category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | தமிழகம், கேரளாவில் முட்டை விலை 272 காசு | நாமக்கல்: தமிழகம், கேரளாவில் முட்டை விலை 272 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை உற்பத்தி மற்றும் மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து 270 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 2 காசு உயர்த்தி 272 காசாக நிர்ணயிக... |
தமிழகம் | ரூ.50 லட்சம் மதிப்பில் ஆழ்துளை குழாய் கிணறு | நாமக்கல்: நகராட்சியில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ் குழாய் கிணறு அமைப்பதற்கு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாமக்கல் நகராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் செல்வராஜ் தலைமையில், நடந்தது. துணைத்தலைவர் பூபதி முன்னிலை வகித்தார். நகராட்சி 7வது வார்டு பாவடி தெருவில் அமைக்கப்பட்டுள்... |
தமிழகம் | கருணையாறு வறண்டதால் 25 ஆயிரம்மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் | ஆழ்வார்குறிச்சி:கருணையாறு வறண்டதால் சுமார் 25 ஆயிரம் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.ஆழ்வார்குறிச்சிக்கும், ஆம்பூருக்கும் இடையே மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் கருணை ஆறு உள்ளது. இந்த கருணை ஆற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய உறைகிணறுகள் மூலமாக ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், மேலா... |
தமிழகம் | திசையன்விளை ஜெயந்திநாதர் ஐ.டி.ஐ.தாளாளர் இல்லத் திருமண வரவேற்பு விழா | திசையன்விளை:திசையன்விளை ஜெயந்திநாதர் ஐ.டி.ஐ.தாளாளர் இல்லத் திருமண வரவேற்பு விழா நடந்தது.திசையன்விளை ஜெயந்திநாதர் ஐ.டி.ஐ. தாளாளர் கணேசன் - சித்ரா லெட்சுமி ஆகியேரின் மகன் பாலமுருகனுக்கும், சென்னை அபிராமபுரம் கிருஷ்ணமூர்த்தி - ஆனந்தி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் மகள் ரம்யா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி திசையன்விளை ஸ்ரீம... |
தமிழகம் | குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல் | ராசிபுரம்: குடிநீர் கேட்டு 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், ராசிபுரம்- புதுப்பட்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பம்பாளையம் பஞ்சாயத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்களுக்கு மோகனூர்- சீராப்பள்ளி கூட்டு குடி... |
தமிழகம் | இடையன்குடி ஆலயபிரதிஷ்டை பண்டிகை | திசையன்விளை:இடையன்குடி தூய திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடந்தது.இடையன்குடி தூய திரித்துவ ஆலய 130வது பிரதிஷ்டை பண்டிகை இரு நாட்கள் நடந்தது. விழாவில் ஆயத்த ஆராதனை, பஜனை பிரசங்கம், காலை ஆராதனை, பிரதிஷ்டை பண்டிகை, திருவிருந்து ஆராதனை, செய்தி, கவர் காணிக்கை படைத்தல், ஏலம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.ஏற்பாடுகளை சேக... |
தமிழகம் | திசையன்விளையில்காயகல்ப பயிற்சி | திசையன்விளை:திசையன்விளையில் காயகல்ப பயிற்சி நடந்தது.வள்ளியூர் மனவளக்கலை அறக்கட்டளை சார்பில் காயகல்ப பயிற்சி திசையன்விளை தவ மையத்தில் நடந்தது. செல்லம்மாள் தலைமை வகித்தார். துணை பேராசிரியர் கணபதி அம்மாள் முன்னிலை வகித்தார். ரேவதி இறைவணக்கம், குருவணக்கம் பாடினார். அந்தோணி தவம் செய்தார். துணை பேராசிரியர் ராமநாதன் பயிற்சியள... |
தமிழகம் | நான்குநேரி எம்.எல்.ஏ.,இல்லத்திருமண வரவேற்பு விழா | நான்குநேரி:நான்குநேரி எம்.எல்.ஏ. வசந்தகுமார் இல்லத் திருமண வரவேற்பு விழா வள்ளியூரில் நடந்தது.நான்குநேரி எம்.எல்.ஏ. வசந்தகுமாரின் மகன் விஜயகுமார் - நித்யா திருமணம் சென்னையில் குமரிஅனந்தன் தலைமையில் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி வள்ளியூர் டி.ஆர்.மஹாலில் நேற்று முன்தினம் மாலை நடந்தது.மணமக்களை தமிழக அமைச்சர் டி.பி.எம்... |
தமிழகம் | தென்காசி எம்.கே.வி.கே.பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி | தென்காசி:தென்காசி எம்.கே.வி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மெட்ரிக் தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றது.தென்காசி எம்.கே.வி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மெட்ரிக் தேர்வு எழுதிய 58 மாணவ, மாணவிகளில் 57 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 98 சதவீத தேர்ச்சி பெற்றது. மாணவி பிருந்தா 473 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடம் பெற்றார்... |
தமிழகம் | டேக்வாண்டோ போட்டியில்தென்காசி மாணவி சாதனை | தென்காசி:மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தென்காசி பள்ளி மாணவி நிவேதித ஹரிணி முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.தமிழ்நாடு டேக்வாண்டோ அகாடமி சார்பில் மாநில அளவிலான 10வது டேக்வாண்டோ போட்டி சிதம்பரத்தில் நடந்தது. இப்போட்டியில் தென்காசி சிதம்பர சுபா லூமினஸ் பள்ளி மாணவி நிவேதித ஹரிணி பத்து வயதிற்குட்பட்டோர் பெண்கள் பிரிவில்... |
தமிழகம் | தென்காசி சுபாஷ் பள்ளிநூறு சதவீதம் தேர்ச்சி | தென்காசி:தென்காசி சுபாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மெட்ரிக் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.தென்காசி சுபாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மெட்ரிக் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவி அனிசுல் ஹசீனா 462 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடமும், மாணவர் அப்ரர் உல்ஹ... |
தமிழகம் | எஸ்.பி.கே., பள்ளி மாணவி மாநில சாதனை | திருச்செங்கோடு: திருச்செங்கோடு எஸ்.பி.கே., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி ஜெயலட்சமி மற்றும் மாணவர் நவுபல்கான் ஆகியோர் 470 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றனர். அதில் மாணவி ஜெயலட்சுமி அறிவியலில் 100 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை படைத... |
தமிழகம் | தென்காசி யெகோவாகல்வி நிலையம் சாதனை | தென்காசி:தென்காசி யெகோவா கல்வி நிலையம் எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் சாதனை படைத்துள்ளது.தென்காசி யெகோவா கல்வி நிலையம் மூலம் தனியாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். கல்வி நிலையம் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இங்கு பயின்ற மாணவி ஜேஸ்மின் 460 மதிப்பெண்கள் பெற்று நிலையத்தில் முதலிடம் பெற்றார். இவர் தமிழ்-... |
