category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
சிறுவன் மர்மச்சாவு
திண்டுக்கல்: திண்டுக்கல் குடைபாறைப்பட்டி அருகே எம். ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் கார்த்தி(13). மே 31ல் காணாமல் போன இவர், நேற்று முன்தினம் பெரியபள்ளபட்டி நாகமுத்துகுளம் அருகே கிணற்றில் பிணமாக கிடந்தார். இவரது உடலைக் கைப்பற்றிய திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார், பரிசோதனைக்காக திண் டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனு...
இந்தியா
போலி தபால் தலைகள்: மூவர் சஸ்பெண்ட்
நகரி: திருப்பதி நகர் மேற்கு தபால் நிலையத்தில், போலி தபால் தலைகள் தயாரித்து விற்ற, மூன்று தபால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருப்பதி மேற்கு தபால் நிலையத்தில், 10 நாட்களுக்கு முன்பு 20  ரூபாய் மதிப்புள்ள தபால் தலையை வாடிக்கையாளர் வாங்கி கவரில் ஒட்டும்போது, அதன் நிறம் மாறியது. இது போலி என தெரிந்துகொண்ட அவர், இதுக...
தமிழகம்
வாலிபர் பலி
பழநி: கூத்தம்பூண்டியை சேர்ந்தவர் சிவனேசன்(33). பழநிஅரசு ஆஸ்பத்திரியில் இருந்த உறவினரை பார்க்க வந்தார். இங்கிருந்து மீண்டும் கூத்தம்பூண்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென் றார். ஆயக்குடி அருகே சென்ற போது மதுரை-பழநி அரசு பஸ் மோதியதில் இறந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தியா
மீட்புப் பணி போர்வையில் நகை திருடிய கொடுமை
மங்களூரு: மங்களூரு விமான விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபடுவதாகக் கூறி, நகைகளைத் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மே மாதம் 22ம் தேதி மங்களூரில் கோரமான விமான விபத்து நடந்தது. அக்கம்பக்கத்து மக்கள் பலர் மீட்புப் பணியில் ஈடுபட்டு போலீசாருக்கு உதவினர். மர்வூர் என்ற இடத்தைச் சேர்ந்த சத்தார் என்பவர...
இந்தியா
மெட்ரோ ரயிலில் குரங்குகள்: பீதியில் பயணிகள் அலறல்
புதுடில்லி: டில்லி மெட்ரோ ரயிலில், குரங்குகள் புகுந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். இதனால், ரயில் போக்குவரத்து 15 நிமிடம் தாமதமானது. டில்லியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து சிறப்பாக நடக்கிறது. நேற்று காலை 10.15 மணிக்கு, ரித்தாலா-தில்ஷாத் கார்டன் லைனுக்கு இடைப்பட்ட பகுதியில், மெட்ரோ ரயில் சென்று கொண்டிருந்தது. ரித்தாலா நிலைய...
இந்தியா
ஜர்கிராம் ரயில் விபத்து: மாவோயிஸ்டுகள் கைது
ஜர்கிராம் (மே.வங்கம்): நாட்டையே உலுக்கி எடுத்த ஜர்கிராம் ரயில் விபத்தோடு தொடர்புடைய நான்கு மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 28ம் தேதி, ஹவுரா - குர்லா, லோகமான்ய திலகர் ஞானேஸ்வரி விரைவு ரயிலின் 13 பெட்டிகள், மேற்கு வங்க மாநிலம், ஜர்கிராம் அருகில் தடம் புரண்டு பெரும் விபத்துக்குள்ளாயின. இதில் 148 பேர் பலியா...
தமிழகம்
தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்! கண்டக்டர், பயணிகளிடையே தொடரும் தகராறு
பழநி: திண்டுக்கல் மாவட்டத் தில் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கிறது. கண்டக்டர், பயணிகளிடையே நடக்கும் தகராறை தீர்க்க மாவட்ட கலெக்டர் வள்ளலார் நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் -பழநிக்கு அரசு நிர்ணயித்துள்ள பஸ் கட்டணம் ரூ. 17. ஆனால் சில தனியார் பஸ்களில் இருவழித்தடத்திலும் கடந்த சில மாதமாக ரூ. 20 ...
இந்தியா
ஹெலிகாப்டர் விபத்து: ஒருவர் பலி; 3 பேர் காயம்
விசாகப்பட்டினம்: கடற்படைக்கு சொந்தமான சேடக் ரக ஹெலிகாப்டர், விசாகப்பட்டினம் அருகே ஆற்றில் விழுந்து நொறுங்கியது. இதில், ஒருவர் பலியானார்; பைலட் உட்பட மூன்று பேர் காயம் அடைந்தனர். விசாகப்பட்டினம் டி.எஸ்.பி., வினீத் கூறியதாவது: கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ்., தேகா கப்பலைச் சேர்ந்த சேடக் ரக ஹெலிகாப்டர் ஒன்று, விசாகப்பட்...
இந்தியா
மீட்புப் பணி போர்வையில் நகை திருடிய கொடுமை
மங்களூரு : மங்களூரு விமான விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபடுவதாகக் கூறி, நகைகளைத் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த மே மாதம் 22ம் தேதி மங்களூரில் கோரமான விமான விபத்து நடந்தது. அக்கம்பக்கத்து மக்கள் பலர் மீட்புப் பணியில் ஈடுபட்டு போலீசாருக்கு உதவினர். மர்வூர் என்ற இடத்தைச் சேர்ந்த சத்தார் என்பவர்...
தமிழகம்
குப்பம்மாள்பட்டி-நடுப்பட்டிக்கு பஸ் இயக்க கோரிக்கை
தாண்டிக்குடி: குப்பம்மாள்பட்டி-நடுப்பட்டி இடையே பஸ் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது. தாண்டிக்குடி அருகே உள்ளது குப்பம்மாள்பட்டி நடுப்பட்டி வரை 5.கி.மீ.,தூரத்திற்கு கிராம சாலை திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளுக்கு ரோடு அமைக்கப்பட்டது. நடுப்பட்டி, நல்லூர் காடு, சேம்படியூத்து, மன்றக்கால்வாய், மன்றவயல் உள்ளிட்ட பகுதிகளு க்கு...
