category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் மற்றும் கெரசின் விலையை உயர்த்தியது. இதைக்கண்டித்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. நேற்று மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சி....
தமிழகம்
காட்சிப்பொருளாக ரயில் நிலையங்கள் ; தினமும் திண்டாடும் புறநகர் பயணிகள்
பெ.நா.பாளையம்: கோவை - மேட்டுப்பாளையம் இடையே கூடுதல் பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் நலன்கருதி துடியலூர், உருமாண்டம்பாளையம் ரயில்வே ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் தினந்தோறும் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிச...
தமிழகம்
வனக்காப்பாளரிடம் தகராறு: பெண்கள் உள்ளிட்ட 8 பேர் கைது
தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே காட்டுக்குள் ஆடு மேய்ந்த தகராறில் தட்டிக்கேட்ட வனக்காப்பாளரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்த மூன்று பெண்கள் உள்ளிட்ட எட்டு பேரை போலீஸார் கைது செய்தனர். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அடிமலைபுதூரை சேர்ந்தவர் ஜெயராமன், முருகேசன் விவசாயிகளான இவர்கள் அப்பகுதியில் உள்ள சேர்வராயன் மலைப்பகுதியில் ...
தமிழகம்
பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு நேற்று துவங்கியது.பிளஸ் 2 பொதுத்தேர்வில், மூன்று பாடங்கள் வரை தோல்வி அடைந்த தேர்வாளர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று மொழி பாடம் முதல் தாளுக்கான தேர்வு நடந்தது. இன்று மொழி பாடம் இரண்டாம் தாளுக்கான தேர்வு நடக்கும்.த...
தமிழகம்
கொப்பரை ஏலம் கிலோ ரூ.32.55
பொள்ளாச்சி: நெகமத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில் ஒரு கிலோவுக்கு அதிகபட்சமாக 32.55 ரூபாய் விலை கிடைத்தது.நெகமம் சுற்றுப்பகுதி விவசாயிகள் 21 பேர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்திற்கு 103 மூட்டை கொப்பரையை கொண்டு வந்தனர். மொத்தம் ஐந்து வியாபாரிகள் கொப்பரையை தரம் பிரித்து ஏலம் கூறினர். ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ச...
தமிழகம்
வால்பாறை நகராட்சி கூட்டம்
வால்பாறை: வால்பாறை நகராட்சி கூட்டம் இன்று நடக்கிறது.வால்பாறை நகர் மன்றக்  கூட்டம் இன்று (30ம் தேதி) காலை 11.00 மணிக்கு நடக்கிறது. கூட்டத்திற்கு நகராட்சித்தலைவர் கணேசன் தலைமை வகிக்கிறார். இதில் செயல்அலுவலர், துணைத்தலைவர் மற்றும்  கவுன்சிலர் கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழகம்
ராஜகணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
காரிமங்கலம்: காரிமங்கலம் மந்தைவீதி ஸ்ரீ ராஜகணபதி கோவிலில் சங்கடஹரசதுர்த்தி வழிபாடு இன்று (ஜூன் 30) நடக்கிறது. இதையொட்டி, இன்று மாலை 6 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் பாலசுப்பிரமணி மற்றும் தேவகாண்ட்லா இளைஞர் மன்றத்தினர் செய்துள்ளனர். காவேரிப்பட்டணம் மெயின...
தமிழகம்
மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நாயர் சேவா சமாஜம் சார்பில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.இதற்கான விழாவில், செயலாளர் சங்கரன் வரவேற்றார். தலைவர் ராமன்குட்டி தலைமை வகித்தார். முன்னாள் மத்திய புலனாய்வு அதிகாரி முரளீதரன்மேனன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினா...
தமிழகம்
நிலத்தகராறில் மோதல் ஒருவர் காயம் விவசாயி கைது
தர்மபுரி: கடத்தூர் அருகே நிலத்தகராறில் இரு விவசாயிகள் மோதிக்கொண்டதில், ஒருவர் காயம் அடைந்தார். மற்றொருவரை போலீஸார் கைது செய்தனர். கடத்தூர் அடுத்த அஸ்தகிரியூரை சேர்ந்தவர் விவசாயி வேலுசாமி (21). இவரது பக்கத்து நிலத்துக்காரர் விவசாயி முருகன் (31). இவர்கள் இருவருக்கும் இடையில் பொது வழித்தடம் காரணமாக முன் விரோதம் இருந்தது. ...
தமிழகம்
சரக்கு லாரி வாடகை 15 முதல் 20 சதவீதம் வரை: பொள்ளாச்சி தாலுகாவில் நாளை முதல் அமல்
பொள்ளாச்சி,: பெட்ரோல், டீசல் விலையேற்றத்திற்கேற்ப பொள்ளாச்சி தாலுகாவில் சரக்கு லாரி வாடகையை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தப்படவுள்ளது. நாளை (1ம் தேதி) முதல் புதிய வாடகையை அமல்படுத்தப்படவுள்ளதாக, லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளது. பொள்ளாச்சியிலிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும் தி...
தமிழகம்
காவிரி சுழலில் சிக்கி வாலிபர் பரிதாப பலி
தர்மபுரி: ஒகேனக்கல் ஆற்றில் குளிக்கும் போது சுழலில் சிக்கிய வாலிபர் நீரில் மூழ்கி இறந்தார். சிவகெங்கை மாவட்டம் பெரியகோட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (44). இவர் தனியார் கல்லூரியில் சமையல்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு உதவியாக அவரது மகன் மணிகண்டன் (22) இருந்து வந்தார். தங்கவேல், மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் ...
தமிழகம்
ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை: மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் மற்றும் கெரசின் விலையை உயர்த்தியது. இதைக்கண்டித்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. நேற்று மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,)சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செஞ்சிலுவைச் சங்க கட்டடம் முன் நடந்த ஆர்ப் பாட்டத்துக்கு, இச்சங்கத்தின் ...
தமிழகம்
நெரிசலில் வால்பாறை
வால்பாறை : வால்பாறையில் அடிக் கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சாலையோரத்தின் இருபுறத்திலும் விதிமுறையை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால், மக்கள் ரோட் டில் நிம்மதியாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பு வழியாக வாழைத் தோட்டம் பகுதிக்கு செல் லும் ரோட்டில் அதிவேகமாக வரும் வாகனங்களால் அ...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்ட தாசில்தார் அலுவலகம் முன் கோரிக்கை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட நிதி செயலாளர் அதியமான் வரவேற்றார். பொன்னரசன், காமராசு, மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர். "மூக்காரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி ஆகி...
