category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | மங்களூரு விமான விபத்து : இரண்டாம் கட்ட விசாரணை | மங்களூரு : மங்களூரில் கடந்த மே மாதம் நடந்த விமான விபத்தில் 158 பேர் பலியாயினர். இதுகுறித்து விசாரிப்பதற்காக மத்திய அரசு சார்பில், விமானப் படையில் பணியாற்றி ஓவு பெற்ற கோகலே தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், விபத்து நடந்த பகுதியில் சென்று ஆவு மேற்கொண்டனர். மேலும், மங்களூரு விமான நிலைய அதிகார... |
தமிழகம் | சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள் : ரோட்டோர பெஞ்சாக மின் கம்பங்கள் | முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பகுதியில் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளபோது, மின்வாரியத்தினர் அஜாக்கிரதையால் ரோட்டோரங்களில் நூற்றுக்கணக்கான மின்கம்பங்களை அடுக்கி வைத்து, பெஞ்சுகளாக மாற்றி சாதனை புரிந்துள்ளனர். ரோட்டோரங்கள், தெருக்களில் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சேதமடைந்து கீழே சாய... |
தமிழகம் | ஆராய்ச்சி மையம் துவக்க விழா | கீழக்கரை : கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் உணவு, ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து சம்பந்தமான ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் நடப்பாண்டில் அனுமதி வழங்கியது. இதன் துவக்கவிழா அழகப்பா பல்கலைக்கழக கல்லூரி வளர்ச்சி குழு டீன் டாக்டர் குருமூர்த்தி தலைமையில் நடந்தது. கல்லூரி மாணவி ஆய... |
தமிழகம் | கோயில் கும்பாபிஷேகம் | திருவாடானை : திருவாடானை மேலத்தெரு முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை சிவாச்சாரியார்களால் வேதமந்திரங்கள் ஓதபட்டது. பூரண கும்பத்தில் உள்ள புனித நீர் ,முத்துமாரியம்மன் கோயிலை மூன்று முறை வலமாக எடுத்து செல்லபட்டது. கருடபகவான் வானில் வட்டமிட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 10.45 ம... |
தமிழகம் | திருப்புல்லாணி ஒன்றியத்தில் ரூ .2.83 கோடியில் திட்டபணி | கீழக்கரை : திருப்புல்லாணி ஒன்றியத்தில் கடந்தாண்டில் 2.83 கோடி ரூபாய் செலவில் வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு, 6ஆயிரத்து38 குடும்பங்கள் பலன் அடைந்துள்ளனர். இது தொடர்பாக வசந்தி பி.டி.ஓ.,(ஊராட்சி) கூறியதாவது: இங்குள்ள 33 ஊராட்சிகளில் நாள்தோறும் 30 க்கும் அதிகமான ஊராட்சிகளில் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. ஒன... |
தமிழகம் | ரோட்டோர தொட்டிகளிலே குடிநீர் சப்ளை | முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பகுதி ரோட்டோர தொட்டிகளில் மட்டுமே காவிரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வரும் நிலையில் , கிராம பகுதிகளுக்கு சப்ளை இல்லாததால், இத்திட்டமும் நரிப்பையூர் குடிநீர் திட்டம்போல் பராமரிப்பின்றி முடங்குமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர் .கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் தாலுகா பகுதிகளில் கடும் குடிந... |
தமிழகம் | துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு | ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணா துரை சிலை திறக்க நேற்று காலை சென்னையிலிருந்து ரயிலில் வந்த துணை முதல்வர் ஸ்டாலினுக்கு கட்சியினர் மற்றும் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கலெக்டர் ஹரிஹரன் , பிரதீப்குமார் எஸ்.பி., அமைச்சர்கள் தங்கவேலன், திட்ட அலுவலர் பாலசுப்பிர மணியம் , பெரியகருப்பன், சாத்தூர் ராமசந்திர... |
தமிழகம் | போஸ்ட் மாஸ்டருக்கு சிறை | ராமேஸ்வரம் : தங்கச்சிமடம் போஸ்ட் மாஸ்டர் ரானுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜெயந்திராணி, இங்குள்ள போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கில் 78 ஆயிரத்து 890 , இதே பகுதியை சேர்ந்த சவுரியாபிச்சை 19 ஆயிரம் ரூபாய் என தனியாக செலுத்தியிருந்தினர். கணக்கு முதிர்வடைந்த நிலையில் பணத்தை ... |
தமிழகம் | விவசாயிகள் சங்க கூட்டம் | பரமக்குடி : தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராமுத்தாயி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் கலைமணி அறிக்கை தாக்கல் செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் நகர் செயலாளர் பெருமாள், துணைசெயலர் வெங்கிடசாமிராஜூ கலந்து கொண்டனர். விவசாயிகளின் பயிர் காப்பீடு திட்டத்தை முறைப்படுத்தி விரைந்து வழங்க வேண்டும் என்ப... |
தமிழகம் | திருட்டு வழக்கில் இருவர் கைது | திருவாடானை : திருவாடானை அருகே பாரூரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான சைக்கிள், அதே கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரத்திற்கு சொந்தமான மொபைல் போன் ,சில மாதங்களுக்கு முன் திருட்டு போனது. திருவாரூரை சேர்ந்த காளிமுத்து, எலுமிச்சம்பாளையத்தை சேர்ந்த தியாகராஜன் ஆகியோரை திருவாடானை போலீசார் கைது செய்தனர். திருவாடானை மாஜிஸ்... |
தமிழகம் | மருந்து வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா | பரமக்குடி: பரமக்குடி மருந்து வியாபாரிகள் சங்க பொதுக் குழு கூட்டம், மூத்த உறுப்பினர்களுக்கு பாராட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு என முப்பெரும் விழா நடந்தது.தலைவர் இளங்கோவன் தலைமையில், செயலாளர் நாகரெத்தினம், ஜெகதீசன், மாதவன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அப்துல் ரகுமான், கோவிந்தராஜன், சுப்பிரமணியன், சுகுமாறன்,... |
இந்தியா | ஷீரடி கோவிலுக்கு ரூ. 5 கோடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் | மும்பை : மகாராஷ்டிர மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு, 5 கோடி ரூபாயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இனி திருடர்கள் அல்லது பயங்கரவாதிகள் யாராவது கோவிலினுள் நுழைந்தாலே நிர்வாகிகள் உஷாராகி விட முடியும். ஷீரடி சாய்பாபா கோவிலில் சமீப காலங்களில் நடந்த 500 சங்கிலி பறிப்ப... |
