த ஓராண்டில் மூன்றாவது முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் எண்ணெய...
தமிழகம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் முதுகலைக்கு விண்ணப்ப தேதி நீட்டிப்பு
கோவை, : தமிழ்நாடு வேளாண்மை பல்கலை முதுகலை மற்றும் முதுகலை பட்டய படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பெற, ஜூலை 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தையும், இதர தகவல்களையும் www.tnau.ac.in  என்ற பல்கலை இணையதள முகவரியில் பெறலாம். முதுகலை மற்றும் முதுகலை பட்டய படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு, கோவை வேளாண்மை பல்கலையில்...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கோபு, மாவட்ட செயலாளர் நாகராஜன் முன் னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட் டத்தில் ஊரக வளர்ச்சித் துறை ரோடு இன்ஸ்பெக் டர் தற்கொலை செய்தது தொடர்பாக, தி...
தமிழகம்
குடிநீர் கேட்டு முற்றுகை
வேடசந்தூர்: கொன்னாம்பட்டி மக் கள் குடிநீர் வழங்கக் கோரி வேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.நாகம்பட்டி ஊராட்சி கொன்னாம்பட்டியில் இரு நூறு வீடுகள் உள்ளன. இப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.நிலத்தடி நீர் குறைந் ததால் தண்ணீர் தட்டுப் பா...
தமிழகம்
வரைவு வாக்காளர்பட்டியல் வெளியீடு
பழநி: பழநி ஆர்.டி.ஒ., நாராயணன் அறிக்கை: பழநி கோட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வரையறுக்கப்பட்ட பள்ளிகளில் ஜூலை 1(வியாழன்) வெளியிடப்படுகிறது. ஜூலை 16 வரை சேர்த்தல், நீக்கல்படிவங் கள் தரலாம். ஜூலை 10, 11ல் சிறப்பு முகாம் நடைபெறும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது ஆக. 16 வரை விசாரணை நடைபெறும். விண்ணப்பங்கள் மீது ஆக. 25க்க...
தமிழகம்
இலவச கண் சிகிச்சை முகாம்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் நாளை (ஜூன் 30) இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.திண்டுக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், காமாட்சிபிள்ளை ஜின்னிங் பேக்டரி, ஒட்டன்சத்திரம் ரோட்டரி சங்கம், மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி இணை ந்து ஒட்டன்சத்திரம் தும் மிச்சம்பட்டி ரோட்டில் உள்ள பயனியப்பா கல் யாண மண்டபத்தில் நாளை க...
தமிழகம்
விருப்பாட்சி அருகே ரூ.4.6 கோடியில் : சோதனை முறைக்காக வாகனம் செல்ல அனுமதி
பழநி: விருப்பாட்சி அருகே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தில் சோதனை முறையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.விருப்பாட்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூ. 4.6 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. பாலம் கட்டப்பட்ட நிலையில் பாலத்தின் இருபுறமும் கற்கள் கொட்டப்பட்டு ரோடு அமைக்கப்படுகிறது. இந்த பாதையில் வாகனங்கள் ...
தமிழகம்
தக்காளி வரத்து குறைவால் மொத்த விற்பனை கிடையாது
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சில்லறை விற்பனை மட்டுமே நடக்கிறது.ஒட்டன்சத்திரம்,சுற்றியுள்ள பகுதிகளில் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கமிஷன் கடை ஒன்றுக்கு ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பெட்டிகள் வந்தது. தற்போது ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் தக்காளி பெ...
தமிழகம்
பழநி கோயில்களில் அன்னாபிஷேகம்
பழநி: உலக அமைதி, செழுமை வேண்டி பழநி கோயில்களில் நான்கு நாட்களாக அன்னாபிஷேகம் நடந்தது.பெரியநாயகியம்மன் கோயிலில் நடந்த அன்னாபிஷேகத்திற்கு பிரசாத ஸ்டால் உரிமையாளர் ஹரிஹரமுத்து உபயதாரர் ஆவார்.பெரியாவுடையார் கோயிலில் பெரியாவுடையார், விஷ்ணு, பிரம்மா, தெட்சிணாமூர்த்தி, பைரவர், நடராஜருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இங்கு நடந்த அன்...