தமிழகம்
டிராக்டர் மாயம்
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே வீட்டின் முன் நின்ற டிராக்டர் மாயமானது. காரிமங்கலம் அடுத்த தெள்ளனஅள்ளியை சேர்ந்தவர் விவசாயி சொக்கலிங்கம். இவருக்கு சொந்தமான டிராக்டரை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். காலையில் வந்து பார்த்தபோது டிராக்டர் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த சொக்கலிங்கள் காரிமங்கலம் போலீஸில் ...
தமிழகம்
கோட்டூர் போலீஸ் ஸ்டேஷன் இடமாற்றம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த கோட்டூரிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வந்த கட்டடம் எந்நேரமும் இடிந்து விழும் நிலையிலுள்ளதால், வேறு கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பழைய கட்டடத்தை இடித்து, 1.75 கோடி ரூபாயில் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டப்படவுள்ளது.பொள்ளாச்சி, கோட்டூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் 1918ல் கட்டப்பட்டது. கோட்...
தமிழகம்
சோலையாறு நீர்மட்டம் உயர்வு
வால்பாறை: வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் சோலையார் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 61 அடியாக உயர்ந்துள்ளது.வால்பாறையில்  கடந்த ஒரு மாதமாக தென் மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் வால்பாறை டவுன் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை செக் டேம் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நிரம்பியது. த...
தமிழகம்
யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பு
தர்மபுரி: தபால் வழிக்கல்வி மூலம் யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் தர்மபுரியில் நடக்கிறது. மனவளக்கலை மன்ற தலைவர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: பாரதியார் பல்கலைக்கழகம் மூலம் நடக்கும் யோகா பயிற்சி பாப்பாரப்பட்டியில் அளிக்கப்பட உள்ளது. வீட்டில் இருந்தபடியே தபால் வழி மூலம் யோகா பயின்று யோகா ஆசிரியர் ஆகலாம். வெள்ளி, சனி மற்றும...
தமிழகம்
ரூ.7.68 லட்ச மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில் 7 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நல திட்ட உதவி வழங்கப்பட்டது. கலெக்டர் அமுதா தலைமை வகித்தார். வேலைவாய்ப்பு, ஓய்வூதியம், வீட்டுமனை பட்டா, பட்டாமாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 422 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.  சமூக பொர...
தமிழகம்
நாடெங்கும் எதிர்பார்த்த செம்மொழி மாநாடு: பாதுகாப்பில் பெருமிதம்; போலீஸ் கமிஷனர்
கோவை: நாடெங்கும் எதிர்பார்த்த செம்மொழி மாநாடுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு பெருமை அளிப்பதாகவும், முதல்வரின் திருப்தியை பெற்றதாகவும் கமிஷனர் சைலேந்திரபாபு தெரிவித்தார்.கோவை செம்மொழி மாநாடு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும், உதவியோருக்கும், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது. கமிஷனர் அலுவலக...
தமிழகம்
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க அழைப்பு
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை யூனியன், முத்துப்பேட்டை டவுன் பஞ்., பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி மையம் போஸ்ட் ஆஃபீஸ் ஆகியவற்றில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய விண்ணப்பம் வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் 16ம் தேதி வரை தொடர்புடைய மையங்...
தமிழகம்
செம்மொழி மாநாடு முடிந்தது; பணிகள் முடியவில்லை
கோவை: செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக, கோவை நகரில் துவக்கப்பட்டு, அரை குறையாக உள்ள அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டுமென்று மக்களிடம் பரவலான கோரிக்கை எழுந்துள்ளது.கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக, கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒட்டு மொத்த...
தமிழகம்
கண்காட்சி பாதுகாப்பு பணி ஆசிரியர்கள் கோரிக்கை
கோவை: கோவை செம்மொழி மாநாட்டின் கண்காட்சி அரங்கின் முன் காலை முதல் இரவு வரை, மாவட்ட கல்வி அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால், வழக்கமான கல்விப் பணிகள் தேக்கம் அடைந்திருப்பதாக புகார் கூறப்படுகிறது.செம்மொழி மாநாட்டு கண்காட்சியில் பள்ளி ஆசிரியர்கள், கல்வி அலுவலக பணியாளர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்...
தமிழகம்
வீடு கட்டும் திட்டத்தில் குறை களைய தி.பூண்டியில் இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகரம், முத்துப்பேட்டை யூனியன், நகரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர் கதிரேசன், நகர தலைவர் பன்னீர்செல்வம், முத்துப்பேட்டை ஒன்றிய தலைவர் ஜெயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்...
தமிழகம்
கோவையில் ஜெயேந்திரர்
கோவை: காஞ்சி காமகோடி பீடம் ஜெகத்குரு ஜெயேந்திரருக்கு, நேற்று கோவையில் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கேரள மாநிலம் பாலக்காடு ராமநாதபுரத்தில் வேதபாட சாலையில் நேற்று முன் தினம் நடந்த வேதக்கருத்தரங்கில் ஜெயேந்திரர் பங்கேற்றார். இதன் பின், நேற்று காலை 9.00 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் காமாட்சியம் மன் கோவிலுக்கு வந்தார...
தமிழகம்
செம்மொழி மாநாடு பாதுகாப்பு போலீசார் குமுறல்
சிவகங்கை: கோவை செம்மொழி மாநாடு பாதுகாப்பு சென்ற போலீசாருக்கு, சிறப்பு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுப்பு கிடைக்காமல் பலர் அதிருப்தியில் உள்ளனர். இம்மாநாட்டில் டி.ஜி.பி., லத்திகாசரண் தலைமையில் , அனைத்து மாவட்ட அதிகாரிகள், போலீசார் என, 11 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஐந்து நாட்களாக பணியில் ஈடுபட...