தமிழகம் | கல்வி வளர்ச்சி நாள் | பரமக்குடி: பரமக்குடி ஆர்.எஸ்.அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் ஜெயக்குமார் தலைமையில், உதவிதலைமையாசிரியர் முகமது இஸ்மாயில் வரவேற்றார். காமராசரின் பெருமைகளை பற்றி ஆசிரியர்கள் சூரன், ரோஸ்குமார், கண்ணன், இலக்கிய மன்ற பொறுப்பாசிரியர் சோனைமுத்து மாணவர்களுக்கு ... |
தமிழகம் | புதிய வழித்தடத்தில் அரசு பஸ் துவக்கம் | கமுதி: கமுதி ஒன்றியத்துக்குபட்ட ஆசூர் கிராமத்திற்கான புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகவேல் துவக்கி வைத்தார். ஆசூர் கிராமத்திற்கு அரசு, தனியார் பஸ்கள் இல்லாததால் ,நகர் பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் கிராம மக்கள் தவித்து வந்தனர். இதனால் இவர்கள் இடம் பெயரும் அவல நிலைக... |
தமிழகம் | அரசு பஸ் டிரைவரை தாக்கிய போலீசார் : திடீர் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு | முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் அரசு பஸ் டிரைவரை போலீசார் தாக்கியதால் இரண்டு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்தது.முதுகுளத்தூரில் நேற்று வாரச்சந்தை நாள் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. திருட்டு அதிகமாக நடைபெறுவதால் போலீசாரும் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். பாலமுருகன் எஸ்.ஐ. , தலைமையில் பாதுகாப்பு பணி... |
தமிழகம் | பாம்பன் பாலத்தில் ராட்சத கிரேன் உதவியுடன் பணிகள் | ராமேஸ்வரம் : பாம்பன் தூக்கு பாலத்தின் வலுவை அதிகப்படுத்த ராட்சத கிரேன் உதவியுடன் இரும்பு குழாய் பொருத்தும் பணி நடந்தது.பாம்பன் ரயில் பாலம் மையத்தில் கப்பல் செல்வதற்காக திறக்கப்படும் ஜெட்ஜர் தூக்குபாலத்தின் வலுவை அதிகப்படுத்துவதற்கு, கடலுக்குள் பாலத்தை தாங்கி நிற்கும் நான்கு தூண்களுக்கு அருகில் மேலும் நான்கு தூண்களை கட்... |
தமிழகம் | தமிழக மீனவர்களை விரட்டியடித்து மீன்களை பறித்த இலங்கை கடற்படை | மண்டபம் : தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து மீன்களை பறித்தனர்.தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும், ,வலைகளை நாசப்படுத்துவதும் தொடர்கிறது. இந்நிலையில் ராமேஸ்வரம்,மண்டபம் பகுதியிலிருந்து நேற்று முன் தினம் 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்து க... |
தமிழகம் | கோவை காதல்ஜோடிக்கு ராமேஸ்வரத்தில் திருமணம் | மண்டபம் : கோவை மாவட்டம் குரும்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(30). வெல்டிங் பட்டறை வைத்துள்ள இவரும் , பக்கத்து வீட்டை சேர்ந்த சுகானாபேகமும்(21) பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இருவர் வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்க, வீட்டை விட்டு ஓடினர்.ராமேஸ்வரம் வந்த இவர்கள் அங்குள்ள நம்புநாயகி அம்மன் கோவிலில் நேற்று திருமணம் செய்த... |
தமிழகம் | அ. தி. மு. க., சரிவை தூக்கி நிறுத்த ஜெயலலிதா முயற்சி : துணை முதல்வர் ஸ்டாலின் பேட்டி | ராமநாதபுரம் : ''அ.தி.மு.க.,வின் சரிவை தூக்கி நிறுத்தவே ஜெயலலிதா முயற்சி செய்து வருவதாக,''தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார். ராமநாதபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மின்சார பற்றாக்குறை தொடர்பாக, தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் மின்வாரிய அதிகாரிகளுடன் 19ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து மின்... |
தமிழகம் | போடியில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி தாமதம் | போடி : போடியில் 42 லட்சம் ரூபாய் மதிப்பில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கி ஓராண்டிற்கு மேலாகியும் பணிகள் முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. போடி நகராட்சி மயனத்தில் இறந்தவர்களை புதைத்தும், எரித்தும் வருகின்றனர். நகராட்சி பகுதியில் இறந்தவர்களின் உடல்களை மயானத்தில் திறந்தவெளியில் எரிப்பதால் பொதுமக்களுக்கு சுகாதார ... |
தமிழகம் | நிர்வாகிகள் தேர்வு | போடி : போடி ஏலக்காய் நகர் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு முன்னாள் லயன்ஸ் ஆளுனர் நாகராஜன் தலைமையில் நடந் தது. புதிய தலைவராக சிங்கராஜ், செயலாளராக ஜெயக்கண்ணன், செயல்பாடு செயலாளராக ரத்தினவேல் பாண்டியன், பொருளாளராக சவுந்திரராஜன் தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக் கான சீருடைகள் வழங்கப் பட்டது. பள்ளி... |
தமிழகம் | பாரட்டு விழா | தேவதானப்பட்டி : வடுகபட்டி வி.கே. எஸ்., பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி பாரதிக்கு பாராட்டுவிழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலமுருகன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சங்கரநாராயணன் பரிசு வழங்கினார். |
தமிழகம் | மைனர் பெண் கடத்தல் புகார் மீது : உடனடி நடவடிக்கைக்கு உத்தரவு | கம்பம் : பெண் கடத்தல் தொடர்பான புகார் களில் போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மைனர் பெண்கள் கடத்தப்பட்டு, திருமணம் செய்வது அதிகரித்து வருகிறது. கடத்தப்படும் பெண்களின் பெற்றோர் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் தரும் போது, போலீசார் போதிய வேகம் காட்டி நடவடிக்க... |
தமிழகம் | தேவாரத்தில் திறக்கப்படாத நூலக கட்டடம் | தேவாரம் : தேவாரம் கிளை நூலகம் ரங்கநாதர் கோயில் வளாகத்தில் உள்ள வாடகை கட்டடத்தில் இயங்கிவருகிறது. பத்தாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இங்கு உள்ளன. வாசகர்கள் அமர்ந்து படிக்கவும், புத்தகங்களை பாதுகாக்கவும் போதிய இடவசதி யில்லை. எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு மேல் நிலைப் பள்ளிக்கு ... |
தமிழகம் | மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா | தேனி : தேனி மாவட்டம் முழுவதும் நேற்று காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. குச்சனூர் அரசு பள்ளியில் நடந்த விழாவில் முதன்மைக்கல்வி அலுவலர் செல்வக்குமார் 100 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கினார். டி.சுப்புலாபுரம் அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை பாண்டியம்மாள் தலைமை வக... |