தமிழகம் | மரக்கன்றுநடும் விழா | தென்காசி:இலத்தூரில் மரக்கன்று நடும் விழா நடந்தது.தென்காசி சிட்டி எக்ஸ்னோரா சார்பில் இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. இலத்தூர் பஞ்., தலைவர் முருகையா தலைமை வகித்து மரக்கன்று நட்டு விழாவை துவக்கி வைத்தார். டாக்டர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.நெல்லை மாவட்ட எக்ஸ்னோரா தலைவர் விஜ... |
தமிழகம் | தென்காசி கோட்ட பகுதியில்இன்று முதல் 2 மணி நேரம் மின்தடை | தென்காசி:தென்காசி கோட்ட பகுதியில் இன்று (1ம் தேதி) முதல் தினமும் இரண்டு மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.இதுகுறித்து தென்காசி மின் வினியோக செயற்பொறியாளர் பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தென்காசி கோட்டத்திற்குட்பட்ட உபமின் நிலையங்களில் இருந்து வழங்கப்படும் மின்சாரம் தற்போது அமலில் இருக்கும் மின்தடை இன... |
தமிழகம் | மேலப்பாளையத்தில் கிரிக்கெட் போட்டி | திருநெல்வேலி:மேலப்பாளையத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது.மனித நேய மக்கள் கட்சி சார்பில் நடந்த இப்போட்டியில் 16 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் ஷேடோ அணியும் கல்ப் அணியும் மோதின. வெற்றி பெற்ற ஷேடோ அணியின் கேப்டன் மைக்கேலுக்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்டப் பொருளாளர் ரசூல் மைதீன் பரி... |
தமிழகம் | பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர்திறக்காவிட்டால் விரைவில் போராட்டம்:தேமுதிக அறிவிப்பு | திருநெல்வேலி:பாபநாசம் அணையில் இருந்து கால்வாய்களுக்கு இன்று (1ம் தேதி) தண்ணீர் திறக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் நெல்லை கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் தலைமையில் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:பாப... |
தமிழகம் | குடியிருப்புகளை அப்புறப்படுத்த முயற்சி:நெல்லையில் பாரதி காலனி மக்கள் ஆவேசம் | திருநெல்வேலி:குடியிருப்பு பகுதிகளை அப்புறப்படுத்த முயற்சி நடப்பதாக பாரதி காலனி மக்கள் புகார் தெரிவித்தனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மீனாட்சிபுரம் பாரதி காலனி அர்ச்சுனன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:நாங்கள் சுமார் 50 ஆண்டுகளாக ந... |
தமிழகம் | குளங்களை ஆக்ரமித்து மீன் பிடிக்க முயற்சி:நெல்லையில் இந்து முன்னணியினர் முற்றுகை | திருநெல்வேலி:குளங்களை ஆக்ரமித்து மீன் பிடிக்க முயற்சி செய்வதை கண்டித்து நெல்லையில் இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மேலசடையமான்குளம் பகுதி இந்து முன்னணி தலைவர் பெருமாள் தலைமையில் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:மேலசடையமான்குளம் வெ... |
தமிழகம் | அதிகார துஷ்பிரயோகம் செய்யும் போலீசார்:நெல்லையில் யாதவ சமுதாய மக்கள் குவிந்தனர் | திருநெல்வேலி:அதிகார துஷ்பிரயோகம் செய்யும் போலீசாரை கண்டித்து நெல்லையில் யாதவ சமுதாய மக்கள் குவிந்தனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் தச்சநல்லூர் பெருமாள், கஸ்தூரி தொண்டர், நம்பிராஜன் மற்றும் யாதவ சமுதாய மக்கள் பலர் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அளித்த மனுவில் தெரிவித்துள்ள... |
தமிழகம் | இலவச கலர் டிவி கிடைக்கலே...பாரதி நகர் மக்கள் ஏக்கம்... | திருநெல்வேலி:இலவச கலர் டிவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதி நகர் நலவாழ்வு சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பெருமாள்புரம் பாரதி நகர் நல வாழ்வு சங்க செயலாளர் கோபாலன் தலைமையில் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:பெருமாள்புரம் ... |
தமிழகம் | நெல்லை மாவட்டத்தில் 11 தாலுகாக்களில்9ம் தேதி முதல் ஜமாபந்தி ஆரம்பம் | திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் 11 தாலுகாக்களில் வரும் 9ம் தேதி ஜமாபந்தி ஆரம்பமாகிறது.ஜூன் 9ம் தேதி:>மானூர், களக்காடு, மேலப்பாட்டம், கரிவலம்வந்தநல்லூர், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சுரண்டை, கடையம், கீழப்பாவூர், இலத்தூர், திசையன்விளை குறுவட்ட பகுதிகள்.ஜூன் 10ம் தேதி:>லெவிஞ்சிபுரம், கடையம், வீ.கே புதூர், பண்பொழி, நெட்ட... |
தமிழகம் | அரசு திரைப்படம் மற்றும் டிவி நிறுவனபட்டய பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் | திருநெல்வேலி:சென்னை எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் டிவி நிறுவனத்தின் பட்டய படிப்புக்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் டிவி நிறுவனம் 2010-11ம் கல்வி ஆண்டில் முதல் ஆண்டு முழு ... |
தமிழகம் | கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில்புதிய காட்டன் ரக துணிகள் விற்பனை | திருநெல்வேலி:நெல்லை ஜங்ஷன் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் புதிய காட்டன் ரக துணிகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.நெல்லை ஜங்ஷன் காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் புதிய காட்டன் ரக துணிகள் விற்பனைக்கு ஏராளமாக வந்துள்ளது. ஒரு மீட்டரின் நிகர விலை 28, 32, 48 ரூபாய்களில் கிடைக்கும். அன்றாடம் பயன்படுத்தும் கார்ட்டன் சர்... |
தமிழகம் | விலை உயர்ந்த சொகுசு கார்களுக்கு 2 முதல் 7 சதவீதம் பதிவு கட்டணம் உயர்வு: தமிழகம் முழுவதும் இன்று முதல | திருநெல்வேலி:தமிழகம் முழுவதும் இன்று(1ம் தேதி) முதல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யும், விலை உயர்ந்த கார்களுக்கான பதிவு கட்டணம் 2 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.தமிழகத்தில் 70 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட... |
தமிழகம் | பென்ஷனர் குறைதீர் கூட்டம் | தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பென்ஷனர் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., மகேஸ்வரி தலைமை வகித்தார். ஓய்வூதிய இயக்கக இணை இயக்குனர் அண்ணாதுரை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) திவாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு அரசு துறையை சேர்ந்த ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை எடுத்து கூறினர். ஓய்... |