தமிழகம்
மாமியாரை கொலை செய்த மருமகனுக்கு 5 ஆண்டு சிறை
கோவை: மாமியாரை கட்டையால் தாக்கி கொலை செய்த மருமகனுக்கு,கோவை விரைவு நீதிமன்றம் ஐந்துஆண்டு சிறை தண்டனை விதித்தது.கருமத்தம்பட்டி, மோளகாளிபாளையத்தைச் சேர்ந்தவர் ரத்தினராஜ்(57); விவசாயத் தொழிலாளி. இவரது மனைவி பூவாத்தாள். தான் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க நகையை கணவருக்கு பயந்து வங்கியில் அடகு வைத்து விட்டார். நகையை வங்கியில...
தமிழகம்
கடத்தல் வழக்கில் இருவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை
பட்டுக்கோட்டை: வியாபாரியை கடத்திச் சென்று பணம் பறிக்க முயன்ற இருவருக்கு தலா மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பட்டுக்கோட்டை அடுத்த திருச்சிற்றம்பலம் கடைதெருவில் சிமெண்ட், உரம் வியாபாரம் செய்து வந்தவர் ரெத்தினசபாபதி செட்டியார் (46). இவர் கடந்த 2001ம் ஆண்டு ஜூன் நான்காம் தேதி கடையை பூட்டிவிட்டு பணத்துடன் மொபட்டில் ...
தமிழகம்
இன்று பாரதியார் பல்கலை தேர்வு முடிவு
கோவை: பாரதியார் பல்கலையின் இளநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது.பாரதியார் பல்கலையின் இணைப்புக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு 2010 ஏப்ரல், மே மாதங்களில் இளநிலை பட்டப்படிப்பு தேர்வுகள் நடந்தன. இத்தேர்வு முடிவுகள் இன்று காலை 8.00 மணியளவில் வெளியாகின்றன. பல்கலையின் www.bu.ac.in, www.kalvimalar.com ஆகிய இணையதள...
தமிழகம்
பட்டுக்கோட்டையில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகர ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பெட்ரோல், டீஸல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். ஒன்றிய அமைப்பாளர் இளவரசன் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் ம...
தமிழகம்
சென்னை மேயருக்கு தமிழ் சங்கம் கோரிக்கை
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை தமிழ் சங்கத்தின் சார்பில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் சென்னை நகர மேயர் சுப்பிரமணியத்துக்கு கோரிக்கை மனு அனுப்ப முடிவு செய்தனர். இதன்படி பட்டுக்கோட்டை தமிழ் சங்க தலைவர் மணிமுத்து அனுப்பிய மனு விபரமாவது: கடந்த 22ம் தேதி நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சென்னை மாநகரில் உள்ள 52 முக்கிய சாலை...
தமிழகம்
திரவுபதை அம்மன் கோவில் திருவிழா
பாபநாசம்: பாபநாசம் அருகே திருப்பாலத்துறை திரவுபதை அம்மன் கோவில் வசந்த திருவிழா நடந்தது. விழா துவக்கத்தில் பாரத கதை பாடும் நிகழ்ச்சி நடந்தது. பாரத கதை புலவர் காசிநாதன் குழுவினர் கதை நிகழ்ச்சியை நடத்தினர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடும்பத்தார்கள் உபயம் செய்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்தனர். இறுதி நிகழ்ச்சியாக ...
தமிழகம்
பாரதியார் பல்கலையில் எம்.பி.ஏ., ஜூலை 7க்குள் விண்ணப்பிக்கணும்
கோவை: பாரதியார் பல்கலையில் எம்.பி.ஏ., படிக்க விரும்புபவர்கள், ஜூலை 7க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இது பற்றி பல்கலை பதிவாளர் திருமால்வளவன் கூறியதாவது:2010-2011ம் ஆண்டில் பாரதியார் பல்கலையில் எம்.பி.ஏ., படிக்க விரும்புபவர்கள், தங்கள் விண்ணப்பங்களை, 'Director, Bharathiar School of Management and Enterpreneur Development (B...
தமிழகம்
சத்துணவு பணியாளர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்கல்
கும்பகோணம்: கும்பகோணத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு ஓய்வூதியத் தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. கடந்த 2008 செப்., 15ம் தேதிக்கு முன் சத்துணவு திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ய்வூதிய திட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி கும்பகோணம் யூனியனில் சத்துணவு திட்டத்தில் பணியாற்றி ஓய்வ...
தமிழகம்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான திட்டம் மாணவர்கள் பேரணி மூலம் விழிப்புணர்வு
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வளமையம் சார்பில், மாற்றுத்திறனாளி குழந்தைக்கான நலன், திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. தஞ்சை ரயிலடியில் இருந்து இப்பேரணியை மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கல்யாணசுந்தரம் துவக்கி வைத்தார். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திருவளர்செல்வி உட்பட பலர் ப...
தமிழகம்
மூப்பனார் சிலை திறப்பு விழா பிரச்சார பலூன் பறக்க ஏற்பாடு
கும்பகோணம்: கும்பகோணத்தில் ஜூலை மூன்றாம் தேதி மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் திருவுருவ சிலை திறப்பு விழா நடக்க உள்ளதால், விழாவை வெளிப்படுத்தும் விதமாக பிரச்சார பலூன் பறக்கப்படவிட்டது. கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவில் காந்தி சிலை அருகில் நகர காங்கிரஸ் சார்பில் பலூன் விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அகில இந்த...
தமிழகம்
நூலகங்களில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி
தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடந்தது. பயிற்சியை துவக்கி வைத்து கலெக்டர் சண்முகம் பேசியதாவது: தமிழக அரசு கிராம மக்களின் வசதிக்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டங்களில் அடிப்படை வசதிகளை...
தமிழகம்
ஓசியில் மது தராததால் விற்பனையாளருக்கு அடி
கும்பகோணம்: கும்பகோணம் அருகே அண்ணலக்ஹாரத்தில் டாஸ்மாக் கடையில் ஓசியில் மது தராததால் விற்பனையாளரை அடித்து உதைத்து, மதுபாட்டில்களை உடைத்த மூவரை போலீஸார் கைது செய்தனர். கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இக்கடைக்கு நேற்று முன்தினம் இரவு அண்ணலக்ரஹாரத்தை சேர்ந்த தமிழரசன் மகன் ராஜகுரு (25), அரியத்திடல் ஆ...