தமிழகம்
பாதுகாப்பு குறித்து எஸ்.எம்.எஸ்., ரயில்வே விழிப்புணர்வு பிரசாரம்
மதுரை : ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, எஸ்.எம்.எஸ்., அனுப்பி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கின்றனர். ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை கவனக்குறைவாக கடக்கும்போது விபத்து ஏற்படுகிறது. ரயில்வே ஸ்டேஷன்களில் தண்டவாளங்களில் நடந்து செல்வது, நடைமேம்பாலங்களை பயன்படுத்தாமல் இருப்பத...
தமிழகம்
அரசு பணிக்கு 5,109 டாக்டர்கள் காத்திருப்பு * ஜூலை 15 முதல் போராட்டம்
மதுரை : தமிழ்நாடு அரசு தேர்வாணையம் ஒன்றரை ஆண்டுகளாக தேர்வு முடிவு வெளியிடாததால், 5,109 டாக்டர்கள் அரசு பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.அரசு பணியில் தேர்வாணையத்தால் டாக்டர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதில், தாமதமாவதை தடுக்க, அவ்வப்போது வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் டாக்டர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். சிறப்பு தேர்வு ...
தமிழகம்
பழநியில் நாய்க்கடிக்கு தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரியில் அலைக்கழிப்பு
பழநி: பழநி அரசு ஆஸ்பத்திரியில் நாய்க்கடிக்கு ஊசி போடுவதற்கு அலைய விடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர். பழநியில் தெரு நாய்கள் அதிகமாக உள்ளது.தினமும் பலர் கடிக்கு உள்ளாகின்றனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு பழநி அரசு ஆஸ்பத்திரியில் ஊசி போடுவதில் தாமதம் ஏற்படுகிறது. பூ வியாபாரி பொன்னி(45) கூறுகையில்,நாய் கடித்து அரச...
தமிழகம்
ரயில்வே, ஜி.எச்., - எம்.டி.சி.,க்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்
சென்னை : சமீபகாலமாக, கூவம் முகத்துவாரத்தில் கழிவுகள் அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து தெற்கு ரயில்வே, அரசுப் பொது மருத்துவமனை மற்றும் போக்குவரத்துக் கழகத்திடம் இருந்து விளக்கம் கேட்டு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மற்றும் புறநகரைச் சுற்றி பக்கிங்காம் கால்வாய், கூவம் மற்றும் அடையார்...
தமிழகம்
மோட்டார் வாகனம் கார் திருடியவர் கைது
திண்டுக்கல்: தமிழகத்தில் பல பகுதிகளில் இரு சக்கர மோட்டார் வாகனம், கார், பணப்பை, செயின் திருட்டு உட்பட 50 வழக்குகளில் சம்பந்தப்பட்டவரை திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம் கம் பத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(42). சந்தேகத்திற்கு இடமான வகையில் இவர் திண்டுக்கல்லில் தியேட் டர் அருகே நின்ற போது எஸ்.ஐ.,அழகர்சாமி தலைம...
தமிழகம்
பேட்டரி பொருத்திய 3 சக்கர இலவச மோட்டார் சைக்கிள் தூத்துக்குடியில் ரெடி
தூத்துக்குடி, : தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிய செல்லும் ஊனமுற்றோர் இருந்தால் உடனடியாக விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு தயார் நிலையில் மூன்று சக்கர பேட்டரி மோட்டார் சைக்கிள் ரெடியாக இருக்கிறது. தமிழக முதல்வர் கட்டுப்பாட்டின் கீழ் மாற்றுதிறனாளிகள் துறை வந்தவுடன் அவர்களுக்கு தொடர்ச்சியாக பல்வேறு சலுகைகள் முதல்வரால் அறிவி...
தமிழகம்
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வேடசந்தூர்: பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய்,காஸ் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வேடசந்தூரில் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட முன்னாள் துணை செயலாளர் நந்தகோபால் முன்னிலை வகித்தார்.நகர செயலாளர் முத்தலீப் வரவேற்றார். தலைமைக் கழக ...
தமிழகம்
வரிகட்டாத வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டிக்க குழு அமைப்பு
தூத்துக்குடி,: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வரிகட்டாமல் உள்ள வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வரும் 16ம் தேதி முதல் அதிரடியை ஆரம்பிக்க உள்ளனர். இதனால் அதற்குள் வரிகட்டாதவர்கள் கட்டிவிடுமாறு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாநகராட்சி பகுதிய...