தமிழகம்
தற்கொலை
குஜிலியம்பாறை: கருங்கல் ஊராட்சி கும்மாயம்பட்டியை சேர்ந் தவர் மாணிக்கம்(35). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். வயிற்றுவலியால் பூச்சி மருந்தை குடித்தார். கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தமிழகம்
கணக்கெடுப்பு பணி துவக்கம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை, மாவட்ட கலெக்டர் வள்ளலார் துவக்கி வைத்தார். அவர் கூறியதாவது: மாவட்டத்தில் மூன்றாயிரத்து 649 கணக்கெடுப் பாளர்களும், 608 மேற் பார்வையாளர்களும் இப்பணியில் ஈடுபடுகின்றனர். ஜூலை 15 வரை தொடர் ந்து, 45 நாட்கள் இப்பணி நடைபெறும். இதில் பொதுமக்கள் உண்மையான தகவல் களை மட்...
தமிழகம்
பரிசளிப்பு விழா
திண்டுக்கல்: மாவட்ட சிலம்பாட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு திண்டுக்கல்லில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ரத்தினம் தலைமை வகித்தார். மதுரை மண்டல செயலாளர் பொன்ராமர், சங்க துணைத்தலைவர் நாராயணன், ஹில்லாக் பள்ளி முதல்வர் குணசீலன் முன்னிலை வகித்தனர். உதவி செயலாளர் ரமேஷ் பாபு வரவேற்றார். போட் டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, சங்க ...
தமிழகம்
டிரைவரை கண்டித்து பஸ் மீது தாக்கு
திண்டுக்கல்: மே 23ல் சித்தரேவில் இருந்து தாண்டிக்குடி சென்ற அரசு பஸ்சை, சித்தரேவு கண்ணன்(26) உள்பட சிலர் நிறுத்த சைகை செய்தனர். பஸ் டிரைவர் பெருமாள்சாமி(50) நிறுத்தாமல் சென்றார். இதையடுத்து கண்ணன், சின்னராமு(24) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று வழி மறித்தனர். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி, பஸ் மீது கல் ...
தமிழகம்
ரோடு மறியல் 31 பேர் மீது வழக்கு
திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே கட்டக்காமன்பட்டியில், மார்க்சிஸ்ட் கம்யூ., பிரமுகர் மீதான தாக்குதலை கண்டித்து நேற்று முன்தினம் சிலர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். முன்னறிவிப் பின்றி ரோடு மறியல் செய் ததாக, வி.ஏ.ஓ.,அன்பழகன் புகார் செய்தார். மார்க் சிஸ்ட் கம்யூ., பிரமுகர் அலெக்சாண்டர் உள்பட 31 பேர் மீது போலீசார் வழ க்கு பதிவ...
தமிழகம்
தங்கை முறை பெண்ணை கடத்தியவர் கொலை: சரணடைந்த மூவரிடம் போலீசார் விசாரணை
கடலூர்: தங்கை முறை பெண்ணை கடத்திய வழக்கில் பிடிபட்டு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து விடுவிக்கப்பட்ட ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரின் மகன், திருச்சி அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவ்வழக்கில் சரணடைந்த மூவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்கலத்தைச் சேர்ந்தவர் ராமன்; ஓய்...
தமிழகம்
திண்டுக்கல்லில் தோண்டப்பட்ட பள்ளத்தில் பழங்கால கட்டட அமைப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டிய போது பழங்கால கட்டட அமைப்பு தென்பட்டது. இது சுரங்கப்பாதையா, பதுங்கு குழியா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. பேகம்பூர் அருகே நேற்று பள்ளம் ÷ தாண்டும் போது தரையில் இருந்து ஒன்றரை அடி ஆழத்தில்,...
தமிழகம்
தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., காலமானார்
தூத்துக்குடி: விளாத்திகுளம் தொகுதி  தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரத்தின சபாபதி(86). உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று இறந்தார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர். இவர் 1967 முதல் 1975 வரை அண்ணாதுரை, கருணாநிதி முதல்வர்களாக இருந்தபோது விளாத்திகுளம் தொகுதியில் இருந்து தி.மு.க., சார்பில் எம...
தமிழகம்
அனுமதியின்றி செயல்பட்ட சிறுவர் இல்லம் 3 சிறுமிகள், 14 சிறுவர்கள் மீட்பு
சுசீந்திரம்: சுசீந்திரம் அருகே நல்லூர் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த குழந்தைகள் இல்லத்தில் இருந்து 17 சிறுவர், சிறுமிகளை அதிகாரிகள் மீட்டனர்.சுசீந்திரம் அருகே நல்லூர் தெற்கு தெருவில் டைட்டஸ் பால்துரை சிங்(30), அவரது மனைவி மற்றும் மாமியார் இணைந்து சாரோன் சிறுவர் இல்லம் என்ற பெயரில் ஒரு சிறுவர் இல்லத்தை நடத்தி வ...
தமிழகம்
மேற்குவங்கத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சொந்த கிராமத்தில் போலீஸ் மரியாதையுடன் அடக்கம்
நித்திரவிளை: மேற்குவங்கத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த குமரி ராணுவ வீரரின் உடல் மறு பிரேத பரிசோதனைக்கு பின் அடக்கம் செய்யப்பட்டது.நித்திரவிளை அருகே பூத்துறையை சேர்ந்த ஜாண்போஸ்கோ, ஜெயஷீலி தம்பதியர் மகன் ராஜேஷ்(26). இவர் மேற்குவங்கத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 21ம் தேதி விடுமுறைக்கு ஊருக்கு திரும்ப...
தமிழகம்
கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாகர்கோவில்: நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.ரேஷன் அரிசி ஒரு ரூபாய்க்கு விற்பதை பயன்படுத்தி கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்குள்ள ஓட்டல்கள், மற்றும் பிற உணவு தேவைகளுக்கு ரேஷன் அரிசி கடும் கிராக்கி...
தமிழகம்
நாகர்கோவிலில் வரும் 20ல் வரதட்சிணை எதிர்ப்பு மாநாடு
நாகர்கோவில்: குமரி மாவட்ட மா.கம்யூ., சார்பில் வரும் 20ம் தேதி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கும் வரதட்சணை ஒழிப்பு சிறப்பு மாநாடு நாகர்கோவிலில் நடக்கிறது.நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.,யுமான சுபாஷினி உள்ளிட்ட நிர்வாக...
தமிழகம்
மனைவியை அரிவாளால் வெட்டி ராணுவ வீரர் தூக்கு போட்டு தற்கொலை
சேலம்: சேலத்தில் மனைவியின் தவறான நடத்தை மீது சந்தேகித்து, அவரை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரர், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் உடையாப்பட்டியை சேர்ந்த பெரியான் மகன் முருகன் (39), மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ஏட்டாக பணிபுரிந்தார். இவரது மனைவி அமுதா (30). இவர்களுக்கு ஹரிணி(6), கி÷ஷார்(4) என இரண்ட...
