category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
மானபங்க முயற்சி : 2 பேர் கைது
பாலக்கோடு: மாரண்டஹள்ளி அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர். மாரண்டஹள்ளியை அடுத்த கென்டியானயள்ளியை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன், கமலேசன் ஆகியோர் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றனர். அப்பெண் ...
தமிழகம்
வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை மீட்ட போலீஸார்
பாலக்கோடு: பாலக்கோடு அருகே வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை போலீஸார் மீட்டனர். பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மாரி. இவரது மனைவி சிந்து (20). இவர்களுக்கு கடந்த இரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது...
தமிழகம்
போர்மேன், இளநிலை உதவியாளர் பணி: சான்று சரி பார்க்க அழைப்பு
தர்மபுரி: சென்னை டான்சி நிறுவனத்தில் போர்மேன் பணி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கு தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் சான்றிதழ் சரி பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: ...
தமிழகம்
பருத்தி சாகுபடி கருத்தரங்கு
தர்மபுரி: நல்லம்பள்ளி யூனியன் லளிகம் கிராமத்தில் மான்சாண்டோ நிறுவனம் சார்பில் போல்கார்டு -2 பருத்தி சாகுபடி குறித்த கருத்தரங்கு நடந்தது. மண்டல உறுப்பினர் வடிவேல் தலைமை வகித்தார். மான்சாண்டோ நிறுவன மேலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பருத்தி சாகுபடி மூலம் அதிக லாபம் பெறும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. பல்வேறு...
தமிழகம்
கிரிக்கெட் போட்டி
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப்பில் பெப்சி அணி சார்பில் 10ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் நடக்கிறது. மூன்று நாட்கள் நடக்கும் இப்போட்டிகளின் இறுதி போட்டி வரும் 30ம் தேதி நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு 5,005 ரூபாயும், இரண்டாம் பரிசு 4,004, மூன்றா...
தமிழகம்
மீன் பிடிக்க அனுமதி கலெக்டரிடம் வலியுறுத்தல்
ஈரோடு: பவானி ஆற்றில் மீன் பிடிக்க அனுமதி வழங்கக்கோரி மீன் பிடி தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பவானி மீனவர் வீதி, கிழக்கு வீதியில் 250க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் பவானியாற்றில் மீன் பிடித்து விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்படுவதால், இ...
தமிழகம்
குடிசை அமைக்க அனுமதி கீரமடை கிராமத்தினர் கலெக்டரிடம் மனு
ஈரோடு: குடிசைகளுக்கு தீவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மீண்டும் அதே இடத்தில் குடிசை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கீரமடை மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மொடக்குறிச்சி அருகே ஈஞ்சம்பள்ளி கீரமடை கிராமம் அரிஜன நகரை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: அரிஜன நகரில் மூன்று ஆண்டாக 16 குடு...
தமிழகம்
கொல்லம்பாளையத்தில் மீண்டும் இருவர் காயம்
ஈரோடு: ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே மேம்பாலத்தில் மொபெட் மீது பஸ் மோதிய விபத்தில் இரு பெண்கள் படுகாயம் அடைந்தனர். ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரைக்கு சென்ற அரசு பஸ் கொல்லம்பாளையம் ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ் உள்ள சாலையில் சென்றபோது, எதிரே மூதாட்டி, ஒரு பெண் இருவரும் சென்று கொண்டிருந்த மொபெட் மீது மோதியது. மூதாட்டிக...
தமிழகம்
விசைத்தறிகள் ஒரு வாரம் ஸ்டிரைக் ஆரம்பம்
ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறியாளர்கள் நேற்று முதல் ஒரு வார காலத்துக்கு வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர். ஜவுளி உற்பத்திக்கு விசைத்தறிகள் மூலம் நெய்யப்படும் காடாத் துணி முக்கியத்துவம் வாய்ந்தது. ஈரோடு மாவட்டத்தை சுற்றியுள்ள தறிபட்டறைகளுக்கு திண்டுக்கல், கோவையிலிருந்து நூல் கொண்டு வரப்படுகிறது. வெளி...
தமிழகம்
வேளாண் கூட்டுறவு வங்கியில் முகாம்
ஈரோடு: ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் உறுப்பினர் கல்வித்திட்ட முகாம் பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது. முகாமில் கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் சோமகாந்தன், உறுப்பினர்களின் கடமை, பொறுப்பு, கூட்டுப்பொறுப்பு, பொதுசேவை, அக்ரி கிளினிக் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு சங்கம...
தமிழகம்
எதிர்கட்சிகள் இன்று பந்த் வீதி வீதியாக ஆதரவு கேட்பு
ஈரோடு: விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில், இன்று பொதுவேலை நிறுத்தம் நடக்கிறது. பந்த்துக்கு ஆதரவு கேட்டு  நேற்று வீதிவீதியாக எதிர்க்கட்சியினர் ஊர்வலம் சென்றனர். இந்தியா முழுவதும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட எட்டு முக்கிய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்கு அ.தி.மு....
தமிழகம்
நடவடிக்கை என்ன? கள் இயக்கம் கேட்கிறது
ஈரோடு: கள் குறித்து, நால்வர் குழுவும், தமிழக முதல்வரும் தெளிவான பதிலை தர வேண்டும் என கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது: தமிழகத்தில் கள்ளுக்கு விதித்திருக்கும் 23 ஆண்டு கால தடையை நீக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையிலான நால்வர் குழ...
தமிழகம்
ஏ.ஐ.டி.யு.சி., கூட்டம்
ஈரோடு: ஈரோடு ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் முனியப்பன் தலைமை வகித்தார். கம்யூனிஸ்ட் செயலாளர் குணசேகரன், ஏ.ஐ.டி.யு.சி., பொது செயலாளர் சின்னசாமி ஆகியோர் பேசினர். விலைவாசி உயர்வை கண்டித்தும், அதற்கு காரணமான ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்ய வேண்டும். பெட்ரோல், டீஸல் ...