தமிழகம்
வேலையில்லா பி.எட்., பட்டதாரி சங்க மாநில செயற்குழு கூட்டம்
தஞ்சாவூர்: தமிழ்நாடு மாநில வணிகவியல் மற்றும் பொருளியல் வேலையில்லா பி.எட்., பட்டதாரி சங்க கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது. மாநில செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில தலைவர் சந்தானராஜகோபால் முன்னிலை வகித்தார். தஞ்சை மாவட்ட தலைவர் செங்கை சேகர் வரவேற்றார். மகளிரணி தலைவி சிவசக்தி, மரகதமணி...
தமிழகம்
அரியலூரில் 2 நாள் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு
அரியலூர்: அரியலூரில் இர ண்டு நாள் நடக்கும் வேளாண் கண்காட்சி கருத்தரங்கை, இன்று மத்திய அமைச்சர் நெப்போலியன் துவக்கி வைக்கிறார். அரியலூர் மாவட்ட வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை சார்பில், அரியலூர் காவேரி திருமண மஹாலில் இரண்டு நாட்கள் நடக்கும், வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்க துவக்கவிழா, கலெக்டர் ஆபிரகாம் தலைமையில், 30...
தமிழகம்
தே.மு.தி.க., தெருமுனை பிரச்சார கூட்டம்
அரியலூர்: அரியலூர் அருகே தே.மு.தி.க., தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது. அரியலூர் மாவட்டம், திருமானூர் பஞ்.,யூனியனை சேர்ந்த மல்லூர் கிராமத்தில் நடந்த தே.மு.தி.க., கொடிஏற்றுவிழா மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டத்துக்கு, கட்சியின் திருமானூர் ஒன்றிய செயலாளர் ஜான்வின்சென்ட்ராஜா தலைமை வகித்தார். கிளை செயலாளர் கருப்பையா வரவேற...
தமிழகம்
ரெட்டிபாளையம் கிராமத்தில் சுகாதார திருவிழா அரியலூர் கலெக்டர் துவக்கிவைப்பு
அரியலூர்: ரெட்டிபாளையம் கிராமத்தில் நடந்த அரசின் காப்பீட்டு திட்ட சுகாதார திருவிழாவை அரியலூர் கலெக்டர் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக, அரியலூர் பஞ்.,யூனியனுக்குப்பட்ட ரெட்டிபாளையம் கிராமத்தில், கலைஞர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் நடந்த, சுகாதார திருவிழா மற்றும்...
தமிழகம்
பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் மின்மோட்டார் பழுதால் அவதி
பெரியகுளம்: அரசு ஆஸ்பத்திரியில் மின்மோட்டார் பழுதடைந்துள்ளதால் வார்டுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகிவருகின்றனர். பெரியகுளம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை வார்டு,பிரசவவார்டு, ஆப்பரேஷன் வார்டு உட்பட பல வார்டுகள் உள்ளன. பல்வேறு சிகிச்சைக்காக ஆண் மற்றும் பெ...
தமிழகம்
கண்மாய்களுக்கு நீர் வரும் வரத்து வாய்க்காலில் ஆக்கிரமிப்புக்கள் அதிகரிப்பு
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களுக்கு வரும் நீர்வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புக்களை கண்டுகொள்ளாமல், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய், சிந்துவம் பட்டி ஓட்டக்குளம், பொம்மிநாயக்கன்பட்டி சிறுகுளம் கண்மாய்களுக்கு வராகநதிய...
தமிழகம்
பாலீத்தீன் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை தேவை
பெரியகுளம்: போடி நகராட்சியில் பாலீத்தீன் பைகளை ஒழிக்க நடவடிக்கை எடுத் தது போல், மாவட்டத்தின் எல்லா நகராட்சிகளிலும் எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், உட்பட சைவம், அசைவ ஓட்டல்கள் மற்றும் மாலை நேரக்கடைகளில் பெரும்பாலும் பாலிதீன் பேப்பர்கள், பைகள் அதிகம் பயன்படுத்த...
தமிழகம்
முத்தாரம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
உடன்குடி, :  உடன்குடி சந்தையடியூர் முத்தாரம்மன் கோயிலில் இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.சந்தையடியூர் முத்தாரம்மன் கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக விழா கடந்த ஜூன் 27ம் தேதி  துவங்கியது. தொடர்ந்து ஜூன் 28, 29 ஆகிய இரண்டு நாட்...
தமிழகம்
குழந்தையை தந்தை கொன்றதாக சந்தேகம் புதைத்த உடலை தோண்டி பரிசோதனை
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நான்கு வயது குழந்தையை அதன் தந்தையே கொலை செய்துவிட்டதாக எழுந்த புகாரால், புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடக்கிறது. வேதாரண்யம் அடுத்த நாகக்குடையான் மேலக்காட்டைச் சேர்ந்தவர் முருகேசன். தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இவரது மகள்கள் சுதா (6), சங்கீதா (4)...
தமிழகம்
அனுமதியின்றி மணல் கடத்திய மினி வேன் பறிமுதல்
வல்லநாடு : வல்லநாடு ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய மினி வேனை முறப்பநாடு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,வல்லநாடு அருகே உள்ள அகரம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் திருட்டுத்தனமாக மணல் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் சப் இன்ஸ்பெக்டர...
தமிழகம்
சர்தார் வேதரெத்தினம் நினைவு நிழலகம் ரூ.4 லட்சத்தில் அமைக்கப்பட்டு திறப்பு
வேதாரண்யம்: வேதாரண்யம் குருகுலம் அருகே எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நான்கு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ., சர்தார் வேதரெத்தினம் நினைவு பயணிகள் நிழலகம் திறப்பு விழா நகராட்சி தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் நடந்தது. நாகை டி.ஆர்.ஓ., அண்ணாதுரை, எம்.எல்.ஏ., வேதரெத்தினம் ஆகியோர...
தமிழகம்
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் அதிரடி மாற்றம் : அனைத்து மாவட்டத்தில் ஒரே அளவில் ஊழியர்கள்
தூத்துக்குடி, : தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை நாளை முதல் புதிய மாற்றம் கொண்டு வரப்படுகிறது. நெல்லையில் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை அலுவலகம் திருப்பூருக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. தமிழக அரசு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளும் துறைகளில் நெடுஞ்சாலைத்துறை ஒன்றாகும்.   நெடுஞ்சாலைத்துறையில் பல பிரிவுகள...