தமிழகம்
இளம் பெண் மர்ம மரணம் போலீஸ் விசாரணை தீவிரம்
புதுக்கடை: கருங்கல், பூட்டேற்றி, ஒளிப்பாறை அருகே இளம்பெண் மர்ம முறையில் உயிரிழந்தது குறித்து புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவிதாங்கோடு அருகே முகமாத்தூரை சேர்ந்தவர் ரங்கம்மாள்(65). இவருக்கு சந்திரகலா, நிர்மலா, ராஜகலா, சசிகலா என்னும் நான்கு மகள்களில் நான்காவது மகள் சசிகலாவை(27) கடந்த மூன்று ஆண்டுகளுக்க...
தமிழகம்
திருமண ஆசை காட்டி பெண் கற்பழிப்பு: மதுரையில் போலீஸ்காரர் கைது
மதுரை: திருமண ஆசை காட்டி, பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூரை சேர்ந்தவர் கலைச்செல்வன் (24). இவர் சட்டீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ்காரராக இருக்கிறார். இவரது உறவினர் பெரியசாமி. இவர் மதுரை அருள்தாஸ்புரத்தில் வசிக்கிறார். இவரது மகள் கலைச்செல்வி (24)...
தமிழகம்
மதுரையில் மர்ம காரில் ரூ.55 ஆயிரம் சிக்கியது
மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் எஸ்.ஐ., பொன்ராஜேந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு ஜீவாநகர் மெயின்ரோட்டில் வாகன சோதனை நடந்தது. அப்போது போலீஸ் எச்சரிக்கையையும் மீறி புறப்பட இருந்த கேரள பதிவு எண் கொண்ட காரை எஸ்.ஐ., மடக்கினார். காரை சோதனை செய்யும்போது, 55 ஆயிரம் ரூபாய் இருந்தது. கார், பணத்தை போலீசார் கைப்பற்றினர்...
தமிழகம்
மின் இணைப்புக்கு லஞ்சம்: வணிக ஆய்வாளர் கைது
காரைக்குடி: காரைக்குடியில், தற்காலிக மின் இணைப்புக்காக, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மின் வாரிய வணிக ஆய்வாளர் ராஜா (36) கைது செய்யப்பட்டார். காரைக்குடி என்.புதூரைச் சேர்ந்த ஆவுடையப்பன், மனைவி மஞ்சுளா பெயரில், சூடாமணிபுரத்தில் வீடு கட்டுகிறார். தற்காலிக மின் இணைப்பு கோரி, மார்ச் 17ம் தேதி, 6,200 ரூபாய் கட்டணம் செலுத்தினார...
General
சீனாவில் மழை வெள்ளம் : 18 பேர் பலி
பீஜிங் : சீனாவில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலியானார்கள். குறைந்தது 20 பேர் தகவல் கிடைக்கவில்லை. சீனாவின் குவாங்சி ஜூவாங்க் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் யாங்சோங் கிராமம் மற்றும் சென்ஷக நகரில் 8 பேர் பலியானார்கள். ரோங்ஷியான் பகுதி...
தமிழகம்
அம்பேத்கர் சிலை அமைக்க இடம் ஒதுக்கக்கோரி விளாத்திகுளத்தில் உண்ணாவிரத போராட்டம்
விளாத்திகுளம் : விளாத்திகுளத்தில் அம்பேத்கர் சிலை அமைக்க இடம் ஒதுக்கித் தர வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.விளாத்திகுளத்தில் அம்பேத்கர் வெண்கல சிலை அமைக்க தலித் அமைப்புகள் முடிவு செய்துள்ளது. எனவே சிலை அமைக்க இடம் ஒதுக்கித்தர வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. எனவே இத...
தமிழகம்
பிரிவு உபச்சார விழா
விளாத்திகுளம், ஜூன் 3- விளாத்திகுளத்தில் இடம் மாறுதல் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது.விளாத்திகுளத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ரவி முறப்பநாடு போலீஸ் ஸ்டேஷனுக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக விழுப்புரம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சியாம்சுந்தர் பதவி உயர...
தமிழகம்
இலவச கண்சிகிச்சை முகாம்
விளாத்திகுளம் : விளாத்திகுளத்தில் நடந்த இலவச கண்சிகிச்சை முகாமில் 139 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.விளாத்திகுளம் ஸ்காட் தொண்டு நிறுவனம், வேம்பு மக்கள் சக்தி இயக்கம், சர்வ சமய மனித நேய இயக்கம், சாரோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரவிந்த் கண் ஆஸ்பத்திரி சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு சாரோன்...
தமிழகம்
குத்துவிளக்கு திருடிய 2 பெண்கள் கைது
எட்டயபுரம் : எட்டயபுரத்தில் பட்டபகலில் பூட்டை உடைத்து குத்துவிளக்கு திருடியதாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; எட்டயபுரம் வடக்கு சேனையர் தெரு கிருஷ்ணன் என்பவரது மகன் முத்துலட்சுமி(25) வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது பட்டபகலில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்களை...
தமிழகம்
மக்னா யானை சேட்டை மாந்தோப்பு சேதம்: ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயி பாதிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., செண்பகதோப்பு மாந்தோப்பில், மக்னா யானை புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஸ்ரீவி., சாம்பல் நிற அணில்கள் சரணாலய வனப்பகுதி, சில மாதங்களாக தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் மான், யானை, காட்டு பன்றி, காட்டெருமை போன்றவைகள் தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டிய தனியார் விளைநிலங்களில் புகுந்து...
தமிழகம்
இடையர்காடு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
சாயர்புரம் : சாயர்புரம் அருகே உள்ள இடையர்காடு டி.டி.டி.ஏ. நல்மேய்ப்பர் உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற் றுள்ளது.இடையர்காடு நல்மேய்ப்பர் உயர்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். இதில் மாண...
தமிழகம்
சமச்சீர் கல்வி புத்தகம் வழங்கும் விழா
தூத்துக்குடி : தூத்துக்குடி தாகூர் நினைவு நடுநிலைப்பள்ளியில் சமச்சீர் கல்வி புத்தகம் வழங்கும் விழா நடந்தது.தொடக்கக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு 6ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு புதிய சமச்சீர் கல்வி புத்தகத்தை வழங்கி பேசினார். பள்ளி தாளாளர் விவேகானந்தன் தலைமை வகித்தார். தமிழ்க்கொடி முன்னிலை வகித்தார். ஏற்...