தமிழகம்
மக்கள் குறைதீர் கூட்டம்
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சுடலைகண்ணன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மாயகிருஷ்ண ன் முன்னிலை வகித்தார். 61 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழகம்
இருள்சூழ்ந்த கள்ளிப்பட்டி புதிய பாலம்
கோபிசெட்டிபாளையம்: கோபியில் இருந்து கள்ளிப்பட்டிக்கு செல்ல பவானியாற்றில் கட்டப்படும் புதிய பாலத்தில் தெருவிளக்கு வசதி இல்லாததால், இரவில் அவ்வழியே செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். கள்ளிப்பட்டி - கோபி பகுதியை இணைக்கும் வகையில் நஞ்ச கவுண்டன்பாளையம் பகுதியில் பவானியாற்றின் குறுக்கே இரண்டு கோடியே 72 லட்ச...
தமிழகம்
அத்தாணியில் சூறாவளி மழை : முறிந்து விழுந்தன பனைமரங்கள்
அந்தியூர்: அந்தியூர், அத்தாணி சுற்றுவட்டாரத்தில் வீசிய பலத்த சூறாவளி காற்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பனை மரங்கள் முறிந்து விழுந்தன. நெல் அறுவடை நிறைவு பெற்றதால், சேதம் ஏதுமில்லை. கோடை வெயில் மட்டுமல்ல, சூறாவளி காற்றும் பலமாக வீசி வருகிறது. வெயிலுக்கு பயந்து வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களை, அடிக்கடி "கட்டாகும்' மின...
தமிழகம்
மானிய கோரிக்கையை எதிர்பார்க்கும் 100 வயது கால்நடை மருத்துவமனை
ஈரோடு: நூறாண்டுகள் பழமை வாய்ந்த ஈரோடு கால்நடை பெரு மருத்துவமனை கட்டிடத்துக்கு, மே 4ல் சட்டசபையில் நடக்கும் மானியக் கோரிக்கையில் புத்துயிர் கிடைக்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 48 கால்நடை மருந்தகங்கள், 42 கிளை நிலையங்கள், 20 தரம் உயர்த்தப்பட்ட கிளை நிலையங்கள், இரண்டு கால்நடை பெரு மருத்துவமனை,...
தமிழகம்
ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழக எல்லையில் கன்னட அமைப்பு சாலை மறியல்
சத்தியமங்கலம்: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை துவங்குவதற்கு முன், முதலில் இப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதை கண்டறிய ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, நேற்று தமிழக எல்லையில் மறியல் நடத்துவதாக கஸ்தூரி கர்நாடக ஜனபிரசிய வேதிகே அமைப்பினர் அறிவித்தனர். தலைவர் ரமேஷ்கவுடா தலைமையில் 200 பேர் தமிழக எல்லைப்பகுதியான கர்நாடக...
தமிழகம்
மாரியம்மன் கோவில் குண்டம் 1,000 பக்தர்கள் நேர்த்திக்கடன்
மோகனூர்: மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மோகனூரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப்ரல் 13ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. தினமும் பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்...
தமிழகம்
தண்ணீர் பந்தல் திறப்பு
ராசிபுரம்: ராசிபுரம் சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில், பழைய பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. தொகுதி பொது செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். நகராட்சி கவுன்சிலர் சீரங்கன் முன்னிலை வகித்தார்.  நாமக்கல் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் செல்வக்குமார் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, மக்கள...
தமிழகம்
இலவச கண் சிகிச்சை முகாம்
நாமக்கல்: மாதிரி கிராமம் அக்கரைப்பட்டியில், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மற்றும் சோழமண்டலம் எம்எஸ் இன்சூரன்ஸ் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இன்சூரன்ஸ் அதிகாரி கண்ணன் தலைமை வகித்தார். முகாமில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் சுவபன்குமார் மாகாபத்ரா, சுகன்யா, கவுதமன் ஆகியோர் கண் சம்மந்தப...
தமிழகம்
ஆன்-லைனில் வரி செலுத்தும் வசதி துவக்கம்
ப.வேலூர்: ப.வேலூர் டவுன் பஞ்சாயத்தில், ஆன்-லைன் மூலம் சொத்து வரி செலுத்தும் வசதி துவக்க விழா நடந்தது.டவுன் பஞ்சாயத்து சேர்மன் மணிமாரப்பன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் குருராஜன், கவுன்சிலர் ராமகிருஷ்ணன், துணை சேர்மன் சிவக்குமார், துப்புரவு ஆய்வாளர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆன்லைன் வசதியை பயன்படுத்தி, டவுன் ப...
தமிழகம்
தொலைதூர கல்வி பயில விண்ணப்பம் விநியோகம்
நாமக்கல்: அண்ணாமலை பல்கலை தொலைத்தூர கல்வி மையத்தில் 2010-11ம் ஆண்டுக்கான பட்டப்படிப்புகளுக்கு சேர்க்கை படிவம், கையேடு வெளியிடப்பட்டுள்ளது. சேந்தமங்கலத்தில் மலைவாழ் மக்கள் கல்வி வளர்ச்சி மேம்பாட்டுக்காக அண்ணாமலை பல்கலை தொலைதூர கல்வி மையம் துவங்கப்பட்டுள்ளது. அதில், 2010-11ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மற்றும்...
தமிழகம்
பொன்வரதராஜ பெருமாள் கோவிலில் 29ல் தேரோட்டம்
ராசிபுரம்: ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை தேர் திருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் (20ம் தேதி) துவங்கி ஏப்ரல் 25ம் தேதி வரை தினமும் கருடன், அனுமந்தன், அன்னம், சிம்மம், கஜலட்சுமி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பொன்வரதராஜ பெருமாள் ஸ்வாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருவீதி உலா வந்து...
தமிழகம்
கொந்தளம் மாரியம்மனுக்கு நாளை பால்குட அபிஷேகம்
நாமக்கல்: ப.வேலூர் அடுத்த கொந்தளம் மகாமாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று லட்சார்ச்சனை, 108 வலம்புரி, 108 இடம்புரி சங்காபிஷேகம், 1,008 பால்குட அபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, இன்று காலை 5.55 முதல் லட்சார்ச்சனை, சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து மகா தீபாராதனை நடக்கிறது.நாளை (ஏப்., 28) அதிகாலை ...
தமிழகம்
தென்னை மரத்தில் மதுரை வீரன் : ப.வேலூரில் பரபரப்பு
ப.வேலூர்: பில்லூர் கிராமத்தில் உள்ள தென்னை மரத்தில் மதுரை வீரன் ஸ்வாமி இறங்கியதாக கூறி, மரத்துக்கு கிராம மக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ப.வேலூர் அருகே பில்லூர் கிராமத்தை சேர்ந்த சரசு (50) என்பவருக்கு தச்சன்தோட்டம் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. நேற்று முன்தினம் சரச...