தமிழகம்
சிறுமியை கடத்திய வாலிபர் கைது
வேதாரண்யம்: வீட்டில் தனியாக இருந்து சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். வேதாரண்யம் அடுத்த தரகமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் (36). கூலித்தொழிலாளி. இவரும், இவரது மனைவியும் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டனர். அப்போது, வீட்டில் தனியாக இருந்த இவர்களது மகள் தேவசத்யா (13) என்பவரை அதே ஊரைச் ச...
தமிழகம்
மாணவர்களின் கல்விக்கடன் பெறுவதில் சிக்கல்
சாத்தான்குளம் :  கல்விக்கடனுக்குரிய வட்டியை மத்திய அரசே செலுத்தும் என்ற உத்தரவு பாங்குகளுக்கு வராததால் இந்த ஆண்டு கடன் பெறுவதற்கு, சென்ற ஆண்டு கடனுக்கான வட்டித் தொகையை கட்ட வேண்டும் என பாங்குகள் கூறுவதால் மாணவர்கள் திணறுகின்றனர். மேலும் வட்டியைக் கட்டினால் அரசு உத்தரவு வந்தபின் பாங்கில் கட்டிய அந்தப் பணம் அசலில் கழிக்க...
தமிழகம்
கஞ்சா விற்றவர் கைது
போடி,: போடி - புதூரை சேர்ந்தவர் கணேசன் (33). இவர், கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்ய முயன்றுள்ளார். போடி டவுன் போலீசார் கணேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
தற்கொலைக்கு தூண்டியதாக பெண் கைது
போடி: போடி தாதாசாகிப்தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மனைவி கவிதா (30). இவர், இதே பகுதியில் வசிக்கும் ஜோதி (35) யிடம் கடன் வாங்கியுள் ளார். கொடுத்த பணத்தை கேட்டபோது தர தாமதமானதால் ஆத்திரமடைந்த ஜோதி, கவிதாவை தரக்குறைவாக பேசியதோடு சேலையை பிடித்து இழுத்து அடித்துள்ளார். இதனால் மனம் உடைந்த கவிதா வீட்டை விட்டு வெளியேறி, செம் பட்ட...
தமிழகம்
மினிபஸ்களின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
தூத்துக்குடி : மினிபஸ்களின் கட்டணத்தை எந்த காரணம் கொண்டும் உயர்த்தக் கூடாது என்று தமிழக அரசு  அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மினிமம் கட்டணம் 2 ரூபாயிற்கு மேல்  வசூலிக்க கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு 250 மினிபஸ்களுக்கு அரசு அனுமதியளித்து மாநிலம் முழுவதும் சுமார் 8 ஆயிரம...
General
ஸ்பெயின் அணி காலிறுதிக்கு தகுதி
கேப்டவுன்: தென்னாப்ரிகாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியும் போர்ச்சுக்கல் அணியும் மோதின. இப்போட்டியில் ஸ்பெயின் அணியின் வீரர் டேவிட் வில்லா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இதனையடுத்து காலிறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி பராகுவே அணியை சந்திக்க உள்ளது.
தமிழகம்
அரிவாள் வெட்டு
கூடலூர்: வண்டிப்பெரியார் அருகே நிலப்பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டியதில் அனிஷ் (26), வர்கீஸ் (22), ஆன்கி (24), மனோஜ் (26) ஆகிய நான்கு பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக இஞ்சிக்காடு குருசிமலையைச் சேர்ந்த குஞ்சுமோன் மற்றும் இவரது மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகம்
அலங்கார மீன் வளர்ப்பு பற்றிய மூன்று மாத கால பயிற்சி
தூத்துக்குடி,   தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் அலங்கார மீன் வளர்ப்பு பற்றிய மூன்று மாத கால பயிற்சி வகுப்பு நடக்கிறது.இது குறித்து தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் நந்திஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேலையற்ற, பள்ளியில்...
தமிழகம்
பஸ் மோதி சிறுமி பலி
தூத்துக்குடி : தூத்துக்குடியில் பஸ் மோதியதில் சிறுமி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது;  சக்திவிநாயகர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கம் மகள் கலைச்செல் வி(17).  டி.எம்.சி.காலனி மேல் பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த பஸ்  கலைச்செல்வி மீது மோதியதாக கூறப்படுகிறது.  படு...
தமிழகம்
லாட்டரி விற்றவர் கைது
போடி: போடி குலாளர்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் ரவி (40). இவர், அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய முயன்றுள்ளார். போடி டவுன் போலீசார் ரவியை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தமிழகம்
பணம் வசூல் செய்த யானையும், பாகனும் கைது
கோவில்பட்டி :   கோவில்பட்டியில் பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக யானையை பயன்படுத்தி பணம் சம்பாதித்ததாக பாகனையும், யானையையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; விளாத்திகுளம் தாலுகா நாகலாபுரத்தைச் சேர்ந்த கோபால் மகன் மாரிமுத்து(46). இவர் ரோகினி என்ற யாø னக்கு பாகனாக வேலை செய்து வருகி...
தமிழகம்
உடன்குடி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி
உடன்குடி, : உடன்குடி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருச்செந்தூர் தொகுதி அதிமுக., செயலாளர் நிதி உதவி வழங்கினார்.உடன்குடி புதுமனை வடக்கு தெருவில் வெள்ளையா மகன்கள் செந்தில்வேல், அழகுவேல், ரெத்தினவேல், முருகேசன், முத்துக்குமார் ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் வீ...
தமிழகம்
மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் முகாம்: மலை கிராம மக்கள் மனு
கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே அரசரடி கிராமத்தில் மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் முகாம் கலெக்டர் முத்துவீரன் தலைமையில் நடந்தது. இதில் மலை கிராமமக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் கோரி மனுக்கொடுத்தனர். டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி, தாசில்தார் ராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். க.மயிலை ஒன்றிய தலைவர் தமிழரசன், ஊராட்சி தலைவர் ச...
தமிழகம்
குடிசை வீடுகளை மாற்ற கோரிக்கை
தூத்துக்குடி, :  மீனவர்களுக்கு சுனாமி வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது குறித்து வீரபாண்டியபட்டணம் மீனவர்கள் சார்பில் நேற்று கலெக்டர் பிரகாஷிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது; நாங்கள் வீரபாண்டியபட்டணம் மீனவ கிராமத்தில் வசித்து வருகிறோம். தினமும் கடலுக்கு சென்ற...