தமிழகம் | டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் | தேனி :மத்திய அரசின் மூன் றரை ஆண்டு மருத்துவ படிப்பு, ஆஸ்பத்திரி ஒழுங்குமுறை சட்டத்தை எதிர்த்தும், இந்திய மருத் துவ கவுன்சில் கலைக்கப்படுவதை கண்டித்தும் தேனியில் டாக்டர்கள் ஆர்ப்பாட் டம் நடத்தினர்.இந்திய மருத்துவக் கவுன்சில் கிளையின் முன் னாள் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். கம் பம் பள்ளத்தாக்கு கிளை தலைவர் கருணைக்கடல்... |
தமிழகம் | உண்ணாவிரதம் | தேனி :அனைத்து ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் ஒரு நபர் கமிஷன் அறிக்கையை வெளியிட்டு அமல்படுத்த வலியுறுத்தி தேனியில் உண்ணாவிரத போராட்டம் நடந் தது. மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். துணைத்தலைவர் கந்தசாமி, சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் பேயத்தேவன், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கனக... |
தமிழகம் | மாணவர்கள் கடத்தல் இருவர் மீது வழக்கு | தேனி :தேனியில் மாணவர்களை கடத்தியதாக இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி பாரஸ்ட் ரோட்டை சேர்ந்தவர் தனம் (33). இவரது மகன் நவீன்குமார் (14). இவர், தேனியிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவரை கடந்த 12 முதல் காணவில்லை. இவரது பெற்றோர் சுப்பன்செட்டி தெருவை சேர்ந்த சிக்கந்தர் என்பவரிடம் விசாரித்தனர். அ... |
தமிழகம் | வீடு புகுந்து நகை திருட்டு | தேவதானப்பட்டி: மேல்மங்கலம் கல்லுக்கட்டு, வடக்குத்தெரு ராஜவடிவேல் மகன் ரகுபதி நேற்று முன்தினம் இரவு இவர், வீட்டு மாடியில் தூங்கியுள்ளார். மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து பீரோவை உடைத்து எட்டரை அரை பவுன் தங்கநகை மற்றும் பத்து ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றுள்ளனர். ரகுபதி கொடுத்த புகாரில் இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டி விசாரித... |
தமிழகம் | மாணவன் மாயம் | ஜெயமங்கலம்:ஜெயமங்கலம் நடுப்பட்டி காலனி காமாட்சி மகன் கர்ணன் (15). இவர், ரெங்கசமுத்திரம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூன் 26 ல் செம்மொழி மாநாடு விடுமுறையில் வீட்டிற்கு வந்துவிட்டு பள்ளி சென்றுள்ளார். ஜூலை 2 ல் பெற்றோர்கள் பள்ளி சென்று பார்த்த போது கர்ணன் பள்ளியில் இல்லை. ஆசிரியர்களும் விடுமுற... |
தமிழகம் | போலி ஆவணம்: இருவர் கைது | தேனி:கோர்ட்டில் போலி ஆவணம் தயாரித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். உத்தமபாளையம் ஆர்.சி., கீரைமேட்டுத்தெருவை சேர்ந்தவர் தமிழரசி. இவருக்கு தேனி ஜே.எம்., கோர்ட் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேல் முறையீடு செய்வதற்காக தமிழரசி விண்ணப்பித்தார். இவருக்கு ஆதரவாக உத்தமபாளையம் அம்மாபட்டியை சேர்ந்த விருமாண்டி (60), ஈஸ்வரன... |
தமிழகம் | ஒருவர் கைது | மூணாறு: மாட்டுப்பட்டி எஸ்டேட் குட்டியார் டிவிசனைச் சேர்ந்தவர் பாலமுருகன் (47). இவர், மூணாறு அரசு மதுக்கடையில் மதுபாட்டில்களை வாங்கி விற்பதற்காக சென்று கொண்டிருந்தார். எஸ்.ஐ., அணில்குமார் சோதனை செய்து பத்து லிட்டர் மதுவகைகளை கைப்பற்றினார். |
தமிழகம் | கத்திகுத்து: ஒருவர் கைது | பெரியகுளம்:ஜி.கல்லுப்பட்டி இந்திராகாலனியைச் சேர்ந்தவர் பாண்டி (38). இவரது தங்கை செல்விக்கும் கணவர் முத்தையாவிற்கும் இரண்டு ஆண்டுகளாக குடும்ப பிரச்னை இருந்துவந்துள்ளது. செல்விக்கு ஆதரவாக பாண்டி பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்தையா, கத்தியால் பாண்டியை குத்தினார். தேவதானப்பட்டி போலீசார் முத்தையாவை கைது செய்தனர். |
தமிழகம் | மனைவி கொலை: கணவர் கைது | கூடலூர்:மிரட்டுவதற்காக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியவர் மீது தீ பற்றவைத்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். கூடலூரை சேர்ந்தவர் வீரர்அப்துல்லா (31). இவரது மனைவி சபீனா (30). கணவன், மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த சபீனா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு... |
தமிழகம் | டிராக்டர் மோதி விவசாயி பலி | பெரியகுளம்: ஏ.மீனாட்சிபுரம் காலனிதெருவைச் சேர்ந்தவர் விவசாயி நாச்சன் (40). இவர், டிராக்டரில் வீட்டிற்கு வந்தவர், வண்டியில் இருந்த சாவியை எடுக்காமல் அருகே உறவினரிடம் பேசிக்கொண்டிருந்தார். இவரது மகள் பானுமதி (6) டிராக்டரில் ஏறி "ஸ்டேரிங்' கை பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார். எதிர்பாராமல் டிராக்டர் இயங்கியது. பானுமதி, டி... |
தமிழகம் | போலீசுக்கு தெரியாமல் பிணம் எரிப்பு | பெரியகுளம்: தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்தாக கணவர் உட்பட நால்வரை வடகரை போலீசார் கைது செய்தனர். பெரியகுளம் வைத்தியநாதபுரம் பேச்சிமுத்து நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (32). இவரது மனைவி ஈஸ்வரி (26). மனநிலை சரியில்லாத இவர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். மதுரை அரசு ஆஸ்பத்திரிக்க... |
தமிழகம் | வரதட்சணை கொடுமையால் : மனைவி கொலை: கணவர் கைது | தேவதானப்பட்டி : வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கி கொலை செய்ததாக கெங்குவார்பட்டியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி மனோகரனை போலீசார் கைது செய்தனர். கெங்குவார்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்த பின்னியப்பன் மகன் மனோகரன் (28). தென்னை மரம் ஏறும் தொழிலாளியான இவருக்கும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கல்லூத்து கிராமத்தை சேர்ந்த ... |
General | பின்லேடன் மகன் அமெரிக்கா மீது மோகம் | லண்டன்: ஆப்கானி்ன் தாலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஓசாமா பின்லேடனின் மகன் ஓமர் பின் லேடன் அமெரிக்க கலாச்சார மோகத்தில் திளைத்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அமெரிக்காவின் புகழ்பெற்ற சினிமா நடிகை பாரிமோரின் நடிப்பை புகழந்து தள்ளியுள்ளார். அவரை நேரில்பார்க்க விரும்புவதாகவும் ஹாலிவுட்டின் அழகான பெண்மணி என்றும் அ... |