தமிழகம்
இன்ஜினியரிங் கல்லூரியில் புவி நாள் விழா
ராசிபுரம்: ராசிபுரம் ஞானமணி இன்ஜினியரிங் மற்றும் மேலாண் கல்லூரி சார்பில், புவி நாள் விழா நடந்தது. கல்வி நிறுவன தலைவர் அரங்கண்ணல் தலைமை வகித்தார். மாணவர் பிரபு வரவேற்றார். முதன்மை செயல் அலுவலர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். தாளாளர் மாலாலீனா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லூரி நிர்வாக அலுவலர் பிரேம்குமார், மு...
தமிழகம்
தமிழகம், கேரளாவில் முட்டை விலை 228 காசு
நாமக்கல்: தமிழகம், கேரளாவில் முட்டை விலை 228 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.  முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். தொடர்ந்து, 225 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 3 காசு உயர்த்தி 228 காசாக நிர்ணயிக்கப்பட்டது. ...
தமிழகம்
கண்களை கட்டி மனு அளித்த மக்கள்
சேலம்: சேலம் கலெக்டர் குறை தீர் கூட்டத்துக்கு கண்களை கட்டியபடி, பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். ஒடுக்கப்பட்ட பெண்கள் உரிமை இயக்கம் சார்பில் கண்களை கட்டியபடி, பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடந்த சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்துக்கு வந்தனர். அங்கு மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: குகை ஆற்றோரம் கிழக்கு தெ...
தமிழகம்
தேசிய சாப்ட் டென்னிஸ்: தமிழக வீரர்கள் பங்கேற்பு
சேலம்: தேசிய சப்-ஜூனியருக்கான ஐந்தாவது சாப்ட் டென்னிஸ் போட்டி சண்டிகாரில் வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து சேலம் மாணவர்கள் சிபி, விகாஸ், விஜய்கிருஷ்ணன், சூர்யா, கரூரைச் சேர்ந்த ஆதித்யா, நாமக்கல்லைச் சார்ந்த மகாதேவராஜன், திருச்சியைச் சேர்ந்த சிவபாலன், ஈரோட்டைச் சார்ந்த நகுல், சிற்பி, மாணவ...
தமிழகம்
சங்ககிரியில் சூறாவளியுடன் மழை: டோல்கேட் அமைக்கும் பணி பாதிப்பு
சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு, சங்ககிரி அருகே சேலம் - குமாரபாளையம் இடையிலான தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் அமைக்கப்பட்டிருந்த டோல்கேட் மேற்கூரை டெக்கரேசன் இரையானதால் டோல்கேட் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. உக்கிரத்தை தணிக்கு...
தமிழகம்
வில் வித்தை பயிற்சி துவக்கம்
சேலம்: சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று மாவட்ட அளவிலான இலவச கோடைக்கால  வில்வித்தை பயிற்சி முகாம் துவங்கியது. சேலம் மாவட்ட வில் வித்தை கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து மாவட்ட அளவிலான கோடைகால வில்வித்தை பயிற்சி முகாமை நடத்துகின்றன.வில்வித்தை பயிற்சி முகாம் காலை 6.30 மணியில் இருந்து 9.30 மணி வ...
தமிழகம்
அனல் மின் நிலையத்தில் விபத்து தொழிலாளி பலி: இருவர் படுகாயம்
மேட்டூர்: மேட்டூர் புதிய அனல் மின்நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் நேற்று மாலை தவறி கீழே விழுந்தனர். அதில் ஒருவர் பலியானார். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். மேட்டூரில் 3,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 600 மெகாவாட் அனல்மின்நிலையம் கட்டுமான பணி நடக்கிறது. சென்னை பி.ஜி.ஆர்., எனர்ஜி சிஸ்டம் ல...
தமிழகம்
தேர்த்திருவிழா
தலைவாசல்: தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி மறுவாழ்வு மைய மாரியம்மன் கோவில்,  தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில் அரசு மறுவாழ்வு மையம் உள்ளது. அங்குள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத தேர்திருவிழா நேற்று நடந்தது. மாரியம்மனுக்கு  பொங்கல் வைத்து வழிபாடு...
தமிழகம்
மூதாட்டி சாவு
ஆத்தூர்: ஆத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், இறந்து கிடந்த மூதாட்டி குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். ஆத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று இரவு 7 மணியளவில், சுமார்  75 வயது மதிக்க தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். யார், எந்த ஊர் என்ற விபரங்கள்  தெரியவில்லை. போலீஸார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
ஏரி காவலருக்கு கொலை மிரட்டல் ஒருவர் கைது 10 பேருக்கு வலை
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஏரி காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒருவரை பனமரத்துப்பட்டி போலீஸார் கைது செய்தனர். மேலும், பத்து பேரை தேடி வருகின்றனர். சேலம்  மாநகர் மக்களின் குடிநீர் தேவைக்கு 1911ல் பனமரத்துப்பட்டி ஏரி அமைக்கப்பட்டது. 2,700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை சேலம் மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறத...
தமிழகம்
ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆத்தூர்: ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் ஆக்கிரமிப்பு  அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.சேலம் - உளுந்தூர்பேட்டை வரையிலான நான்கு வழிச்சாலைபணிகள், சேலம் - காட்டுக்கோட்டை, காட்டுக்கோட்டை - உளுந்தூர்பேட்டை என இரண்டு கட்டங்களாக நடந்து வருகின்றன.  சேலம் - ஆத்தூர் வழிப்பாதையில்...
தமிழகம்
உறவினர்களால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை மறுப்பு
சேலம்: உறவினர்களால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. சேலம் அருகே குப்பனூர் காட்டு வளவை சேர்ந்தவர் குழந்தைக் கவுண்டர். அவரது மனைவி ராஜாமணி, மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். மூன்று பேர் திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர். கடைசி மகனான ஈஸ்வ...
தமிழகம்
நாளை சித்ரா பவுர்ணமி விழா கோவில்களில் சிறப்பு வழிபாடு
சேலம்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாளை சேலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில், கோட்டை அழகிரிநாதர் கோவில், ராஜகணபதி கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் நாளை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. தார...