தமிழகம்
பெண் மீது தீ வைப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பால்பாண்டி.இவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக திருமணம் முடித்த நிர்மலாதேவி மீது சந்தேகப்பட்டு, அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.காயமடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார்.
தமிழகம்
நூலக கட்டடத்திற்கு இடம் ஒதுக்க தாமதம்
பழநி: பழநியில் அரசு சார்பில் நூலகம் கட்ட நகராட்சி இடம் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.பழநி நகராட்சி சார்பில் பொதுமக்களிடம் ஆண்டுதோறும் நூலக வரி வசூல் செய்யப்படுகிறது. அதேசமயம் தேவையான வசதிகள் செய்து தருவதில் ஆர்வம் காட்டுவதில்லை. தாலுகா அலுவலகம் அருகே தனியார் கட்டடத்தில் மேல்மாடியில் 10 பேர் கூட உட்கார வசதியில்லாத அ...
தமிழகம்
கும்பாபிஷேக விழா
அகரம்: அகரம் பாப்பனம்பட்டியில் சக்தி விநாயகர், அங்கையற்கன்னி, உடனமர் கல்யாணசுந்தரேசுவரர், சக்திவேல் முருகன் உள் ளிட்ட தெய்வங்களுக்கு தனித்தனியாக கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு புனிதநீர் எடுத்து வரப் பட்டு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற் றது. விழாவில் அகரம் பேரூரா...
தமிழகம்
விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வேடசந்தூரில் வினியோகம்
வேடசந்தூர்: வேடசந்தூரில் பல் வேறு பகுதிகளில் முத்துச் சாமி எஸ்.பி., திடீர் ஆய்வு மேற் கொண்டார். பஸ் ஸ்டாண்டில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். இன்ஸ் பெக்டர் அருள் அமரன், சப்.இன்ஸ்பெக்டர் பியூலாமேரி மற்றும் போலீசார் அவருடன் சென்றனர். அவர் கூறியதாவது :திண்டுக்கல் மாவட்டத் தில் கடந்த ஐந்து...
தமிழகம்
அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு அழிந்து வரும் நீராதாரம்
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு,அகரம் பகுதிகளில் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் நீராதாரங்கள் பாதிக்கப்பட்டுள் ளது.தாடிக்கொம்பு,அகரம் பேரூராட்சி கட்டுப்பாட் டில் 80க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு குளங் கள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும் நிலை நீடித்து வருகிறது. ...
தமிழகம்
தாடிக்கொம்பில் குடிநீர் சப்ளையில் குளறுபடி
தாடிகொம்பு: தாடிக்கொம்பில் குடிநீர் சப்ளையில் குளறுபடி நடப்பதால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தாடிக்கொம்பு,அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக பத்து நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விணியோகிக்கபடுகிறது. இது குறித்து பொது மக்கள் கூறுகையில்...
தமிழகம்
எஸ்.ஐ.,தேர்வு விபரம் இணைய தளத்தில் வெளியீடு : கடிதம் வராவிட்டால் புகார் தரலாம்
திண்டுக்கல் : எஸ்.ஐ., எழுத்து தேர்வு எழுதுபவர்கள் பெயர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் பெயர் இருந்தும் கடிதம் வராவிட்டால், எஸ்.பி., அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கலாம். ஜூலை 3ல் போலீஸ்துறையில் பணியாற்றுபவர்களுக்கும், ஜூலை 4ல் பொது விண்ணப்பதாரர்களுக்கும் எஸ்.ஐ., பணிக்கான எழுத்துதேர்வு நடக்கிறது. பல விண்ணப்...
தமிழகம்
சரக்கு வாகனங்களில் தொழிலாளர்கள் பயணம்
தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் சரக்கு வாகனங்களில் ஆட்கள் பயணிக்கும் அவல நிலை தொடர்கிறது.இம்மலைப்பகுதிக்குட் பட்ட புல்லாவெளி, தடியன்குடிசை, மஞ்சள்பரப்பு, பாச்சலூர், குப்பம் மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர் உள்ளிட்ட இடங்களிலுள்ள தனியார் எஸ் டேட்களுக்கு சித்தரேவு, அய்யம்பாளையம், நெல்லூர், கதிர்நாயக்கன்பட்டி பகு...