தமிழகம் | விதி மீறிய 18 வாகனங்கள் அதிரடி பறிமுதல் | ஒகேனக்கல்: பென்னாகரத்தில் விதி மீறிய 18 வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. பென்னாகரம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீஸார் நேற்று பென்னாகரம் பைபாஸ் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த கார்கள், பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், குடிபோதையில் வாகனங்கள் ஓட்டிய மற்றும் லைசென்ஸ் ... |
தமிழகம் | கி.கிரி அருகே சேற்றில் சிக்கி சகோதரிகள் பரிதாப பலி | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மலையடிவாரத்தில் தேங்கியிருந்த குட்டையில் குளித்த போது, சேற்றில் சிக்கினார் தங்கை. அவரை மீட்க சென்ற அக்காவும்,தங்கையுடன் சேர்ந்து சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த ஜெகதாப் கிராமத்தை சேர்நத்வர் கூலி தொழிலாளி ராஜா. இவரது மனைவி கோவிந்தம்மாள். இ... |
தமிழகம் | குடிநீர் வழங்கலில் சுகாதாரம் பராமரிக்காத பஞ்., தலைவர் மீது நடவடிக்கை: கலெக்டர் | அரியலூர்: கிராமங்களில் குடிநீர் வழங்குவதில் சுகாதாரத்தை மேற்கொள்ளாத பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றி அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் விடுத்த அறிக்கை: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்படாததினாலும், குடிநீர் குழாய் கசிவுகளில் தேங்கி நிற்கும் தண்ணீர், கு... |
தமிழகம் | ரெட்டிபாளையம் ஆதித்யா பிர்லா பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் 100 % தேர்ச்சி | அரியலூர்: சி.பி.எஸ்.இ., எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் ரெட்டிபாளையம் ஆதித்யா பிர்லா பொதுப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தற்போது உள்ள தேர்வு முறைப்படி, தரவரிசை பட்டியல் மட்டுமே வழங்கப்படுகிறது. மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை. எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில், அரியலூர் மாவட்டம், ரெ... |
தமிழகம் | குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகராட்சி ஆணையர் வேண்டுகோள் | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) திருமலைவாசன் கூறியதாவது: கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் கொள்ளிடத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், வரும் தண்ணீரை அனைவருக்கும் வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வரும் குடிநீரை திருட்டுத்தனமாக மோட்டார் மூலம் எடுப... |
தமிழகம் | புதிய கட்டிடம் கட்டியும் பழைய கட்டிடத்தில் அரசு ஆண்கள் பள்ளி | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடம் உள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். புதிய கட்டிடம் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ளது. திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1939ம் ஆண்டு போர்டு உயர்நிலைப்பள்ளியாக துவங்கப... |
தமிழகம் | அரூர் பழக்கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை | அரூர்: அரூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.அரூர் டவுன் பஞ்சாயத்து சுகாதார பிரிவு அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் பழக்கடைகளில் "கார்பைட்' கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து திடீர் சோதனை செய்தனர். "கார்பைட்' கல் மூலம் பழுக்... |
தமிழகம் | மக்கள் தொடர்பு திட்ட முகாம் | தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி யூனியன் மஞ்சவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோம்பூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் அமுதா தலைமை வகித்தார். பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், விதவை உதவித்தொகை 17 பெண்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட உதவித்தொகை 48,000 வீதம் இருவருக்... |
தமிழகம் | மானிய கடன் உதவி வழங்கல் | தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வங்கி மானிய கடன் மற்றும் செவிலியர் மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.சமூக பொருளாதார மேற்பாட்டு திட்டத்தின் கீழ் 76 பயனாளிகளுக்கு தலா 15,000 ரூபாய் வீதம் மொத்தம் 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் க... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் சாதனை மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு | தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கலெக்டர் அமுதா பாராட்டினார். தர்மபுரி மாவட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அமுதா பாராட்டி பின் பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் 11... |
தமிழகம் | ஆயக்காரன்புலத்தில் சுகாதார திருவிழா | வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் ள்ளியில் நாகை எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுகாதாரத் ருவிழா நடந்தது. நாகை கலெக்டர் முனியநாதன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., வேதரெத்தினம் முன்னிலை வகித்தார். நாகை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் வைரமணி வரவேற்றார். நாகை எம்.பி., விஜயன், மரு... |
தமிழகம் | தூக்கில் தொங்கிய ஆண் உடல் | வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த மணக்காடு கிராமம் ரயில்வே கேட் அருகே உள்ள கருவை மரத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டது. கரியாப்பட்டினம் போலீஸில் வி.ஏ.ஓ., ரவிகுமார் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரன் விசாரித்து வருகின்றனர். ஐந்தரை அடி உயரம், சிவப்பு கட்டமிட்ட கைலி, வெளிர் ந... |
தமிழகம் | தர்மபுரியில் மின் நிறுத்த நேரம் அறிவிப்பு | ( தர்மபுரி: தர்மபுரியில் இன்று முதல் ஜூன் 1) சுழற்சி முறையில் இரண்டு மணி நேரம் மின் நிறுத்த நேரம் அறவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி கோட்ட மின் வாரிய செயற்பெறியாளர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: தேவரசம்பட்டி, எர்ரப்பட்டி, தொழில் மையம், காமராஜ் நகர், பழைய குவர்ட்டர்ஸ், ராயல் நகர், கலெக்டரெட், செந்தில் நகர், இலக்கியம்பட்டி ... |