தமிழகம்
மாணவி கொலை வழக்கு சாட்சி விசாரணை நிறைவு
சேலம்: சங்ககிரி மோரூர் பகுதியை சேர்ந்த பழனிவேலு, மீனா தம்பதி மகள் மோனிஷா(8). அவர் சங்ககிரி கிரேட்சன் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். 2008 நவம்பர் 1ல் பள்ளிக்கு சென்ற மோனிஷா வீடு திரும்பாததால், போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 5ல் பள்ளிக்கு பின்பகுதியில் உள்ள குன்றில் மோனிஷா பிணமாக கண்டெடுக்கப்பட்டாள். விச...
தமிழகம்
துணை கமிஷனர் பொறுப்பேற்பு
சேலம்: சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) நேற்று பொறுப்பேற்று கொண்டார். சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனராக ஜெயந்தி பொறுப்பு வகித்து வந்தார். அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.பி., ரவீந்திரன் சேலம் போலீஸ் துணை கமிஷனராக (க...
தமிழகம்
திருவிழாவில் தகராறு தேடப்பட்டவர்கள் கோர்ட்டில் சரண்
ஆத்தூர்: ஆத்தூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், தேடப்பட்ட அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் உள்பட இருவர் ஆத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆத்தூர் அருகே கல்லாநத்தம் கிராமத்தில் கடந்த 11ம் தேதி மழை வேண்டி வருண பகவானுக்கு திருவிழா நடந்தது. தொடர்ந்து ஸ்வாமி வீதியுலா நடந்தது.அப்போது, துக்க நிகழ்ச்சிக்காக ...
தமிழகம்
கள்ளக்காதலை கண்டித்தவர் கொலை பெண் உட்பட ஐந்து பேருக்கு ஆயுள்
சேலம்: ஆத்தூர் அருகே நடந்த கள்ளக்காதல் கொலையில் பெண் உட்பட ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் முதலாவது விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பைத்தூர் ரோட்டை சேர்ந்தவர் குப்புசாமி(48). அவரது சகோதரர் கணேசன். அவரது மனைவி உமா (36). கணேசன் இருதய நோயால் இறந்து விட்டார். உமாவுக்கு சொந்தமான விவசாய நி...
தமிழகம்
கரூர் கிளைச்சிறையில் நீதிபதி திடீர் ஆய்வு
கரூர்: கரூர் கிளை சிறைச்சாலையில் நீதிபதிகள் திடீர் ஆய்வு நடத்தினர். கரூர் கிளை சிறைச்சாலையில் கரூர் மாவட்ட நீதிபதி ராமமூர்த்தி, தலைமை குற்றவியல் நீதிபதி இளங்கோ ஆகியோர் நேற்று மாலை திடீர் ஆய்வு நடத்தினர்.பின்னர் நீதிபதி ராமமூர்த்தி கூறியதாவது: மாதந்தோறும் சிறைச்சாலையில் ஆய்வு செய்து பதிவு செய்யப்படுவது வழக்கம். கரூர் கி...
தமிழகம்
பழையஜெயங்கொண்டத்தில் சாலை ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் அவதி
லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்துள்ள பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. மக்கள் சாலையில் செல்ல அவதிப்படுகின்றனர்.பழைய ஜெயங்கொண்டம் பகுதியானது மிகவும் பரபரப்பாக மக்கள் இயங்கும் பகுதியாக உள்ளது. பஞ்சாயத்து அலுவலகம், கடைவீதி மற்றும் பள்ளிகள், சமுதாய...
தமிழகம்
அய்யர்மலை சித்திரை தேர் திருவிழா
குளித்தலை: குளித்தலை அரு கே அய்யர்மலையில் சித்திரை பெருவிழாவையொட்டி தேர் வ டம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 18ம்தேதி துவங்கி வரும் 29ம்தேதி வரை நடக்கிறது.ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக அதிகாலை ஐந்து மணிக்கு தேர் ஏறும் ஸ்வாமிக்கு அபிஷேகம் நடந்தத...
தமிழகம்
வக்கீலை போலீஸ் தாக்கிய சம்பவம் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்
கரூர்: கரூரில் வக்கீலை தாக்கிய போக்குவரத்து போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் வக்கீல் செங்கோட்டையன்(26).  நேற்று முன்தினம் மாலை ஈரோடு சாலையில் ஹோண்டா டூவீலரில் சென்ற போது, வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து எஸ்.ஐ., பார்த்தசாரதி, வக்கீலை தரக்கு...
இந்தியா
முன்னாள் கவர்னர் திவாரி மனு : ஏற்க மறுத்தது சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி : உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி தான் எனது தந்தை என, ரோகித் சேகர் என்பவர் டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்கக்கூடாது என கோரும் மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. ஆந்திர முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி தான் எனது தந்தை என, ரோகித் சேகர் என்பவர் நீண்ட நாட்களாக கோரி வருகிறார...
தமிழகம்
ஆவி அமுதாவுக்கு முன் ஜாமீன்
சென்னை : மிரட்டல் வழக்கில் ஆவி அமுதாவுக்கு, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் முன்ஜாமீன் வழங்கியது. அடியாட்களை வைத்து மிரட்டுவதாக ஆவி அமுதாவுக்கு எதிராக, அபிராமபுரம் போலீசில் நடிகை கனகா புகார் கொடுத்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஆவி அமுதா மனுத்தாக்கல் செய்தார். மனுவில், "நடிகை கனக...
தமிழகம்
சோளிங்கர் அருகே பயங்கரம் வாலிபர் மீது ஆசிட் வீச்சு
சோளிங்கர்: சோளிங்கர் அருகே முன் விரோதம் காரணமாக முகத்தில் ஆசிட் வீசியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சோளிங்கர் அருகே சோமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகன் பிரபு. வேன் டிரைவர் . இவர் இங்குள்ள தனியார் நிறுவனத்தில் கான்டிராக்ட்டில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி வ...
தமிழகம்
கார் மோதி சிறுவன் பலி
குடியாத்தம்: குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்தவர் யாசின். ஷû கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சாதிக்பாஷா (4). நேற்று முன்தினம் மாலை வீட்டருகே உள்ள ரோட்டோரம் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, அந்த வழியாக வந்த கார் சிறுவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் அதே இடத்தில் இறந்தான். குடியாத்தம் டவுன் ...