தமிழகம்
நீர்தேக்கத் தொட்டியின் கீழ் வசித்த பெண்ணுக்கு பட்டா: கலெக்டர் அதிரடி
திருச்சி: திருச்சி கலெக்டரின் (பொ) மனிதநேயமிக்க நடவடிக்கையால், தொட்டியம் அருகே மேல்நீர்த்தேக்க தொட்டியின் கீழ், தனது மகளுடன் வசித்து வந்த, கணவனை இழந்த பெண்ணுக்கு, இலவச வீட்டுமனைப்பட்டா உள்பட வாழ்வாதாரத்துக்கான பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. திருச்சி மாவட்டம், தொட்டியம் ஏலூர்பட்டி கிராமத்தில் கணவனை இழந்த விஜயா, அவரது மகள...
தமிழகம்
நாளை வரும்முன் காப்போம் முகாம்
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டியில் நாளை வரும்முன் காப் போம் முகாம் நடக்கிறது. வட்டார மருத்துவ அதிகாரி சுரேஷ்குமார் கூறியதாவது; 2010-2011 ல் மாவட்ட அளவில் 84 வருமுன் காப்போம் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. இதன் தொடக்கமாக தேவதானப்பட்டி இந்து நடுநிலைப்பள்ளி வளாகத்தில் முதல் முகாம் நாளை காலை பத்து மணிக்கு துவங்குகிறது. மு...
தமிழகம்
சாக்கடை கலந்த குடிநீர் : கலெக்டரிடம் மனு
தூத்துக்குடி, :   ஆழ்வார்திருநகரியில் குடிநீர் கலங்கிய நிலையில் வருகிறது. இதனால் நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கலெக்டரிடம் மகளிர் குழு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.இது குறித்து ஆழ்வார்திருநகரி பொதுமக்கள் மற்றும் மகளிர் குழு சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது; எங்கள் ஊரில் சில ஆண்டுகளாக...
தமிழகம்
காதலனால் தாக்கப்பட்ட காதலி பலி
திருச்சி: திருச்சி பெரியமிளகுபாறை புதுத்தெருவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகள் சங்கீதா (21). இவருக்கும் ராஜாகாலனியைச் சேர்ந்த கார் டிரைவர் ராம்குமார் (24) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் காதலித்த விஷயம் இருவரின் வீட்டுக்கு தெரிந்ததும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பை மீறி காதலர்கள் ரகசியமாக சந்தித்...
தமிழகம்
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
உடன்குடி, :  உடன்குடியில் நடந்த மா வட்ட அளவிலான கிரிக்கெ ட் போட்டியில் கொட்டங்காடு அணி முதல் பரிசை வென்றது. உடன்குடி சிவலூர் தங்கையா நினைவு கோப்பைக்கான இரண்டாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி மூன்று நாட்கள் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து மெ õத்தம் 16 அணிகள் கலந்து கொண்டது. முதல் நாள் போட்டியை உடன்குட...
தமிழகம்
சட்ட விழிப்புணர்வு முகாம்
பெரியதாழை :  சாத்தான்குளத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்ட தின த்தை முன்னிட்டு சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. டிடிடிஏ., துவக்கப்பள்ளியில் நடந்த முகாமிற்கு மாவட்ட உரிமையியல் நீதிபதியும், வட்டசட்ட பணிக்குழு தலைவருமா ன ஜெயசுதாகர் தலை மை வகித்தார். ஓசார்ட் தொ ண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ்தர் வரவேற்றா...
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்
முசிறி: முசிறி அடுத்த வெங்கடாஜலபுரம் கிராமத்தில் உள்ள யூனியன் துவக்கப்பள்ளியில் வெளிநாடு வாழ் இந்திய நண்பர்கள் சார்பில் இலவச சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் நடராஜன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முசிறி உதவி தொடக்க கல்வி அலுவலர் புகழ...
தமிழகம்
நியூட்ரினோ ஆய்வு மையம் கலந்தாய்வு நடத்த முடிவு
தேவாரம்: நியூட்ரினோ சம்மந்த மான கிராம மக்கள் கொண்டுள்ள தேவையற்ற பயத்தை போக்க கலந்தாய்வு கூட்டம் நடத்த விஞ்ஞானிகள் குழுவினர் முடிவு செய்துள்ளனர். பொட்டிப்புரம், அம்பரப்பர் கரடு பகுதியில் இந்தியன் நியூட்ரினோ அப்சர்வேட்டரி(ஐ.என்.ஓ) ஆய்வுக் கூடம் அமைய உள்ளது. கிராம மக்களிடம் நியூட்ரினோ சம்மந்தமான விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவ...
தமிழகம்
பணம் கேட்டு மிரட்டுவதாக நகராட்சி ஊழியர்கள் மீது புகார்
தேனி: நகராட்சி ஊழியர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக ஓட்டல் உரிமையாளர்கள் நகராட்சி கமிஷனர் மோனி யிடம் புகார் செய்தனர். தேனி அல்லிநகரம் நகராட்சியில் ஓட்டல்கள் சுகாதாரமற்ற முறையில் செயல்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து கலெக்டர் முத்துவீரன் திடீர் சோதனை நடத்தினார். இதை தொடர்ந்து சுகாதாரம் குறித்த 16 நிபந்தனைகளை ஓட்டல்கள், பேக...
தமிழகம்
மாவட்ட ஆணழகன் போட்டி: திருச்செந்தூர் ஜிம் அணி சாம்பியன்
தூத்துக்குடி :    தூத்துக்குடி மாவட்ட ஆணழகன் சங்கம் சார்பில் நடந்த 13வது ஆண்டு ஆணழகன் போட்டியில் திருச்செந்தூர் கிங்காங் ஜிம் அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். தூத்துக்குடி மாவட்ட ஆணழகன் சங்கம் சார்பில் 13வது ஆண்டு மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி தூத்துக்குடியில் நடந்தது.  இந்த போட்டியில் தூத்துக்குடி, புத...
தமிழகம்
மாணவனை மீட்ட போலீசார்
பெரியகுளம்: லட்சுமிபுரம் நேதாஜிதெருவைச் சேர்ந்த ஜெயப் பிரகாஷ் மகன் அஜீத்குமார் (16). இவர், தேனி, தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள் ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியவர், "என்னை தேடவேண் டாம்', என கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியேறியுள்ளார். அஜீத்குமார் சித்தப்பா மோகன் கொடுத்த புகாரி...