தமிழகம்
ஆரஞ்சு விளைச்சல் பாதிப்பு
தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலங்கட்டி மழை பெய்ததால் பழங்களில் கருநிற குத்தல் நோய் ஏற்பட்டு உதிர்ந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள் ளனர்.தாண்டிக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பகலில் ஒரு மணி நேரம் நீடித்த ஆலங்கட்டி மழையால் ஆரஞ்ச் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்...
தமிழகம்
சாக்கடை இல்லாததால் சுகாதாரக் கேடு
வத்தலக்குண்டு: பூசாரிபட்டியில் சாக் கடை வசதி இல்லாமல் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.மல்லணம்பட்டி ஊராட்சி பூசாரிபட்டியில் 800 பேர் வசிக்கின்றனர். இவ்வூரில் சாக்கடை வசதி இல்லாமல் கழிவு நீர் தெருக்களில் ஓடுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர் இதே ஊரில் வசித்தாலும் கழிவு நீர் செல்ல நட...
தமிழகம்
கணினி மைய தொடக்க விழா
பண்ணைக்காடு: பண்ணைக்காடு மத்திய கூட்டுறவு பாங்க் கணினி மைய தொடக்க விழா நடந்தது.பாங்க் தலை மை அதிகாரிகள் சண்முகம், ராஜ் தலை மை வகித்து தொடங்கி வைத்தனர். திண்டுக்கல் மத்திய கூட்டுறவு பாங்க் உதவி பொது மேலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். பண்ணைக்காடு மத்திய கூட்டுறவு பாங்க் மேலாளர் வரவேற்றார். உதவி பொது மேலாளர் சிவராமன் நன...
தமிழகம்
பழநியில் ஆக்கிரமிப்பு மயம் பக்தர்கள் நடப்பதில் சிரமம்
பழநி: பழநியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.பழநி வரும் பக்தர்களை சிரமப்பட வைக்கும் பிரச்னைகளில் ஆக்கிரமிப்பும் ஒன்றாகும். பஸ் ஸ்டாண்ட் துவங்கி, அடிவாரம், சன்னதி வீதியில் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. ஆர். எப்.ரோடு, கான்வென்ட் ரோடு, காந்தி மார்க்கெட் ரோட்டில் இருபுறமும் வாகனங்கள் ஆக...
தமிழகம்
சேதமடைந்த தடுப்புச்சுவர் கொடைக்கானலில் விபத்து அபாயம்
கொடைக்கானல்: மழைக்கு சேதமடைந்த தடுப்புச் சுவர் சீரமைக்கப்படாமல் உள்ளதால் வாகனங்கள் மீண்டும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.கொடைக்கானல்- வத்தலக்குண்டு ரோட்டில் கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த கனமழைக்கு ஐந்து இடங்களில் தடுப்பு சுவர் சேதமடைந்தது. "டோல் கேட்' அருகே சுமார் 20 அடி அளவில் தடுப்பு சுவர் உடைந்தன.நெடுஞ்சாலைத்துறை சா...
தமிழகம்
வேலை உறுதியளிப்பு திட்டத்தில் புதிய நடைமுறை உறுதிமொழிக்கு பின்னர் பணி துவக்கம்
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர் நாள்தோறும் பணி துவங்கும் முன்னர் உறுதிமொழி எடுக்கும் புதிய நடைமுறை கையாளப்படுகிறது.கிராமப் பகுதி மக்களுக்கு ஆண்டிற்கு 100 நாள் வேலை வழங்குவது என்ற மத்திய அரசின் முடிவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு சில இடங்களில் தொழிலாளர்கள் சரிவர வ...
தமிழகம்
10 ஆயிரம் முதியோருக்கு மாத உதவித்தொகைக்கு ஆர்டர்
தூத்துக்குடி; -தூத்துக்குடியில் துணை முதல்வர் ஸ்டாலின் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் பிரகாஷ் தெரிவித்தார். தூத்துக்குடி கலெக்டர் ஆபிசில் நேற்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கலெக்டர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. அதிகமான பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை சம்பந்தமான மனு...