தமிழகம்
போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு நெமிலி அதிமுகவினர் நோட்டீஸ்
அரக்கோணம்: கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு நெமிலி அதிமுக நிர்வாகிகள் நேற்று ஆதரவு நோட்டீஸ் வினியோகித்தனர்.எதிர்கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்தம் நடக்கிறது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு நெமிலியில் உள்ள எல்லா கடைகளுக்கும் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி இணை செயலாளரும்...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்புஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு
வாணியம்பாடி: வாணியம்பாடியில் மக்கள் தொகை கணக்கெடுப்பது பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. வாணியம்பாடி தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு இசுலாமியா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. தாசில்தார் சாவித்திரி தலைமை வகித்தார். மண்டல துணை தாசில்தார் பாக்கியலட்சுமி முன்னில...
தமிழகம்
புள்ளி மான் மீட்பு
திருவண்ணாமலை: கண்ணமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது. கண்ணமங்கலம் அடுத்த இரும்புலி செங்குளம் கிராமத்திற்குள் நேற்று அதிகாலை புள்ளி மான் ஒன்று வழி தவறி வந்தது. தெரு நாய்கள் மானை துரத்தின. தப்பியோடிய மான், பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தது. சந்தவாசல் வனத்துறை அதிகாரிகள், மானை மீட்டு ம...
தமிழகம்
பைக் மீது கார் மோதி இருவர் பரிதாப பலி
திருவண்ணாமலை: வந்தவாசி அருகே பைக் மீது கார் மோதியதில், சென்னையை சேர்ந்த இருவர் பலியாகினர். சென்னை ஆவடியை சேர்ந்தவர் காளிமுத்து (42). அவரது மைத்துனர் குமார் (40). இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டுவில் உறவினர் இல்ல திருமண விழாவில் நேற்று முன் தினம் கலந்து கொண்டனர். நேற்று காலை 10 மணிக்கு அங்கிருந்து பைக்கில் ப...
தமிழகம்
அ.தி.மு.க பொதுக்கூட்டம்
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது.சேத்துப்பட்டு - வந்தவாசி ரோட்டில் உள்ள காமராஜர் சிலை அருகே, விலைவாசி உயர்வை கண்டித்து ஒன்றிய, நகர அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் அரிக்குமார் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய அவ...
தமிழகம்
புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி : கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அணுமின் நிலையத் திற்கு வெளியே காமராஜர் சிலைமுன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அவர் கூறுகையில், ""தமிழகத்தில் மின்சார தட்டுப்பா...
தமிழகம்
ஓடும் ரயிலில் தவறி விழுந்து பெண் படுகாயம்
தூத்துக்குடி : கோவில்பட்டி, புதுக்கிராமம் சிந்தாமணி நகர், குருசாமி மனைவி முத்துராணி (25). இவர், குடும்பத்தினருடன் நேற்று பகல் 11 மணியளவில், கோவில்பட்டியிலிருந்து மணியாச்சிக்கு, சென்னை - தூத்துக்குடி சிறப்பு ரயிலில் பயணம் செய்தார். குமாரபுரம் பகுதியில் ரயில் சென்றபோது,அந்த பெட்டியிலிருந்த குழாயில், முத்துராணி முகம் கழுவ...
தமிழகம்
மின்னல் தாக்கி விவசாயி பலி
தூத்துக்குடி : கோவில்பட்டி, நாலாட்டின்புத்தூரைச் சேர்ந்தவர் செல்லத்துரை(52). விவசாயியான இவர், நேற்று மதியம் 2.30 மணியளவில், அங்குள்ள இவரது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென மழை பெய்யவே, கொய்யா மரத்தின் கீழ் சென்று நின்றார். அப்போது ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் செல்லத்துரை, படுகாயமடைந்து அங்கேயே இறந்தார...
தமிழகம்
கொலையான போலீஸ்காரர் வலது கையை காணோம்
திருநெல்வேலி : களக்காடு அருகே கொலை செய்யப்பட்ட போலீஸ்காரரின் வலது கையை கொலை செய்தவர்கள் எடுத்துச் சென்று விட்டனர். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்தவர் பன்னீர்(59). ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.,வான இவரது மகன்கள் ஜெயப்பிரகாஷ்(19), கோபாலகிருஷ்ணன்(30). 2008 ல் கலந்தபனை என்ற ஊரில் நடந்த கோயில் விழாவில், ...
தமிழகம்
போதை பயணி விமானத்தில் ரகளை
திரிசூலம்: பிராங்பர்ட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த போதை பயணி ஒருவர் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது ரகளை செய்தார். சென்னையில் விமானம் தரையிறங்கியதும் அவரை பிடித்த போலீசார், விசாரணைக்கு பின் எச்சரித்து அனுப்பினர். ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜரேஸ்லேன்(32). இவர், பிராங்க்பர்ட்டில் இருந்து, ந...
தமிழகம்
வழிப்பறியில் இழந்த 40 சவரன் மீட்பு : திருட்டு வழக்கில் 12 பேர் கைது
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கில் ஈடுபட்ட, 12 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து, 40 சவரன் தங்க நகைகளையும் மீட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில், பெண்களை பைக்கில் தொடர்ந்து வந்து தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து செல்வது, தொடர் கதையாகி வந்தது. இதையடு...
தமிழகம்
லாரி மீது பஸ் மோதி மூவர் பலி
மண்ணச்சநல்லூர் : திருச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது, அரசு பஸ் மோதியதில், மூன்று பேர் பலியாயினர். ஏழு பேர் காயமடைந்தனர். நேற்று முன்தினம் இரவு, சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து, தூத்துக்குடிக்கு தமிழ்நாடு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. இதில், இரண்டு குழந்தைகள் உட்பட, 38 பேர் பயணம் செய்தனர். தூத்துக்குடியை சே...
தமிழகம்
10 ரூபாய் தரமறுத்தவருக்கு அடிஉதை
தூத்துக்குடி : தூத்துக்குடி, துரைக்கனி நகரைச் சேர்ந்தவர் கோயில்பிச்சை(39). நேற்று முன்தினம் மாலை இவரை, அப்பகுதியைச் சேர்ந்த அய்யம்பெருமாள், கார்த்திக், சிவன்பாண்டி, செல்வக்குமார் ஆகிய நால்வர் சந்தித்து, வினாயகர் கோவில் பூஜை செலவுக்கு, வாரம் 10 ரூபாய் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு, கோயில் பிச்சை மறுப்பு தெரிவித்துள்ளார்...