தமிழகம்
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, கணபதி ஹோமம், பூர்ணாகுதி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பூஜை செய்யப்பட...
தமிழகம்
குத்துவிளக்கு திருடிய 2 பெண்கள் கைது
எட்டயபுரம்: எட்டயபுரத்தில் பட்டபகலில் பூட்டை உடைத்து குத்துவிளக்கு திருடியதாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; எட்டயபுரம் வடக்கு சேனையர் தெரு கிருஷ்ணன் என்பவரது மகன் முத்துலட்சுமி(25) வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது பட்டபகலில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்களை ...
தமிழகம்
சமச்சீர் கல்வி புத்தகம் வழங்கும் விழா
தூத்துக்குடி, ஜூன் 3- தூத்துக்குடி தாகூர் நினைவு நடுநிலைப்பள்ளியில் சமச்சீர் கல்வி புத்தகம் வழங்கும் விழா நடந்தது.தொடக்கக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு 6ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு புதிய சமச்சீர் கல்வி புத்தகத்தை வழங்கி பேசினார். பள்ளி தாளாளர் விவேகானந்தன் தலைமை வகித்தார். தமிழ்க்கொடி முன்னிலை வகித்தா...
தமிழகம்
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, கணபதி ஹோமம், பூர்ணாகுதி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பூஜை செய்யப்ப...
தமிழகம்
ஏரல் அரசு பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி
ஏரல்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 80 மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 99 சதவீத தேர்ச்சி ஆகும். உஷா ராஜேஸ்வரி என்ற மாணவி 477 மதிப்பெண்கள் பெற்று முதலிட...
தமிழகம்
ஒரே நாளில் 2 அரசு தேர்வுகள்; வேலையில்லா பட்டதாரிகள் குழப்பம்
வல்லநாடு : தமிழகத்தில் ஒரே நாளில் இரண்டு அரசு வேலை வாய்ப்பிற்கான தேர்வுகள் நடக்க இருப்பதால் விண்ணப்பித்த வேலையில்லா இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலையில் அரசு துறையில் ஏதாவது ஒரு வேலையை எப்படியாவது கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதி வேலையை பெற்றுவிட வேண்டும் என்ற...
தமிழகம்
அரசூர் கோயில் மகா கும்பாபிஷேக விழா
பெரியதாழை : தட்டார்மடம் அருகேயுள்ள அரசூர் முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரர் கோயிலில் மகாகும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடந்தது.முதல் நாளன்று காலையில் ஹோமம், பிரம்மசாரி பூஜையும், சாந்தி ஹோமமும், மாலையில் பிரவேச பலியும், முதல்கால யாகசாலை பூஜையும் நடந்தது. இரண்டாம் நாளன்று காலையில் சாலை பூஜையும், இரவில் அஷ்டபந்தன மருந்து சாத்துத...
தமிழகம்
கோயில் கொடைவிழா
சாத்தான்குளம் : சாத்தான்குளம் குலசை ரஸ்தா உச்சினி மாகாளி அம்மன் கோயிலில் கொடைவிழா நடந்தது.முதல்நாள் இரவு குடியழைப்பு நடந்தது. 2ம் நாள் நிகழ்ச்சியாக அழகம்மன் கோயிலில் இரு ந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். நண்பகல் மஞ்சள் நீராடல் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற...
தமிழகம்
ஏர்வாடி அருகே படகு கடலில் மூழ்கியது
ஏர்வாடி: திருப்புல்லாணி அருகே முத்து பேட் டையை சேர்ந்தவர் முத்து(55). இவருக்கு சொந்தமான நாட்டுபடகில் சின்ன ஏர்வாடியிலிருந்து ஐந்து மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது படகில் இருந்தபடி வலையை இழுத்த போது, பலகை சரிந்து படகு சாய்ந்து கடலில் மூழ்கியது....
தமிழகம்
2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு 5 மாதத்தில் 29 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 மாதத்திற்குள் 29 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பல வழக்குகளில் தொடர்புடைய நபர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க லிஸ்ட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல்வேறு சம்பவ...
தமிழகம்
தூயமரியன்னை கல்லூரி பேராசிரியருக்கு முனைவர் பட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரி வணிகவியல் துறையைச் சேர்ந்த ஸ்டெல்லா பியாட்ரீஸ் நிர்மலா முனைவர் பட்டம் பெற்றார்.பேராசிரியர் ஸ்டெல்லா பியாட்ரீஸ் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அயலான் கண்டெய்னர் சர்வீஸ் தூத்துக்குடி துறைமுகம் ஒரு ஆய்வு பற்றி விவாதித்தார். கண்டெய்னர் வளர்ச்சி உலக நாடுகளில் அதன் ...
தமிழகம்
கருமேனி ஆற்றில் குப்பைகளை அகற்ற திமுக.,வினர் கோரிக்கை
சாத்தான்குளம் : சாத்தான்குளம் டவுன் பஞ்.,குப்பைகளை கருமேனி ஆற்றில் கொட்டுவதைத் தடுத்து நிறுத்தி ஏற்கனவே போடப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என சாத்தான்குளம் நகர திமுக.,வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாத்தான்குளம் நகர திமுக.,செயலாளர் ஜோசப் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது.தூத்துக்குடி மாவட்ட...
தமிழகம்
தமிழகம் முழுவதும் 303 பள்ளிகளில் வகுப்பறை கட்டடம், அடிப்படை வசதிக்கு ரூ.235 கோடி அனுமதி
தூத்துக்குடி : தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க 235 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 11 பள்ளிகளுக்கு 5 கோடியே 27 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நபார்டு பாங்க்கு ந...
தமிழகம்
ஜூன் 11ல் ஆசிரியர் கலந்தாய்வு
ராமநாதபுரம்: மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நலபள்ளிகள் , விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் காப்பாளர்ளுக்கு 2010-11ம் ஆண்டுக்கான பொது மாறுதல் வழங்கும் கலந்தாய் வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 11 காலை 11 மணிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ந...
இந்தியா
பைலட்களுக்கு வழிகாட்டி குறிப்பு: விபத்துகளை தடுக்க முன்னேற்பாடு
புதுடில்லி; மங்களூரில் நடந்த விமான விபத்தில் 160 பேர் பலியானதை அடுத்து, விமான நிறுவனங்கள் மற்றும் பைலட்களுக்கான புதிய வழிகாட்டிக் குறிப்புகளை சிவில் விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மங்களூரில் நடந்த விமான விபத்தானது, இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து வரலாற்றில், கடந்த பத்தாண்டுகளில் நட...