தமிழகம்
தனியார் நிலத்தில் போர்வெல் அகரத்தில் அரசு நிதி வீணடிப்பு
அகரம்: அகரம் பேரூராட்சி விட்டல்நாயக்கன்பட்டியில் தனியார் நிலத்தில் குடிநீருக்கான போர்வெல் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அகரம் பேரூராட்சி விட்டல்நாயக்கன்பட்டி மக்களின் குடிநீர் தேவைக் காக,மேல்நிலை தொட்டி, போர்வெல் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த போர்வெல்லில் இருந்த மின் மோட்டார் பழுதானதால் மக்கள் குடிநீருக்க...
தமிழகம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் முதுகலைக்கு விண்ணப்ப தேதி நீட்டிப்பு
கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலை முதுகலை மற்றும் முதுகலை பட்டய படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பெற, ஜூலை 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்ப படிவத்தையும், இதர தகவல்களையும்  பல்கலை இணையதள முகவரியில் பெறலாம். முதுகலை மற்றும் முதுகலை பட்டய படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு, கோவை வேளாண்மை பல்கலையில் ஜூலை 15ம் தேதி நடக்கி...
தமிழகம்
அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பன்றிகாய்ச்சலுக்கு தனி வார்டு ஏற்பாடு
தூத்துக்குடி : பன்றி காய்சல் அறிகுறியுடன் யாராவது சிகிச்சைக்கு வந்தால் அவர்களுக்கென்று தனியாக வார்டு அமைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்களுக்கு மருத்துவகல்லூரி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஸ்வைன் ப்ளூ என்று அழைக்கப்பட...
தமிழகம்
தூத்துக்குடி மாநகராட்சி எரிவாயு தகன மேடை 3 நாளில் செயல்பட துவங்கும்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி எரிவாயு தகன மேடை இன்னும் 3 நாளில் செயல்பட துவங்கிறது. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 47 லட்ச ரூபாய் செலவில் பிணங்களை எரியூட்டுவதற்காக எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கட்டி முடித்து பல மாதங்கள் ஆன நிலையில் தொடர்ந்து இவை பயன்பாட்டிற்கு மாசுகட்டுப்பாடு வாரியத்தில் இருந்து...
தமிழகம்
உணவு கழகஊழியர்கள்அடையாள உண்ணாவிரதம்
தூத்துக்குடி,: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய உணவு கழக ஊழியர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.பணிகாலத்தில் இறந்த தொழிலாளர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள் இந்த மூன்று நிலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு 10வருடமாகியும் பென்சன் கிடைக்காததை கண்டித்து தூத்துக்குடியில் இந்திய உணவு ...
தமிழகம்
கழுகாசலபுரத்தில் குடிநீர் பஞ்சம் கலெக்டரிடம் புகார்
தூத்துக்குடி : கழுகாசலபுரத்தில் வீடுகளுக்கு குடிநீர் வழங்க கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலெக்டர் ஆபிசில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் பிரகாஷிடம் எப்போதும்வென்றான் அருகே உள்ள கழுகாசலபுரம் கிராம மக்கள் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது;கழு...
தமிழகம்
போதை எதிர்ப்பு தினவிழா
திருச்செந்தூர்: - மேல திருச்செந்தூர் பஞ்.,சில் போதை எதிர்ப்பு தின விழா நடந்தது.மேல திருச்செந்தூர் பஞ்.,க்குட்பட்ட தளவாய்புரத்தில் சிஎஸ்ஆர் சமூக சீரமைப்பு நிறுவனத்தின் சார்பில் போதை எதிர்ப்பு தினம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் விழிப்புணர்வு முகாம் நடந்தது. மேல திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் ராசி பாலசுப்பிரமணியன் தலைமை வகித...
தமிழகம்
சோழபுரத்தில் மறியல் போராட்டம் வாபஸ்
எட்டயபுரம்; - எட்டயபுரம் தாலுகா ஆபிசில் நடந்த சமாதான கூட்ட முடிவுகளை ஏற்று சோழபுரம் பஸ் ஸ்டாப் அருகில் நடக்க இருந்த பஸ்மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.தூத்துக்குடி-மதுரை மெயின் ரோடு சோழபுரம் பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வலியுறுத்தி காங்.,சார்பில் பஸ்மறியல் போராட்டம் சோழபுரத்தில் நடத்த முடி...
