category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
டால்பின்கள் தந்திரத்தில் சிக்கும் குருவலா மீன்கள்
ராமநாதபுரம்:டால்பின்களின் தந்திரத்தால் மீனவர் வலையில் சிக்கும் குருவலா மீன்களின் வாழ்க்கை பயணம் வித்தியாசமானது.கடல்வாழ் உயிரினங்களில் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மீன்கள். முதுகெலும்புள்ள வகையை சேர்ந்த மீன் இனங்களில் , மன்னார் வளைகுடாவில் 14 ஆயிரத்து 622 வகை மீன்கள் உள்ளன. ஒவ்வொன்றுக் கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த ...
தமிழகம்
விலையேற்றம், மின் தடையால் பள்ளி நோட்டு விலை உயரும்
தமிழகத்தில் நோட்டுகள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் மின் தடை காரணமாக, உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும், எப்போதும் இல்லாத வகையில் விலையும் உயர்ந்துள்ளது.தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள் ...
தமிழகம்
நதி நீர் இணைப்புக்கு முன்னோடியாக தமிழகத்தில் மூன்று முக்கிய திட்டங்கள்
திருநெல்வேலி:நதி நீர் இணைப்புத் திட்டத்தின் முன்னோடியாக, தமிழகத்தில் மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் ராமசுந்தரம் தெரிவித்தார்.திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பெய்யும் மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி, தாமிரபரணி ஆற்றில் 13 டி.எம்.சி., தண்ணீர் வீணாகச் சென்று ...
தமிழகம்
நீல, பச்சை ரோஜா விலை ரூ.10
இடைப்பாடி:சேலம் மாவட்டம் இடைப்பாடியில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வண்ண ரோஜாக்கள், பெண்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.பூக்களில் மக்களின் மனதை கவர்ந்தது ரோஜா தான். இளம்பெண்கள் விரும்பி தலைக்கு சூடுவது ரோஜா பூக்களைத் தான். காதலர்கள் தங்களின் காதலிக்கு பரிசாக முதலில் கொடுப்பது ரோஜாவையே. மக்கள் மனதை கொள்ளை கொண்ட ரோஜாக்கள் சிவ...
தமிழகம்
தமிழகத்தில் மீண்டும் பன்றி காய்ச்சல் அபாயம் சுகாதாரத்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவிய பன்றிக் காய்ச்சலுக்கு ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். தகுந்த மருந்துகள் மூலம் தமிழக அரசு பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்திய...
தமிழகம்
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் மடம்
கோவை:பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கொண்ட, திருஆலங்காடு இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி நெருஞ்சிப்பேட்டை அருகேயுள்ளது திருஆலங்காடு. இந்த கிராமத்தில், இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம் உள்ளது. பழம்ப...
தமிழகம்
போலி ரேஷன் கார்டுகள் பறிமுதல் செய்யப்படுமா :பாஸ்போர்ட் உட்பட அரசு சலுகைகள் பெற வாய்ப்பு
ராஜபாளையம்: போலி ரேஷன் கார்டுகள் மூலம் பாஸ்போர்ட் மற்றும் அரசின் பிற சலுகைகளை பெறும் வாய்ப்பு உள்ளதால், அவற்றை பறிமுதல் செய்வதே சிறந்தது.தமிழகம் முழுவதும் போலி ரேஷன் கார்டுகள் குறித்து கணக்கெடுக்கும் பணி, கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது. கணக்கெடுப்பாளர்கள் நேரில் வந்த போது, வீட்டில் இல்லாதவர்கள், வெளியூர் சென்றிருந்தவர்க...
இந்தியா
திருமலையில் அலைமோதும் கூட்டம் இரு நாளில் 2.5 லட்சம் பேர் தரிசனம்
நகரி:திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் திருமலையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடெங்கிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை, சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி வெள்ளியன்று இரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.கடந்த வெள்ளியன்று முதல் (ஞாயிறன்று) நேற்று நள்ளிரவு...
இந்தியா
டென்மார்க் தம்பதியினருக்கு இந்து முறைப்படி திருமணம்
புதுச்சேரி:புதுச்சேரி கோவிலில், இந்து முறைப்படி டென்மார்க் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர்.டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர் கார்ஸ்டன்(57). அங்குள்ள இசைப்பள்ளி ஒன்றில் ஆசிரியர். அதே பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் உல்பா(63). இருவரும் ஏற்கனவே அந்நாட்டு கலாசாரப்படி திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே உல்பா, கார்ஸ்டன் ...
இந்தியா
கதிர்வீச்சு பாதிப்பு அறிகுறிகள் பாபா அணு ஆய்வு மையம் எச்சரிக்கை
மும்பை:கதிர்வீச்சால் உடலில் ஏற்படும் அறிகுறிகள் பட்டியலை, பாபா அணு ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. பட்டியலில் உள்ள அறிகுறிகள் உடலில் தோன்றினால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று அது அறிவுறுத்தியுள்ளது. டில்லியில் பழைய இரும்புப் பொருட்கள் சந்தை உள்ள மாயாபுரியில் சமீபத்தில் கோபால்ட்-60 என்ற பொருளால் கதிர்வீச...
இந்தியா
தீக்காயத்தை குணப்படுத்துகிறது மும்பை மருத்துவமனை
மும்பை:மும்பை மருத்துவமனையில் செயல்படும் தோல் வங்கி, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பலரது உயிரை கடந்த 10 ஆண்டுகளாக காப்பாற்றி வருகிறது.தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 40 சதவீத காயம் பட்டிருந்தால் அவர்களை காப்பாற்றுவது எளிதல்ல. ஆனால், மும்பை அந்தேரி பகுதியில் உள்ள சியான் மருத்துவமனையில், தோல் மாற்று சிகிச்சை மூலம், 85...
இந்தியா
109 நாடுகளில் மலேரியா பாதிப்பு உலக சுகாதார நிறுவனம் கவலை
புதுடில்லி:உலகின் 109 நாடுகளில் மலேரியா காய்ச்சல் நோய், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் இந்த நோயின் பாதிப்பு கணிசமாக உள்ளது.உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:கொசுக்களால் பரவும் மலேரியா காய்ச்சல் நோய், உலகின் பெரும்பாலான பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்ப...
இந்தியா
விமானப்படை கல்லூரிக்காக மீனவர் குடும்பங்கள் இடமாற்றம்
பெர்ஹாம்பூர் (ஒரிசா):இந்திய ராணுவத்தின் விமானப்படை கல்லூரி கட்டுவதற்காக, ஒரிசாவின் கடலோர கிராமத்திலிருந்து 1,074 குடும்பங்கள் விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.ஒரிசா மாநிலம், கஞ்சன் மாவட்டம், நுவா கோலாபந்த் என்ற கடலோரக் கிராமத்தில் மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அக்கிராமத்தில், இந்திய ராணுவத்தின் விமானப்படை கல...