தமிழகம்
ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரம்: உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடந்தது. பிரதீப்குமார் எஸ்.பி., மருத்துவ இணை இயக்குனர் இப்ராஹிம் அலி, சுகாதார துணை இயக்குனர் உமா மகேஸ் வரி, தேவஸ்தான நிர்வாக செயலாளர் மகேந்திரன், உத்திரகோசமங்கை ஊராட்சி தலைவர் உத் தண...
தமிழகம்
மாவட்ட வர்த்தக சங்க கூட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் தனபாலன் தலைமையில் நடந்தது செயலாளர் காசி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 2013 வரை மீண்டும் தலைவராக தனபாலன் தேர்வு செய்யப்பட்டார். இதர நிர்வாகிகள் விரைவில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. கடைகளில் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என அறிவுறுத்...
தமிழகம்
தொடர் திருட்டால் பொது மக்கள் அச்சம் : போலீசாரின் துரித நடவடிக்கை தேவை
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து நடக்கும் திருட்டு சம்பவங்களால் பொது மக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் உள்ளனர். போலீசார் துரித நடவடிக்கை எடுத்து திருட்டு சம்பவங்களை தடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் உழவர் பணி கூட்டுறவு வங்கியில் கடந்த மாதம் 22ம் தேதி இரவு ஒரு கோடியே 22 லட்சத்து 56 ஆயிர...
இந்தியா
காரைக்கால் அம்மையார் கோவிலில் வரும் 25ம் தேதி மாங்கனி திருவிழா
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில் பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா, வரும் 25ம் தேதி நடக்கிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர், காரைக்கால் அம்மையார். கி.பி.5ம் நூற்றாண்டில் வணிகர் தலைவனான தனதத்தருக்கு மகளாக பிறந்து வளர்ந்த புனிதவதியார் (காரைக்கால் அம்மையார்), நாகப்பட்டினம் வணிகர் பரமதத்த...
தமிழகம்
சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஸ்டிரைக்
திருக்கோவிலூர் : அரகண்டநல்லூர் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பணிகள் பாதித்துள்ளன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை கிடங்கு அரகண்டநல்லூரில் உள்ளது. இங்கிருந்து ரேஷன் கடைகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு உணவு ...
தமிழகம்
பனங்குப்பம் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
விழுப்புரம் : பனங்குப்பம் வரதராஜ பெருமாள் கோவில் கும் பாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் அடுத்த பனங்குப்பத்தில் புதியதாக கட்டியுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் கும் பாபிஷேகம் நேற்று நடந் தது. இதனையொட்டி கடந்த 31ம் தேதி மாலை 5 மணிக்கு மூலவர் பிரார்த் தனையுடன் விழா துவங் கியது. இரவு 7 மணிக்கு முதல் கால பூஜ...
தமிழகம்
மின் கசிவால் தீ விபத்து: 9 வீடுகள் எரிந்து சாம்பல்
தியாகதுருகம் : தியாகதுருகம் அடுத்த வாழவந்தான் குப்பம் கிராமத்தில் நடுத்தெரு வழியாக கரும்பு ஏற்றிய வாகனங்கள் செல்லும் போது மின் ஒயர்களில் உரசாமலிருக்க வீட்டிற்கு மின்சாரம் செல்லும் சர்வீஸ் ஒயர்களை கழியால் தூக்கி பிடித்து வாகனத்தை ஓட்டிச் செல்லுவது வழக்கம். இதனால் மின் இணைப்பில் ஏற்பட்ட மின்கசிவால் நேற்று காலை 10.30 மணிக...
தமிழகம்
நகை கடை உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோனைக் கூட்டம்
செஞ்சி : செஞ்சி பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் நகை கடை உரிமையாளர்களுடன் போலீசார் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். செஞ்சி டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வரவேற்றார். செஞ்சி வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ரவிச்சந்திரன், நகை வியாபாரிகள் சங்க த...
தமிழகம்
செவலபுரை கிராமத்தில் சுகாதாரத் துறையினர் முகாம்
அவலூர்பேட்டை : செவலபுரையில் வயிற்று போக்கு ஏற்படாமல் சுகாதார துறை குழுவினர் முகாமிட்டுள்ளனர். மேல்மலையனூர் ஒன்றியம் செவலபுரையில் கடந்த 28ம் தேதி வயிற்றுப் போக்கினால் 8 பேர் பாதித்து செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வயிற்று போக்கு பரவாமல் தடுக்க வளத்தி டாக்டர் இந்துமதி தலைம...
தமிழகம்
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
கள்ளக்குறிச்சி : மேலூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. வினைதீர்த்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த முகா மிற்கு ஊராட்சி தலைவர் செல்வராஜ் தலைமை தாங் கினார். துணை தலைவர் சின்னசாமி, ஒன்றிய கவுன்சிலர் செல்வராசு முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் மகாலிங்கம் வரவேற...
தமிழகம்
புதிய ரயில் நிலையம் அமைப்பதில் சிக்கல்
கள்ளக்குறிச்சி : வருவாய்த்துறையினரின் அலட்சியத் தால் கள்ளக்குறிச்சி புதிய ரயில் நிலைய பணிகள் முடங்கியதாக ரயில்வே துறையினர் புலம்புகின்றனர். கள்ளக்குறிச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிக்கு மத்திய, மாநில அரசுகள் 39 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. சின்னசேலத்திலிருந்து கள்ளக் குறிச்சி வரை ...
தமிழகம்
அதிகரித்த தள்ளு வண்டிகளால் மாணவ, மாணவிகள் அவதி
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் பெருகிவிட்ட தள்ளு வண்டிகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத் தில் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன கள்ளக் குறிச்சி நகரில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. சேலம் நெடுஞ்சாலையிலுள்ள கடைவீதி ஓரத்தில் வரிசையாக தள்ளு வண்டிகளில் வி...
தமிழகம்
கோடைக்கால பயிற்சி முகாம்
விழுப்புரம் : புதுச்சேரி ஹோப் நிறுவனம், சையன்தாலஜி நிறுவனம் இணைந்து கோடைக் கால இலவச பயிற்சி முகாம் நடந்தது. அருளம்பாடி பள்ளியில் 3 தினங்கள் நடந்த இலவச பயிற்சி முகாமில் அருளம் பாடி, தாமஸ் நகர், இளையனார்குப்பம், அந்தோணியார் நகர், கானாங்காடு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். படிப்பதில் ஏற்படும் தடைகளை கண்...
