category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
ஜெ., தலைமையில் நடக்கவுள்ள திருமணங்களின் இடம் மாற்றம்
சென்னை : அடுத்த மாதம் 22ம் தேதி மதுரையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா தலைமையில் நடக்க இருந்த, திருமண விழாவின் இடம் மாற்றப்பட்டுள்ளது. சென்னை வானகரம், வேலப்பன் சாவடி அருகில் சென்னை, பெங்களூர் சாலை விழா பந்தலில் திருமணம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா தலைமையில், அடுத்த மாதம்...
தமிழகம்
பாராட்டு விழா
மதுரை: மதுரை சவுராஷ்டிரா இருபாலர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், உருவாக்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் (பொறுப்பு) ராமலிங்கம் வரவேற்றார். பள்ளிக் கவுன்சிலர் பொருளாளர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். டி.எம். சவுந்தரராஜன் ரசிகர் மன்றத் தலை...
தமிழகம்
சஸ்பெண்டை எதிர்த்து போலீஸ்காரர் மனு *ஐகோர்ட் தள்ளுபடி
மதுரை : சஸ்பெண்டை எதிர்த்து போலீஸ்காரர் தாக்கல் செய்த மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த போலீஸ்காரர் சூசைமைக்கேல் தாக்கல் செய்த ரிட் மனு:தக்கலையில் பணிபுரிந்த போது, 2005 நவ., 17ம் தேதி லஞ்ச வழக்கில் கைதானேன். இதனால் எஸ்.பி., என்னை சஸ்பெண்ட் செய்தார். லஞ்ச வழக்கு விசாரணை நடந்து வரு...
தமிழகம்
விருது வழங்கு விழா
சென்னை: சென்னையில் நடைபெற்ற ‌மெலங்கே 2010 என்ற நிகழ்ச்சியில் டாக்டர் சத்யபாமாவுக்கு கனிமொழி எம்.பி., விருது வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் பிரீதா ரெட்டி, தலைவர் பி.சி.ரெட்டி, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தியா
ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை : அஹமது
கொச்சி : மேற்கு வங்கத்தில்  2 ரயில்கள் மோதி கொண்ட சம்பவத்துக்க காரணமானவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ரயில்வேத்துறை இணையமைச்சர் இ.அஹமது கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம்  சைந்தியாவில் 2 ரயில்கள் மோதி கொண்டன. இந்த விபத்தில் 66 பேர் பலியானார்கள்.  கொச்சியில் மத்திய ரயில்வேத்துறை இணையமைச்சர் இ.அ...
இந்தியா
உல்பா இயக்க முக்கிய தலைவர் என்கவுன்டரில் பலி
திபுர்காக் : அசாம் மின் திபுர்காக் மாவட்டத்தில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் உல்பா இயக்க முக்கிய தலைவர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். முன்னதாக அந்த அமைப்பின் நிதுல் கோகாய் என்பவர் கைது செய்யப்பட்டார். சுட்ட கொல்லப்பட்டவரின் பெயர்  பிப்லாப் பருவா என தெரிய வந்தது. இவர் ஜோகாய் போர்பில் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைந...
இந்தியா
சந்திரபாபு நாயுடு ஆந்திரா செல்ல வேண்டும் : அசோக் சவான்
மும்பை : சந்திரபாபு நாயுடு  ஆந்திரா திரும்பி செல்ல வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் அசோக் சவான் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் கட்டப்படும் பாப்ளி அணையை பார்வையிட சென்ற தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இவர் ஜாமீனில் வர மறுத்ததால் ரிமாண்ட் செய்யப்பட்டாஞூர. இந்நிலையில் சந்திரபாபு நாய...
தமிழகம்
விரயமாகும் பெரியாறு அணை நீர் :வைகை அணை உயர்வதில் சிக்கல்
ஆண்டிபட்டி : பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் வைகை அணைக்கு குறிப்பிட்ட அளவு வந்து சேராமல் விரயமாகும் விதங்கள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.   கடந்த சில நாட்களாக பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. பெரியாறு அணையில் இருந்து கம்பம...
தமிழகம்
ஆள் கடத்தல் வழக்கு: வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கை
ஈரோடு : பெருந்துறை ஆள் கடத்தல் மற்றும் சொத்தை சேதப்படுத்திய வழக்கை, வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என, பாதிக்கப்பட்டோர் மனு அளித்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை கல்லாங்குத்து தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது  நிலத்தை அபகரிப்பதற்காக, பழனிசாமி, அவரது மனைவி மலர்விழி, மகன் சிவபாலன், தம்பி குகமணி ஆகியோர் கடத்தப்...
தமிழகம்
ஆத்தூரில் ஓடும் பேருந்தில் ஒன்றரை லட்ச ரூபாய் கொள்ளை
ஆத்தூர் :  ஓடும் பேருந்தில் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் திருடப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிகுட்டை சேர்ந்தவர் டாக்டர் எஸ். அப்பலோலெவன். இவர்  ஒன்றரை லட்ச ரூபாயுடன் சேலத்திலிருந்து ஆத்தூர் செல்ல தனியார் பேருந்தில் சென்றார்.  இடையில் உள்ள ஒரு நிறுத்தத்தில் பெண் ஒருவர் ...
தமிழகம்
சொல்கிறார்கள்
ஜப்பான் போல் தமிழகமும் மாறினால்...:தமிழக மாணவர்கள் சார்பில் ஜப்பான் சென்று திரும்பியுள்ள ராகுல்நாதன்: தங்கள் நாட்டின் பண்பாடு, கலாசாரம் போன்றவற்றை உலகம் அறிய வேண்டும் என்பதற்காக உலகில் உள்ள அனைத்து நாட்டு மாணவர்களையும் அழைத்து உபசரித்து, வழியனுப்பிக் கொண்டிருக்கிறது ஜப்பான். அது தொடர்பாக இந்திய மாணவர்களை உபசரிக்க முடிவ...
தமிழகம்
" டவுட்' தனபாலு
வனத்துறை அமைச்சர் செல்வராஜ்: நாடு முழுவதும், புலிகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது.  இதில், தமிழகத்தில் 62லிருந்து 76ஆக புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகளின் கால் தடம் கண்டு பிடிக்கப்பட்டதால், அங்கு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. டவுட் தனபாலு: புலி ஆதரவாளர்கள் எண்ணிக்கைய...
தமிழகம்
திறந்த வெளிகழிப்பறை குடிக்க தண்ணீர் இல்லை : பள்ளி மாணவர்கள் தவிப்பு
கமுதி:கோவிலாங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் போதுமான தண்ணீர் வசதி இல்லாமலும், திறந்த வெளிகழிப்பறையை மாணவிகள் பயன்படுத்தும் நிலையாலும் இரு தரப்பினரும் அவதியடைகின்றனர்.கமுதிஅருகே கோவிலாங்குளம் அரசு உயர் நிலைப்பள்ளியில் பல கிராமத்தை சேர்ந்த 240 மாணவ ,மாணவிகள் கல்வி கற்கின்றனர். பள்ளி வளாக வாட்டர் டேங்க்கிற்கு தண்ணீர...