தமிழகம்
பயணிகள் நலச்சங்கம் சார்பில் ரயில்களை நீட்டிக்க கோரிக்கை
தூத்துக்குடி :   தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சார்பில் திருநெல்வேலி வரும் ரயில்களை தூத்துக்குடி வரை நீட்டிக்க செய்ய நடவடிக்கை எடுக்கும்படி எம்.பி.,ஜெயதுரையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகர பயணிகளின் நலன் கருதி திருநெல்வேலி-நாகர்கோவில், கன்னியாகுமரி-திருநெல்வேலி ரயில்களை தூத்துக்குடி வரை நீ...
தமிழகம்
கொத்தனார் கைது
போடி,: போடி அருகே சிலமலையை சேர்ந்தவர் தங்கம் (43). இதே பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்(30). இருவரும் கொத்தனார் வேலை பார்த்து வருகின்றனர். வேலை செய்ததற்கு மொத்தமாக ஈஸ்வரன் சம்பளத்தை நேற்று பெற்றுள்ளார். தங்கம் சம்பளத்தை தர மறுத்த ஈஸ்வரன், அவரின் விரலை கடித்துள்ளார். போடி தாலுகா போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர்.
தமிழகம்
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு : மேலும் ஒருவர் கைது
திருச்செந்தூர் :  திருச்செந்தூர் அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவதுதிருச்செந்தூர் அருகேயுள்ள பூச்சிக்காடு குதிரைமொழி தேரிக்காட்டுப்பகுதியில் கடந்த மே மாதம் 4ம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்...
தமிழகம்
ராணுவவீரருக்கு கத்திக்குத்து
போடி: போடி டி.வி.கே.கே., நகரை சேர்ந்த ராணுவவீரர் முனிராஜா (26). இவர், தற்போது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று போடியிலிருந்து தேனிக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது போடி புதூரை சேர்ந்த குமார் (22) டி.வி.கே.கே., நகரை சேர்ந்த மகேந்திரன் (28) மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர்களும் சேர்ந்து வழிமறித்து...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள்
தேனி:க மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ல் நடக்கிறது. இதையொட்டி வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி, தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் ஈடுபடுத்த ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களை தொகுப்பூதிய அடி...
தமிழகம்
தூத்துக்குடி தாலுகா ஆபிசில் டி.ஆர்.ஓ., திடீர் ஆய்வு
தூத்துக்குடி, :  தூத்துக்குடி தாலுகா ஆபிசில் நேற்று டி.ஆர்.ஓ., திடீர் ஆய்வு மேற்கொண்டார். தாலுகா அலுவலக நடைமுறை பணிகள் முழுவதையும் நேரடியாக பார்த்தார். துணை முதல்வர் விசிட்டில் 350 பேருக்கு இலவச வீட்டுமனை பட் டா வழங்கும் பணியினை துரிதப்படுத்த வேண்டும் என்றும் டி.ஆர்.ஓ., துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். தூத்துக்குடி தா...
தமிழகம்
நகர் நல மையங்களில் டாக்டர்கள் நியமனம்
தேனி: மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 65 நகராட்சிகளில் செயல்படும் நகர்நல மையங்களில் டாக்டர்கள், பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. மாநிலம் முழுவதும் நகராட்சிகளில் செயல்படும் நகர்நல மையங்களில் பல ஆண்டுகளாக டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பிரசவம் மற்றும் சிகிச்சை வசதி ப...
தமிழகம்
குமரகுருபரர் சுவாமிகளுக்கு மணிமண்டபம் கட்ட கோரிக்கை
ஸ்ரீவைகுண்டம்  ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்ப்புலவர் குமரகுருபரர் சுவாமிகளுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்து தமிழுக்கு தொண்டு செய்த தமிழ்ப்புலவர் குமரகுருபரர் சுவாமிக்கு அர...
தமிழகம்
கரூர் நெசவாளர் சங்கம் கோரிக்கை
கரூர்: அரசு இலவச வேட்டி, சேலைக்கு பதிலாக கைத்தறி போர்வை வழங்கி கைத்தறி நெசவுக்கு வாழ்வளிக்க கரூர் மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன் தலைவர் சின்னுசாமி அறிக்கையில் உள்ளதாவது: கைத்தறி நெசவு தொழிலை ஊக்குவித்து , வாழ்வளிக்க சில நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். நிரந்தர வேலைவாய்ப்...
தமிழகம்
சேவைக்குறைபாடு செய்த வங்கி இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு
தேனி: முன்னாள் ராணுவ வீரருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சேவைக்குறைபாடு செய்த ஸ்டேட் வங்கி இழப்பீடு வழங்க வேண்டும் என தேனி நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சின்னமனூர் வ.ஊ..சி., நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரெங்கனாதன். முன்னாள் ராணுவ வீரரான இவர், ஓய்வூதியத்தை உத்தமபாளையம் ஸ்டேட் வங்கி மூலம் பெற்று வந்தார். இவரது ஓய்வூதியம...
தமிழகம்
பஸ்ஸ்டாண்டில் காட்சிப் பொருளாக நிற்கும் போலீஸ் தகவல் நிலையம்
சாத்தான்குளம்:  சாத்தான்குளம் பஸ்ஸ்டாண்டில் திறந்தது முதல் செயல்படாமல் இருக்கும் போலீஸ் தகவல் மைய த்தை செயல்படுத்த கூடுதலாக போலீசார் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். சாத்தான்குளம் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கவும், வெளியூரிலிருந்து திருச்செந்தூர், நாலுமாவடி போன்ற வ...
தமிழகம்
இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை
கோவில்பட்டி :    தீராத வயிற்றுவலி காரணமாக கோவில்பட்டியில் பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; கோவில்பட்டி அருகேயுள்ள புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியைச் சேர்ந்த ஜெயம் மகள் அன்னலட்சுமி(30). இவருக்கும், கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த தங்கமணி மகன் வடிவேல்முர...