இந்தியா
மந்திரி சிதம்பரம் கருத்து: ரவிசங்கர் ஆசிரமம் அதிருப்தி
பெங்களூரு: பெங்களூரு ஆசிரமத்தில் சீடர்களுக்கு இடையேயான விரோதத்தின் காரணமாக துப்பாக்கிச் சூடு நடந்ததாக உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளது வருத்தமளிக்கிறது என, ரவிசங்கர்ஜியின் ஆசிரம நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பெங்களூரு கனகபுரம் சாலையில், "வாழும் கலை' அமைப்பின் ஆசிரமம் அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த ஆசிரமத...
தமிழகம்
நகை கடை உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
விழுப்புரம் : வங்கிகள், கூட்டுறவு சங்கங்களின் அலுவலர் கள், அடகு கடை மற்றும் நகைக் கடை உரிமையாளர்களுக்கான பாதுகாப்பு பெட்டக விழிப்புணர்வு கூட்டம் விழுப்புரம் காவலர் திருமண மண்டபத்தில் நடந்தது. விழுப்புரம், வளவனூர், கண்டமங்கலம், விக்கிரவாண்டி, பெரியதச்சூர் காவல் நிலைய எல்லை பகுதிகளில் இயங் கும் வங்கிகள், கூட்டுறவு சங்கங்...
தமிழகம்
ஏனாதிமங்கலம் பள்ளி 90 சதவீதம் தேர்ச்சி
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஏனாதிமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளி 90 சதவீதம் தேர்ச்சியடைந் துள்ளது. மாணவி வினோதினி 476 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், தமிழில் 91, ஆங்கிலம் 89, கணிதம் 97, அறிவியல் 99, சமூக அறிவியலில்100 மதிப் பெண் பெற்றார். கீர்த்திகா 471 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும் சமூக அறி...
தமிழகம்
புத்தகங்கள் வழங்கல்
செஞ்சி : செஞ்சி சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமச்சீர் பாட புத்தகங்கள் வழங் கும் விழா நடந்தது. விழாவுக்கு செஞ்சி பேரூராட்சி தலைவர் மஸ் தான் தலைமை தாங்கி பாட புத்தகங்களை வழங் கினார். உதவி தொடக்க கல்வி அலுவலர் கோவர்த் தனன் முன்னிலை வகித் தார். தலைமையாசிரியர் (பொறுப்பு) ராணி வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமையா...
தமிழகம்
இலவச கண் சிகிச்சை முகாம்
விழுப்புரம் : ஹோப் நிறுவனம் மற்றும் ஜிப்மர் கண்சிகிச்சை மருத்துவ பிரிவு சார்பில் அருளம்பாடியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த அருளம்பாடி கிராம ஆர்.சி., நடுநிலை பள்ளியில் நடந்த முகாமை ஹோப் நிறுவன நிர்வாகி மேரி விக்டோரியா துவக்கி வைத்தார். முகாமில் சர்க்கரை நோய், கண் அழுத்த நோய், பார்வை நரம...
தமிழகம்
தூத்துக்குடியில் இன்று முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா
தூத்துக்குடி : தூத்துக்குடியில் இன்று தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. காலையில் இருந்து மாலை வரை தொடர்ந்து நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முதல...
தமிழகம்
பி.டி.ஓ.,விற்கு பாராட்டு விழா
அவலூர்பேட்டை : மேல்மலையனூர் ஒன்றிய அலுவலகத்தில் ஓய்வு பெற்ற பி.டி.ஓ.,வுக்கு பாராட்டு விழா நடந்தது. மேல்மலையனூர் ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த துரை மே மாதத்துடன் பணி ஓய்வு பெறுகிறார். இவருக்கு ஒன்றிய அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்கள் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. சேர்மன் அன்பழக...
தமிழகம்
உலக தமிழ் புத்தக திருநாளாக முதல்வர் பிறந்த நாளை கொண்டாட உத்தரவு
தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் அரசு நூலகத்துறை சார்பில் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை ஒட்டி இன்று உலக தமிழ் புத்தக திருநாள் கொண்டாட வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் ஷேக்ஸ்பியர் பிறந்த நாளை ஒட்டி உலக புத்தக தினவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. நூலகங்களில் பல்வேறு...
தமிழகம்
பணி நிறைவு பாராட்டு விழா
கள்ளக்குறிச்சி : அகில இந்திய தபால் ஊழியர் சங்க விருத்தாசலம் கோட்ட செயலாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சலகத்தில் தபால்காரராக பணிபுரிந்தவர் அமிர்தலிங்கம். இவருக்கு நேற்று முன்தினம் மாலை பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. தலைமை அஞ்சலக அதிகாரி சின்னதம்பி தலைமை தாங்கினார். மாநில ஆலோசகர் சிவ...
தமிழகம்
ஆரஞ்ச் கம்ப்யூட்டர் கல்வி நிறுவனம் திறப்பு விழா
தூத்துக்குடி ; தூத்துக்குடியில் அபி குரூப்ஸ் நிறுவனங்களின் சார்பில் ஆரஞ்ச் கம்ப்யூட்டர் கல்வி மைய திறப்பு விழா நடந்தது.சென்னையை தலைமையாக கொண்டு செயல்பட்டு வரும் ஆரஞ்ச் கம்ப்யூட்டர் கல்வி நிறுவனம் சார்பில் மல்டிமீடியா, சாப்ட்வேர், ஹார்டுவேர், நெட் வொர்க்கிங் கம்ப்யூட்டர் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் அப...
இந்தியா
வக்கீலாக பதிவு செய்ய தகுதி தேர்வு
புதுடில்லி: சட்டபடிப்பு முடித்தவர்கள், வக்கீலாக பதிவு செய்ய, இனி தகுதி தேர்வு எழுத வேண்டும். ஆயிரம் சட்ட கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண் டும் இந்த சட்ட கல்லூரிகள் மூலம், 60 ஆயிரம் பேர், பட்டதாரியாக தேர் வாகின்றனர். சட்டபடிப்பு முடித்தவர்கள், பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்யும் போது, அவர்களின், அடிப் படை சட்ட அறிவை ப...
தமிழகம்
தே.மு.தி.க., ஆலோசனைக் கூட்டம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஒன்றிய தே.மு.தி.க., ஆலோசனை மற்றும் சட்ட சபை தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி தலைமை தாங்கினார். சக்தி வேல் வரவேற்றார். கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கோவிமுருகன், சங்கராபுரம் சட்ட சபை பொறுப்பாளர் கருணாகரன் அறிமுகம் செய்து ...