இந்தியா
கசாப்பால் ஊனமான சிறுமிக்கு போலீஸ் அதிகாரியாக ஆசை
மும்பை:பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப் சுட்டதில் கால் ஊனமுற்ற சிறுமி, போலீஸ் அதிகாரியாக ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளாள்.கடந்த 2008ல் நவம்பர் 26ம் தேதி மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் புகுந்த பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக பயணிகளை சுட்டனர். இந்த துப்பாக்கி ச்சூட்டில் தேவிகா என்ற சிறுமி குண்டடி பட்...
தமிழகம்
ஆலத்தம்பாடி கடைகளில் அயோடின் உப்பு சோதனை
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அடுத்த ஆலத்தம்பாடி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அயோடின் உப்பு சோதனை நடத்தப்பட்டது. கட்டிமேடு, அபிஷேக கட்டளை, பள்ளங்கோவில், நெடும்பலம், விளக்குடி, ஆலத்தம்பாடி, கச்சனம், திருத்தங்கூர் ஆகிய கிராமங்களில் உள்ள மளிகைக்கடைகளில் உப்பில் அயோடின் கலந்த...
தமிழகம்
ஆலிவலத்தில் தி.மு.க., கொடியேற்று விழா
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள ஆலிவலத்தில் தி.மு.க., கொடியேற்று விழா, சேகல் கோட்டகத்தில் பூண்டி கலைச்செல்வம் நினைவு கல்வெட்டு திறப்பு விழா, நுணாக்காடு பஞ்சாயத்து தென்காசியில் கொடியேற்று விழா, புதிய உறுப்பினர்கள் இணையும் விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் அன்பரசு தலைமை வகித்தார். நகர செயலாளர் முன்னிலை வகித...
தமிழகம்
மன்னார்குடி அருகே பெண்ணை தாக்கிய ஐந்து பேர் கைது
மன்னார்குடி: மன்னார்குடி அருகேவுள்ள மெ ய்பழத்தோட்டம் கிராமத்தில் முத்தரையர் சங்கத்தினர் வைத்திருந்த பேனர் கிழிந்ததால் ஏற்பட்ட தகராறில் பெண்ணுக்கு மண்டை உடைந்தது. மெய்பழத்தோட்ட கிராமத்தில் வசிப்பவர் முத்துவேல் (30). இவர் முத்தரையர் வகுப்பைச் சேர்ந்தவர். அதேஊர் அதே வகுப்பைச் சேர்ந்த முருகையன் (22), சோமசுந்தரம் (22), மணிம...
தமிழகம்
நன்னிலம், வேதாரண்யத்தில் சாலை விபத்து 36 பேர் காயம்
நன்னிலம்: நன்னிலம் அருகே அரசு மற்றும் தனியார் பஸ் மோதிக் கொண்டதில் 28 பேர் காயமடைந்தனர்.நன்னிலத்தில் இருந்து தனியார் பஸ் ஒன்று நேற்று காலை கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அச்சுதமங்கலம் அருகே கும்பகோணத்தில் இருந்து நாகை நோக்கி வந்த அரசு பஸ்சும், நன்னிலத்தில் இருந்து சென்ற தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண...
தமிழகம்
உணவுப்பொருள் வழங்கல் துறை ஆய்வுக்கூட்டம்; கமிஷனர் பங்கேற்பு
பெரம்பலூர்: பெரம்பலூர் மா வட்ட கலெக்டர் அலுவலக கூட் ட அரங்கில் உணவுப்பொருள் வழங்கல் தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும்நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் ராஜாராமன் அரசு அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். கூட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் ராஜாராமன் பேசியதாவது: ரேஷன் கடைகளில் பணியா...
தமிழகம்
வி.ஏ.ஓ.,விடம் தகராறு இருவர் மீது வழக்கு
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வி.ஏ.ஓ.,வை பணி செய்யவிடாமல் தடுத்த இரண்டு வாலிபர்கள் மீது பெரம்பலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பெரம்பலூர் அருகேவுள்ள எளம்பலூர் கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றுபவர் தேவராஜன் (54). இவர் நேற்று முன்தினம் எளம்பலூர் கிராமத்தில் உள்ள நேதாஜி நகரில் அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் குடிச...
தமிழகம்
வேப்பந்தட்டை பஞ்., யூனியன் வளர்ச்சி பணிகள்: பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர்: வேப்பந்தட்டை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம், தழுதாழை, தொண்டமாந்துறை பகுதிகளில் நடக்கும் அரசின் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை முன்பு நடக்கும் பாலம் கட்டும்பணி, மருத்துவமனை காம்பவுண்ட்...
தமிழகம்
பிரபாகரன் தாயார் தமிழகம் வர தடையில்லை; மத்திய அரசுக்கு பறந்தது பரிந்துரை கடிதம்
சென்னை: புலித்தலைவர் பிரபாகரன் தாயார் தமிழகம் வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழ அரசு சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக சட்டசபையில் துணை முதல்வர் மு.க., ஸ்டாலின் தெரிவித்தார். திருவேங்கடம் வேலுப்பிள்ளை மனைவி பார்வதி அம்மாள் மலேசியாவில்...
இந்தியா
ஜெ., வழக்கு ஒத்திவைப்பு
பெங்களூரு : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பெங்களூரு சிட்டி சிவில் சிறப்பு நீதிமன்றத்தில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் ...
இந்தியா
நித்யானந்தா மனு மீது விசாரணை தள்ளிவைப்பு
பெங்களூரு : நித்யானந்தா ஜாமீன் மனு விசாரணை, 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்யானந்தா, ஜாமீன் கேட்டு ராம்நகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஏற்கனவே இரண்டு முறை விசாரணைக்கு வந்தது. நேற்று விசாரணை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் ...
இந்தியா
தொடர்ந்து மாணவர்களுக்கு ஒதுக்கீடு : இந்த ஆண்டும் சுப்ரீம் கோர்ட் அனுமதி
புதுடில்லி : மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் 69 சதவீத ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் முற்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க சுப்ரீம் கோர்ட் இந்த ஆண்டும் அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரை படி பிற் படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட...
தமிழகம்
ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலராக செயல்பட தடை கோரி வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
சென்னை : ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலராக தினேஷ்குமார் பாலிவால் செயல்படுவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பொறியாளர் அருண்குமார் என்பவர் தாக்கல் செய்த மனு: ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக ...