தமிழகம்
கோயில்களில் முதல் மரியாதை பிரச்னை : கிராம மக்கள் ஆதங்கம்
திருவாடானை:முதல் மரியாதை பிரச்னையால் கோயில் விழாக்கள் நிறுத்தப்படுவதால் கிராம மக்கள் கவலையில் உள்ளனர்.கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற நிலை மாறி, கோயிலில் மரியாதை கிடைக்காவிட் டால் விழாக்கள் நடத்த கூடாது என்ற சுயநலம் மேலோங்கி வருவதால், பல கோயில் விழாக்கள் தடைபடுகிறது. திருவாடானை பகுதி கிராமங்களில் அறுவடை ம...
தமிழகம்
பாதுகாப்பில் கேள்வி குறியான பள்ளி
தேவிபட்டினம்:பாதுகாப்பில் கேள்விக் குறியாகி வரும் தேவிபட்டினம் அரசு பள்ளியின் அவலத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க கல்வி துறை முன் வரவேண்டும் .தேவிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமானோர் படிக்கின்றனர். சுற்றுவட்டார கிராம மாணவர்களுக்கு இப்பள்ளியை விட்டால் வேறு கதியில்லை. முக்கியத்துவம் வாய்ந்த இப்பள்ளியில் பாதுகாப்பு ...
தமிழகம்
மீண்டும் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்: களப்பணியில் தொய்வு
ராமநாதபுரம்:மாவட்டத்தில் குழந்தைகள் தொழிலாளர்கள் புலக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வளரும் நாடுகளுக்கு கல்வியே சிறந்த மூலதனம் என கருதப்படுகிறது. இதற்காக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கல்விக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்படுகிறது. தமிழகத்திலும் அனைவருக்க...
தமிழகம்
வேளாண் கூட்டுறவு வங்கிகளின் ஆவணங்கள் தணிக்கை
ராமநாதபுரம்:மாவட்டத்தில் வேளாண் கூட்டுறவு வங்கிகளால் ஏற்படும் குழப்பங்கள் அதிகரித்து வருவதால், அனைத்தின் ஆவணங்களையும் தணிக்கை செய்ய வேண்டியது அவசியம் எழுந்துள்ளது.விவசாயத்தில் பின்தங்கிய மாவட்டம் என்பதால், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடு இங்கு அவசியமாக உள்ளது. பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடு இருப்பதால...
தமிழகம்
தார் ரோடுகளில் கொட்டப்படும் மண்
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணி ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டுப்புளி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் கண்மாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. வெட்டுமண்னை கரையில் மேற்பகுதியில் கொட்டாமல் தார் ரோடுகளில் கொட்டி வருகின்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் செல்லும் அவலநிலை உருவாகிறது. மழ...
தமிழகம்
போலீசார் பற்றாக்குறை சட்டம் ஒழுங்கு பாதிப்பு
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலத்தில் போலீசார் பற்றாக்குறையால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் பகுதி மாவட்டத்தில் கடைகோடி என்பதால், இப்பகுதியில் ஏற்படும் பிரச்னைகளுக்கு போலீஸ் கண்பார்வை அவசியமாகும். இங்குள்ள ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் 25 பேர் இருந்த நிலையில், இன்று அதன் எண்ணிக்க...
தமிழகம்
ஆசிரியர் பயிற்சிக்கு அழைப்பு
ராமநாதபுரம்:பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு பதிவு செய்த அருந்ததியினர் இனத்தை சார்ந்தவர்கள் அனைவரும் , தங்களின் கல்வித்தகுதி சான்றுகள், சாதி சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் ஜூலை 23ல் மாலை மூன்று மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருமாறு மாவட்ட நிர்வாகம்...
தமிழகம்
மாயாகுளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டி
கீழக்கரை:திருப்புல்லாணி ஒன்றியத்தை சேர்ந்த மாயாகுளம் ஊராட்சி தலைவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்தார்.இதை தொடர்ந்து இடைத் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் ஊராட்சி தலைவர் முருகேசன் மனைவி தெய்வக்கனி, சுந்தர்ராஜ், முருகன் ஆகிய மூன்று பேர் போட்டியிடுகின்றனர். சின்னாண்டி வலசை ஊராட்சி இரண்டாவது வார்டில் கதிரேசன்,சின்ன...
தமிழகம்
ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு
ராமநாதபுரம்:ராமநாதபுரம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. தலைவராக டாக்டர் மலையரசு, செயலாளராக டாக்டர் செங்குட்டுவன், பொருளாளராக வக்கீல் அதிசயபாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்றனர். முன்னாள் கவர்னர் பெரியண்ணன் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.கலெக்டர் ஹரிஹரன், சமூக சேவகி ரோகிணி, டாக்டர்கள் சின்னத்துரை அ...
தமிழகம்
இடிந்த வி.ஏ.ஓ ., கட்டடம்:தளம் இல்லாத ரேஷன் கடை
கமுதி: இடிந்த நிலையில் உள்ள வி.ஏ.ஓ., கட்டடத்தை சரி செய்யாமல் உள்ளதோடு, ரேஷன் கடை தளத்தை சீர்செய்ய அதிகாரிகள் முன் வராதது பொந்தம் புளி ஊராட்சி மக்களின் ஏக்கமாக உள்ளது.பொந்தம்புளி, வாலவந்தாள்புரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது பொந்தம் புளி ஊராட்சி. கிராம மக்களுக்கு போதுமான வசதிகளை செய்து கொடுக்க ஊராட்சியில் போதுமான நிதி இ...
தமிழகம்
லோடுஆட்டோ கவிழ்ந்து 36 பெண்கள் காயம்
கீழத்தூவல்: முதுகுளத்தூர் அருகே புழுதிகுளத்தை சேர்ந்தபெண்கள் வாழ்ந்து காட்டுவோம் திட்ட உறுப்பினராக போட்டோ எடுப்பதற் காக சாம்பகுளத்திற்கு லோடுஆட்டோவில் சென்றனர். வீரபாண்டி ஓட்டி சென்றார்.சாம்பகுளம் அருகே நிலைதடுமாறி கவிழ்ந்தது. சரஸ்வதி, ராக்கு உட்பட 11 பேர் மதுரை அரசு மருத்துவமனை,25 பெண்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையில...