தமிழகம்
ஸ்ரீவை., தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி
ஏரல் : ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியது.நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் முதல் கணக்கெடுப்பு பணி ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன்...
தமிழகம்
சமச்சீர் கல்வித்திட்ட புத்தகங்கள் வழங்கல்
விழுப்புரம் : விழுப்புரம் நடராசா நடுநிலைப்பள்ளியில் சமச்சீர் கல்வித்திட்டத்திற் கான புதிய பாட புத்தகங் களை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கினார். விழுப்புரம் நாப்பாளை யத்தெரு நடராசா நடு நிலைப்பள்ளியில் சமச்சீர் கல்வித் திட்டத்தில் புதிய தாக 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பிற்கான பாட புத்த கங்களை உதவி தொடக்கக் கல்வி அலுவ...
இந்தியா
ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் விபத்து: சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவு
புதுடில்லி: மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த வாரம் நிகழ்ந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது. 148  பயணிகள் பலியாயினர். இந்த சம்பவத்தில் மாவோயிஸ்டுகளை சந்தேகப்படுவதாக மத்த...
தமிழகம்
ரிஷிவந்தியம் சிறுபாலம் பணி: இரு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அவலம்
தியாகதுருகம் : ரிஷிவந்தியம் பஸ் நிறுத்தம் அருகே சிறுபாலம் அமைக்கும் பணி இரு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தியாகதுருகத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையை அகலப்படுத்தி, இரு ஆண்டுகளுக்கு முன் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையில் குறு...
தமிழகம்
மழவந்தாங்கல் ஏரி மீன் மகசூல் ஏலம்
செஞ்சி : செஞ்சி தாசில்தார் முன்னிலையில் நடந்த மழவந்தாங்கல் பெரிய ஏரி மீன் மக சூல் 3 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. செஞ்சி தாலுகா மழவந்தாங்கல் பெரிய ஏரியில் மீன் பிடிப்பதில் ஊராட்சி தலைவர் தரப்பிற்கும், ஏரி நீர்பாசன சங்க தலைவருக்கும் பிரச்னை ஏற்பட்டு இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ஆர்.டி.ஓ.,முன்னிலைய...
தமிழகம்
மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் செய்த 45 வாகனங்கள் ஏலம்
விழுப்புரம் : மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்களின் பொது ஏலம் விழுப் புரத்தில் நடந்தது. விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாக மைதானத்தில் நடந்த ஏலத்திற்கு மதுவிலக்கு அமல் பிரிவு ஏ.டி. எஸ்.பி., நாகஜோதி தலைமை தாங்கினார். வாகனங்கள் பிரிவு தொழில் நுட்ப பொறியாளர்கள் இளங்கோ,தேவப்பிரியா முன்னிலை வகித்தனர். பகல் 11 மணி...
தமிழகம்
அரசு பஸ்களில் அதிக கட்டணம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
தூத்துக்குடி: அரசு பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேமுதிக சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.தூத்துக்குடி கலெக்டர் ஆபிசில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாளில் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் கோமதிகணேசன் சார்பில் கலெக்டர் பிரகாஷிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவத...
தமிழகம்
மினிவேன் கவிழ்ந்து விபத்து : 7 பேர் காயம்
கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே மினிவேன் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,திருநெல்வேலி மாவட்டம் அம்பை தாலுகாவிலுள்ள புதுக்குடியிருப்பு கிராம் சுப்பையா மகன் சங்கரய்யா (55). இவர் தனது குடும்பத்தினருடன் சாத்தூர் அருகிலுள்ள கோயிலுக்கு மொட்டை போட மினிவேனில் ச...
தமிழகம்
பாடப் புத்தகங்கள் வழங்கும் விழா
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த தென்கோடிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக் கப் பள்ளியில் மாணவர் களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப் பட்டது. விழாவில் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவ லர் சுந்தர மூர்த்தி தலைமை தாங்கி மாணவர் களுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்கி னார். கிராம கல்விக் குழு தலைவர் பங்கஜம் அம் மாள் முன்னிலை வகித் தார...
தமிழகம்
வருவாய் ஈட்டிக் கொடுத்த சாலையை கவனித்து சீரமைக்க ஆள் இல்லை
திருக்கோவிலூர் : மணல் குவாரி லாரிகளின் படையெடுப்பால் குண்டும், குழியுமான அரகண்ட நல்லூர்- அருமலை சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் 4 கிராம மக்கள் பாதித்துள்ளனர். அரகண்டநல்லூரில் இருந்து அருமலை செல்லும் சாலை கரும்பு ஆலை திட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்னர் சீரமைக்கப்பட்டது. அருமலை, நெற்குணத்தில் பொதுப்பணித்...
தமிழகம்
அவலூர்பேட்டையில் கலை இரவு நிகழ்ச்சி
அவலூர்பேட்டை : அவலூர்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோடை கலை -இரவு நிகழ்ச்சி நடந்தது. வட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில், மா.கம்யூ., வட்ட செயலாளர் கோவிந் தசாமி , மாவட்ட தலைவர் கண்ணப்பன், மாவட்ட குழு முருகன் முன்னிலை வகித்தனர். ஏழுமலை வரவேற்றார். மாநில துணை செயலாளர் வேல...
தமிழகம்
கோவில்பட்டியில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி, : கோவில்பட்டியி ல் ஏஐடியுசி சார்பில் கேட்பு மனு தாமதத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவில்பட்டி தெட்சிணாமூர்த்தி விநாயகர் கோ யில் தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு 24வது வார்டு கிளை செயலாளர் சிவா தலைமை வகித்தார். தொடர்ந்து தமிழக அரசை கண்டித்தும், பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்களை தாமதம் செய்யாமல் த...
தமிழகம்
கோர்ட் உத்தரவை அவமதித்த டி.எஸ்.பி., மீது மனு தாக்கல்
செஞ்சி : கோர்ட் உத்தரவை அவமதித்ததாக டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் மீது செஞ்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் வக்கீல் சக்திராஜன். செஞ்சியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி செஞ்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்....
தமிழகம்
அ.தி.மு.க.,பிரமுகர் இல்லத் திருமண விழா
விழுப்புரம் : விழுப்புரம் அ.தி. மு.க., பிரமுகர் சேவல் செல்வராஜ் இல்லத் திருமண விழா நடந்தது. விழுப்புரம் அ.தி. மு.க., பிரமுகர் மறைந்த சேவல் செல்வராஜ் மகனும், முன்னாள் நகர துணை செயலர் ராஜேந்திரன் தம்பி செந்தில்குமார், புதுச்சேரி கிருஷ்ணராஜ்-குமாரியின் மகள் அனுராதா ஆகியோரின் திருமணம் விழுப்புரம் கே.சி.பி., திருமண மண்டபத்த...