தமிழகம்
சத்துணவு அமைப்பாளர் பதவி உயர்வில் பாரபட்சம் : உத்தரவை ரத்து கோரிய மனுவில் அரசுக்கு நோட்டீஸ்
சென்னை : சத்துணவு பணியாளர்களுக்கான பதவி உயர்வில், பாரபட்சம் காட்டும் அரசாணையை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் வரதராஜன் தாக்கல் செய்த மனு: சத...
General
இலங்கை திசநாயகத்திற்கு பொதுமன்னிப்பு தர முடிவு
கொழும்பு:இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு பொது மன்னிப்பு அளிக்க, அதிபர் ராஜபக்ஷே முடிவு செய்துள்ளார்.இலங்கையைச் சேர்ந்த பிரபல தமிழ் பத்திரிகையாளர் ஜெயப்பிரகாஷ் சித்தம்பலம் திசநாயகம். இவர், இலங்கை ராணுவத்துக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும்...
தமிழகம்
மனைவியை 29 முறை கத்தியால் குத்திக்கொன்ற கணவனுக்கு ஆயுள்
திருவள்ளூர்: கள்ளக்காதல் காரணமாக மனைவியை, 29 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த, லாரி டிரைவருக்கு திருவள்ளூர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. திருவள்ளூர் மாவட்டம் மணலி பெரியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பலராமன் மகன் வெங்கடேசன் (35). தனியார் கம்பெனி லாரி டிரைவர். இவரது மனைவி புவனேஸ்வரி (20). இவருக்...
General
கொல்லப்பட்டதாக கருதப்பட்ட தலிபான் தலைவர் வீடியோ பேட்டி
வாஷிங்டன்:அமெரிக்காவின் விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக கருதப்படும் பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹக்கி முல்லா மெஹ்சூத், அமெரிக்காவை பழிவாங்கப்போவதாக பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை அமெரிக்கா ஒழித்த பின் பெரும்பாலான தலிபான்கள் பாகிஸ்தான் எல்லையில் தஞ்சம் புகுந்தனர். பாகிஸ்தானில், "தெஹ்ரிக்...
இந்தியா
வேறு ஜாதி நபரை காதலித்த பெண் நிருபர் படுகொலை
ராஞ்சி : வேறு ஒரு ஜாதியை சேர்ந்தவரை காதலித்ததால், ஆங்கில வர்த்தக பத்திரிகையில் பணிபுரிந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை, அவரது தாயாரே, கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம், டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, அந்த பத்திரிகையாளரின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், கோதர்மா பகுதியை சேர்ந...
இந்தியா
இரண்டு போலீசை கொன்று தப்பிய ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
லக்னோ : உத்தரபிரதேசத்தில் சிறைக்கு கொண்டு செல்லப்படும் வழியில், இரண்டு போலீசாரை சுட்டு கொன்று விட்டு, தப்பி தலைமறைவாக இருந்த ரவுடியை அதிரடி படை போலீசார் சுட்டு கொன்றனர். உத்தரபிரதேசத்தின் ஜான்பூரை சேர்ந்தவர் நீரஜ்சிங். இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. அலகாபாத்தை சேர்ந்த வக்கீலின் சகோதரரை கொலை செய்தது தொடர்பாக நீரஜ்சி...
இந்தியா
காதல் திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதா? கட்டப் பஞ்சாயத்துக்கு அடி பணியாத கிராமம்
சண்டிகார் : திருமண விஷயத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் கட்டப் பஞ்சாயத்தாரின் அடக்குமுறைக்கு அடிபணியாத அரியானா கிராமம், பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரியானாவில் உள்ள சிர்சா, ஹிசார், பதேகாபாத் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் கட்டப் பஞ்சாயத்தாரின் அடக்கு முறை அதிகம் உள்ளது. ஒரே ...
தமிழகம்
மதுரையில் விஷமாக மாறிய உணவு : கல்லூரி மாணவர் பலி
மதுரை : மதுரையில் ஓட்டல் ஒன்றில், விஷமாக மாறிய உணவை சாப்பிட்ட பொறியியல் கல்லூரி மாணவர்களில் ஒருவர் நேற்று முன் தினம் இறந்தார். மூன்று பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். புதுச்சேரி மாநிலம் தவளைகுப்பத்தைச் சேர்ந்தவர் இசைஅமுதன்(21). வேலூர் எஸ்.ஐ.ஐ.டி., பொறியியல் கல்லூரியில், தீத்தடுப்பு பாதுகாப்பு பிரிவில் ...
தமிழகம்
மின்னல் தாக்கி இருவர் பலி
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன்(45). இவர், நேற்று மாலை 4 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார். திடீரென காற்றுடன் மழை பெய்தது. அப்போது, மின்னல் தாக்கியதில் மகேஸ்வரன் இறந்தார். செய்துங்கநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர். குமரி மாவட்டம் குலசேகரம் அருகே நேற்று ப...
தமிழகம்
எம்.எல்.ஏ.,வுடன் சென்ற கார் மோதி முதியவர் பலி
தூத்துக்குடி : திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் மதியம் 12.30 மணியளவில் காரில் திருச்செந்தூர் திரும்பிக் கொண்டிருந்தார். வீரபாண்டியன்பட்டணம் பெட்ரோல் பங்க் அருகில், அவரது காருக்கு பின்னால் சென்ற அவரது ஆதரவாளரின், "பொலீரோ' கார், அவ்வழியாக நடந்து சென்...
தமிழகம்
விருதுநகர் நர்சிங் பள்ளி மாணவியர் போராட்டம்: ஆசிரியை சஸ்பெண்ட்
விருதுநகர் : விருதுநகரில் அரசு நர்சிங் பயிற்சி மாணவியர், தங்களை பெயிலாக்கிவிடுவதாக மிரட்டிய ஆசிரியை ஜெயசுந்தரியை கண்டித்து, வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக ஜெயசுந்தரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விருதுநகரில், அரசு நர்சிங் பயிற்சிப்பள்ளி, மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் இயங்கி வருகிறது...
தமிழகம்
தண்ணீர் தேடி கிராமத்தில் புகுந்த மான்
சாத்தூர் : சாத்தூர் அருகே புல்லக்கவுன்டன்பட்டி கிராமத்திற்குள் தண்ணீர் தேடி புகுந்த புள்ளிமான் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, ஸ்ரீவி., காட்டில் விடப்பட்டது. சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, பட்டம் புதூர், கருவேலங்காட்டு பகுதிகளில் புள்ளிமான்கள் அதிக அளவில் உள்ளன. நேற்று அதிகாலை 5 மணியளவில் கொம்பு உடைந்த நிலையில், ஐந்து வயது ப...