தமிழகம்
இலங்கைக்கு தப்பி செல்ல முயன்று பிடபட்ட அகதிகள்
மண்டபம்:இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற அகதிகள் ஒன்பது பேரை கியூ பிரிவு போலீசார் பிடித்தனர்.இதில் ஒருவர் பாஸ்போர்ட் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். இலங்கையில் போர் முடிந்ததால் தமிழகத்தில் உள்ள அகதிகளில் சிலர் இலங்கை செல்வதற்காக விருப்பத்துடன் உள்ளனர். இச்சூழலில் சிலர் படகு மூலம் தப்பி செல்கின்றனர்.கடந்த இருதினங்களுக்கு மு...
தமிழகம்
காப்பீடு திட்டம் விரிவாக்கம் ஓய்வூதியர்களுக்கும் வாய்ப்பு
ராமநாதபுரம்:ஓய்வூதியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் வாய்ப்பளித்து , உயர் சிகிச்சை காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளதாக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. உயர் சிகிச்சை காப்பீடு திட்டம் 2009 ஜூலை 23ல் தொடங்க ப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ள அனைத்து குடும்பங்கள் , பல்வேறு அமைப்பு...
தமிழகம்
சங்க கூட்டம்
சிவகங்கை:பிராமணர் சங்க கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இணை செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். பொது செயலாளர் நாதன் வரவேற்றார். சமஸ்கிருத பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் நிரஞ்சனுக்கு, ராகவேந்திரா அறக் கட்டளை சார்பில் ஜெயராமன் பரிசு வழங்கினார். பொருளாளர் ராஜப்பா நன்றி கூறின...
தமிழகம்
துவக்க விழா
காரைக்குடி:ராஜராஜன் கல்வியியல் கல்லூரி துவக்க விழா நடந்தது. முதல்வர் ராமன் வரவேற்றார். பேராசிரியர் சுப்பையா முன்னிலை வகித்தார். அழகப்பா பல்கலை பேராசிரியை பிரேமா பேசினார். பேராசிரியர் கோவிந்தராசு நன்றி கூறினார்.
தமிழகம்
சங்க விழா
சிவகங்கை:தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்க அமைப்பு தினம், கொடியேற்று விழா சிவகங்கையில் நடந்தது. மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் கொடியேற்றினார். முன்னாள் மாநில துணை தலைவர் சந்திரசேகரன், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சந்திரமோகன், ச...
தமிழகம்
இளைஞர் மன்ற கூட்டம்
காரைக்குடி:காரைக்குடி சமத்துவம் இளைஞர் மன்ற பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் குமார் தலைமை வகித்தார். பொது செயலாளர் அருளானந்து, பொருளாளர் செல் வம் முன்னிலை வகித்தனர். துணை தலைவர்கள் செந்தில்குமார், சரவணன், ரமேஷ், துணை செயலாளர்கள் மலைவாசன், லட்சபிரபு பங்கேற்றனர்.
தமிழகம்
துவக்க விழா
காரைக்குடி:சுந்தரம் நிதி நிறுவனத்தின் வீட்டு கடன் வழங்கும் சிறப்பு முகாம் துவக்க விழா காரைக்குடியில் நடந்தது. முதுநிலை அதிகாரி (வளர்ச்சி) சதீஷ்குமார் தலைமை வகித்தார். முதுநிலை அதிகாரி பிரின்ஸ் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் கோயில் அறங்காவலர் படிக்காசு, என்.என்.எல். பஸ் நிறுவன உரிமையாளர் பாண்டியன், கண்ணப்பா ரோடுவேஸ்...
General
பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், இந்து கோவிலின் ஒரு பகுதி, அரசு துறையினரால் இடிக்கப்பட்டதால், இந்துக்கள் அங்கு போராட்டம் நடத்தினர்.ராவல்பிண்டியில் மெடிக்கல் காலேஜ் அருகே திப்பு சாலையில் உள்ளது ரசீஸ் இ அசம் என்ற இந்து கோவில்; 1923ம் ஆண்டு தன்சுக்ராய் என்பவரால் கட்டப்பட்டது. 87 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு அருகில் இந...
தமிழகம்
ராகிங் அரக்கனால் செத்து பிழைத்த மாணவர் : சிகிச்சை, கல்விக்கு வழி பிறக்குமா?
சிவகங்கை:ராகிங் கொடுமையில் சிக்கி மறு பிறவி கண்ட இன்ஜினியரிங் மாணவர் சோபன்பாபு (21), சிகிச்சை, கல் விக்கு உதவிக்கரங்களை எதிர்நோக்கியுள்ளார். இவரது தந்தை செல்வம், சிவகங்கை அருகே கூட்டுறவுபட்டியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். மாணவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், முதல் ஆண்டு படித்தார். கடந்த ...
தமிழகம்
உத்தரவை செயல்படுத்துவதில் இழுபறி ஆசிரியர்கள் அதிருப்தி
சிவகங்கை:அரசு உத்தரவிட்டும், தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை சம்பளத்திற்கான பலன்கள் வழங்கப் படவில்லை என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புகார் தெரிவித்துள்ளது. கடந்த 1990-91; 91- 92 ம் ஆண்டில், தொகுப்பூதிய முறையில், 5,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க, கடந்த ஏப்ரலி...
இந்தியா
ஹாக்கி வீராங்கனைகளுக்கு செக்ஸ் டார்ச்சர்
புதுடில்லி : ஹாக்கி வீராங்கனைகளுக்கு வீடியோகிராப்பர் செக்ஸ் டார்ச்சர் செய்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவை வீராங்கனைகள் எழுத்து பூர்வமாக ஹாக்கி இந்தியா அமைப்பிடம் கொடுத்துள்ளனர். இதில் ஒரு வீராங்கனைக்கு ஒன்றரை வருடமாக செக்ஸ் டார்ச்சர் நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஹாக்கி இந்தியா ...
தமிழகம்
சென்னை மக்களுக்கு 31ம் தேதி கடலில் இருந்து குடிநீர்
பொன்னேரி:கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை வரும் 31ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க உள்ளார். சென்னை அடுத்த மீஞ்சூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வடிகால் வாரியமும், ஐ.வி.ஆர்.சி.எல்., என்ற இந்திய நிறுவனமும், பேபசா என்ற ஸ்பெயின் நாட்டு நிறுவனமும் இணைந்து கடல் நீரை குடிநீரா...
தமிழகம்
முதல் வகுப்பில் இருவர் மட்டுமே சேர்ந்ததால் அதிர்ச்சி
சிவகாசி:சிவகாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மாவட்டத்தில் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் தான் அதிகளவில் 82 ஊராட்சி ஒன்றிய ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் அரசு நிதி உதவி பெறுபவை 29 பள்ளிகள். 59 ஆரம்ப பள்ளிகளில் 33 பள்ளிகள் இரண்டு ஆசிரியர்களை கொண...