தமிழகம்
21 தீவுகளை சுற்றுலாத்தலமாக்குவதற்கு எதிர்ப்பு
தூத்துக்குடி : மன்னார்வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளை சுற்றுலாத்தலமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர மீனவர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 5ம் தேதி மீனவ கிராமங்களில் கருப்புகொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்க உள்ளனர்.இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வடபகுதி மீனவர் சங்க செயலாளர் ஜான்சன் நிருபர்களிடம் கூறிய...
தமிழகம்
விளாத்திகுளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ., காலமானார்
தூத்துக்குடி: விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ காலமானார்.விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏவும், தூத்துக்குடி மாவட்ட குளத்தூர் பிரமுகருமான ரத்தினசபாபதி நேற்று காலமானார். இவர் 1967 முதல் 1975 வரை சட்டசபை உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் விளாத்திகுளம் பஞ்., யூனியன் தலைவராக பணியாற்றியுள்ளார். இவருக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உ...
தமிழகம்
7ம் வகுப்பு மாணவன் தற்கொலை
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் பிரகாஷ். பால் வியாபாரி. இவரது மகன் ஹரி கிருஷ்ணன். இவர் 7ம் வகுப்பு படித்து வருகிறார். பிரகாஷ், தனது மகனை மெட்ரிக் பள்ளியில் படிக்க வைக்க தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில் பணம் கட்டியுள்ளார். ஆனால் ஹரிகிருஷ்ணன், அரசு உயர்நிலைப்பள்ளியில் மட்டுமே படிப்பேன் என கூறிவந்துள்ளார். இவர் ...
தமிழகம்
புனித அந்தோணியார் ஆலய கொடியேற்றம்
கடலூர் : கடலூர் சொரக்கல்பட்டு புனித அந் தோணியார் ஆலய திருவிழாவையெட்டி திருப்பலி கொடியேற்றம் நடந்தது. கடலூர் சொரக்கல்பட்டு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2ம் தேதி முதல் வரும் 12ம் தேதி வரை மாலை 7 மணிக்கு நவநாள் ஜெபம் நடக்கிறது. 12ம் தேதி மாலை 6 மணிக்கு தேர்ப்ப...
தமிழகம்
நாசரேத், கயத்தாறு, கழுகுமலை பஸ்ஸ்டாண்டுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு
தூத்துக்குடி: தமிழகத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் உள்ள பஸ் ஸ்டாண்ட் ஓடுபாதைகளை சரி செய்ய 3 கோடியே 50 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத், கயத்தாறு மற்றும் கழுகுமலை டவுன் பஞ்.,களில் உள்ள பஸ் ஸ்டாண்டுகள் 45 லட்சம் ரூபாய் நிதியில் சீர் செய்யப்படவுள்ளது.2010-2011 டவுன...
இந்தியா
இறந்தவர்களுக்கு வழங்கும் இழப்பீடு அணுகுமுறையை மாற்றுமா ரயில்வே?
புதுடில்லி: விமான விபத்தில் பலியானவர்களுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடும், ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு சில லட்சம் ரூபாய் இழப்பீடும் அரசால் பாரபட்சமான முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. கர்நாடக மாநிலம் மங்களூரில் சமீபத்தில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 72 லட்சம் ரூபாய் இழப்ப...
தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் பட்டய தேர்வு துவங்கியது
தூத்துக்குடி,: தூத்துக்குடியில் நேற்று ஆசிரியர் பட்டயதேர்வு துவங்கியது. ஆயிரத்து 300 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விக்டோரியா பள்ளியில் தேர்வு நடப்பதை சி.இ.ஓ விஷ்ணுபிரசாத் ஆய்வு செய்தார்.தமிழகம் முழுவதும் ஆசிரியர் கல்வி இரண்டாமாண்டு பட்டயத்தேர்வு நே ற்று துவங்கியது. வரும் 9ம் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது. தூத்துக்க...
தமிழகம்
கடலூர் ஒன்றியக்குழு அவசர கூட்டம் : நிதி ஒதுக்கீட்டில் 6 வார்டுகள் புறக்கணிப்பு
கடலூர் : கடலூர் ஒன்றியக் குழுவின் அவசரக் கூட்டம் பத்திரிகைகளுக்கு தகவல் கொடுக்காமல் ரகசியமாக நடத்தி முடிக்கப்பட்டது. கடலூர் ஒன்றியக் குழு கூட்டம் கடந்த மே மாதம் 7ம் தேதி சேர்மன் சாந்தி தலைமையில் நடந்தது. 2010-11ம் ஆண்டு பிற்படுத் தப்பட்ட பகுதிக்கு மானிய நிதி ஒரு கோடியே 25 ஆயிரத்து 578 ரூபாய்க்கான பணிகள் ஒதுக்கீடு தொடர...
தமிழகம்
மூனா ஆஸ்திரேலியன் பள்ளியில் கல்வியாளர்கள் பயிற்சி
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை மூனா ஆஸ்திரேலியன் பள்ளி மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய நாட்டு கல்வியாளர்கள் பயிற்சி அளித்தனர். பரங்கிப்பேட்டை மூனா ஆஸ்திரேலியன் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சர்வதேச கல்வியாளர்கள் கற்றல், கற்பித்தல் குறித்து புரிந்துணர்வு புத்தாக்க பயிற்சி அளித்து வருகின்றனர். ஆஸ்திரேலியன் நாட்டு கல்வியாளர்க...
தமிழகம்
தொடர் மின் வெட்டு: விவசாயிகள் பாதிப்பு
சிறுபாக்கம் : வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். வேப்பூர், சிறுபாக்கம், கழுதூர், பெரியநெசலூர், மங்களூர், மலையனூர், ஒரங்கூர், அடரி உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட கிராமங்களில் அரசு அறிவித்த மின் தடையை விட அதிகளவு மின் வெட்டு இ...
தமிழகம்
தொடக்க கல்வித் துறையின் பரிந்துரைக்கு வரவேற்பு
விருத்தாசலம் : தொடக்க கல்வித் துறையில் தமிழ் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணியில் அமர்த்தலாம் என்ற தொடக்க கல்வித் துறை இயக்குனரகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதை, தமிழ் நாடு தமிழ், வரலாறு பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வாழ்வுரிமை சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து சங்க மாநில தலைவர் முருகன் விடுத்துள்ள...