தமிழகம்
படக் குழுவினர் எனக்கூறி நூதன முறையில் நான்கு கார்கள் திருட்டு
கும்மிடிப்பூண்டி: படக்குழுவினர் எனக் கூறி, மும்பையை சேர்ந்தவர்கள் வாடகை கார் டிரைவர்களுக்கு மதுவில் மயக்கமருந்து கலந்து கொடுத்து, 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு கார்களை கடத்திச் சென்றனர். சென்னை திருவொற்றியூர் அடுத்த தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஷெரீப்(30). இவரிடம், மும்பை படக்குழுவினர் எனக்கூறி அஜய்குப்தா என்பவர் பொ...
தமிழகம்
புழல் சிறையில் போதை கடத்தல் நபரிடம் மொபைல் போன் பறிமுதல்
செங்குன்றம்: மத்திய சிறையில் உள்ள போதை பொருள் கடத்தல் கைதியிடம் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் திருவாடனையைச் சேர்ந்த காளிமுத்து மகன் கோட்டை காளிமுத்துசாமி(39). இவர் கடந்த 2004ம் ஆண்டு போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக, சென்னை எழும்பூர் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்க...
தமிழகம்
கட்டாய மதம் மாற்றம்: கணவர் வீட்டார் மீது புகார்
திண்டுக்கல் : கணவர், அவரது குடும்பத்தார் என்னையும்,எனது குழந்தையையும் வற்புறுத்தி மதமாற்றம் செய்து விட்டனர் என பெண் ஒருவர் திண்டுக்கல் எஸ்.பி., முத்துச்சாமியிடம் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியைச் சேர்ந்தவர் கலாராணி. இவர் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவ...
தமிழகம்
ஜெ., திடீர் சிறுதாவூர் பயணம்
சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று மாலை போயஸ்தோட்டம் இல்லத்திலிருந்து, திடீரென புறப்பட்டு சிறுதாவூர் பங்களாவிற்கு புறப்பட்டு சென்றார். கடந்த ஒரு வாரமாக ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பல்வலி காரணமாக, போயஸ் தோட்டம் இல்லத்தில் அவர் ஓய்வு எடுத்தார். கட்சி பணிகள் தொடர்பாக யாரையும், அவர் சந்திக்கவில்லை. இந்நிலையில், நேற...
இந்தியா
காதல் திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதா?கட்டப் பஞ்சாயத்துக்கு அடி பணியாத கிராமம்
சண்டிகார் : திருமண விஷயத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் கட்டப் பஞ்சாயத்தாரின் அடக்குமுறைக்கு அடிபணியாத அரியானா கிராமம், பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.அரியானாவில் உள்ள சிர்சா, ஹிசார், பதேகாபாத் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் கட்டப் பஞ்சாயத்தாரின் அடக்கு முறை அதிகம் உள்ளது. ஒரே க...
தமிழகம்
அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிகளை பிடிக்க கடும் போட்டி
சென்னை : கோவை, திருச்சி, மதுரை அண்ணா பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் பதவியை பிடிக்க, கடும் போட்டி நிலவுகிறது. துணைவேந்தர் பதவிக்கு குறிப்பிட்ட நபர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், உயர்கல்வி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழகத்தில் கோவை மற்றும் திருச்சி அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிகள் தற்போது காலியாக உள்ள...
இந்தியா
மும்பை தாக்குதல் வழக்கின் பின்னணி
உலகமே எதிர்பார்த்த, மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில், முக்கிய குற்றவாளியான கசாப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உறுதி செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.கடந்த 2008 நவ., 26ல் மும்பையை அதிரவைத்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணை, 2009 ஏப்ரல் 15ல் துவங்கியது. சம்பவத்தின் போது பிடிபட்ட ஒரே பயங்கரவ...
இந்தியா
பெட்ரோல், டீசல் விலை தலா ரூ. 6 அதிகரிக்கும்
புதுடில்லி :பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா ஆறு ரூபாய் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்த பின் வெளியாகும். இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை மீதான விலை நிர்ணயத்தை பெட்ரோலிய கம்பெனிகள் முடிவெடுக்கும் நிலை உருவாகும். மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:சர...
இந்தியா
ஆயுத வியாபாரியுடன் தொடர்பு: மத்திய அமைச்சர் யார்?
புதுடில்லி : மத்திய அமைச்சர் ஒருவர், வங்கதேசத்தை சேர்ந்த ஆயுத வியாபாரியுடன், சட்டவிரோத ஆயுத பேரம் வைத் திருந்ததாகக் கூறி, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டன. இதனால், சபை இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது.ராஜ்யசபாவில் நேற்று ஜீரோ நேரத்தின்போது, மார்க்சிஸ்ட் எம்.பி., மொய்னுல் ஹசன் ஒரு பிரச்னையை கிளப்பினா...
இந்தியா
இரு குற்றவாளிகளுக்கு விடுதலையா: அப்பீல் செய்ய பா.ஜ., யோசனை
புதுடில்லி:மும்பைத் தாக்குதலின் போது கைதான ஒரே பயங்கரவாதி, அஜ்மல் கசாப் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டதை வரவேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, கசாப்பிற்கு துணையாக இருந்த மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு அப்பீல் செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளது. பா.ஜ., கட்சியின் லோக்சபா துணைத் தலைவர் கோபிநாத் ம...
இந்தியா
மும்பை தாக்குதல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு : உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட 2 பேர் விடுதலை
மும்பை :மும்பைத் தாக்குதல் வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. தாக்குதலின் போது கைதான பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாப் குற்றவாளி என, சிறப்பு கோர்ட் நீதிபதி அறிவித்தார். அதே நேரத்தில், இந்த வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட  இருவர் விடுவிக்கப்பட்டனர். 166 பேர் பலியாக காரணமாக இர...
இந்தியா
சட்டவழி ஆட்சியை காட்டும் தீர்ப்பு இது
மும்பை:இந்தியாவில் சட்ட வழி அரசு நடக்கிறது என்பதை, மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கசாப் குற்றவாளி என்ற தீர்ப்பு நிரூபித்துள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மும்பைத் தாக்குதல் வழக்கு குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில்,"இந்த வழக்கு விசாரணையும், கசாப் குற்றவாளி என்ற தீர்...