தமிழகம்
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு : கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம்
சத்தியமங்கலம் : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை துவங்குவதற்கு முன், முதலில் இப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதை கண்டறிய ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழக எல்லையில் நேற்று மறியல் நட...
தமிழகம்
பைக் மீது கார் மோதிய விபத்து : சென்னையை சேர்ந்த 2 பேர் பலி
திருவண்ணாமலை : வந்தவாசி அருகே பைக் மீது கார் மோதியதில், சென்னையை சேர்ந்த இருவர் பலியாகினர். சென்னை ஆவடியை சேர்ந்தவர் காளிமுத்து (42). அவரது மைத்துனர் குமார் (40). இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டுவில் உறவினர் இல்ல திருமண விழாவில் நேற்று முன் தினம் கலந்து கொண்டனர். நேற்று காலை 10 மணிக்கு அங்கிருந்து பைக்கில் ...
தமிழகம்
ஐ.பி.எல்., லலித் மோடி சஸ்பெண்டை அடுத்து புதிய தலைவர் தேர்வு : ஆவணங்களும் மாயம் என்று சஷாங் புகார்
மும்பை : ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து லலித் மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து, இடைக்கால தலைவராக சிரயு அமீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆலோசனை கூற குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. தவிரவும் முக்கிய ஆவணங்கள் மாயம் என்றும், ஏலம் விட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோக...
தமிழகம்
ராஜஸ்தான் கவர்னர் மாரடைப்பால் மரணம்
புதுடில்லி : ராஜஸ்தான் கவர்னர் பிரபா ராவ்(75), நேற்று மாரடைப்பால் காலமானார். நேற்று முன்தினம், ஜோத்பூரில் அவர் தங்கியிருந்த வீட்டில், அவரது அறையில் அவர் உணர்வின்றிக் கிடந்தார். பின், "எய்ம்ஸ்' மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். அங்கு, அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சையளித்தும் பலனளிக்க...
தமிழகம்
மதுரையில் கோலாகலமாக நடந்த சித்திரை தேரோட்டம் : பக்தர்கள் பரவசம்
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் 11ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, உச்சிக்கால பூஜை வரையுள்ள அனைத்து பூஜைகளும் அதிகாலை 3 மணிக்குள் செய்யப்பட்டன. எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கவும், தேர்களை புனிதப்படுத்தவும் அதிகாலை 4 மணிக்கு தேர்களுக்கு ரதரோஹணம் பூஜை செய்யப்ப...
தமிழகம்
மதுரை சித்திரை திருவிழா - 12
மதுரையில் இன்று மாலையில், மீனாட்சியம்மனும், சொக்கநாதர், பிரியாவிடையும் மாசி வீதிகளில் ரிஷப வாகனத்தில் பவனி வருவார்கள். ஏற்கனவே ஆறாம் திருநாளில் இதே வாகனத்தில் இவர்கள் பவனி வந்தனர். கிடைத்தற்கரிய இந்தக்காட்சி இன்றும் பக்தர்களுக்கு கிடைத்திருக்கிறது. புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே இந்த தரிசனம் கிடைக்கும் என்பது ஐதீகம்...
தமிழகம்
தமிழகத்தில் தான் அங்கீகாரம் கிடைக்கிறது : அரவாணிகள் பெருமிதம்
விழுப்புரம் : தமிழகத்தில் தான் உரிய அங்கீகாரம் கிடைப்பதாக அரவாணிகள் பெருமிதத்துடன் கூறினர். விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழாவையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வந்து அரவாணிகள் பலர் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர். இவர்களுக்காக, மிஸ் கூவாகம் போட்டி, தனித்திறன் போட்டிகளும், ம...
தமிழகம்
நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி
ஈரோடு : நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடத்த இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலை அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. கடந்த 2008 முதல், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்...
தமிழகம்
குடியேற்றத் துறையின் கிடுக்கிப்பிடியால் வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை குறைகிறது
சென்னை : வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் தரகர்கள் மற்றும் ஏஜன்டுகள் மீது, குடியேற்றத் துறையின் பிடி இறுகியிருப்பதால், 2008-09 ஐ விட, 2009-10ல் வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில், சென்னையிலுள்ள குடியேற்றத் துறை அதிகாரி சேகர், அவரது ஐந்து உதவியாளர்களுடன் ஊ...
தமிழகம்
நூல் விலை உயர்வு : ஈரோட்டில் கடையடைப்பு
ஈரோடு : நூல் விலை உயர்வை கண்டித்து, கைத்தறி ஜவுளி உற்பத்தி சங்கம் மற்றும் 45 சங்கங்களின் சார்பில் ஈரோட்டில் இன்றும், நாளையும் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. நாளை உண்ணாவிரதம் நடக்கிறது. நூல் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், ஜவுளி தொழில் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. கைத்தறி, விசைத்தறி கூடங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ள...
தமிழகம்
கண்ணகி கோவிலில் நாளை சித்ராபவுர்ணமி விழா
கூடலூர் : மங்கலதேவி கண்ணகி கோவிலில், நாளை சித்ராபவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில், சித்ராபவுர்ணமி விழா நாளை அதிகாலை 4 மணிக்கு துவங்குகிறது. காலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. கண்ணகிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இக்கோவிலுக்கு தமிழக வனப்பகுத...
தமிழகம்
கள்ளழகருக்கு ஆண்டாள் சூடிய மாலை : ஸ்ரீவி.,யிலிருந்து மதுரைக்கு அனுப்பப்பட்டது
ஸ்ரீவில்லிபுத்தூர் : மதுரை சித்திரை திருவிழாவில், நாளை வைகையாற்றில் இறங்கும் கள்ளழகருக்கு அணிவிக்கப்படும் ஆண்டாள் சூடிய மாலை, கிளி,வஸ்திரம் ஆகியவை ஸ்ரீவி.,யிலிருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் சூடிய மாலை, கிளி, வஸ்திரம் ஆகியவை திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்ஸவத்தில் கர...
தமிழகம்
மானியத்திற்காக கலைக்கப்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் கண்காணிப்பு தேவை
விருதுநகர் : மானியத்திற்காக ஐந்தாண்டுகளுக்கு பின் கலைக்கப்பட்டு, உறுப்பினர்கள் சிலரை மாற்றி, மறுபெயரில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களை அரசு கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் ஆண்டுதோறும் 25 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழுக்களை துவக்க வேண்டும் என அரசால் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. புதிய குழுக்களை துவக்க வேண்டிய கட்டாய...