தமிழகம்
பெண்ணை கெடுக்க முயன்ற வாலிபர் கைது
வடமதுரை :செங்குறிச்சி எஸ்.புளியம்பட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி நாச்சம்மாள்(26). இவர்களுக்கு மூன்று குழந்தைகள். கூலித்தொழிலாளியான சின்னத்தம்பி சேலத்தில் வேலை செய்து வந்தார்.இதனால் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் இருந்த நாச்சம்மாளை இதே கிராமத்தை சேர்ந்த ஆண்டிக்காளை மகன் சந்திரசேகர்(23) கெடுக்க முயன்றுள்ளார்...
இந்தியா
சத்யம் ராஜு சகோதரர் உட்பட ஐந்து பேருக்கு ஜாமீன்
ஐதராபாத் : சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜுவின் சகோதரர் ராமராஜு உள்ளிட்ட ஐந்து பேருக்கு, ஐகோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது. சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில், 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, சி.பி.ஐ., விசாரணை நடக்கிறது. இந்நிறுவன தலைவர் ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராமராஜு மற்றும...
இந்தியா
ஐ.எஸ்.ஐ.,க்கு தகவல் தந்த மாதுரி மீது குற்றப்பத்திரிகை
புதுடில்லி : முக்கியமான தகவல்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.,க்கு கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்திய ஹைகமிஷன் அதிகாரி மாதுரி குப்தா வழக்கில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய ஹைகமிஷனில், ஊடகம் மற்றும் தகவல் துறையின் இரண்டாவது செயலராகப் பணியாற்றி வந்தவர் மாதுரி குப்தா(53). இவர் தன் ...
தமிழகம்
தீயணைப்புத்துறை சான்று இருந்தால் மட்டுமே லைசென்ஸ்
விருதுநகர்:தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று இருந்தால் தான், தொழிற் சாலைகளின் லைசென்ஸ் புதுப்பிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என விருதுநகர் கோட்ட தீயணைப்பு அலுவலர் கருணாகரன், தீயணைப்புத் துறை இயக்குனர் நடராஜ்க்கு மனு அனுப்பியுள்ளார். மனுவில் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் பட்டாசு ...
தமிழகம்
9 கடல்சார் கல்வி நிறுவனங்கள் பல்கலை இணைப்பு ரத்தாகுமா?
சென்னை : கூடுதல் கட்டணம் வசூலித்த வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஒன்பது கடல்சார் கல்வி நிறுவனங்களின் பல்கலை இணைப்பை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி கடல்சார் பல்கலைக் கழகம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கடல்சார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் ச...
தமிழகம்
சஸ்பெண்டை எதிர்த்து போலீஸ்காரர் மனு : ஐகோர்ட் தள்ளுபடி
மதுரை : சஸ்பெண்டை எதிர்த்து போலீஸ்காரர் தாக்கல் செய்த மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த போலீஸ்காரர் சூசைமைக்கேல் தாக்கல் செய்த ரிட் மனு: தக்கலையில் பணிபுரிந்த போது, 2005 நவ., 17ம் தேதி லஞ்ச வழக்கில் கைதானேன். இதனால் எஸ்.பி., என்னை சஸ்பெண்ட் செய்தார். லஞ்ச வழக்கு விசாரணை நடந்து வ...
தமிழகம்
அடிப்படை வசதியில்லை: மக்கள் அவதி
சத்திரப்பட்டி:சமுசிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் வாறுகால்களை சுத்தப்படுத்தி பல மாதங்கள் ஆகிவிட்டன. வாறுகாலில் குப்பைகள் தேங்கி இருப்பதால், வன்னியம்பட்டி ரோட்டில் சங்கரபாண்டியபுரம் பகுதியிலும், சமுசிகாபுரம் மெயின் ரோட்டிலும் கழிவுநீர் தேங்கிக் கிடக்கின்றன. நோய்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. அமச்சியார்புரம் கீழ...
தமிழகம்
4.3 லட்சம் சிறுவர்களுக்கு எய்ட்ஸ்
சிவகாசி:சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் உலக பல்கலைக்கழக சேவை சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு சொற்பொழிவு நடந்தது. தமிழ்த்துறை தலைவர் சிவனேசன் தலைமை வகித்தார். டாக்டர் கதிரவன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் இளங்கோ வரவேற்றார். சுகாதார துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், "எய்ட்ஸ் நோயால் இந்தியாவில் 39...
தமிழகம்
இலக்கிய மன்ற துவக்க விழா
ராஜபாளையம்:ராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் அனைத்து இலக்கிய மன்றக் கூட்டங்களின் துவக்க விழா நடந்தது. பட்டிமன்ற பேச்சாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். தாளாளர் சந்திரன் ராஜா பரிசு வழங்கினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந் தன. நிர்வாக்குழு உறுப...
தமிழகம்
மின் வினியோக கோளாறு "டிவி'க்கள் பழுது
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவி., மீனாட்சிபுரத்தில் கடந்த பத்து விட்டு விட்டு நாள்களாக வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின்சாரம் அதிக அழுத்தத்துடன் இருந்தால் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் "டிவி, டியூப்லைட், மிக்ஸிகள்' பழுதடைந்தன.
இந்தியா
புதிய காரில் சர்ச்சுக்கு புறப்பட்டபோது விபரீதம் : பம்பா நதியில் கார் மூழ்கி இரு சிறுமிகள் பலி
நீரேற்றுப்புரம் : புதிதாக வாங்கிய காரில் சர்ச்சுக்கு புறப்பட்டது குடும்பம். எதிர்பாராமல் கார், கட்டுப்பாடு இழந்து அவர்களது வீட்டிற்கு முன்புள்ள பம்பா நதியில் மூழ்கியது. இதில், இரு சிறுமிகள் பலியாயினர். மகள்கள் இறந்ததால் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற தந்தையும், மயங்கி விழுந்த தாயும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரள மாந...
தமிழகம்
தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் இல்லாததால் சிக்கல்
விருதுநகர்:மாவட்டங்களில் நுகர்பொருள் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் இல்லாததால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் நுகர்பொருள் தரக் கட்டுப்பாட்டு மையங்கள் சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவனம், மாநகராட்சி மையங்கள்(கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி பாளையங்கோட்டை) ஏழு உள்ளன. கடை, நிறுவனங்களில் விற்கப்படும் த...
இந்தியா
9 கைதிகள் தப்பி ஓட்டம் : அதிகாரிகள் சஸ்பெண்ட்
மீரட் : உத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்ட சிறையில் இருந்து, ஒன்பது கைதிகள் தப்பிச் சென்றனர். இதையடுத்து, சிறை அதிகாரிகள் 15 பேர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்ட சிறையில் இருந்து நேற்று முன்தினம் இரவு, ஏழு ஆயுள் தண்டனை கைதிகள் உட்பட, ஒன்பது கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள், கொலை ம...