இந்தியா
மருத்துவமனைகளை கண்காணிக்க திட்டம்
புதுடில்லி:சட்டவிரோதமாக உடல் உறுப்புகளை தானம் செய்தலை தடுக்கவும், கருவில் உள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தெரிவிப்பதை தடுக்கவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகளை முறைபடுத்தும் மசோதா நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மருத்துவமனை...
இந்தியா
பால் தாக்கரே கிண்டல்
மும்பை:மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான், மாநிலத்தின் வளர்ச்சி பற்றிக் கூறிய ஒப்பீட்டைக் கிண்டலடித்துள்ளார், சிவசேனா தலைவர் பால் தாக்கரே.மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவான், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "மகாராஷ்டிரா வளர்ச்சியில் இந்திய மாநிலங்களோடு போட்டியிடவில்லை. மாறாக அமெரிக்கா மற்றும் சீனாவோடு போட்டியிடுகி...
இந்தியா
வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கும் மசோதா தாக்கல்
புதுடில்லி:வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் உயர்கல்வி அளிக்க வகை செய்யும் மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இடதுசாரிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.வெளிநாட்டிலுள்ள கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு அல்லது வேறொரு ஒழுங்கு வரையறை அமைப்பில் பதிவு செய்து கொண்டு, இந்...
இந்தியா
இது உங்கள் இடம்
யார் தான் காப்பாற்றுவது? ஆர்.ஹரிஹரன், கோவையிலிருந்து எழுதுகிறார்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்திய தூதரக அதிகாரி மாதுரி குப்தா கைது செய்யப்பட்டது, ஜீரணிக்க முடியாத விஷயம்.இந்திய மருத்துவக்கவுன்சில் தலைவர் கேதன் தேசாய், தன் வீட்டு வாயில்படியிலிருந்து கழிவறை வரைக் கும், ஆயிரம் ரூபாய் நோட்டுகளாலும், தங்கக்கட்டிகளாலும...
இந்தியா
சொல்கிறார்கள்
ஒரு முன் மாதிரி கிராமம் :  வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு கிராம வளர்ச்சிக்காகப் பாடு படும் இளைஞர் செந்தில் கோபாலன்: எனக்கு சிறு வயது முதலே நாட்டிற்காக குறிப்பாக கிராமங்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்காக திட்டமிட்டு துவங்கியது தான், "பயிர்' என்ற அமைப்பு. இதன் முக்கிய நோக்கம், கிராமத் தன்னிறைவு, கல...
இந்தியா
சட்டசபையை கூட்ட லாலு கட்சி கோரிக்கை
ராஞ்சி:ஜார்க்கண்ட் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி முதல்வர் சிபுசோரனின் பெரும்பான்மையை நிரூபிக்க செய்ய வேண்டும், என ராஷ்டிரிய ஜனதா தள கட்சி கோரியுள்ளது.மன்மோகன் சிங் அரசு மீது கொண்டு வரப்பட்ட வெட்டு தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில், காங்கிரசுக்கு ஆதரவாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஓட்டு போட்டதால், ஜார்க்கண்ட் முத...
இந்தியா
பேச்சு, பேட்டி, அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேச்சு: நமக்கு அறிமுகம் இல்லாத வெற்றியாளர்களை முன் மாதிரியாக வைத்தால், நாம் அவர்களை வியப்புடன் மட்டுமே பார்க்க முடியும். ஆனால், நம்முடன் இருக்கும் வெற்றியாளர்களை முன் மாதிரியாக வைத்துப் போராடினால், வெற்றியை நாம் எளிதாக பெற்று விடலாம். பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி பேட்டி: மக்கள் பிரச்னைகளை அ...
இந்தியா
தமிழகத்திற்கு ஒதுக்கீடு 20 ஆயிரத்து 68 கோடி ரூபாய்:மத்திய திட்டக்கமிஷன் அனுமதி
தமிழகத்துக்கு நடப்பு நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீடாக 20 ஆயிரத்து 68 கோடி ரூபாயை மத்திய திட்டக்கமிஷன் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டில் புதிய மின்உற்பத்தி திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.நடப்பு 2010-11ம் நிதிஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு எவ்வளவு என்பது குறித்து...
இந்தியா
சுரேஷ் கல்மாடி போர்க்கொடி
புதுடில்லி : விளையாட்டு அமைப்புகளின், தலைவர் பதவிக்காலம் தொடர்பான வரையறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி, தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் (என்.எஸ்.எப்.,) தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தேசிய விளையாட்டு அமைப்புகளில் 12 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்ற சட...
இந்தியா
சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள் காலடிக்கு மே 7ம் தேதி வருகை
காலடி : கேரள மாநிலம் காலடியில் சிருங்கேரி பாரதி தீர்த்த மகாசுவாமிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக வரும் 7ம் தேதி அவர் வருகிறார். ஆதிசங்கரர் அத்வைத மதத்தை பரப்ப துவாரகையில் காளிகாபீடம், மேற்கில் பூரியில் கோவர்த்தன பீடம், வடக்கில் பத்ரியில் ஜ்யோதிஷ் பீடம், தெற்கில் சிருங்கேரியில் சாரதா பீடத்தை ஏற்படுத்தி...
இந்தியா
திருப்பதி தேவஸ்தான திட்டங்களுக்கு பக்தர்கள் நன்கொடை
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, மராத்திய மாநிலம் புனே நகரைச் சேர்ந்த, சாப்ட்டெக் புராஜக்ட் நிறுவனம் சார்பில், (1,01,11,111) ஒரு கோடியே ஒரு லட்சத்து பதினோறாயிரத்து நூற்றி பதினோரு ரூபாய்க்கான டிராப்டை நன்கொடையாக வழங்கினர். திருமலையில் நேற்று முன்தினம், (ஞாயிறு) தேவஸ்தான சிறப்பு நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி...
இந்தியா
திருப்பதி தரிசனம் : ரோசய்யா கண்டிப்பு
ஐதராபாத் : பொது தரிசனம் செய்ய வருபவர்களை, அதிக சிரமத்துக்கு உள்ளாகாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகளை ஆந்திர முதல்வர் ரோசய்யா கேட்டு கொண்டுள்ளார். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால், பொது தரிசனத்துக்காக மக்கள் பல மண...
தமிழகம்
பி.இ - பி.டெக்., விண்ணப்ப விற்பனை துவக்கம்
சென்னை : பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று துவங்கியது. அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் இந்த ஆண்டு, சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் தமிழ் பயிற்று மொழி வகுப்புகள் துவக்கப்படுவதன் மூலம் 1,800 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகங்கள் மற்றும் அர...