தமிழகம் | விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது | பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.கடத்தூர் அடுத்த வேப்பிலைப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மூத்த மகன் ஆறுமுகம் (48). இளைய மகன் மணி (46). இருவரும் விவசாயம் செய்து வந்தனர். இவர்களுக்கு இடையே நிலம், பொதுவழி தொடர்பாக நீண்ட நாட்களாக தகராறு இருந்தது. நேற்று மு... |
தமிழகம் | கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பரிதாப பலி | பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பெரியசாமி. இவர் குடும்பத்துடன் நேற்று பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் உள்ள காட்டுமாரியம்மன் கோவிலுக்கு ஆடு வெட்டி பூஜை நடத்துவதற்காக வந்திருந்தார். அப்போது கோவிலுக்கு அருகிலுள்ள கோயில் கிணற்றில் குளிப்பதற்காக கிணற்றுக... |
தமிழகம் | மழை வேண்டி கிராமத்தை காலி செய்த மக்கள் | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பேறுஹள்ளி மற்றும் பேறு ஹள்ளி காலனி, மொரசப்பட்டி ஆகிய மூன்று கிராம மக்கள் சார்பில் மழை வேண்டியும், கிராமத்தில் உள்ளவர்களை நோய் நொடியில்லாமல் வாழ பட்டம்மன் மற்றும் செல்லியம்மனை குளிர வைக்க காலம், காலமாக, "வலசை' நிகழ்ச்சி நடத்துவதுவழக்கம். நேற்று விழா துவங்கியது. முத... |
தமிழகம் | கி.கிரி மாவட்டத்தில் பரவலாக மழை | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கிய நாளில் இருந்து அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் பகல் நேரங்களில் வீசிய கடும் வெப்பக்காற்றால் மக்கள் அவதியுற்று வந்தனர். விடுமுறை நாட்களில் பகல் நேரங்களில் அடிக்கடி ஏற்பட்ட மின் நிறுத்தம் ... |
தமிழகம் | பட்டதாரி கட்டண சலுகைக்கு சான்றிதழ் வழங்குவதில் குழப்பம் | தர்மபுரி: பட்டதாரி கட்டண சலுகை பெற வருவாய் துறையில் சான்று பெறுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், பென்னாகரம் தாலுகா பகுதியில் பட்டதாரி கட்டண சலுகைக்கு விண்ணப்பித்துள்ள பலர் அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்ஜினியரிங், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், வேளாண், கால்நடை மருத்துவம் ஆகிய தொழிற்படிப்புகளில் சேரும், மா... |
தமிழகம் | ஓசூரில் கழுத்தை அறுத்து இருவர் கொடூர கொலை | ஓசூர்: ஓசூர் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த இருவரை, கூலி படையை ஏவி கொடூரமாக கொலை செய்து பிணங்களை புதரில் வீசி சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஓசூர் அருகே மதகொண்டப்பள்ளிக்கும், உப்பாரப்பள்ளிக்கும் இடையில் உள்ள மாந்தோப்பு புதரில் நேற்று காலை ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் கூட்டமாக நின்றது. இதனால், அப்பகுதி... |
தமிழகம் | ஒகேனக்கல் நீரில் மூழ்கி சேலம் மாணவன் பலி | தர்மபுரி: ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி சேலத்தை சேர்ந்த மாணவன் பரிதாபமாக இறந்தார். சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்தவர் தங்கம். இவரது மகன் பூபாலன் (19). இவர் ஈரோட்டில் உள்ள கல்லூரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் பூபாலன் தன் குடும்பத்தினருடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார்.பூபாலன் மற்றும் அவ... |
தமிழகம் | அமைச்சர் பேத்திக்கு நாளை திருமணம் | தர்மபுரி: அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் - டி.என்.வடிவேல் கவுண்டர் இல்லத் திருமண விழா நாளை (ஜூன் 2) நடக்கிறது. தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தர்மபுரி முன்னாள் எம்.எல்.ஏ., வடிவேல் கவுண்டர் ஆகியோரின் பேத்தியும் மதிவாணன் - நிர்மலா ஆகியோர் மகளுமான கயல்விழிக்கும், திருச்சி தில்லை நகர் பரமசிவம் - ராஜேஸ்வரி ஆகிய... |
தமிழகம் | புதுகை நகராட்சி அலுவலகம் முற்றுகை:பெண்கள் காலி குடத்துடன் வந்ததால் பரபரப்பு | புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சிகுட்பட்ட போஸ்நகர் மற்றும் உசிலங்குளம் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் அப்பகுதி பெண்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை நகராட்சியில் தற்போது வாரத்துக்கு இரண்டுமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் ... |
தமிழகம் | மன்னை நகராட்சியில் தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்:கூட்டத்தில் இருந்து தலைவர் ஓட்டம் | மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்கூட்டம் தலைவர் கார்த்திகா (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. ஆணையர் மதிவாணன் முன்னிலை வகித்தார். தி.மு.க., கவுன்சிலர் கலைவாணன் ஆவேசமாக ஆணையரைப்பார்த்து, ""வரி வசூல் செய்ததில் லட்சக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்துள்ளீர்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது,'' என்றார். ஆணைய... |
தமிழகம் | ஆயக்காரன்புலத்தில் சுகாதார திருவிழா | வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாகை எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுகாதாரத்திருவிழா நடந்தது. நாகை கலெக்டர் முனியநாதன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., வேதரெத்தினம் முன்னிலை வகித்தார். நாகை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் வைரமணி வரவேற்றார். நாகை எம்.பி., விஜயன், மர... |
தமிழகம் | விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் கூடுதல் நேரம் வழங்கக் கோரி மனு | தஞ்சாவூர்: விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் கூடுதல் நேரம் வழங்கக்கோரி பல்வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கொடுத்தனர். தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா அள்ளூர், அரசக்குடி, அம்பதுமேல்நகரம், கடமங்குடி, கழுமங்கலம், அம்மையகரம், தென்பெரம்பூர், வெள்ளாம்பெரம்பூர், களர்பட்டி, உமையவள்ஆற்காடு போன்ற கிராம... |