தமிழகம்
பேராசிரியரின் கையை வெட்டிய இருவர் மீது தேச துரோக வழக்கு
கொச்சி : கல்லூரி பேராசிரியரின் கையை வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மீது, தேச துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து புத்தகங்களும், துண்டு பிரசுரங்களும் கைப்பற்றப்பட்டன. கேரள மாநிலம், தொடுபுழா நியுமேன் கல்லூரி பேராசிரியர் ஜோசப் என்பவரது வலதுகையை வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்...
தமிழகம்
நாளை உள்ளாட்சி தேர்தல் பள்ளிகளுக்கு விடுமுறை
விருதுநகர்:தமிழகத்தில் உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு நாளை தேர்தல் நடக்கவுள்ளது. ஓட்டுச்சாவடி மையங்களாக உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் கமிஷனின் உத்தரவு:உள்ளாட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித்தலைவர் காலியிடங்களுக்கு நாளை தேர்த...
இந்தியா
குழந்தைக்கு போலி பிறப்பு சான்றிதழ் : புதுச்சேரி டாக்டர் போலீசில் சரண்
புதுச்சேரி : குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த புதுச்சேரி டாக்டர், போலீசில் சரணடைந்தார். கிருஷ்ணகிரியில் குழந்தை கடத்தல் தொடர்பாக புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த மனித உரிமை கழக மகளிரணி தலைவி லலிதாவை, தமிழக போலீசார் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி சமூக நலத்துறை இயக்குனர் உத்தமன் தலைமை...
தமிழகம்
மீனவர் வலையில் சிக்கிய வினோத பாம்புகள் : ஆய்விற்கு பின் மீண்டும் ஆற்றில் விடப்பட்டன
கடலூர் : புதுச்சேரி அருகே உப்பனாற்றில் மீனவர் வலையில் சிக்கிய பாம்புகள், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய பேராசிரியர் ஆய்விற்கு பின், விஷத்தன்மை அற்றவை என்பதை உறுதி செய்ததால், மீண்டும் உப்பனாற்றில் விடப்பட்டன. புதுச்சேரி மாநிலம் மூர்த்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த 17ம் தேதி இரவு உப்பனாற்றில் மீன்பி...
தமிழகம்
தமிழக வனப்பகுதியில் நாய்களை விட்ட கேரள வனத்துறையினர் சிறைபிடிப்பு
பொள்ளாச்சி : கேரள வனப்பகுதியில் இருந்து பிடித்து வரப்பட்ட தெருநாய்கள், ஆழியாறு அருகே தமிழக வனப்பகுதியில் விடப்பட்டன. இச்செயலில் ஈடுபட்ட கேரள வனத்துறையினரை, தமிழக வனத்துறையினர் சிறைபிடித்தனர். பரம்பிக்குளம் வனப்பகுதிக்கு உட்பட்ட சுங்கம் வனச்சரகத்தில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து, பாலக்காடு பகுதியில் விடுவிக்க ...
தமிழகம்
இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்று பிடிபட்ட அகதிகள்
மண்டபம் : இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற அகதிகள் ஒன்பது பேரை, கியூ பிரிவு போலீசார் பிடித்தனர். ஒருவர், பாஸ்போர்ட் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இலங்கையில் போர் முடிந்ததால், தமிழகத்தில் உள்ள அகதிகளில் சிலர் இலங்கை செல்வதற்காக விருப்பத்துடன் உள்ளனர். இச்சூழலில், சிலர் படகு மூலம் தப்பிச் செல்கின்றனர். கடந்த இருதினங்களுக...
தமிழகம்
ரவுடியிடம் கைப்பற்றிய வெடிகுண்டுகள் : கடலூரில் வெடிக்கச்செய்து செயலிழப்பு
கடலூர் : தமிழகம், புதுச்சேரியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல ரவுடி மேலக்குப்பம் சங்கரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மூன்று நாட்டு வெடிகுண்டுகளை, சென்னை வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் நேற்று வெடிக்கச்செய்தனர். கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அடுத்த மேலக்குப்பத்தைச் சேர்ந்தவர் சங்கர் (40). தமிழகம், புது...
தமிழகம்
தலைமை ஆசிரியர் மீது கிராமமக்கள் புகார் : முதன்மை கல்வி அதிகாரி விசாரணை
திண்டுக்கல் : பள்ளியில் முறையாக இருப்பதில்லை என்ற புகாரையடுத்து கொக்கரக்கன்வலசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியிடம் சி.இ.ஓ., விசாரணை நடத்தினார். பழநி கல்வி மாவட்டம்,கொக்கரக்கன்வலசு அரசுஉயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி. இவர் பணி நேரத்தில் பள்ளியில் முறையாக இருப்பதில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க ...
தமிழகம்
தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி
தூத்துக்குடி : தூத்துக்குடி, தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் சிவனாண்டி(30). உடல்நலக் குறைபாடு காரணமாக இவரது தந்தை காளிமுத்து, சில்லாநத்தம் கிராமத்தில் உறவினர் வீட்டில் இறந்தார். அவரது உடலை அங்கேயே அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவெடுத்தனர். அவரது உடலை தாளமுத்து நகர் கொண்டுவரவேண்டுமென பிடிவாதம் பிடித்த சிவனாண்டி, நேற்று காலை அங...
இந்தியா
பீகாரின் இரு அவைகளிலும் அமளி
பாட்னா:பீகார் சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மோதலால், இரண்டு அவைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன.பீகாரில், பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 11 ஆயிரத்து 412 கோடி ரூபாயை, முறைகேடாக பயன்படுத்தியது குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த பாட்னா ஐகோர்ட் உத்தரவிட்டது.இந்நிலையில...
தமிழகம்
தலைமை ஆசிரியர் மீது கிராமமக்கள் புகார் * முதன்மை கல்வி அதிகாரி விசாரணை
திண்டுக்கல் : பள்ளியில் முறையாக இருப்பதில்லை என்ற புகாரையடுத்து கொக்கரக்கன்வலசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியிடம் சி.இ.ஓ., விசாரணை நடத்தினார்.பழநி கல்வி மாவட்டம்,கொக்கரக்கன்வலசு அரசுஉயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி. இவர் பணி நேரத்தில் பள்ளியில் முறையாக இருப்பதில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வ...
General
ஒசாமா இருக்கும் இடம் பாகிஸ்தானுக்கு தெரியும்: அமெரிக்க ஹிலாரி வெளிப்படை
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் அரசில் உள்ள சில நபர்களுக்கு, அல் - குவைதா தலைவர் ஒசாமா பின்லேடன் ஒளிந்துள்ள இடம் தெரியும். ஒசாமாவை கைது செய்யும் வரை திருப்தியடையமாட்டோம் என, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹிலாரி கிளின்டன், இது குறித்து பாக்., மண்ணில்...