தமிழகம்
நெல்லையில் கோடை மழை : குற்றால அருவிகளில் தண்ணீர்
திருநெல்வேலி : நெல்லையில் நேற்றும் பலத்த மழை பெய்தது. குற்றால அருவிகளில் தண்ணீர் விழுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல்நேர வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், அவ்வப்போது கோடைமழையும் பெய்துவருகிறது. நேற்றும் பிற்பகல் 3.30 மணியளவில் இடி, மின்னலுடன் பெய்யத்துவங்கிய மழை ஒரு மணிநேரத்திற்கும் மேலா...
தமிழகம்
சென்னை ஏர்போர்ட்டிற்கு பலத்த பாதுகாப்பு
சென்னை: பயங்கரவாதிகள் தாக்குதல் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் டில்லியில் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பஸ், ரயில்...
தமிழகம்
நூல் விலை: எதிர்பார்த்தது 10; குறைந்தது 2 : தொழில்துறை கடும் அதிருப்தி
திருப்பூர் : மத்திய அரசு பரிந்துரைப்படி, காட்டன் ஒசைரி நூல் விலையில் ஐந்து ரூபாய் குறைந்துள்ளது. அதிகம் பயன்படுத்தப்படும் 30ம் நம்பர் நூலுக்கு இரண்டு ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. "டியூட்டி டிராபேக்' ரத்தான பிறகும், நூல் விலையில் ஆரோக்கியமான மாற்றம் ஏற்படாதது தொழில் துறையினரை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...
தமிழகம்
டி.ஜி.பி., இன்று சாத்தூர் வருகை
மதுரை : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில், பணியில் இருந்த போலீஸ் ஏட்டு நாகரத்தினத்தை(38), ஏப்.,27ல் ரவுடி குமார் வெட்டி கொலை செய்தார். இரு நாட்களுக்கு பின், குமார் போலீஸ் "என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டார். நாகரத்தினம் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்குவதற்காக, இன்று மதியம் டி.ஜி.பி., லத்திகாசரண...
தமிழகம்
பாம்பன் பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்
ராமேஸ்வரம் : கோவா மாநிலம் பானாஜி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஷோகோமி-3, எம்.வி.ஜூபிலி-5, எம்.வி.ஜூபிலி-6 என மூன்று சரக்கு ஏற்றும் மிதவைக்கப்பல்கள், ஒரு இழுவைக்கப்பல் என நான்கு கப்பல்கள் நேற்று முன்தினம் பாம்பன் கடல் பகுதிக்கு வந்தன. பாம்பன் துறைமுக அதிகாரிகளின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, நேற்று காலை 11 மணிக்கு கப்ப...
தமிழகம்
காஞ்சியில் சிறப்பு ஹோமம் : மாஜி பிரதமர் பங்கேற்பு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு ஹோமத்தில் மாஜி பிரதமர் தேவகவுடா கலந்து கொண்டார். மாஜி பிரதமரான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தேவகவுடா நேற்றுமுன்தினம் மாலை காஞ்சிபுரம் வந்தார். காமாட்சியம்மன் கோவில் மற்றும் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டார். நேற்று காலை வரதராஜப் பெருமாள்...
தமிழகம்
கொலை செய்யப்பட்ட போலீஸ்காரரின் குடும்பத்துக்கு இன்று டி.ஜி.பி., நிதி உதவி
விருதுநகர் : சாத்தூர் அருகே கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர் நாகரத்தினத்தின் குடும்பத்துக்கு டி.ஜி.பி. லத்திகா சரண் இன்று நிதி உதவி வழங்குகிறார். சிவகாசி பாரதி காலனியைச் சார்ந்தவர் நாகரத்தினம்(38). சாத்தூர் தாலுகா போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் ஓ. மேட்டுப்பட்டியில் நடந்த காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா பாதுகாப்பு ...
தமிழகம்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிய பின் கவுன்சிலிங் நிபந்தனை
திண்டுக்கல் : அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வழங்கிய பின்பே கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இக்கூட்டமைப்பு செயற் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ஜோசப் சேவியர் தலைமையில் நடந்தது. மாநில பொது செயலாளர் பேட்ரிக்ரெய்மாண்ட், துணைத்தலைவர்...
தமிழகம்
நித்யானந்தாவை வைத்து ஒட்டுமொத்த சன்னியாசிகளை குறை கூற முடியாது
நாகர்கோவில் : நித்யானந்தாவை வைத்து ஒட்டுமொத்த சன்னியாசிகளையும் குறை கூறக்கூடாது என்று ராஷ்டிரிய சேவிகா தலைவி பிரமிளாமேடே கூறினார். நாகர்கோவிலில் பெண் களுக்கான பண்பாட்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்த பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பெண்களுக்கான பண் பாட்டு பயிற்சி முகாம் 1971 முதல் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வருகி...
இந்தியா
வாழ நினைத்தால் வாழலாம் : வழிகாட்டும் ராதாகிருஷ்ணன்
திருவனந்தபுரம் : சாதாரண தலைவலி வந்தாலே அலுத்து சலித் துப் போகிறோம் நாம். நம்மால் நடமாடவே முடியாமல் போனால்...? நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு  நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், "தடைக்கல்லும் எனக்கொரு படிக்கல்தான்' என்று நிரூபித்திருக்கிறார்.மத்திய கப்பல் துறையில் பணியாற்றிய போது, ராதாகிருஷ்ணனுக்கு(57) வயது 25. அப்போ...
தமிழகம்
எங்கே போயிற்று மனிதாபிமானம் : நடுத்தெருவில் திக்கற்ற முதியவர்
மதுரை : ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என பாராட்டி, சீராட்டி வளர்த்த மகனும் கைவிட, முதியோர் இல்லமும் வெளியே துரத்த, மதுரையில் வானமே கூரையாக பிளாட்பாரத்தில் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார் கந்தசாமி (84). ""வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ...?'' என்ற பழைய பாடல் குடும்ப வாழ்க்கையில் உறவுகளின் நிலையை ...
தமிழகம்
டில்லி தமிழர்கள் வீடுகள் இடிப்பு : முதல்வர் தலையிட கோரிக்கை
டில்லியில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்த வீடுகள் மற்றும் உடைமைகள் இடிக்கப்பட்டுள்ள பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை மற்றும் நிவாரண உதவிகளை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.தெற்கு டில்லியில் அமைந்துள்ள ஜன்ங்புரா என்ற இடத்தில் மதராஸி கேம்ப் என்ற பகுதி உள்ளது. 1978ம் ஆண்டு முத...