தமிழகம் | தஞ்சையில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் | தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெத்தினசாமி தலைமையில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு, கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை போன்ற பல கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் ... |
தமிழகம் | டூவீலர் மோதி பெண் பலி | கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் குறிச்சி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் துரை மனைவி புல்லம்மாள் (55). அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரும், புல்லம்மாளும் உறவினர்கள். இவர்கள் குறிச்சி மெயின் ரோட்டில் நேற்று காலை 10 மணிக்கு நடந்து சென்றனர். அப்போது பின்னால் வந்த ஹோண்டா பைக் இவர்கள் மீது மோதியது. இதில், புல்லம... |
தமிழகம் | மன்னையில் அ.தி.மு.க., திடீர் ஆர்ப்பாட்டம் | மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி தலைவரை பதவி விலகக்கோரி மன்னார்குடி அரசு மருத்துவமனை முன் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மன்னார்குடி அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்தும், நகராட்சி தலைவர் கார்த்திகா உத்தமனை பதவி விலகக்கோரியும் ஆர்ப்பாட்டம செய்தனர். கவுன்... |
தமிழகம் | ஜாமீனில் வந்த முதியவர் கொலை: கும்பல் தலைமறைவு | பட்டுக்கோட்டை: கொலை வழக்கில் ஜாமீனில் வந்த முதியவர் பழிக்குப்பழியாக பட்டுக்கோட்டை அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பட்டுக்கோட்டை அடுத்த முதல்சேரி கிராமத்தின் காலனி தெருவை சேர்ந்தவர் சந்தானசாமி (62). கடந்த ஃபிப்ரவரி 22ம் தேதி முன்பகை காரணமாக சந்தானசாமி மற்றும் அவரது மகன் தாமஸ் ஆகிய இருவரும் சேர்ந்து பார்த்திபன் என்பவர... |
தமிழகம் | ஒரே பிரசவத்தில் 3 குழந்தை பெற்ற தாய்க்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்கல் | கும்பகோணம்: கும்பகோணத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளின் தாய்க்கு கோவையை சேர்ந்த ஒருவர் பத்தாயிரம் ரூபாய் நிதியுதவியை வழங்கினார். கும்பகோணம் அடுத்த தாராசுரம் கடைத்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி துர்கா (25). இவருக்கு மே 24ம் தேதி கும்பகோணம் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் ... |
தமிழகம் | கோவில் திருவிழா தகராறில் கத்திக்குத்து இருவர் கைது: 6 பேர் மீது வழக்குப்பதிவு | கும்பகோணம்: கும்பகோணம் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் கத்தி மற்றும் கம்பியால் தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கும்பகோணம் அருகே திருநீலக்குடி விளங்குடியில் கோவில் திருவிழா நடந்தபோது ஜெயராமன் மகன்கள் பிரபு, மணிகண்டன் ஆகியோர் குடித்துவிட்டு பிரச்னையில் ஈடுபட... |
தமிழகம் | நகராட்சி இடம் தனியாருக்கு தாரைவார்ப்பு? பட்டுக்கோட்டை கவுன்சிலர்கள் போர்க்கொடியால் ஒத்திவைப்பு | பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சியின் சாதாரண, அவசரக் கூட்டம் தலைவர் பிரியா இளங்கோ (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. நகராட்சி துணைத்தலைவர் கண்ணன், ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
கூட்ட விவாதம் வருமாறு:மனோகரன் ம.தி.மு.க.,: நகராட்சியில் முன்னாள் தலைவர் சீனி பன்னீர்செல்வத்துக்கு சிலை அமைப்பதில் ஆட்சேபமில்லை. அத்து... |
தமிழகம் | காஸ் கசிந்து காரில் தீ | தஞ்சாவூர்: காரைக்காலைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். கும்பகோணம் ஸ்டேட் பாங்க்கில் உதவி மேலாளராக பணி செய்கிறார். இவரது மகள் உடல் நலக்குறைவால் தஞ்சாவூரில் புதுக்கோட்டை ரோட்டில் உள்ள ரோகிணி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மகளை பார்ப்பதற்காக கல்யாணசுந்தரம் தனது மாருதி வேகன் ஆரில் ரோகிணி மருத்துவமனை வந்தார். மருத்துவமனை... |
தமிழகம் | இலவச மருத்துவ திட்டத்தில் இலங்கை பெண்ணுக்கு ஆபரேஷன் | சேலம்: சேலத்தில், இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், முதன்முதலாக இலங்கை பெண்ணுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தாரமங்கலம் அத்திக்காட்டனூரில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமைச் சேர்ந்தவர் சுசீலா(38). இவர் பல மாதங்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். சேலம் விநாயகா மிஷன்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இல... |
தமிழகம் | அரிசி ஆலை சுவர் இடிந்து 5 தொழிலாளர்கள் காயம் | திருவண்ணாமலை: ஆரணி அருகே அரிசி ஆலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து கட்டிட தொழிலாளர்கள் காயமடைந்தனர். ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் இ.பி., நகர் கிராமத்தை சேர்ந்தவர் தினசெல்வம் அரிசி ஆலை அதிபர். அதே பகுதியில் வெறொரு புதிய அரிசி ஆலையை கட்டி வருகிறார். இதற்காக சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் கட்டிட தொழிலாளர்கள் நேற்று... |
தமிழகம் | லாரியில் சிக்கி கர்ப்பிணி பலி:சிசு வெளியே விழுந்து இறந்த கொடூரம் | வேலூர்: வேலூர் அருகே லாரியில் சிக்கி கர்ப்பணி பெண் பலியானார். அவரது வயிற்றில் இருந்து சிசு வெளியே விழுந்து கொடூரமாக இறந்தது. வேலூர் அடுத்த பள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர் சிவானந்தம் (27). இவரது மனைவி யுவராணி (23). இருவரும் வேலூரில் சி.எம்.சி., மருத்துவனையில் பணிபுரிந்து வந்தனர். சிவானந்தம் லெப் டெக்னிஷியனாகவும், யுவராணி நர... |
தமிழகம் | துவரங்குறிச்சி அருகே போலீஸார் ஆசியுடன் போலி பார் அமோகம் | துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே வ.கைகாட்டி மற்றும் ஊனையூர் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளின் அருகில் போலீஸாரின் அனுமதியோடு போலி பார்கள் அமோகமாக இயங்கி வருகின்றன. வ.கைகாட்டியில் இரண்டு, ஊனையூரில் ஒரு டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. இந்த மூன்று கடைகளுக்கும், அனுமதிபெற்ற பார் நடத்த அரசு நிர்ணயித்த தொகைக்கு க... |
தமிழகம் | மார்க்சிஸ்ட் கம்யூ., கவுன்சிலர் அரைநிர்வாண போராட்டம் | திருச்சி: திருச்சியில் தொடர்ந்து தனது வார்டு புறக்கணிக்கப்படுகிறது என்று கூறி மாநகராட்சிக்கு கூட்டத்துக்கு அரைநிர்வாணத்துடன், முக்காடு போட்டு வந்த மார்க்சிஸ்ட் கவுன்சிலர் சபைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.திருச்சி மாநகராட்சியின் 39வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தங்கராசு. இந்த வார்டில்... |