தமிழகம்
கிருஷ்ணா - ஹிலாரி சந்திப்பு
காபூல்:மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் ஆப்கன் தலைநகரில் சந்தித்து பேசினர்.ஆப்கன் தலைநகர் காபூலில், சர்வதேச மாநாடு நேற்று துவங்கியது. 70 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ...
தமிழகம்
ஜேசுதாசுக்கு சாதனையாளர் விருது
கொச்சி : பிரபல கர்நாடக சங்கீத வித்வான் கே.ஜே.ஜேசுதாஸ், ரேடியோ மிர்ச்சி வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரேடியோ மிர்ச்சியின் 2009ம் ஆண்டுக்கான இசைத்துறைக்கான வாழ்நாள் சாதனை விருதுக்கு, ஜேசுதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதோடு, "பனாரஸ்' என்ற படத்தின் சிறந்த பாடகராகவும் அவர் தேர்ந்தெ...
இந்தியா
பயங்கரவாதத்துடன் பாக்., அமைப்புகளுக்கு தொடர்பு : சிவசங்கர் மேனன் பேச்சு
புதுடில்லி : மும்பைத் தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியதில் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு முழு பங்கு உள்ளது தெரியவந்துள்ளது என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தானிய லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்...
தமிழகம்
கதகளி கலைஞர் சிவராமன் மறைவு
பாலக்காடு : பிரபல கதகளி நாட்டியம் ஆடிவந்த கோட்டக்கல் சிவராமன் (74) நேற்று முன்தினம் மரணமடைந்தார். கேரளாவின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கதகளி நாட்டியத்தில், பெண் வேடத்தில் நடித்தவர் கோட்டக்கல் சிவராமன். கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றி இருந்த இவர், நேற்று முன்தினம் அவரது வீட்டில் மரணமடைந்தார். இவருக்கு மனைவியும், இரண...
இந்தியா
ராகுல் நண்பர் திடீர் மாயம்: காங்கிரசில் பரபரப்பு
புதுடில்லி:காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலின் நண்பரும், கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவருமான நிஷாந்த் படேல், மர்மமான முறையில் காணாமல் போன விவகாரம், காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆனால் லக்னோவில் உள்ள புதேஸ்வர் ரயில்பாதை கிராசிங் அருகே தலையில் காயத்துடன் தலைவிரி கோலமாக கிடந்ததைக் கண்டுபிடித்தனர்.கா...
இந்தியா
செவ்வாய் கிழமையில் துவக்க மனமில்லை : காரைக்கால் என்.ஐ.டி., வகுப்பு இன்று துவக்கம்
காரைக்கால் : காரைக்கால் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி.,) முதலாமாண்டு வகுப்புகள் நேற்று துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சாஸ்திரப்படி செவ்வாய் நல்ல நாள் இல்லை என்பதால், முறைப்படி வகுப்புகள் இன்று துவங்குகின்றன. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடப்பு கல்வியாண்டில் புதிதாக என்.ஐ.டி., துவக்கப்பட்டுள்ளத...
இந்தியா
ரயில்வேயில் ஊழல்: 6,800 பேர் மீது நடவடிக்கை
புதுடில்லி : ரயில்வே துறையில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக, உயர்மட்ட அதிகாரிகள் உட்பட, 6,865 பணியாளர்கள் மீது ஆரம்பக்கட்டமாக, ஊழல் தடுப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், வடக்கு ரயில்வே மண்டலத்தில் அதிகப்படியான ஊழல் பெருச்சாளிகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக இந்திய ரயில்வே 16 ம...
இந்தியா
ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பு:சந்திரபாபு மீது தடியடியால் பிரச்னை
ஐதராபாத்:தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது தடியடி, காங்கிரஸ் எம்.பி., ஜெகன் மோகன் ரெட்டியின் யாத்திரை போன்ற பரபரப்பான சம்பவங்களால், ஆந்திராவில் பதட்டமான சூழல் நிலவுகிறது.மகாராஷ்டிராவில் கோதாவரி ஆற்றின் குறுக்கே பாப்லி அணை கட்டப்பட்டு வருகிறது. இதற்கு, ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் ...
தமிழகம்
சிவில் விமான பாதுகாப்பு அமைப்பில் பணியாளர் பற்றாக்குறை : ஒட்டு மொத்த விமான நிலையங்களின் பாதுகாப்பு க
விமான நிலைய பாதுகாப்பின் மிக முக்கிய அங்கமான, சிவில் விமான பாதுகாப்பு அமைப்பில் நிலவி வரும் பணியாளர் எண்ணிக்கை குறைவு காரணமாக நாட்டில் உள்ள விமான நிலையங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்தியாவில் உள்ள பல விமான நிலையங்கள் பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்ற உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந...
தமிழகம்
102 மாணவர்களுக்கு வைப்புத் தொகை:அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்
சென்னை:வருவாய் ஈட்டித் தரும் பெற்றோரை இழந்த ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 102 மாணவ, மாணவியருக்கு வைப்புத் தொகையை, அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரின் வருவாய் ஈட்டித் தரும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்தாலோ அ...
தமிழகம்
ஜைன மத இளம்பெண் துறவு பூண்டார் : நெகிழ்ச்சியுடன் வாழ்த்திய உறவினர்கள்
சென்னை: உறவுகள் மற்றும் உலக வாழ்க்கையை துறந்து ஜைன மதத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் தீபா காதியா, கடவுள் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடாய் ஆன்மிக வழியில் துறவறம் பூண்ட நிகழ்ச்சி பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களை நெகிழ வைத்தது. சென்னை, தங்கசாலை சமுத்திர முதலி தெருவைச் சேர்ந்தவர் தாராசந்த். இவரது மனைவி விமலாபாய் காதியா....
தமிழகம்
ராஜ்யசபா அ.தி.மு.க.,வில் பாலகங்கா, மனோஜுக்கு பதவி
சென்னை:ராஜ்யசபா அ.தி.மு.க., துணைத் தலைவராக மனோஜ் பாண்டியனும், கொறடாவாக பாலகங்காவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட வக்கீல் பிரிவு மாநில செயலர் மனோஜ் பாண்டியன், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலர் ராமலிங்கம் ஆகியோர் வரும் 27ம் தேதி ராஜ்யசபாவில் பதவி ஏற்கின்றனர்.ராஜ்...
தமிழகம்
பி.இ., முதற்கட்ட கவுன்சிலிங்கில் 37,216 பேருக்கு இடம்
சென்னை : நேற்றுடன் முடிந்த முதற்கட்ட பொறியியல் கவுன்சிலிங்கில், 37 ஆயிரத்து 216 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட கவுன்சிலிங் முடிவில், மூன்று தனியார் பொறியியல் கல்லூரிகளில், ஒரு இடம் கூட நிரம்பவில்லை. பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நட...