தமிழகம்
எட்டயபுரம் கல்லூரியில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
எட்டயபுரம் : எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் சமுதாய மேம்பாட்டு பாலிடெக்னிக் திட்டத்தின் கீழ் ஜூலை முதல் வாரத்தில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி துவங்குகிறது என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கல்லூரி முதல்வர் சபாநாயகம் தெரிவித்துள்ளதாவது,மத்திய அரசு மனிதவள மேம்பாட்...
தமிழகம்
கீழஈராலுக்கு பஸ்விடுவது குறித்த பிரச்சனை : சமாதான கூட்டம் தோல்வி
எட்டயபுரம் : எட்டயபுரம் அருகே பஸ் போக்குவரத்து சம்பந்தமாக நடந்த சமாதானக் கூட்டத்தில் முடிவு கிடைக்காததால் மாவட்ட கலெக்டரிடம் முறையீடு செய்து பிரச்னைக்கு தீர்வு காண்பது என போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.கோவில்பட்டியிலிருந்து திட்டங்குளம், விஜயாபுரி, கொடுக்காம்பாறை, கசவன்குன்று, செமபுதூர், டி.சண்முகபுரம், வாலம்ப...
தமிழகம்
எட்டயபுரத்தில் மா.கம்யூ., நிதியளிப்பு பொதுக்கூட்டம்
எட்டயபுரம்: எட்டயபுரத்தில் மா.கம்யூ. , நிதியளிப்பு பொதுக் கூட்டம் பட்டத்து விநாயகர் கோயில் அருகில் நடந்தது.தூத்துக்குடியில் மாசிலாமணிபுரம் 3வது தெருவில் மாவட்ட மா.கம்யூ., அலுவலகம் கட்டட நிதியளிப்பு விழாவிற்கு தலைமை வகித்து தாலுகா செயலாளர் ரவீந்திரன் ஒரு லட்சத்து 30 ஆயிரம் நிதி வழங்கினார். சென்னை பெரம்பூர் எம்.எல்.ஏ.,மக...
தமிழகம்
வருவாய் உதவியாளர்சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
எட்டயபுரம் : எட்டயபுரத்தில் வருவாய்துறை அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டுமென தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் பணியாளர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.எட்டயபுரத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் பணியாளர் சங்க மாவட்ட பொதுக்குழு...
தமிழகம்
அழகப்பா பல்கலை.,யில் மாற்று திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் ரத்து
தூத்துக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தொலை தூர கல்வி இயக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விகட்டணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி கல்விமைய ஒருங்கிணைப்பாளர் கதிரேசபாண்டியன் தெரிவித்திருப்பதாவது:அழகப்பா பல்கலை., யில் தொலை தூர கல்வி இயக்கத்தில் காலண்டர் ஆண்டிற்கான சேர்க்கை வரும் 30ம் தேதி...
தமிழகம்
தென் மாவட்டத்தில் முதல் முறையாக தூத்துக்குடி மாநகராட்சியில் நாய்கள் ஆபரேஷனுக்கு புதிய கட்டடம்
தூத்துக்குடி: தென் மாவட்டத்தில் முதல் முறையாக தூத்துக்குடி மாநகராட்சியில் நாய்களை பிடித்து ஆபரேஷன் செய்ய நவீன வசதிகளுடன் கட்டடம் கட்டப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட நாய்களை ஒரே இடத்தில் அடைக்கும் வகையில் கூண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்படுவதால் தெருவில் இனி நாய்கள் அலையாமல் இருப்பதை தடுக்க முடியும். தமிழகத்தில் முக்கிய நகர...
தமிழகம்
அகரம் பெருமாள் கோயிலில் இன்று வருஷாபிஷேக விழா
வல்லநாடு : அகரம் காசிவிஸ்வநாதர் அஞ்சேல் என்ற தசாவதாரப் பெருமாள் கோயில்களில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று நடக்கிறது.திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு அகரம் கிராமத்தில் விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இதன் அருகில் அஞ்சேல் என்ற தசாவதாரப் பெருமாள் கோயில் அமைந்துள்ளத...