தமிழகம்
பி.சி., - எம்.பி.சி.,மாணவர்களுக்கு புதிய விடுதிகள்
சென்னை:பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு 25 விடுதிகளும், இஸ்லாமிய மாணவர்களுக்கு ஒரு விடுதியும் புதிதாக திறக்கப்படுமென அமைச்சர் அறிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இந்த ஆண்டு செயல்படுத்த உள்ள புதிய திட்டங்கள் குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு: * கள்ள...
தமிழகம்
சிறுபான்மையினர் நல ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து:சட்டசபையில் வைத்து முதல்வர் கையெழுத்திட்டார்
சென்னை:சிறுபான்மையினர் நல ஆணையத்துக்கு சட்ட ரீதியான அந்தஸ்து வழங்குவதற்கான உத்தரவில், சட்டசபையில் வைத்து முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டார்.சிறுபான்மையின ஆணையத்தை சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றித் தர வேண்டுமென, சட்டசபையில் பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்தார். இது பற்றி தனது பதிலுரையில் குறிப்பிட்ட அமைச்சர் சாத்தூர் ராமச்ச...
General
துப்பாக்கியுடன் ஒபாமாவை சந்திக்க முயன்றவர் கைது
ஆஷ்வில்லி:அமெரிக்க அதிபர் ஒபாமாவை, விமானநிலையத்தில் துப்பாக்கியுடன் சந்திக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிபர் ஒபாமா, வார விடுமுறை நாட்களில் ஆஷ்வில்லி பகுதியில் குடும்பத்துடன் பொழுதை கழிப்பார். கடந்த 25ம்தேதி, ஆஷ்வில்லி விமான நிலையத்தில் போலீஸ் காரில் வந்த, ஜோசப் சீன் மெக்வே(23) என்ற நபர் காரிலிருந்து இறங்கியது...
General
படகில் வந்த 41 பேர்: கப்பற்படை விசாரணை
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அருகில் புகலிடம் தேடி கடலில் நின்று கொண்டிருந்த 41 பேரை கொண்ட படகை, அந்நாட்டு கடற்படை மீட்டு விசாரணை நடத்தி வருகிறது.மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரை அருகில் உள்ள ஆஷ்மோர் தீவு அருகில், 41 பேருடன் கூடிய படகை, ஆஸ்திரேலிய கடற்படை இடைமறித்து, விசாரணைக்காக அருகிலுள்ள கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்துச் சென்றுள்ள...
தமிழகம்
இன்று ஆற்றில் இறங்குகிறார் அழகர் : தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு
மதுரை : லட்சகணக்கான பக்தர்களின் கோவிந்தா சரண கோஷத்தினிடையே கள்ளழகர் இன்று அதிகாலை வைகையாற்றில் இறங்குகிறார். இன்று அதிகாலை தல்லாகுளம் பெருமாள் கோவிலில், கள்ளழகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி ஒருமுறை வலம் வருகிறார். பின், தமுக்கம் கருப்பண சுவாமி கோவில் முன்பு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்...
தமிழகம்
புண்ணாகும் பாதங்கள்: பரிதவிக்கும் யானைகள்
மதுரை : கரடு முரடாக தோற்றமளிக்கும் யானையின் பாதம் உண்மையிலேயே மிருதுவானது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. தரையில் பாதத்தை வைக்கும் போது விரல்கள் விரிந்துக் கொள்ளும்; தரையிலிருந்து எடுக்கும் போது சுருங்கிக்கொள்ளும் தன்மை உடையது. மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அவ்வையார்,...
General
ரூ.12 கோடி பண மோசடி: இந்தியர்களுக்கு சிறை
வாஷிங்டன்: இணையதளம் மூலம் பிறருடைய பணப்பரிமாற்ற தகவல்களைத் திருடி பணமோசடி செய்ததாக, மூன்று இந்தியர்களுக்கு அமெரிக்காவில் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த ஜெய்சங்கர் மாரிமுத்து(36), திருஞானம் ராமநாதன் (37), சொக்கலிங்கம் ராமநாதன் (36) மூவரும் அமெரிக்காவில் இணையதளம் மூலமாக, "ஹேக்கிங்' என்ற முறையில், பண ...
General
பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திடீர் திட்டம்
துபாய்:மனித உரிமை அமைப்புகளின் நெருக்கடியை அடுத்து, பெண்களின் திருமண வயதை 16 ஆக நிர்ணயிப்பது குறித்து, சவுதி அரேபிய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.சவுதி அரேபியாவில், கடந்தாண்டு 11 வயது சிறுமிக்கு, 80 வயதான முதியவர் ஒருவரை, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே அந்த சிறுமி, தனத...
General
பாக்., பிரதமருடன் மன்மோகன் திம்புவில்ஆலோசனை நடத்துவாரா: கிருஷ்ணா பதில்
திம்பு:சார்க் மாநாட்டில் பிரதமர் மன் மோகன் வந்து கலந்து கொண்ட பிறகு தான், பாகிஸ்தான் பிரதமருடன் அவர் விவாதிப்பாரா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என, வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.பூடானின் திம்பு நகரில், சார்க் மாநாடு இன்று துவங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், பூடான், இலங்கை, வங்கதேசம், மாலத் தீ...
General
சாண்ட்விச், சாஸ் ஆகியவற்றில் உப்பு அளவை குறைக்க முடிவு
நியூயார்க்:அமெரிக்காவின் பிரபல உணவு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் உப்பின் அளவை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளன.உணவில் அதிக உப்பு கலப்பதால் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் எட்டு லட்சம் பேர் இந்த நோய்களால் இறக்கின்றனர். நியூயார்க்கில் மட்டும்...
தமிழகம்
ஜாக்கெட் கிழிந்ததாக அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ.,புகார்
சென்னை : சட்டசபையில் பேச வாய்ப்பு கேட்டு அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். சபையில் இருந்து வெளியேற்றும்போது, சபைக் காவலர்கள் தங்களை தாக்கியதாக ஆண் எல்.எல்.ஏ.,க்களும், பெண் எம்.எல்.ஏ., ஒருவரின் ஜாக்கெட் கிழிந்ததாகவும் புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டசபைய...