General
பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில், இந்து கோவிலின் ஒரு பகுதி, அரசு துறையினரால் இடிக்கப்பட்டதால், இந்துக்கள் அங்கு போராட்டம் நடத்தினர்.ராவல்பிண்டியில் மெடிக்கல் காலேஜ் அருகே திப்பு சாலையில் உள்ளது ரசீஸ் இ அசம் என்ற இந்து கோவில்; 1923ம் ஆண்டு தன்சுக்ராய் என்பவரால் கட்டப்பட்டது. 87 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு அருகில் இந்த...
தமிழகம்
ஜெ., தலைமையில் நடக்கவுள்ள திருமணங்களின் இடம் மாற்றம்
சென்னை:அடுத்த மாதம் 22ம் தேதி மதுரையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா தலைமையில் நடக்க இருந்த, திருமண விழாவின் இடம் மாற்றப்பட்டுள்ளது. சென்னை வானகரம், வேலப்பன் சாவடி அருகில் சென்னை, பெங்களூர் சாலை விழா பந்தலில் திருமணம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா தலைமையில், அடுத்த மாதம் 2...
தமிழகம்
விரயமாகும் பெரியாறு அணை நீர் : வைகை அணை உயர்வதில் சிக்கல்
ஆண்டிபட்டி : பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர், வைகை அணைக்கு குறிப்பிட்ட அளவு வந்து சேராமல் விரயமாகும் விதங்கள் குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில நாட்களாக, பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. பெரியாறு அணையில் இருந்து கம...
தமிழகம்
சூட்கேசில் சிறுவன் பிணம் : கள்ளக்காதலியின் வெறிச்செயல் அம்பலம்
சென்னை :சென்னையில் காணாமல் போய்,  சூட்கேசில் சடலமாக  மீட்கப்பட்ட  சிறுவன் ஆதித்யாவை, அவனது தந்தையின் கள்ளக்காதலி பூவரசியே  கொன்று சூட்கேசில் எடுத்துச் சென்று நாகப்பட்டினத்தில் வீசியுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பூவரசியை, போலீசார் கைது செய்தனர். சென்னை, விருகம்பாக்கம் பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் ...
இந்தியா
எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு
புதுடில்லி :எம்.பி.,க்களின் சம்பளத்தை ஐந்து மடங்கு உயர்த்த மத்திய அரசு தயாராகி விட்டது. இதற்கான மசோதாவை வரும் 26ம் தேதி துவங்கவுள்ள பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மற்ற மசோதாக்களை விட, எம்.பி.,க்களின் சம்பள மசோதாவுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சு :தமிழகத்தில் காமராஜர் ஆட்சி வர வேண்டும் என்ற கனவு உள்ளது. காமராஜர் ஆட்சி இல்லையே என்ற ஏக்கம் எல்லாருக்கும் உள்ளது. ஆனால், மத்தியிலும் காங்கிரஸ் கோலோச்சும் பல மாநிலங்களிலும் நடப்பது காமராஜர் ஆட்சி தான். அவர் வழிகாட்டிய பாதையில் தான் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தகவல் தொழில் நுட்பத்...
தமிழகம்
பத்திரம் தட்டுப்பாடு:பதிவு செய்ய முடியாமல் தவிப்பு
நிலக்கோட்டை:திண்டுக்கல் மாவட்டத்தில் 50,100,500, ஆயிரம் ரூபாய் பத்திரங்கள் இரண்டு மாதங்களாக தட்டுப்பாடாக உள்ளது. நிலம்,வீடு வாங்கியவர்கள் பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.திண்டுக்கல் மாவட்டத் தில் அனைத்து தாலுகா தலைமையிடம்,சில பேரூராட்சி பகுதிகளில் சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்...
தமிழகம்
இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்று பிடிபட்ட அகதிகள்
மண்டபம் : இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற அகதிகள் ஒன்பது பேரை, கியூ பிரிவு போலீசார் பிடித்தனர். ஒருவர், பாஸ்போர்ட் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.இலங்கையில் போர் முடிந்ததால், தமிழகத்தில் உள்ள அகதிகளில் சிலர் இலங்கை செல்வதற்காக விருப்பத்துடன் உள்ளனர். இச்சூழலில், சிலர் படகு மூலம் தப்பிச் செல்கின்றனர். கடந்த இருதினங்களுக்...
தமிழகம்
பால் கொள்முதல் விலை உயர்வு கோரி "ஆவின்' முன் வரும் 26ல் ஆர்ப்பாட்டம்
சோமனூர்: பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 26ம் தேதி ஆவின் நிறுவனம் முன் பால் குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்த போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.இது குறித்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சண்முகம் மற்றும் பாலு ஆகியோர் கூறியதாவது: தமிழகத்தில் பால் உற்பத்திச்...
தமிழகம்
ரேஷன் அரிசி காரில் கடத்தல்
பெ.நா.பாளையம்: காரமடை வனப்பகுதியில் இருந்து கேரளாவுக்கு காரில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.காரமடையில் இருந்து தோலம்பாளையம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. பெரியநாயக்கன்பாளையம் வனத்துறை ரேஞ்சர் பன்னீர்செல்வம், வனவர் சோமசுந்தரம் ஆகியோர் தோலம்பாள...
தமிழகம்
மெட்ரிக் மாணவர்களை மேம்படுத்த குழு தமிழகத்தில் மாவட்டம் தோறும் துவக்கம்
கோவை,: மெட்ரிக் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வழிவகைகளை கண்டறிவது; கற்றலில் புதிய யுக்திகளை ஆராய்வது; மாணவர் இடைநிற்றலை தடுப்பது உள்ளிட்ட நோக்கங்களை மையமாகக் கொண்டு, மாவட்டம் வாரியாக கல்விக் குழுக்களை அமைக்க, தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக இருந்த ம...
தமிழகம்
திண்டுக்கல் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து கொலை
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே வாலிபர் ஒருவர் கொடூரமான முறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப் பட்டார்.  இவர் கொலையில் மர்மம் நீடிப்பதால் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.திண்டுக்கல் செல்லமந்தாடியை சேர்ந்த முத்துச் சாமி மகன் மணிகண் டன்(27). இவர் பெயிண்டராக இருந்தார். இவர் சீலப்பாடி கூட்டுறவு சொசைட்டி அருகில் உள்...
தமிழகம்
தரைப்பாடம் இனி, தொடராது!
கோவை: மாநகராட்சி பள் ளிகளுக்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரும்பு மேஜை, நாற்காலி மற்றும் இருக்கைகள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றின் தரத்தை, கல்விக்குழு நேற்று ஆய்வு செய்தது.கோவை மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மண்டலங்களில் 85 பள்ளிகள் உள்ளன; 27 ஆயிரத்து 316 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.  பள்ளிகளுக்கு தேவையான...