தமிழகம்
உள்நாட்டு நீர் வழி போக்குவரத்து திட்டங்களுக்கு திட்ட கமிஷன் கைவிரிப்பு:
ஆறு புதிய தேசிய உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து திட்டங்களுக்கு  திட்டக் கமிஷன் அங்கீகாரம் அளிக்காததால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு பெரும் நன்மை விளைவிக்கும் காக்கிநாடா-புதுச்சேரி நீர் வழிப் போக்குவரத்து திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும...
தமிழகம்
உயர் அதிகாரிகள் சிக்குகின்றனர்?மோசடி மருந்து விவகாரம்
காலாவதி மருந்து விவகாரத்தில், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இரண்டு நாட்களாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய, சில உயர் அதிகாரிகள் சிக்குவார்கள் எனவும் கூறப்படுகிறது.பொதுமக்களின் உயிர் காக்க...
தமிழகம்
ஐதராபாத் நகரை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் :போலீஸ் உஷார்
ஐதராபாத்: ஐதராபாத்தில்  தகவல் தொடர்பு அலுவலகங்கள் மற்றும் சர்வதேச ஆடிட்டிங் அலுவலகங்களை  குறிவைத்து தகர்க்கும்  சதியில் ஈடுபட்ட அல்-குவைதா  தொடர்புள்ள பயங்கரவாதி கைது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தியாவின் பல நகரங்களை பயங்கரவாதிகள் தாக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து உஷார்படுத்தி வந்தன. ...
தமிழகம்
சொல்கிறார்கள்
நீங்களும் கணக்குப் பிள்ளை ஆகலாம் : கணக்குப் பிள்ளை லதா: பண்ணையார் காலங்களில் கணக் குப் பிள்ளை என்ற வார்த்தை மந்திரிக்குச் சமமான முக்கியத்துவம் பெற்றிருந்தது. காலப்போக்கில், பண்ணையார்கள் அருகிவிட, கணக்குப் பிள்ளைகளும் காணாமல் போய்விட்டனர்.இன்னும் கணக்குப் பிள்ளை பதவிக்கு மவுசு குறையாத முக்கியத்துவத்தை வழங்கும் துறையாக வ...
இந்தியா
இது உங்கள் இடம்
ஐயம் எழுகிறதே!அ.ஜெ.பாலன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: சென்னை ஐகோர்ட் வளாகத்தில் அமைக்கப்பட்ட, சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் முழு உருவச்சிலை திறப்பு விழாவில், கூட்டத்திலிருந்த வழக்கறிஞர்கள் ஆறு பேர், தாங்கள் மறைத்து வைத்திருந்த, கறுப்பு கொடிகளை எடுத்து காட்டி, முதல்வருக்கு எதிராக கோஷமிட்டதன் விளைவாக மோதல் நடந்துள்ளது.இ...
இந்தியா
ஜெயலலிதா மனு : 7ம் தேதி விசாரணை
புதுடில்லி : ஜெயலலிதா மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு கோர்ட் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற சிறப்பு அனுமதி கோரும் மனு மீதான விசாரணையை வரும் 7ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிக...
தமிழகம்
திறந்த நிலை பல்கலையில் எம்.ஏ., படித்தவர் எஸ்.ஐ., தேர்வு எழுதலாமா : அரசிடம் விளக்கம் கேட்கிறது ஐகோர்ட
மதுரை : திறந்தநிலை பல்கலை மூலம் நேரடியாக எம்.ஏ., படித்தவர்கள் போலீஸ் எஸ்.ஐ., தேர்வில் கலந்து கொள்ளலாமா என்பது குறித்து பதிலளிக்கும்படி, சீருடைப்பணியாளர் தேர்வாணையத் தலைவருக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம் ஆயுதப்படை போலீஸ்காரர் ராஜா. இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ரிட்: பிளஸ் 2 முடித்த பின்...
தமிழகம்
கோகலே ஹால் இடிப்பு விவகாரம் : ஐகோர்ட்டில் அரசு உத்தரவாதம்
சென்னை : சென்னையில் கோகலே ஹால் இடிப்பு விவகாரத்தில், கோர்ட் உத்தரவின்றி நடவடிக்கை எடுக்க மாட்டோம் என, ஐகோர்ட்டில் உறுதியளிக்கப்பட்டது. சென்னை பிராட்வேயில் கோகலே ஹால் உள்ளது. இதை இடித்து விட்டு புதிதாக கட்டடம் எழுப்ப ஒய்.எம்.ஐ.ஏ., அமைப்பு நடவடிக்கை எடுத்தது. அதன்படி கட்டடத்தை இடிப்பதற்கான பணிகள் துவங்கின. இதை எதிர்த்து ...
தமிழகம்
நில மோசடி வழக்கில் தி.மு.க., பிரமுகருக்கு இடைக்கால முன்ஜாமீன் : சென்னை புறநகர் போலீசில் தினசரி ஆஜராக
சென்னை : நில மோசடி வழக்கில் தி.மு.க., பிரமுகருக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது. சென்னை புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் தினசரி ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் வசிப்பவர் நரம்பியல் நிபுணர் டாக்டர் ஜெகநாதன்(82); சென்னை அரசு பொது மருத்துவமனையில் நரம்பியல் துறையின் தல...
தமிழகம்
கோவை கட்டட விவகாரம்:சபையில் அ.தி.மு.க., அமளி
சென்னை:கோவை திராவிட பஞ்சாலை தொழிலாளர் சங்க கட்டட விவகாரம் தொடர்பாக பேச அனுமதி கோரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர்.சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து கோவை திராவிட பஞ்சாலை தொழிலாளர் சங்க கட்டட விவகாரம் தொடர்பாக பேச முயன்றார். அப்போது, ...
இந்தியா
சாலையில் சென்ற பாம்பால் பெரும் விபத்து : ஏழு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதின
மும்பை : மும்பையில் சாலையில் ஊர்ந்து சென்ற பாம்பின் மீது ஏற்றி விடக் கூடாது என்பதற்காக காரை திடீரென நிறுத்தியதை அடுத்து, பின்னால் வந்த ஏழு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. மும்பை, பாம் பீச் சாலையில் சமீபத்தில் போக்குவரத்து படு "பிசி'யாக இருந்தது. ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. நல்ல வெயிலும்...
இந்தியா
கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தன்னைக் கடத்தி வந்தவர்கள், முகம் தெரியாத மாநிலத்தில், ஒவ்வொரு இடத்திலும் அடைத்து வைத்துக் கற்பழித்தவர்கள் என, அனைவரையும் அடையாளம் காட்டியிருக்கிறார், 16 வயது சிறுமி. மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானா மாவட்டத்தின், ஹப்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் மிது தாஸ்(16). பாரம்பரிய நடனம் ஆடுவதில்...