தமிழகம் | அடையாளம் தெரியாத கார் டூவீலர் மீது மோதல் இருவர் படுகாயம் | துவரங்குறிச்சி: துவரங்குறிச்சியை அடுத்த குளவாய்பட்டி கந்தன் மகன் சின்னையா(28). இவரது மாமனார் மேலஇம்பம்பட்டி அடைக்கன் மகன் மாதன்(45). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை ஆறு மணியளவில் டிவிஎஸ் எக்ஸ்.எல் டூவீலரில் குளவாய்ப்பட்டியிலிருந்து மேல இம்பம்பட்டி சென்றனர். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லெ.கைகாட்டி என்னுமி... |
தமிழகம் | மாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா | ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீசெல்வமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் உள்ளது. ஸ்ரீசெல்வமாரியம்மன் கோவில் ஆண்டுதோறும் அம்மனுக்கு வைகாசி மாதம் சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் பூக்குழி இறங்குதல் என்றழைக்கப்... |
தமிழகம் | நுகர்பொருள் வாணிப கழக நெல் அரவை முகவர்கள் சங்க கூட்டம் | திருச்சி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் அரவை முகவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடந்தது.மாநிலத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட செயலாளர் சுகிராம், துணைத்தலைவர் புலியூர் நாகராஜ ஆகியோர் முன்னிலை வகித்தனர். "கடந்த நான்கு ஆண்டாக நெல் அரவை கூலி உயர்த்தப்படாமல் உள்ளது. எனவே மத்திய அரசு ந... |
தமிழகம் | மார்க்சிஸ்ட் கம்யூ., கவுன்சிலர் அரை நிர்வாண போராட்டம் | திருச்சி: திருச்சியில் தொடர்ந்து தனது வார்டு புறக்கணிக்கப்படுகிறது என்று கூறி மாநகராட்சிக்கு கூட்டத்துக்கு அரைநிர்வாணத்துடன், முக்காடு போட்டு வந்த மார்க்சிஸ்ட் கவுன்சிலர் சபைக்காவலர்களால் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டார். திருச்சி மாநகராட்சியின் 39வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தங... |
தமிழகம் | விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம் | திருச்சி: திருச்சியில் தமிழக விவசாயிகள் சங்கம், அரசியல் கட்சிகள் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழக விவசாயிகள் சங்கம், அனைத்துக் கட்சிகள் சார்பில், ராம்ஜிநகர் தேசியப் பஞ்சாலை தொழிலாளர் கட்டட சங்கம் முன் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட அமைப்ப... |
தமிழகம் | புதுச்சேரி முதல்வர் ஸ்ரீரங்கத்தில் தரிசனம் | ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் புதுவை முதலமைச்சர் வைத்திலிங்கம் சாமிதரிசனம் செய்தார். பள்ளி விழா ஒன்றில் கலந்துகொள்ள ஒருநாள் சுற்றுப்பயணமாக திருச்சி வந்த புதுச்சேரி முதலமைச்சர் வைத்திலிங்கம் நேற்றுமுன்தினம் ஸ்ரீரங்கம் வந்தார். ஸ்ரீரெங்கநாதரை தரிசிக்க வந்த அவரை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், ஸ்ரீரங்கம் தாசில்தார் ஜீனத்பானு அறங... |
தமிழகம் | ஒருங்கிணைப்பாளர் நியமன அறிவிப்பு | திருச்சி: தமிழக அரசு நடத்தி வரும் தமிழ்நாடு மாநில நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆற்றுலூட்டும் சங்கத்தில் நான்கு மண்டல மற்றும் 52 மாவட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் நியமனம் செய்யப்பட உள்ளார்.விருப்பமுள்ள குடிமக்கள் மாணவர் நுகர்வோர் மன்றங்கள் நடத்தி வரும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் ஆர்வலர்கள், நுகர்வோர... |
தமிழகம் | அடையாளம் தெரியாத கார் டூவீலர் மீது மோதல் இருவர் படுகாயம் | துவரங்குறிச்சி: துவரங்குறிச்சியை அடுத்த குளவாய்பட்டி கந்தன் மகன் சின்னையா(28). இவரது மாமனார் மேலஇம்பம்பட்டி அடைக்கன் மகன் மாதன்(45). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை ஆறு மணியளவில் டிவிஎஸ் எக்ஸ்.எல் டூவீலரில் குளவாய்ப்பட்டியிலிருந்து மேல இம்பம்பட்டி சென்றனர். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லெ.கைகாட்டி என்னுமி... |
தமிழகம் | எஸ்.பி., அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் | சேலம்: பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர். வாழாப்பாடி சிங்கிபுரம் காலனியை சேர்ந்தவர் ராஜா(26). ஆத்தூர் துலுக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரியா(19). இரண்டு ஆண்டாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காதல் ஜோடி இருவரும் கடந்த மே 24ம... |
தமிழகம் | வீரகாரன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் | சேலம்: பெரியேரிப்பட்டி கிராமம் வீரகாரன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. ஓமலூர் அருகே உள்ள பெரியேரிப்பட்டி கிராமத்தில் வீரகாரன் திருக்கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 4 மணிக்கு மேட்டூரில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 ம... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று துவக்கம்: 4,600 பேர் நியமனம் | சேலம்: சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று துவங்குகிறது. பணிக்காக 4,600 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று துவங்குகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இப்பணிக்கென நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 4,000 கணக்கெடுப்பாளர்களும்,... |
தமிழகம் | இலவச காப்பீட்டு திட்டத்தில் இலங்கை தமிழ் பெண்ணுக்கு இருதய அறுவை சிகிச்சை | சேலம்: சேலத்தில், இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், முதன்முதலாக இலங்கை பெண்ணுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தாரமங்கலம் அத்திக்காட்டனூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் சுசீலா(38). அவர் பல மாதங்களாக இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக சேலம் விநாயகா மிஷன்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ... |
தமிழகம் | நஷ்டஈடு கேட்டு தர்ணா போராட்டம் | ஓமலூர்: ஓமலூர் அருகே விபத்தில் பலியானவர் குடும்பத்தாருக்கு நஷ்டஈடு கேட்டு பிணத்தை மரத்தடியில் வைத்து தர்ணா போராட்டம் நடந்தது. ஓமலூரை அடுத்த சிக்கனம்பட்டி சின்னநடுப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (41).