தமிழகம் | சிவப்பு கம்பளி பூச்சிகளை அழிக்க வேளாண் அதிகாரிகள் யோசனை | குஜிலியம்பாறை : கோடை உழவு செய்து சிவப்பு கம்பளி பூச்சிகளை அழிக்க விவசாயிகளை வேளாண் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.குஜிலியம்பாறை பகுதியில் தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்யலாம். கடந்த பருவத்தில், மானாவாரியாக சாகுபடி செய்யப் பட்ட நிலக்கடலை பயிரில், ஆங்காங்கே தென் பட்ட வளர்ந்த புழுக்கள், கூட்ட... |
தமிழகம் | வி.குரும்பப்பட்டி ஸ்ரீநாகம்மாள் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் | கோபால்பட்டி : சாணார்பட்டி ஒன்றியம் வி.குரும்பப்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீநாகம் மாள் கோயிலின் நூதன ஆலய விக்ரக அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டி கிராமம் வி.குரும்பப்பட்டியில் புதி தாக கட்டப்பட்ட ஸ்ரீநாகம்மாள் திருக்கோயில... |
தமிழகம் | மழையால் சரிந்த கொடைக்கானல் ரோடு | கொடைக்கானல் : கொடைக்கானல் - மூஞ்சிக்கல் இடையே மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தார்சாலை சேதமடைந்தது.கொடைக்கானல், பள் ளங்கி, வில்பட்டி, பூம் பாறை, நாயுடுபுரம் உள் ளிட்ட பகுதிகளுக்கு செல்ல மூஞ்சிக்கல் சாலை முக்கியமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை, சாலையின் பக்கவாட்டில் நீர் ஊற்று காரணமாக மூஞ்சிக்கல் ரோடு... |
தமிழகம் | ஆக்கிரமிப்பு அகற்றம் | மஞ்சூர் : மஞ்சூர்-கீழ்குந்தா சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.மஞ்சூரில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மஞ்சூர் பஜாரில் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு செய்து கற்கள் நட்டனர். கடந்த 1... |
தமிழகம் | ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க ஆர்ப்பாட்டம் | பந்தலூர் : பந்தலூர் அம்பலவயல் அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்ய வலியுறுத்தி, பி.டி.ஏ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கூடலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பந்தலூர் அருகே அம்பலவயல் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழ் மற்றும் மலையாள வழியில் கல்வி போதிக்கப்படும் இப்பள்ளியில் தம... |
தமிழகம் | ஒரு நபர் கமிஷனை உடனடியாக அமல்படுத்த : வலியுறுத்தி அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம் | திண்டுக்கல் : ஊதிய குறைபாடுகளையும், முரண்பாடுகளையும் களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு அறிக் கையை உடனடியாக வெளியிட வேண்டும் என் பதை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர்.ஊதிய மாற்றத்தில் உள்ள குறைபாடுகளையும், முரண்பாடுகளையும் களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு அறிக்கை யை உடனடியாக வெளியிட வேண்டும... |
தமிழகம் | மது குடிக்க எதிர்த்தவருக்கு கத்திக்குத்து | திண்டுக்கல் : திண்டுக்கல் அருகேயுள்ள என்.பஞ்சம்பட்டி யை சேர்ந்தவர் குமரேசன் (27). இவர் தனது தந் தையுடன் சேர்ந்து மது குடிக்க கூடாது என்று அதே பகுதியை சேர்ந்த விசுவாசத் தை கண்டித்துள்ளார். இருவருக்கும் தகராறு ஏற் பட் டுள்ளது. ஆத்திரமடைந்த விசுவாசம் கத்தியால் குமரேசனை குத்தினார். |
தமிழகம் | போராட்டம் நடத்த தே.மு.தி.க., முடிவு | பந்தலூர் : மக்கள் பிரச்னைகளை மையமாக வைத்து போராட்டத்தில் ஈடுபட தே.மு.தி.க.வினர் முடிவு செய்துள்ளனர்.நெல்லியாளம் நகர தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் தேவாலா-வில் நடந்தது. இதில், விலைவாசி உயர்வு மற்றும் மக்களின் பிரச்னைகளை மையமாக வைத்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது; தேயிலை விலை வீழ்ச்சி, மணல் கடத்தல் ப... |
இந்தியா | இந்திய எல்லை பகுதியில் பாக்.,ராணுவம் வாலாட்டல் | ஜம்மு: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ள பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவ நிலைகளின்மீது பாக்.,ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இந்திய ராணுவமும் பதிலடி தந்தது. மீண்டும் மீண்டும் தாக்குதலை தொடர்ந்து நடத்தியது பாக்., ராணுவம் . இந்திய ராணுவத்தின் 5 நிலைகளின் மீது நடத்தப்பட்ட இந்த த... |
தமிழகம் | கும்பாபிஷேகம் | கூம்பூர் :புங்கம்பாடி ஊராட்சி ஆத்துமேட்டில், காவேரியம்மன், முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவில், தீர்த்தம் அழைத்தல், முதல்கால யாகபூஜை, தீபாராதனையை தொடர்ந்து மஹா கும்பாபிஷேகம் நடந்தது. ஆத்துமேடு, புங்கம் பாடி உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் பங்கேற்றனர். முத்துப்பாண்டி தலைமையிலான நிர்வா... |
தமிழகம் | மண் சரிவை தடுக்க மணல் மூட்டைகள்; முன்னெச்சரிக்கை பணிகளில் வேகம் | குன்னூர் : குன்னூரில் அவ்வப்போது பெய்யும் மழையின் பாதிப்பில் இருந்த தப்பிக்க நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையோர கல்வெட்டு அடைப்பை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது; நிலச்சரிவு, மண் சரிவு அபாயங்களை தவிர்க்க 2,500 மணல் மூட்டை கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.நீலகிரியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சில சமயங்களில் கன ... |
தமிழகம் | பெண் கடத்தல் | வடமதுரை :திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட் டியை சேர்ந்த சின்னராஜ் மகள் கலைச்செல்வி(20). இவருக்கு திருமண நிச்சயத்தார்த்தம் நடக்க இருந்தது. இந்நிலையில் இதே ஊரைச் சேர்ந்த உறவினர்களான முரளி, சந்தானம், சதீஸ், ரமேஷ், செந் தில், மணி, ஜெயபிரகாஷ், முத்துக்குமார் மற்றும் 3 பேர் ஆயுதங்களுடன் வீட் டிற்குள் அத்துமீறி நுழை ந்து, ம... |