இந்தியா
ஊழல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது
ஐதராபாத் : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆந்திராவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் இணை கலெக்டராக பணியாற்றி வருபவர் ஜெகன் மோகன். இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைய...
இந்தியா
பெண்ணை கடத்தி விற்ற ஆறு பேர் கைது
ஹர்டா : ஓர் இளம் பெண்ணைக் கடத்தி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மற்றொருவரிடம் விற்ற ஆறு பேர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பெண்கள் உள்ளிட்ட இன்னும் ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம், அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயா(23). இவர், நாக்பூரிலிருந்து ஜான்சியிலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு ரயிலில் சென்...
தமிழகம்
நெல்லை தாமிரபரணியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலி
திருநெல்வேலி : நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி, பள்ளி மாணவர்கள் இருவர் இறந்தனர். திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகே தாமிரபரணி கரையில் உள்ள பாலாமடையை சேர்ந்தவர் நாராயணன். இவரது வீட்டு நிகழ்ச்சிக்காக, வெளியூர்களில் இருந்து உறவினர்கள் வந்திருந்தனர். நேற்று காலையில் நாராயணன் மகன் செல்வரங்கன்(15), அவரது தம்பி சுர...
தமிழகம்
கோவில் நிலம் பிளாட் போட்டு விற்பனை : மீட்டது அறநிலையத்துறை
கோவை : வீட்டு மனையாக பிரித்து விற்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பு கோவில் நிலத்தை, அதிரடியாக மீட்டனர் அறநிலையத்துறை அதிகாரிகள். கோவில் நிலத்தை வீட்டு மனையாக மாற்றி விற்ற, பனியன் ஏற்றுமதியாளர் மீது குற்ற நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திருப்பூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்; பனியன் ஏற்றுமதி செய்து வருகிறார். இவர், ...
தமிழகம்
தாயின் தலையில் கல்லைப்போட்ட மகன்
தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே தாயின் தலையில் கல்லை தூக்கிப்போட்டார் மகன். விளாத்திகுளம் அருகேயுள்ள வாலம்பட்டி, அந்தோணிசாமி மனைவி பொன்மாரி(50). நேற்று காலை இவர், மனநிலை பாதிக்கப்பட்ட மகன் பன்னீர்செல்வத்துடன்(30), வேடபட்டி உறவினர் வீட்டில் இருந்து வாலம்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வைப்பாறு ஆற்றுப்பகுதியில் ந...
தமிழகம்
போலி சான்றிதழ்: பாஸ்போர்ட் பெற முயன்றவர் கைது
தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே போலியாக பள்ளி சான்றிதழ் தயாரித்து கொடுத்து, பாஸ்போர்ட் பெற முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், ஏ.சொக்கலிங்கபுரம் மரம் வெட்டும் தொழிலாளி பரமசிவம்(31). இவர், வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் வேண்டி, கடந்த 25.6.2009க்கு முன்னர் விண்ணப்பித்தார். இவர் சம...
தமிழகம்
இளம் பெண்ணிடம் வம்பு : மிரட்டிய டிரைவர் கைது
சென்னை : இளம்பெண்ணிடம் வம்பு செய்ததால், தட்டிக் கேட்ட கணவரை மிரட்டிய வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார். செங்குன்றம் அடுத்த வடகரை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் லோகு என்கிற லோகநாதன் (27). மணலியிலுள்ள தொழிற்சாலை ஒன்றின் வேன் டிரைவர். வடகரை மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி கல்யாணி (23). வங்கி பணியாளர். இவர் தினம...
தமிழகம்
சிறைக்குள் கைதிகள் மோதல்
மதுரை : மதுரை சிறைக்குள் கஞ்சா புகைப்பதில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் ரவிசண்முகம், ராமநாதபுரம் கணேஷ்பாபு, நிலக்கோட்டை பாபுராஜ். இவர்கள் வெவ்வேறு வழக்குகளில் கைதாகி, மதுரை மத்திய சிறை தண்டனை கைதிகளுக்கான பிரிவில் அடைக்கப் பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு அங்கு ரவி சண்முகம் கஞ்சா புக...
தமிழகம்
பெண் தற்கொலை
தூத்துக்குடி : தூத்துக்குடி, ராஜபாண்டிநகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி(44). உப்பள கூலித்தொழிலாளியான இவரது வீட்டில், கடந்த மாதம் 20ம் தேதி 3.5 பவுன் தங்க நகை, 3,000 ரொக்கம் திருட்டு போனது. இதுகுறித்து, அவர் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். அதுதொடர்பாக, அவரது மகன் சக்திவேல், மருமகன் மாரியப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்த...
தமிழகம்
மின்சாரம் தாக்கி மாணவர் பலி
திருநெல்வேலி : மின்சாரம் தாக்கி பாலிடெக்னிக் மாணவர் பலியானார். திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலை அடுத்துள்ள உடையாம் புளியை சேர்ந்த சுகுமாரன் மகன் கோபால்(22). இவர் தென்காசியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று பிற்பகல் வீட்டில், பழுதாகியிருந்த "விசிடி' பிளேயரை சரிபார்த்தார். அப்போது மின்சாரம் தாக்க...
தமிழகம்
நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து டிராபிக் ஜாம்
செஞ்சி : சென்னை துறைமுகத்திலிருந்து, கரும்பு ஆலைக்கு நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால், செஞ்சி-திருவண்ணாமலை ரோட்டில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. சென்னை துறைமுகத்திலிருந்து, திருவண்ணாமலை தாலுகா தண்டராம்பட்டிலுள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு, நிலக்கரி ஏற்றி வந்த லாரி, நேற்று காலை 10.30 மணிக்கு செஞ்சி வழியே ...
தமிழகம்
ரோட்டோர முள் புதரில் புத்தர் சிலை
முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கடலாடி செல்லும் ரோட்டில், ரோட்டோர முள் புதரில், 100 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தர் சிலை ஒன்று, சாக்கு பையில் கிடந்தது. அவ்வழியாக 100 நாள் வேலைக்கு சென்று வந்த சிலர், சாக்குப் பையினை திறந்து பார்த்துள்ளனர். அதில் புத்தர் சிலை இருந்ததால், அங்கேயே விட்டுச் சென்றனர். ப...
தமிழகம்
போலி டாக்டர் கைது
கும்மிடிப்பூண்டி: பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (38). இவர், கும்மிடிப்பூண்டி அடுத்த, கவரைப்பேட்டை ராஜா தெருவில் சுகம் மருத்துவமனை என்ற பெயரில் கிளினிக் நடத்தி வந்தார். இவர் மீது சந்தேகமடைந...