தமிழகம்
பள்ளி வேலைநாட்கள் குறித்த அறிவிப்பு தலைமையாசிரியர்கள் பெருங்குழப்பம்
கோவை மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி வேலைநாள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, பள்ளிகளுக்கு இன்னும் அனுப்பப்படவில்லை. இதனால், தலைமையாசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர்.கோவை மாவட்டத்திலுள்ள 22 ஒன்றியங்களில் 1,800 ஒன்றிய துவக்கப் பள்ளிகளும், 600 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. நடப்பு கல்வியாண...
தமிழகம்
ஓட்டுப்பெட்டி வைத்து மாணவ பிரதிநிதிகள் தேர்வு
கோவை: நாட்டின் தேர்தல் நடைமுறைகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுப் பெட்டி வைத்து மாணவர் தேர்தல் நடந்தது.பள்ளி முதல்வர் பேபி அறிக்கை:இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் சாம்ராஜ்யத்தை உருவாக்கவல்லவர்கள். ஆகையால், இப்போதே நம் நாட்டின் தேர்தல் நடைமுறைகளை மாணவர்கள் அறிந்து வைத...
தமிழகம்
சாலை படுமோசம் அஜ்ஜனூர் மக்கள் அவதி
பேரூர்: வேடபட்டி அருகே, வடவள்ளி இணைப்புச்சாலையான அஜ்ஜனூர் சாலை மோசமான நிலையில் உள்ளது. பல லட்சம் ரூபாயில் துவங்கிய ரோடு போடும் பணி பாதியிலேயே முடங்கியுள்ளது.வீரகேரளம் பேரூராட்சியில் அஜ்ஜனூர் உள்ளது. இப்பகுதியிலிருந்து 2 கி.மீ தொலைவில் தொண்டாமுத்தூர் - வேடபட்டி மெயின்ரோடு அமைந்துள்ளது.  இந்த ரோடை சீரமைக்க நிதி ஒதுக்கப்ப...
தமிழகம்
பட்டணம் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
சூலூர்: பட்டணம் ஊராட்சியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவில், பல்திறன் போட் டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.தமிழக முன்னாள் முதல் வர் காமராஜ் பிறந்த நாள், "கல்வி வளர்ச்சி நாள்' விழாவாக ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. சூலூர், பட்டணம் நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு...
தமிழகம்
மருதமலை ஐ.ஓ.பி., காலனியில் குடிநீர் தட்டுப்பாடு; மக்கள் அவதி
பேரூர்: குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மருதமலை அடிவாரத்திலுள்ள ஐ.ஓ.பி., காலனி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வடவள்ளி பேரூராட்சி, 16வது வார்டில், ஐ.ஓ.பி., காலனி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு சிறுவாணி குடிநீர் சரிவர வினியோகிக்கப்படுவதில்லை. பவானி ஆற்றிலிருந்து பகிர்மான குழாய் மூலமா...
தமிழகம்
"குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது குற்றம்'
கோவை: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், துடியலூர் அருகேயுள்ள சுப்பிரமணியம்பாளையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், நீதிபதி மகிழேந்தி தலைமை வகித்தார். சுற்றுப்புறச் சூழல் மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்து அவர் பேசுகையில், ""பணத்துக்கா...
தமிழகம்
இந்து வாழ்வுரிமை மாநாடு அமைப்புகள் பங்கேற்பு
கோவை: இந்து வாழ்வுரிமை மாநாடு, இந்து மக்கள் கட்சி சார்பில் கவுண்டம்பாளையத்தில் நடந்தது.இ.ம.க., தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகித்தார். ராமசேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் பேசுகையில், ""மத்திய அரசு, பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதை கைவிட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். ""மாவோயி...
தமிழகம்
ஐ.டி.ஐ., மாணவர்களுக்குபணி நியமன உத்தரவு
பெரியநாயக்கன்பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய ஐ.டி.ஐ., நிறுவனத்தில் சில நாட்களுக்கு முன் என்ரான் இந்தியா, அமர் மீட்டரிங் பம்ப்ஸ், எமரால்டு ஜூவல்லரி உள்ளிட்ட 18 நிறுவனங்கள் வளாகத் தேர்வு நடத்தின. இதில், இந...
தமிழகம்
சமரசத்துக்கு பின் போராட்டம் வாபஸ்
வேடசந்தூர்:பிணத்தை எடுத்து செல்ல போதிய பாதையில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அதிகாரிகள் சமரசத்துக்கு பின் கலைந்தனர். மாரம்பாடி ஊராட்சியில் உள்ளது ஆவூர். இங்கு 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மெயின் ரோட்டிலிருந்து இந்த ஊருக்கு ஒத்தையடி பாதை மட்டும் உள்ளது. இந்த ஊர் மக்கள் தங்களுக்கு ரோடு வசதி வேண்டும் என போரா...
தமிழகம்
சட்டப்படிப்புக்கு நுழைவுத்தேர்வா? சட்ட மாணவர்கள் சாலைமறியல்
பேரூர்: சட்டப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு முறையை அமல்படுத்துவதை எதிர்த்து, கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து சாலைமறியலில் நேற்று ஈடுபட்டனர்.சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுமென, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு, சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்ப...
தமிழகம்
வரதமா நதியில் 100 கன அடி நீர் திறப்பு
பழநி:பழநி வரதமாநதியில் இருந்து வையாபுரி ஆயக்கட்டு பகுதி விவசாயத்திற்காக விநாடிக்கு 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.கொடைக்கானல் மலையில் பெய்துவரும் மழையால், அணைகளுக்கு நீர்வரத்துள்ளது. பாலாறுபொருந்தலாறு அணைக்கு வினாடிக்கு 30 கன அடி வரத்தும், 13 கன அடி நீர் வெளியேற்றமும் உள்ளது. நேற்றைய நீர்மட்டம் 34.32 அடி(மொத்த உயர...
தமிழகம்
மாணவ, மாணவியருக்கு வித்யா தீட்சை விழா
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சர்வமங்கள தியான பீடத்தில், பாரத கலாசார சமிதியின் சார்பில், மாணவர்களுக்கு வித்யா தீட்சை எழுதும் விழாநடந்தது.விழாவுக்கு காளிதாஸ் தலைமை வகித்தார். ஐயப்பன் கோவில் அறங்காவலர் அச்சுதன் குட்டி முன்னிலை வகித்தார். லயன்ஸ் கிளப் முன்னாள் கவர்னர் நவரத்னமாலுக்கு "கோஸ்ரீ' விருதும், பட்டுக்கோட்டை ராம...