தமிழகம் | ஆடி மாத மழையை நம்பி நெல் விதைக்கும் விவசாயிகள் | கூடலூர் : கூடலூர் பகுதியில் பருவ மழை குறைந்துள்ள நிலையிலும், விவசாயிகள் ஆடி மாத மழையை நம்பி நெல் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கூடலூர் பகுதி மலை குன்றுகள் மற்றும் வயல் வெளிகள் கொண்ட நிலப்பரப்பை கொண்டது. இங்குள்ள மலை பகுதிகளில் நீண்ட காலம் பயன்தரும் தேயிலை, காபி மற்றும் ஊடுபயிராக குறுமிளகு, பாக்கு, கிராம்பு போன்ற... |
தமிழகம் | டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் | திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கிராமப்பற மக்களுக்கென தனியாக மருத்துவர்களை பயிற்சி அளித்து பணியில் அமர்த்தும் முறையை கைவிட வேண் டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர். இந்திய மருத்துவ சங்க திண்டுக்... |
தமிழகம் | பயணப்படி வழங்காததை கண்டித்து ஆசிரியர்கள் தர்ணா | திண்டுக்கல் :மூன்று மாதமாக பயணப்படி வழங்காததை கண்டித்து அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் திண்டுக்கல் நேருஜி நகராட்சி பள்ளியில் தர்ணா போராட்டம் நடந்தது.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நியமிக் கப்பட்ட வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயணப்படி பிற மாவட்டங் களில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திண... |
தமிழகம் | கைலாசநாதர் கோயில் பூஜை பிரச்னை : அர்ச்சகர் நியமனத்தில் துரிதம் தேவை | பழநி : ஏ.கலையம்புத்தூர் கைலாசநாதர் கோயிலில், தடையின்றி பூஜை நடக்கும் வகையில் அர்ச்சகர் நியமனத்தை துரிதப்படுத்த வேண்டும்.பழநி அருகே ஏ.கலையம்புத்தூரில் கைலாசநாதர் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு, ஏராளமான ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துகள் உள்ளன. குத்தகைக்கான வரவினங்கள் இருந்தபோதும், வசூலாவதில் பிரச்னைகள் நீடிக்கிற... |
தமிழகம் | சாலையோரங்களில் செடிகளால் மூடி மரம் பதுக்கல் | மஞ்சூர் : மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் வனத்துறையினர் சிலரின் உடந்தையுடன் மரங்கள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெற்கு வனக்கோட்டத்தில் அதிகளவிலான சோலை மரங்களும், அரிய வகை மரங்களும் உள்ளன. கடந்த சில மாதங்களாக இந்த கோட்டத்துக்கு உட்பட பகுதிகளில் மரக்கடத்தல் அதிகரித்து வருகிறது... |
தமிழகம் | நகை திருட்டு | பழநி : பழநி அடிவாரம் ரோட் டில் பழக்கடை நடத்தி வருபவர் பழனிச்சாமி. 2009 அக். 1ல் இவரது கடை பணப்பெட்டியில் வைத்திருந்த, ஒன்பது பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. இதன் மதிப்பு ஒரு லட் சத்து பத்தாயிரம் ரூபாய் ஆகும். பழனிச் சாமி புகாரின்பேரில், தேவர் தோட் டத்தைச் சேர்ந்த செந்தில் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
தமிழகம் | மாற்று திறனுடைய குழந்தைகளை கண்டறியும் விழிப்புணர்வால் பயன் | கூடலூர் : கூடலூரில் மாற்று திறனுடைய குழந்தைகளை கண்டறியும் விழிப்புணர்வு பேரணி மற்றும் கள ஆய்வு மூலம் 60 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கூடலூர் கிராம பகுதிகளில் உள்ள மாற்று திறனுடைய குழந்தைகள் குறித்து விபரங்களை அறியும் வகையில், கடந்த 7ம் தேதி முதல் விழிப்புணர்வு பேரணி மற்றும் கள ஆய்வு நடந... |
தமிழகம் | நாடுகாணி சோதனை சாவடியில் வன ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லை | கூடலூர் : கூடலூர் நாடுகாணி வன சோதனை சாவடி அருகே வன ஊழியர்கள் பாதுகாப்பாக பணியாற்றும் வகையில், நிரந்தர குடில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக - கேரளா எல்லையான நாடுகாணியில் கேரளா மாநிலம் செல்லும் சாலையில் வன சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடிக்கு சுமார் 20 அடி தூரத்தில் தாழ்வான பகுதியில் வனத்துறைக்கு... |
தமிழகம் | ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பீன்ஸ் விலை அதிகரிப்பு | ஒட்டன்சத்திரம் : வரத்து குறைந்துள்ளதால் ஒட்டன்சத்திரத்தில் பீன்ஸ் விலை கிலோவிற்கு 5 ரூபாய் வரை உயர்ந் துள்ளது.ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள மலைப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட பீன்ஸ் ஒட்டன்சத்திரம் மார்க் கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக உள்ளூர்,மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து ஒட்டன்சத்திரம... |
தமிழகம் | மதுக்கடையை இடம் மாற்ற கொடைக்கானலில் ஆர்ப்பாட்டம் | கொடைக்கானல் : கொடைக்கானலில் சர்ச், பள்ளிவாசல் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடந் தது.கொõடைக்கானல் டர்னர்புரம் காமராஜர் சாலையில் சர்ச், பள்ளிவாசல் உள்ளது.இவ்வழியாக மாணவ, மாணவியர் பள்ளிக்கு செல்கின்றனர். காமராஜர் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.பொதுமக்களுக்கு இடையூ... |
தமிழகம் | திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு முற்றுகை | திண்டுக்கல் : திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நரசிங்கபுரம் மக்கள் குடிநீர் கேட்டு முற்றுகையிட்டனர். அவர்கள் கூறியதாவது: நரசிங்கபுரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கிணறு தோண்டப்பட்டு ஆழ்குழாய் அமைக்கப் பட்டது. இதில் தண்ணீர் இல்லாமல் போனது. இதனால் காவிரி குடிநீர் திட் டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது.15 நாட... |
தமிழகம் | நில மோசடி: 4 பேர் மீது வழக்கு | பழநி : கடன் பெற்றுத் தருவதாக பவர் பத்திரம் எழுதி வாங்கி, மோசடி செய்ததாக நான்குபேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பழநி என்.டி.ரோட்டில் வசிப்பவர் பீட்டர் மனைவி ஞானம்மாள்ஆபிரகாம்(55). நிலம், வீட்டு பத்திரத்தை வைத்து கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, உறவினர் கீரனூர் உதயராஜன் பவர் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டார். பின் னர... |
தமிழகம் | பள்ளி கூரை விழுந்து குழந்தை காயம் | கொடைக்கானல் : கொடைக்கானல் அரு கே நர்சரி பள்ளி மேற்கூரை விழுந்ததில் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. கேரளாவை சேர்ந்தவர் ஜோயி. இவர், கொடைக்கானல் அருகே குண்டுப்பட்டியில் நர்சரி பள்ளியை நடத்தி வருகிறார். சமீபத்தில் பெய்த மழையால் பள்ளி கட்டடத்தின் மேல்பகுதியில் வேயப் பட்டிருந்த தகரம் கீழே விழுந்தது. இதில் முதல் வகுப்பு படிக்கு... |