தமிழகம்
குடும்பத் தகராறுகணவன் தற்கொலை
வல்லநாடு: - கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வல்லநாட்டில் தூக்கு போட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,வல்லநாடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமியின் மகன் நயினார்(48). இவருக்கு திருமணமாகி சித்திரைவடிவு என்ற மனைவியும், மலையாண்டி(20) என்ற மகன் மற்றும் ராமு(13) என...
தமிழகம்
மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை
தூத்துக்குடி,: தூத்துக்குடியில் சரிவர படிக்காத மகனை பெற்றோர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மகன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது,தூத்துக்குடி 3வது மைல் சங்கர்காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் சின்னராஜா(16) 10ம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சின்னர...
தமிழகம்
பழைய மாணவர்கள்சங்க கூட்டம்
தூத்துக்குடி : எஸ்.கைலாசபுரம் டி.என்.டி.டி.ஏ.தொடக்கப்பள்ளி பழைய மாணவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பரி.திரித்துவ ஆலய வளாகத்தில் நடந்தது.கூட்டத்தில் பள்ளியின் பழைய மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர். சங்க சார்பில் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி கொடுப்பது என்றும், அதற்கான நடவடிக்கைகளை விரைந்து செய்வது என்றும், சங்கத்திற்குப்...
தமிழகம்
மின்சாரம் தாக்கி துப்புரவு தொழிலாளி பலி
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி துப்புரவு தொழிலாளி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது,விருதுநகர் மாவட்டம் நல்லமுத்தாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் மகேந்திரன்(20). இவர் தூத்துக்குடி ஹார்பர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான யார்டில் கண்டெய்னர் பாக்சை துப்புரவுச...
தமிழகம்
பெட்ரோல் டீசல் விலைஉயர்வை கண்டித்து நூதன போராட்டம்
கோவில்பட்டி, : கோவில்பட்டியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோவை கயிறு கட்டி இழுக்கும் நூதன போராட்டம் நடந்தது.கோவில்பட்டி ஏஐடியுசி வட்டார ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோவை கயிறு கட்டி இழுக்கும் நூதன போராட்டம் நடந்தது. கோவில்பட்டி ராமசாமிதாஸ் பூங்கா முன்பு துவங்கிய ஆ...
இந்தியா
இந்திய எல்லையில் துப்பாக்கி சூடு : 3 ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு : இந்திய எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 ராணுவ வீரர்கள் 6 வெளிநாட்டு பயங்கரவாதிகள் பலியானார்கள். காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் ...
தமிழகம்
வேன் கவிழ்ந்து விபத்து7 பேர் படுகாயம்
கோவில்பட்டி, : கோவில்பட்டி அருகே வேன் கவிழ்ந்ததில் திரும்பிய 7பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, திருநெல்வேலி மாவட்டம் வடக்கு அகஸ்தியர்புரம் மோசஸ் மகன் வின்சென்ட் (56). இவர் தனது குடும்பத்தினருடன் வேளாங்கன்னி கோயிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வேனை இதே ஊரை சேர்ந்த பவ...
தமிழகம்
வேன் மோதி முதியவர் பலி
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் வேன் மோதி முதியவர் பலியானார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பெருமாள் (65). இவரது மகன் சுப்பிரமணியன் என்பவரது மகன் கோபாலகிருஷ்ணன் (30) இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது கழுகுமலை அருகேயுள்ள கர...
தமிழகம்
ரயில்வே கேட்டில் லாரி பழுதுபோக்குவரத்து பாதிப்பு
கோவில்பட்டி, : கோவில்பட்டி இளையரசனேந்தல் ரயில்வே தண்டவாளத்தில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் ரயில்களும் சிறிது நேரம் தாமதமானது.கோவில்பட்டி இளையரசனேந்தல் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படாமல் தற்போது வரை ரயில்கள் வரும் நேரத்தில் கேட்டை மூடியும் திறந்தும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பல நே...
தமிழகம்
வேன் மோதி வாலிபர் பலி
கோவில்பட்டி : கோவில்பட்டியில் வேன் மோதியதில் அடையாளம் தெரியாத ஒருவர் பலியானார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,கோவில்பட்டி இனாம் மணியாச்சி ரோட்டில் 35 வயது மதிக்க வாலிபர் ஒருவர் டூவீலரில் செல்லும் போது அவர் மீது வேன் மோதியதில் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து வேன் டிரைவர் விபத்து நடந்த இ...