தமிழகம்
அழகரின்அபூர்வ வரலாறு
ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும் போது அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார். இந்த விஷயத்தை கேள்விப் பட்ட சிவன், உலகில் தர்ம,நியாயம் அழிந்து விடக்கூடாது. அதை பாதுகாப்பது உன் பொறுப...
தமிழகம்
எதிர்க்கட்சிகள் சிதறின: வெட்டுத் தீர்மானம் படுதோல்வி
புதுடில்லி : எதிர்க்கட்சிகள்  சிதறலால் மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக  கொண்டுவரப்பட்ட   வெட்டுத் தீர்மானம் நேற்று தோல்வி அடைந்தது. குறிப்பாக பெட்ரோலிய விலை உயர்வை எதிர்த்த வெட்டுத் தீர்மானத்தில்,  அரசுக்கு ஆதரவாக 289 ஓட்டுகளும், எதிர்ப்பாக 201  ஓட்டுகளும் விழுந்தன.  முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., மற்றும் இடதுசாரிகள் உள்...
இந்தியா
இது உங்கள் இடம்
அடக்கு முறை ஜனநாயகம்!கலை அரசு, கோவையிலிருந்து எழுதுகிறார்: டில்லியில் உள்ள ராஜ்யசபா, லோக்சபாவும், மக்கள் பிரதிநிதிகள் கூடும் இடம் தான்; சென்னையில் உள்ள தமிழக சட்டசபையும், மக்கள் பிரதிநிதிகள் கூடும் இடம் தான்.லோக்சபா, ராஜ்யசபா இயங்குவதை தினமும், தொலைக்காட்சியில் பார்க்கலாம். உறுப்பினர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களால், சபை...
இந்தியா
சொல்கிறார்கள்
வாழ்வு தந்த மகளிர் சுய உதவிக் குழு!சிறந்த மகளிர் குழுவிற்கான விருது பெற்ற சவுடாம்மன் சுய உதவிக் குழுவின் தலைவர் ராமாத்தாள்: கூலி வேலை செஞ்சு ரொம்ப கம்மியான சம்பளத்துல குடும் பத்த நடத்த வேண்டி இருந் துச்சு.அதனால, கந்துவட்டிக்கு வாங்கிக் கஷ்டப்பட்டோம். பனியன் கம்பெனிக்கு டெய்லரா வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தோம்.அப்ப தான...
இந்தியா
பேச்சு, பேட்டி, அறிக்கை
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் மனித உரிமைகளுக்குப் பாதுகாப்பில்லை. ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. இத்தகைய காட்டுத் தர்பாரை நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர், ஜனநாயகம் பற்றி பேசுவது பித்தலாட்டம். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி பேச்சு : பாகிஸ்தான், தம் மண்ணில் ...
தமிழகம்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய பெண் அதிகாரி கைது
புதுடில்லி : பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இந்திய பெண் தூதரக அதிகாரி, கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில், பத்திரிகை மற்றும் தகவல் தொடர்புத் துறைச் செயலராக பணியாற்றியவர் மாதுரி குப்தா. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தியாவை பற்றிய மிக முக்கிய ரகசியங்களை இவர் சேகரித்து பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார்....
தமிழகம்
இரண்டு தலை ஆண் குழந்தை இறந்தது
குண்டூர் : ஆந்திராவில் கடந்த வாரம், இரண்டு தலைகளுடன் பிறந்த ஆண் குழந்தை, நேற்று பரிதாபமாக இறந்தது. ஆந்திரா, குண்டூரைச் சேர்ந்தவர் அருணா. இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கடந்த வாரம், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு இரண்டு தலைகள் இருந்தன. சுவாசப் பை, முதுகு தண்டுவடம் ஆகியவையும் இரண்ட...
தமிழகம்
சென்னை வந்த விமானத்தில் கோளாறு
மும்பை : மும்பையிலிருந்து, சென்னைக்கு 87 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் - இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மீண்டும் மும்பைக்கே திரும்பி இறங்கிவிட்டது. ஏர் - இந்தியா விமானமான, ஐ.சி-572, 87 பயணிகளுடன் நேற்று காலை 6.33 மணியளவில் மும்பை சத்ரபதி சிவாஜி விமானநிலையத்திலிருந்து புறப்பட்டது. புறப்பட்ட 20 நிமிடங்களில் தொ...
தமிழகம்
திருவிழா கொண்டாட 144 தடை : ரேஷன் கார்டை ஒப்படைத்த மக்கள்
திண்டுக்கல் : பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்த கோயில் திருவிழாவிற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் ரேஷன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை,உழவர் அட்டை, அரசு காப்பீட்டு திட்ட அட்டைகளை திண்டுக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்தனர். திண்டுக்கல் அருகேயுள்ள பெருமாள்கோவில்பட்டியில் காளியம்மன் கோயில் பிரச்ன...
தமிழகம்
மாசு கலந்த நீரை குடித்த இருவர் பலி
ஓசூர் : தளி அருகே, மாசு கலந்த நீரை குடித்த இருவர் பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி யூனியன் அச்செட்டி அடுத்த பஞ்சல் துணை கிராமத்தில், நேற்று முன் தினம், சிறியவர் முதல் பெரியவர் வரை அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் அடைந்தனர். அவர்களில் 16 பேர், சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். மயக்கம் தெளிந்...
தமிழகம்
கள்ளக்காதலர்களால் பத்து குழந்தைகள் தவிப்பு
நாகர்கோவில் : கள்ளக்காதலில் ஏற்பட்ட காமத்தால், மூன்று கள்ளக் காதல் ஜோடிகள், குழந்தைகளைத் தவிக்க விட்டு, தலைமறைவாகி விட்டனர். இதனால் மூன்று குடும்பங்களில் பத்து குழந்தைகள் தவித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே மயிலாடிபுதூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (42). இவரது மனைவி அம்மாபழம் (38). இவர்களுக்கு மூ...
தமிழகம்
ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் காயம்
நாகர்கோவில் : மதுரை சி.எஸ். காலனியை சேர்ந்தவர் மாரியம்மாள் (70). இவர்கள் கொல்லத்தில் இருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்த பயணிகள் ரயிலில் ஓடி சென்று ஏறினார். அப்போது தவறி அவர் கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவர் நாகர்கோவில் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.