தமிழகம் | காமராஜர் பிறந்தநிõள் விழா கொண்டாட்டம் | ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.ஊட்டி அரசு மேல்நிலைபள்ளியில் நடந்த விழாவில், பள்ளி தலைமையாசிரியர் மூர்த்தி வரவேற்றார். எஸ்.எஸ்.ஏ., உதவி ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், ஆசிரியர்கள் சாமுவேல் பிரபாகரன், ருக்மணி, சிவசங்கரன், உடற்கல்வி இயக்குனர் ஜெயராமன், ஆசிரியர்கள் சிவக்குமார், வ... |
தமிழகம் | மாணவர்களுக்கு கட்டுரை போட்டி | குன்னூர் : ஜேசிஐ குன்னூர் கிங்ஸ் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையேயான கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.குன்னூர் புனித மேரீஸ் பள்ளியில் நடத்தப்பட்ட போட்டிக்கு, பள்ளி தலைமையாசிரியை அமலோற்பவ மேரி தலைமை வகித்தார். ஜேசிஐ குன்னூர் கிங்ஸ் அமைப்பின் தலைவி ஜெயஸ்ரீ வரவேற்றார். மண்டல செயலர் லட்சு... |
தமிழகம் | கூட்டுறவு தொழிற்சாலையில் கம்ப்யூட்டர் எடை மேடை | கூடலூர் : கூடலூர் சாலிஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் 5 லட்சம் ரூபாய் செலவில் கம்ப்யூட்டர் எடை மேடை அமைக்கப்பட்டுள்ளது.கூடலூர் இரண்டாவது மைல் பகுதியில் உள்ள சாலீஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் எடை மேடை இல்லாததால், தொழிற்சாலைக்கு தேவையான பொருள்கள் ஏற்றி வரும் லாரிகளை, தனியார் எடை மேடையில் எடை பார்த்து வந்தனர... |
தமிழகம் | ஒட்டன்சத்திரம் ரோட்டை சிறு வியாபாரிகள் ஆக்கிரமிப்பு : பஸ் ஏற முடியாமல் பயணிகள் தவிப்பு | ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட்டை சுற்றி சிறு வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால் பயணிகள் பஸ் ஏற சிரமப்படுகின்றனர். ஒட்டன்சத்திரம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் மதுரை, திண்டுக்கல், திருச்சி,பழநி, திருப்பூர், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கின்றன.கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பல டவுன் பஸ... |
தமிழகம் | செயற்குழு கூட்டம் | கோத்தகிரி : கோத்தகிரியில் இந்துமுன்னணி ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:எதிர்வரும் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடுவதுடன், அமைப்பின் சார்பில், 101 சிலைகளை பிரதிஷ்டை செய்வது: மாநிலம் முழுவதும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்கு கண்டனம் தெரிவி... |
தமிழகம் | காமராஜர் பிறந்த நாள் விழா | திண்டுக்கல் : காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். வேடசந்தூர் எம்.எல்.ஏ., தண்டபாணி, மாவட்ட மகளிரணி தலைவி ராஜம்மாள், செயலாளர்கள் சந்திரன், ஆர்.பாலு, முன்னாள் கவுன்சிலர் ஜோதிராமலிங்கம், செய்தி தொடர் பாளர் வி.ரவிசுப்ரமண... |
தமிழகம் | திடீர் முற்றுகை | மஞ்சூர் : மஞ்சூர் பஜாரில் கவுன்சிலரை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மஞ்சூர் அருகே கீழ்குந்தா சாலையில் ஏராளமான கடைகள், வீடுகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்தினர். கடந்த ஒரு மாதமாக ஒரு வீட்டிலிருந்து கழிவு நீர் மக்கள் நடமாடும் பிரதான சால... |
தமிழகம் | தாவரவியல் ஆசிரியர் மைக்கேல் சவரிராஜ் நன்றி கூறினார். | தாண்டிக்குடி: தாண்டிக்குடி அருகே உள்ள கே.சி.பட்டியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது.விழாவிற்கு ஊராட்சி தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். காபி வாரிய இளநிலை தொடர்பு அதிகாரி சுபா முன்னிலை வகித்தார். கியூ பிராஞ்ச் எஸ்.ஐ., செல்வம் மற்றும் ஆரோக்யராஜ் பேசினர். தலைமையாசிரியர்கள் பாலமுருகன், கண் ணன் வரவேற்றனர். கிராம கல்விக்க... |
தமிழகம் | அடுத்தவர் நிலத்தை விற்பனை செய்தவர் கைது | திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே அடுத்தவர் நிலத்தை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் அருகேயுள்ள காட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகரன் (52). இவரது தாய் செல்லம்மாளுக்கும்,இதே ஊரை சேர்ந்த ஜெயராமனுக்கும் (62) 3 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் கடந்த 2003ல் ஜெயராமனுக்கு த... |
தமிழகம் | ரேஷன் கடையில் அமைச்சர் திடீர் ஆய்வு போலி கார்டுகள் சிக்கின | கோத்தகிரி : கோத்தகிரி சோலூர்மட்டம் மற்றும் கீழ்கோத்தகிரி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கதர்வாரிய அமைச்சர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு செய்தார்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வருகை தந்த உணவுத்துறை அமைச்சர் வேலு ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, நுகர்வோர்களுக்கு கிடைக்கவேண்டிய ரேஷன்... |
தமிழகம் | லாரி மோதி சிறுவன் பலி | திண்டுக்கல் : கன்னிவாடி ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் மகன் பாலமுருகன்(12). இவர் பெருமாள்கோவில் பட்டி அருகே ரோட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த லாரி மோதி இறந்தார். இது குறித்து அம்பாத்துரை போலீசார் விசாரித்துவருகின்றனர். |
தமிழகம் | திண்டுக்கல்லில் சிறப்பு திருப்பலி,பிரார்த்தனை : 17 மறை மாவட்ட பிஷப்கள் பங்கேற்பு | திண்டுக்கல் : திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் 17 மறை மாவட்ட பிஷப்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.திண்டுக்கல்லில் பிஷப் பேரவை கூட்டம் கடந்த 12ம் தேதி துவங்கியது.இதில் குருக்கள், துறவியர்கள், பங்குத்தந்தைகள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் சிறப்பு கருத்தரங்கு,ஆய்வுகள் நடந்தன.திண்டு... |
தமிழகம் | மத்திய தளவாட தொழிற்சாலைகளில் புதிய நியமனம் தேர்வை எதிர்கொள்ள இலவச பயிற்சி | குன்னூர் : மத்திய அரசின் தளவாட தொழிற்சாலைகளில் நடத்தப்படவுள்ள எழுத்து தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை எஸ்.சி., எஸ்.டி., நலச்சங்கம் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் செயல்படும் பாதுகாப்பு எஸ்.சி., எஸ்.டி., தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொம்மராயன் வெளியிட்டுள்ள... |