தமிழகம்
இன்று துவங்கும் மெட்ரிக் ., தனித்தேர்வுக்கு ஹால்டிக்கெட் கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு
ராமநாதபுரம் : பத்தாம் வகுப்பு மெட்ரிக்., தனி தேர்வு இன்று துவங்க உள்ளநிலையில், நேற்று மாலை வரை ஹால்டிக்கெட் கிடைக்காததால் மாணவர்கள் தேர்வு எழுத தவித்து வருகின்றனர். பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்தவர்கள் உடனடி தேர்வு எழுத வாய்ப்பு உண்டு. இதன்படி பத்தாம் வகுப்பு மெட்ரிக்., உடனடி பொது தேர்வு...
தமிழகம்
கண்டக்டர் ஓட்டிய மினி பஸ் மோதி வங்கி மேலாளர் பலி
மதுரை: மதுரை கூடல்புதூரில் நேற்று காலை, மினி பஸ்சை மொபைல் போன் பேசியபடி ஓட்டிய கண்டக்டர்,ரோட்டில் நின்றிருந்த வங்கி மேலாளர் மீது மோதியதில் இறந்தார். மதுரை அஞ்சல்நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(29). காரைக்குடியில் ஆக்சிஸ் வங்கி கிளை மேலாளராக உள்ளார். நேற்று காலை 9 மணி அளவில், அலங்காநல்லூர் ரோடு - அஞ்சல்நகர் சந்திப்பில்...
தமிழகம்
மதுரையில் ஆட்டோ கட்டணங்கள் உயர்வு : பெட்ரோல், டீசல் உயர்வு எதிரொலி
மதுரை : மதுரையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் ஆட்டோ கட்டணங்கள் அறிவிக்கப் படாமலே உயர்ந்துள்ளன.நகர் பகுதியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பெர்மிட்டுடன், கட்டண "மீட்டர்கள்' இல்லாமல் இயங்குகின்றன. ஜூன் 25ல் பெட்ரோல் விலை உயர்த் தப்பட்டது. இதன் எதிரொலியாக நகர் பகுதியில் அனைத்து இடங்களில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளி...
தமிழகம்
எஸ்.ஐ., தேர்வு ஹால் டிக்கெட் இணையத்தில் நகல் எடுக்கலாம்
சென்னை : தமிழக போலீசில் எஸ்.ஐ., பதவிக்கான எழுத்துத் தேர்வு, வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் நடக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எஸ்.ஐ., பதவிக்கான எழுத்துத் தேர்வு, காவல் துறையைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஜூலை 3ம் தேதியும், பொதுப் பிரிவைச் சார்ந்த மற்ற விண்ணப்பத...
தமிழகம்
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளிடமிருந்து கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலெக்டர் அருண்ராய் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்த...
தமிழகம்
3,000 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கவுன்சிலிங்
சென்னை : பள்ளிக் கல்வித் துறையில் 3,000 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதற்கான கவுன்சிலிங், வரும் 2ம் தேதி முதல் சென்னையில் நடக்கிறது. பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி வெளியிட்ட அறிவிப்பு விவரம்: மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், ஜூலை 2ம் தேதி காலை, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் ப...
தமிழகம்
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ., மறியல்
ஓசூர்: ஓசூர் தாசில்தார் ஆஃபீஸ் முன் பெட்ரோல், டீஸல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஓசூர் தாசில்தார் ஆஃபீஸ் முன் நேற்று மாலை பெட்ரோல், டீஸல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்ட...
தமிழகம்
தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலி
ஓசூர்: ஓசூர் அருகே சாலையோர தடுப்பு சுவரில் பைக் மோதியதில், ஒரிஸா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் பலியானார். ஒரிஸா மாநிலம் பாகூர் பகுதியை சேர்ந்தவர் சிவா (17). இவரது உறவினர் பரமேஸ்வரர் (16). இருவரும் கெலமங்கலத்தில் தங்கியிருந்து தனியார் கம்பெனியில் பணிபுரிந்த வந்தனர். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், ஓசூரில் சினிமா பார்த்த...