சட்டூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் நடத்தி வரும் வேடியப்பா சவுண்ட் சிஸ்டம் என்ற நிறுவனத்தில் வெங்கடேஷ் பணியாற்றி... |
தமிழகம் | சிலிண்டர் வெடித்து தீ விபத்துரூ. 2 லட்சம் மதிப்பு பொருட்கள் சாம்பல் | வாழப்பாடி: வாழப்பாடி அருகே காஸ் சிலிண்டர் வெடித்ததில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. வாழப்பாடி அடுத்த திருமனூர் விநாயகாபுரம் வடக்குகாடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி லட்சுமி. நேற்று முன்தினம் இரவு, சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது காஸ் டியூபில் தீ பற்றியது. பதறிய அவர், கூச்சலிட்... |
தமிழகம் | காயத்ரி மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வில் சாதனை | சேலம்: சேலம் சித்தனூர் காயத்ரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். சேலம் சித்தனூர், இரும்பாலை மெயின்ரோட்டில் ஸ்ரீகாயத்ரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் படிக்கும் ஓம்காரமூர்த்தி என்ற மாணவர் 485 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளார்... |
தமிழகம் | வாசவி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சாதனை | சேலம்: சேலம் வாசவி மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் சாதனைப்படைத்துள்ளது. சேலம் செவ்வாய்ப்பேட்டை வாசவி மேல்நிலைப்பள்ளியில் 199 மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றனர். சேலம் மாவட்டத்தில் அரசின் நிதி உதவி பெறும் பள்ளிகளில் அதிகமான மாணவர்களை தேர்வுக்கு அனுப்பி... |
தமிழகம் | மனநலம் பாதிக்கப்பட்டவரை திருடன் என்று வளைத்ததால் பரபரப்பு | கெங்கவல்லி: மனநலம் பாதிக்கப்பட்ட நபரை திருடன் என்று வளைத்துப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கெங்கவல்லி அருகே நடுவலூர் மொட்டைபாலம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் குடியிருந்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக விவசாய தோட்டம், வீடுகள் போன்ற இடங்களில் பித்தளை, அலுமினியம் பாத்திரம், மின்கேபிள் வயர்கள்... |
தமிழகம் | ஜூன் 4ல் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் | சேலம்: சேலம் கருங்கல்பட்டி சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் ஜூன் 4ல் நடக்கிறது. சேலம் கருங்கல்பட்டியில் பழைய சித்தி விநாயகர் கோவில் உள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது பணிகள் முடிந்து, ஸ்ரீஅருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சர்ய சுவாமி... |
தமிழகம் | பி.எஸ்.என்.எல்., சார்பில் ஆலோசனை குழு கூட்டம் | சேலம்: பி.எஸ்.என்.எல்., சார்பில் சேலம் தொலை தொடர்பு மாவட்ட ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. சேலம் செவ்வாய்ப்பேட்டை பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் ஷாஜகான் தலைமையில் கூட்டம் நடந்தது. எம்.பி.,க்கள் த்துசம்மலை, அன்பழகன் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள், பி.எஸ்.என்.எல... |
தமிழகம் | கணவர் கொலை: மனைவி தற்கொலை நான்கு குழந்தைகள் அனாதைகளான பரிதாபம் | வாழப்பாடி: வாழப்பாடி அருகே கணவர் கொல்லப்பட்டதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார். ஒரே வாரத்தில் தாய், தந்தையை இழந்த அவர்களது நான்கு குழந்தைகளும் கதறியது கல் நெஞ்சத்தையும் கரைப்பதாக இருந்தது. வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(36). அ.தி.மு.க., பிரமுகர். அதே பகுதியை சேர்ந்த பாண்டிய... |
தமிழகம் | எஸ்.ஐ., மீது மனைவி புகார் | சேலம்: குழந்தையுடன் தவிக்க விட்டு சென்றதாக, சேலம் அஸ்தம்பட்டி எஸ்.ஐ., மீது, அவரது மனைவி கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் தனசேகர். 15 ஆண்டுக்கு முன் ஓமலூர் சங்கீதப்பட்டி காலனியைச் சேர்ந்த காளியம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜீவா(11) என்ற மகன... |
தமிழகம் | ஆயுதங்களுடன் காரை வழிமறித்த கும்பல் மேட்டூர் மின் ஊழியரை கடத்தி தாக்குதல் | மேட்டூர்: மேட்டூரில் பட்டபகலில் காரில் சென்ற மின்வாரிய ஊழியரை வழிமறித்து, வேனில் கடத்தி சென்று தாக்கிய மர்மகும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். மேட்டூர் ராமன்நகரை சேர்ந்தவர் தணிகாசலம் (எ) சலாம். இவர் மின்வாரியத்தில் டெலிபோன் ஆபரேட்டராக பணிபுரிகிறார். தணிகாசலம் பெரிய தொழிலதிபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பது உண்டு. மேலும... |
தமிழகம் | சொத்து தகராறில் தம்பி கொலை அண்ணன் உள்பட மூவர் தலைமறைவு | சேலம்: சேலம் அருகே சொத்து தகராறில் தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணன் உள்பட மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர். சேலம் அருகே தாரமங்கலம் 11வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன்(50). அவர் ஆட்டையாம்பட்டியில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். ஞானசேகரனின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மகன் முத்துசாமி. ஞான... |
தமிழகம் | கோட்டை கரட்டில் பாறைகள் வெடிவைத்து...கடத்தல்! கண்டு கொள்ளாத தொல்பொருள் துறை | பனமரத்துப்பட்டி: மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோட்டை கரட்டில் பாறைகளை வெடி வைத்து, கடத்தி செல்வது ஜோராக நடக்கிறது. சேலம் பனமரத்துப்பட்டி யூனியன் நாழிக்கல்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கோட்டை கரடு அமைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக பொய்மான் கரடு, நந்தி மலை பகுதிகள் உள்ளன. ர... |
தமிழகம் | அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு சேலம் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு | சேலம்: சேலம் மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கமிஷனர் உள்பட அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் ரேகா பிரியர்தஷினி தலைமையில் நடந்தது. மண்டல தலைவர் நடேசன் அவசர தீர்மானங்களை வாசித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் வெங்கடாசலம்: தண்ணீர் பற்... |
தமிழகம் | மினி டோர் வேன் மோதி பெண் அலுவலர் பலி | சேலம்: சேலத்தில் மினி டோர் வேன் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற மாநகராட்சி பெண் அலுவலர் பலியானார். சேலம் அய்யந்திருமாளிகை வள்ளலார் தெருவில் வசித்து வருபவர் குழந்தை தெரசா(32). அவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. குழந்தை தெரசா சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நிதி பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.