தமிழகம் | ஜாதிச் சான்றிதழ் தர தாசில்தார் மறுப்பு : மாணவியிடம் டி.ஆர்.ஓ., விசாரணை | திண்டுக்கல் : கிறிஸ்தவராக இருந்து இந்துவாக மதம் மாறிய எனது தந்தையை பின்பற்றி எனக்கு ஜாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாக தாசில்தார் மீது புகார் கூறிய மாணவியிடம் டி.ஆர்.ஓ., பேச்சியம்மாள் விசாரணை நடத்தினார்.திண்டுக்கல் தெய்வசிகாமணிபுரத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகள் ஜெனிபர் கார்த்திகா.இவர் கூறியிருப்பதாவது: நான் திண்டுக்கல் ஜி.... |
தமிழகம் | ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு ஆட்கள் வர மறுப்பு:அதிகாரிகள் குழப்பம் | திண்டுக்கல் : ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு வர யாரும் ஆர்வம் காட்டாததால் மீண்டும் ஆட்களை தேர்வு செய்ய கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது.இந்த பணிக்கு பிளஸ் 2 தேர்வாகி இருக்க வேண்டும்.இவர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக ரூ.3 ... |
தமிழகம் | மர வியாபாரி மரணம் கொலையில் ஒருவர் கைது | நிலக்கோட்டை : நிலக்கோட்டையில் காயங்களுடன் இறந்து கிடந்தவர் கொலை செய்யப்பட்டதாக போலீசார் உறுதிப்படுத்தினர். ஒருவர் கைதானார்.ராமநாதபுரத்தைச் சேர்ந்த மரவியாபாரி ஆறுமுகம்(60). நிலக்கோட்டை காமராஜர் நகரில் குடியிருந்தார். கடந்த வாரத்தில் கூட்டுறவு பாங்க் தெருவில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரிக்க... |
தமிழகம் | ஐயனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் | புவனகிரி : பூதவராயன்பேட்டை மணவெளி பூரணி, பொற்கலை ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.சிதம்பரம் அடுத்த பூதவராயன்பேட்டை மணவெளியில் உள்ள பூரணி, பொற்கலை ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, வாஸ்த்து சாந்தி, மிருத் சங்கிர... |
தமிழகம் | குறிஞ்சிப்பாடி நகர பா.ம.க., செயற்குழு | குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி நகர பா.ம.க., செயற்குழு கூட்டம் நடந்தது.நகர தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க நகர தலைவர் முருகானந்தம், துணை செயலாளர்கள் அண்ணாதுரை, செல்வராசு, துணைத்தலைவர்கள் தட்சணாமூர்த்தி, கோவிந் தன் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலாளர் மோகன் பேசினார். ஊராட்சி தலைவர் சிவராமசேது, நகர தலைவர் வை... |
தமிழகம் | ஒதுக்கப்பட்ட இடத்தில் மனைப்பட்டா கிராம மக்கள் தாசில்தாரிடம் மனு | சிதம்பரம் : ஒதுக்கப்பட்ட இடத்தில் மனைப் பட்டா வழங்க வேண்டும் என கேட்டு ஊராட்சி தலைவர் தலைமையில் கிராம மக்கள் தாசில்தாரை சந்தித்து மனு கொடுத்தனர்.இதுகுறித்து கீழ்வளையமாதேவி மற்றும் அம்மன்குப்பம் மக்கள் ஊராட்சி தலைவர் ஆனந்த் தலைமையில் சிதம்பரம் ஆதிதிராவிட நல தனி தாசில்தார் ராஜேந்திரனிடம் கொடுத்துள்ள மனு.சிதம்பரம் அடுத்த ... |
தமிழகம் | நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள் நெய்வேலியில் கலந்தாய்வு | குறிஞ்சிப்பாடி : வழக்குகளை விரைந்து முடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் மற் றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நெய்வேலியில் நடந்தது.நெய்வேலி பிளாக் 20ல் உள்ள என்.எல்.சி., பயிற்சி வளாகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சண்முகநாதன் தலைமை தாங்கினார். ... |
தமிழகம் | ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு | சிதம்பரம் :சிதம்பரம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவராக செந்தில் குமார், செயலாளராக பார்த்தசாரதி, இயக்குனர் களாக செல்வநாராயணன், பன்னீர்செல்வம், ஜெயராஜ், மணிவண்ணன், பாரதிசெல்வன், வேல்முருகன், ராமசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர்.விழாவில் ரோட்டரி மாவட்ட... |
தமிழகம் | குடிபோதையில் முதியவர் தற்கொலை | கடலூர் : குடிபோதையில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.நெய்வேலி வட்டம் 13 குழிமுயல் தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி(70). இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண் டார். உடல் கருகிய அவர் என்.எல்.சி., மருத் துவமனையில் சேர்க்கப் பட்டு, மேல் சிகிச்சைக் காக பண்ருட்டி அரசு மருத் துவமனையில் அன... |
தமிழகம் | பள்ளி, கல்லூரி வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த அவகாசம் | கடலூர் : பள்ளி, கல்லூரி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் பொறுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு:பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் பயணம் செய்யும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி அனைத்து கல்வி நிலைய வாகனங்களிலும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி... |
தமிழகம் | 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்க கூடாது: தமிழக அரசு உத்தரவு | கடலூர் : கட்டாய இலவச கல்விச் சட்டத்தின் படி ஒன்றாம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை எந்த மாணவரையும் தேர்வில் பெயிலாக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து சி.இ.ஓ., அமுதவள்ளி விடுத் துள்ள செய்திக்குறிப்பு:குழந்தைகளுக்கான கட்டாய இலவச கல்வி சட்டம் 2009 1.4.2010 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி ஒன்றாம் வகுப்பு... |
தமிழகம் | இலவச மருத்துவ முகாம் | கடலூர் : கடலூரில் புதுச்சேரி விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், கடலூர் கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.புதுச்சேரி விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கடலூர் கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களுக்கான இலவச பரிசோதனை முகாம் நடந... |