தமிழகம்
நலிவுற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி பயில ஆவண கடிதம்; டி.என்.பி.எல்., சார்பில் வழங்கல்
வேலாயுதம்பாளையம்: காகிதபுரம் டி.என்.பி.எல்., நிறுவனத்தின் சமுதாய நலத்திட்ட பணியின் கீழ் இலவச தொழிற் பட்டப்படிப்பு மற்றும் டி.என்.பி.எல்., பள்ளியில் இலவச கல்வி பயில ஆவண கடிதம் வழங்கும் நிகழ்ச்சி ஆலை வளாகத்தில் நடந்தது. தமிழ்நாடு தொழில் நுட்பக்கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட திருச்சி சேஷாசாயி இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜ...
தமிழகம்
இரவு முழுவதும் கழிப்பறையில் தவித்த குழந்தை: காலையில் மீட்பு
தேனி: இரவு முழுவதும் பள்ளி கழிப்பறையில் தவித்த குழந்தையை காலையில் பொதுமக்கள் மீட்டனர். தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த கார்மேகத்தின் மகன் நவீன்குமார் (3). நேற்று மாலை 5.45 மணி வரை வீதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, பின் அருகில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் விளையாட சென்று விட்ட...
தமிழகம்
பூங்காவில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி :  தூத்துக்குடி பூங்காவில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்துபோலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி பாளை.,மெயின்ரோட்டில் மையவாடி அரு கே ஒரு விளையாட்டு பூங் கா உள்ளது. இந்த பூங்காவில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பே ரில் தென்பா...
தமிழகம்
சாலை விபத்தில் அரசு அலுவலர் பலி
குளித்தலை: குளித்தலை அருகே காணியாளம்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கரூர் மாவட்ட போலீஸ் அலுவலக கிளார்க் இறந்தார். குளித்தலை அருகே கொசூர் தொண்டமாங்கினைத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா(34). கரூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் "ஏ-2' கிளார்க்காக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் இரவாகியும் வீட...
தமிழகம்
குமரகுருபரர் சுவாமிகளுக்கு தபால்தலை: முத்துகுமாரசுவாமி தம்பிரான் மகிழ்ச்சி
ஸ்ரீவைகுண்டம், : அருந்தமிழ் புலவர் குமரகுருபரருக்கு செம்மொழி மாநாட்டில் தபால்தலை வெளியிட்டு சிறப்பு செய்தது மகிழ்ச்சியை அளிக்கிறது என ஸ்ரீவைகுண்டத்திற்கு வருகை தந்த கும்பகோணம் காசிமடத்தின் 21வது அதிபர் முத்துகுமாரசுவாமி தம்பிரான் தெரிவித்தார். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த குமரகுருபரர் சுவாமிகள...
தமிழகம்
ஆலோசனைக்கூட்டம்
கோவை: போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கான மையங்களில் பணியாற்றவுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
தமிழகம்
புன்னைநகர் வனதிருப்பதி கோயிலில் வருஷாபிஷேகம் விழா
உடன்குடி :  புன்னைநகர் வனதிருப்பதி கோயிலில் வருஷாபிஷேகம் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குரும்பூர் அருகே புன்னைநகர் வனதிருப்பதி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு  நேற்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு நித்திய பூஜையும், அதை தொடர்ந்து இரண்டாம் யாகசாலை பூஜைய...
தமிழகம்
கணவன் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்செந்தூர்,: திருச்செந்தூர் அருகே மனைவியை பிரிந்த ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி தோட்டக்காரன் விளையைச் சேர்ந்தவர் மந்திரம் மகன் அரிஹரபுத்திரன்(40). இவர் தனது தந்தையின் கிரில் பட்டறையில் வேலை செய்து வந்தார்.  இந்நிலைய...
தமிழகம்
மாதா, அந்தோணியார் கெபி அடித்து உடைப்பு
தூத்துக்குடி, :  தூத்துக்குடியில் காம்பவுண்டு சுவரில் அமைக்கப்பட்டிருந்த மாதா, அந்தோணியார் கெபியை மர்ம ஆசாமிகள் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,தூத்துக்குடி லயன்ஸ் டவுனில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் வில்லியம்ஸ் என்பவர் கா...
தமிழகம்
நலிவுற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி பயில ஆவண கடிதம்; டி.என்.பி.எல்., சார்பில் வழங்கல்
வேலாயுதம்பாளையம்: காகிதபுரம் டி.என்.பி.எல்., நிறுவனத்தின் சமுதாய நலத்திட்ட பணியின் கீழ் இலவச தொழிற் பட்டப்படிப்பு மற்றும் டி.என்.பி.எல்., பள்ளியில் இலவச கல்வி பயில ஆவண கடிதம் வழங்கும் நிகழ்ச்சி ஆலை வளாகத்தில் நடந்தது. தமிழ்நாடு தொழில் நுட்பக்கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட திருச்சி சேஷாசாயி இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜ...
தமிழகம்
துணைமுதல்வர் வருகை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
தூத்துக்குடி,  : தூத்துக்குடியில் நேற்று துணை முதல்வர் வருகை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டார். விரைவாக துறைவாரியாக வழங்க உள்ள விபரத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்க உத்தரவிட்டார். தூத்துக்குடியில் ஆகஸ்ட் 5ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் வருகிறார். மாநகராட்சி புதிய கட்டடத்தை திறந்து வைக்கி...
தமிழகம்
கோவில்பட்டியில் பொதுமக்கள் திடீர் மறியல்
கோவில்பட்டி, : கோவில்பட்டி கூட்டுறவு பண்டகசாலையில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் அம்பேத்கர் சிலை பின்புறம் அரசுக்கு சொந்தமான மண்ணெண்ணெய் பல்க் உள்ளது. இதிலிருந்து நகரில் இருக்கும் சுமார் 16 ரேசன் கடைகளில் 10 ஆயிரத்து 300 ரேசன் கார்டுகளுக்கு மண்ண...
தமிழகம்
இலவச கைத்தறி போர்வை திட்டம் கரூர் நெசவாளர் சங்கம் கோரிக்கை
கரூர்: அரசு இலவச வேட்டி, சேலைக்கு பதிலாக கைத்தறி போர்வை வழங்கி கைத்தறி நெசவுக்கு வாழ்வளிக்க கரூர் மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன் தலைவர் சின்னுசாமி அறிக்கையில் உள்ளதாவது: கைத்தறி நெசவு தொழிலை ஊக்குவித்து , வாழ்வளிக்க சில நடவடிக்கைகளை அரசு மேற்கெ õள்ள வேண்டும். நிரந்தர வேø லவாய்...