அவர் நேற்ற... |
தமிழகம் | தம்பி கண் முன்னே அக்கா விபத்தில் பலி | சேலம்: சேலத்தில் தம்பி கண் முன்னே அக்கா விபத்தில் பலியானார். சேலம் வீரபாண்டி அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி சுசிலா (54). குடும்ப பிரச்சினை காரணமாக 20 ஆண்டுகளுக்கு முன் கணவனை பிரிந்து, தன் தம்பி பழனிச்சாமியுடன் வசித்து வந்தார். ஜூன் 30ம் தேதி சொந்த வேலை காரணமாக தன் தம்பியுடன் சுசிலா, அரியலூர் பிர... |
தமிழகம் | மினி டோர் வேன் மோதி பெண் அலுவலர் பலி | சேலம்: சேலத்தில் மினி டோர் வேன் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற மாநகராட்சி பெண் அலுவலர் பலியானார். சேலம் அய்யந்திருமாளிகை வள்ளலார் தெருவில் வசித்து வருபவர் குழந்தை தெரசா(32). அவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. குழந்தை தெரசா சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நிதி பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். அவர் நேற்ற... |
தமிழகம் | உற்பத்தி குறைவால் தேங்காய் விலை உயர்வு | நங்கவள்ளி: சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம், நங்கவள்ளி, வனவாசி சுற்றுப்பகுதியில் ஒரு லட்சத்திற்கு அதிகமான தென்னை மரங்கள் உள்ளன. வியாபாரிகள் தேங்காய்களை கொள்முதல் செய்து, மஹாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் போன்ற வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். நடப்பாண்டில் கோடைவெயில் காரணமாக தேங்காய் உற்பத்தி குறைந்து விட்டது. காய்களின் அளவ... |
தமிழகம் | விவசாய வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு எதிரொலி குடும்பத்தினர் மட்டுமே வேலை செய்யும் பரிதாபம் | மேட்டூர்: விவசாய வேலை செய்வதற்கு கூலியாட்கள் முன்வராத காரணத்தால் பெரும்பாலான பகுதியில் நிலத்தின் உரிமையாளர், அவர்கள் குடும்பத்தினர் மட்டுமே விவசாய பணியில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் உணவு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயமே பிரதான தொழிலாளாக உள்ளது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை சீஸனில் வ... |
தமிழகம் | முட்டை விலை உயர்வு: பண்ணையாளர்கள் மகிழ்ச்சி | நாமக்கல்: தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 272 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை உற்பத்தி மற்றும் மார்க்கெட் நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 270 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 2 காசு உயர்த்தி 272 காசாக நிர்ணயிக்... |
தமிழகம் | தமிழக மேலவையில் பா.ஜ. இடம் பெறும்: இல. கணேசன் | விருதுநகர்: தமிழக சட்டசபை மேலவையை பா.ஜ., ஆதரிப்பதுடன் அதில் இடம் பெறும் என பா.ஜ.,வின் முன்னாள் மாநிலத் தலைவர் இல. கணேசன் கூறினார். விருதுநகரில் கூறியதாவது: பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் பின்பற்றுகிறது. மத அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படுகிறது. பள்ளிகளில் மாணவர்களிடையே வகுப்பு வாதம் செய்யப்படுவதை மாணவர்கள் மற்றும் ப... |
இந்தியா | அந்தமானில் நிலநடுக்கம் | போர்ட் ப்ளேர்: அந்தமானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமானின் போர்ட் ப்ளேருக்கு தென் கிழக்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும் நிலநடுக்கம் குறித்த சேதம் உடனடியாக தெரியவில்லை. |
தமிழகம் | தேசிய ஆலோசனை கவுன்சிலில் சுவாமிநாதன் | புதுடில்லி: தேசிய ஆலோசனை கவுன்சிலில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட 11 பேர் இடம் பெறுகின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் தலைமையில் தேசிய ஆலோசனை கவுன்சில் அமைக்கப் பட்டது. மத்திய அரசுக்கு சில நலத்திட்டங்களை வகுத்துக் கொடுத்து, அதை கண்காணிக்கும் பணியை இந்த கவுன்சில் மேற்கொள்ளும். தற்போது இரண்டாவது முறையா... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு : சென்னையில் தொடங்கியது | சென்னை : சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி இன்று தொடங்கியது. முதலில் தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா வீட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியது. இந்தியாவின் 15வது மக்கள் தொகை கணக் கெடுப்புப் பணி, முதல் குடிமகளான ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் குடும்ப விவரத்தைச் சேகரித்ததன் மூலம் துவங்கியது. வீடு வீடாக வரு... |
தமிழகம் | வாகன வரி உயர்வு இன்று முதல் அமல் | விருதுநகர்: தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள வாகன வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த விகிதப்படி இன்று முதல் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் வரிகள் வசூலிக்கப்பட உள்ளன. பத்து லட்ச ரூபாய்க்குள் விலை உள்ள வாகனங்களுக்கு, வாகன மதிப்பில் பத்து சதம், பத்து லட்ச ரூபாய்க்கு மேல் விலை உள்ள வாகனங்களுக்கு 15 சத வரி வச... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.