தமிழகம் | ரூ.ஒரு கோடி மதிப்புக்கு 14 கார்கள் திருடிய 3 பேர் கைது! எட்டு கார்கள் பறிமுதல் | சென்னை : சென்னை திருவான்மியூர், குமரன் நகர், தேனாம்பேட்டை, அபிராமபுரம் உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 14 கார்களை திருடிய மூவரை போலீசார் கைது செய்து, எட்டு கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி, சென்னை, ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் டி.டி.கே., சாலையில் ப... |
தமிழகம் | மரவள்ளியில் மாவுப் பூச்சி கட்டுப்படுத்த ஆலோசனை | பண்ருட்டி : மரவள்ளியில் மாவுப் பூச்சி, வெள்ளை ஈ தாக்குதலை கட்டுபடுத்துவதற் கான வழிமுறைகளை அண்ணாகிராமம் தோட்டகலைத்துறை உதவி இயக் குனர் தெரிவித் துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:-அண்ணாகிராமம் ஒன் றிய பகுதியில் சாகுபடி செய்துள்ள மரவள்ளியில் தற்போது மாவுப்பூச்சி மற்றும் வெள்ளை ஈ தாக் குதலால் இலைகள் மஞ... |
தமிழகம் | அம்பத்தூர் நகராட்சி மெத்தனம்: மக்கள் சாலை அமைக்கும் முடிவால் பரபரப்பு | அம்பத்தூர் : கொளத்தூர் பகுதியில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு குழாய் அமைக்க வேண்டி, சாலைகளில் தோண்டிய பள்ளங்கள் சரிவர சீர்படுத்தாததால், அப்பகுதி மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
அம்பத்தூர் நகராட்சி நிர்வாகத்திடம் சீர்படுத்தக் கோரியும் நடவடிக்கை எடுக்காததால், அதிருப்தி அடைந்த மக்கள் தாங்களே சாலை அமை... |
இந்தியா | ஏனாமில் காமராஜர் பிறந்த நாள் | ஏனாம் : ஏனாமில் காமராஜர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஏனாம் ஆற்றங்கரை சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மண்டல நிர்வாகி அப்பாராவ், நகராட்சி ஆணையர் சுப்ரமணியம், மாநில காங்., செயலாளர் சுப்ரமணியேஸ்வரராவ், மகளிர் காங்., செயலாளர் சரோஜினி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மண்டல... |
தமிழகம் | உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு போட்டிகள் | கடலூர் : உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி செஞ்சுருள் சங்கம் சார்பில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த பல் வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப் பட்டது.உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி மாவட்டசெஞ்சுருள் சங்கம் சார்பில் கடலூர் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மா... |
இந்தியா | பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு பயிற்சி முகாம் | புதுச்சேரி : பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத் துவம் பயிற்றுவிக்கும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.பிம்ஸ் மருத்துவ கல்வியியல் துறை சார்பில் நடந்த முகாமை கல்லூரி முதல் வர் டாக்டர் ஜேம்ஸ் துவக்கி வைத்து பேசுகையில், "மருத்துவம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், மாணவர்களிடையே எளிய ... |
தமிழகம் | மின்னல் தாக்கி இறந்த மாணவி குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி | விருத்தாசலம் : மின்னல் தாக்கி இறந்த மாணவியின் குடும்பத் திற்கு அரசு சார்பில் நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.விருத்தாசலம் அடுத்த தொரவளூரை சேர்ந்த ரவிசந்திரன் மகள் ரம்யா (15). பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த மே மாதம் 30ம் தேதி பெய்த மழையில் மின்னல் தாக்கி இறந்தார். இவரது குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவி தொகைய... |
இந்தியா | தொழிலாளி மர்ம சாவு | புதுச்சேரி : மீன் சாப்பிட்டவர் மயங்கி விழுந்து இறந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய் துள்ளனர். விழுப்புரம் அருகே உள்ள கொட்டாம் பூண் டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மணி(45). இவர் புதுச்சேரியை சேர்ந்த கோனேரிக்குப்பம் பகுதியில் குடும்பத்தினருடன் தங்கி செங்கல் சூளை வேலை செய்து வந்தார். மணி, சூளைக்கு அருகிலுள்ள ஆற்றில்... |
இந்தியா | சுருண்டு விழுந்து வாலிபர் பலி | புதுச்சேரி : வானூரை சேர்ந்த சவுக்கை வியாபாரி மோட்டார் சைக்கிளில் சென்ற போது சுருண்டு விழுந்து இறந்தார்.வானூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தில் வசித்தவர் அர்ச்சுனன்(29). சவுக்கை வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பிற்பகல் மோட் டார் சைக்கிளில் சேதராப்பட்டு வழியாக வந்து கொண்டிருந்த போது, திடீரென்று மோட் டார் சைக்க... |
தமிழகம் | அனுமதியின்றி குடிநீர் இணைப்பு இருந்தால் இருமடங்கு தொகை: கமிஷனர் எச்சரிக்கை | கடலூர் : கடலூர் நகராட்சி பகுதியில் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு வைத்திருந்தால் வைப்புத் தொகையைப்போல் இருமடங்கு வசூலிக்கப்படும் என நகராட்சி கமிஷனர் குமார் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:கடலூர் நகராட்சி பகுதியில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை கண் டறிய நான்கு குழுக்கள் அமைத்து அனுமதியற்ற... |
இந்தியா | தந்தைக்கு கத்திவெட்டு: மகன் கைது | காரைக்கால் : சொத்து தகராறு காரணமாக குடி போதையில் தாயின் கையில் வெட்டிய கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் நெடுங்காடு புத்தகுடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்(65), கூலித்தொழிலாளி. இவரது மனைவி காசியம்மாள். இவர்களுக்கு 2 மகன் மற்றும் 5 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் நடந்துவிட்டது. இரண்... |
தமிழகம் | விடுதிகளில் காலி இடங்கள் புதிய மாணவர்கள் சேர்க்கை | திட்டக்குடி : திட்டக்குடி தாலுகாவிலுள்ள விடுதிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேற்று மாலை தேர்வுக் குழு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.திட்டக்குடி தாலுக்காவிலுள்ள கீழ்ச்செருவாய், தொழுதூர், புடையூர், பெண்ணாடம், சிறுபாக் கம், சேப்பாக்கம் உள் ளிட்ட பத்து அரசு மாணவர் விடுதிகள் உள்ளது. அதில் காலியாக உள்ள இடங்களில் புத... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.