category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | ஜெயலட்சுமி இன்ஜி., கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம் | சேலம்: தொப்பூர் ஜெயலட்சுமி தொழில்நுட்ப கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. இது குறித்து கல்லூரி தாளாளர் சுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கை: செந்தாமரை ராமானுஜம் அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் இக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் 180க்கு மேல் கட்- ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்க... |
தமிழகம் | இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது | கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த, கூலிதொழிலாளி கருப்பையா. அவரது மகள் சிவபாக்கியம் (20). அவர் போலீஸில் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளது: கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆணையம்பட்டி சிவன் கோவில் பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சோலைராஜா (24) திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி... |
தமிழகம் | இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இலவச தொழிற்பயிற்சி | சேலம்: சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் ஜூலை 12ல் பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி முகாம் துவங்குகிறது. சுயதொழில் துவங்க ஆர்வம் உள்ள பெண்களுக்கு இரண்டு வார கால இலவச தொழிற் பயிற்சி முகாம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி முகாம் சேலத்தில் ஜூலை 12ல் துவங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. முகாமி... |
தமிழகம் | டூ வீலரில் சென்ற இருவர் வெவ்வேறு விபத்தில் பலி | சேலம்: சேலம் ஃபேர்லேண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையன்(64). பொது விநியோகத் திட்டத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த மாதம் 31ம் தேதி அவர் வின்சென்ட் பஸ் ஸ்டாப் அருகே டூ வீலரில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டூ வீலர் மோதியது. அதில் படுகாயமடைந்த வெள்ளையனை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்... |
தமிழகம் | தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்டில் செங்கல் அப்புறப்படுத்தப்படுமா? | தம்மம்பட்டி: தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கண்களை பதம் பார்க்கும் வகையில் கொட்டப்பட்டுள்ள செங்கற்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட்டில் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் வணிக வளாக கடைகளின் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து மேற்கூரை பழுது... |
தமிழகம் | மேட்டூரில் விஷவாயு தாக்கி டிரைவர் பலி: இரு தொழிலாளர்கள் சிகிச்சைக்கு அனுமதி | மேட்டூர்: மேட்டூரில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். உரிமையாளர் உள்பட மூவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேட்டூர் ஆர்.எஸ்., சிட்கோ தொழிற்பேட்டையில் லட்சுமி கெமிக்கல் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பேரியம் குளோரைடு என்ற ரசாயன கலவை தயாரிக்க... |
தமிழகம் | தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்புத்தேர்வு | ஆத்தூர்: அரசு தொடக்க பள்ளிகளில் படிக்கும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்களுக்கு ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்வி வட்டாரங்களில் சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் விரும்பும் பள்ளிகளில் படிக்க தேவையான செலவுகளை அரசு ஏற்றுக்கொள்கிறது. அனைவருக்கும் கல்வி திட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மேம்பாடு, மாணவர்களது கல்வி... |
தமிழகம் | மின் தடையால் பயிர்கள் காயும் அபாயம் | நாமக்கல்: சீரான மின் விநியோகம் இல்லாததால் மோகனூர் பகுதியில் பயிர்கள் காயும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பெரியகரசபாளையம், கட்டமராபாளையம், ஊஞ்சப்பாளையம், ஒழுகூர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு பயிர்... |
தமிழகம் | இரு குழந்தை தொழிலாளர் மீட்பு | நாமக்கல்: ராசிபுரம், அத்தனூர், வெண்ணந்தூர் பகுதியில் தொழிலாளர் துறையினர் ஆய்வு நடத்தி இரு குழந்தை தொழிலாளர்களை மீட்டனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் தொழிலாளர் ஆய்வாளர் நடேசன் தலைமையில் துணை ஆய்வாளர்கள் குழந்தைவேல், மாதேஸ்வரன், திட்ட இயக்குனர் அந்தோணி ஜெனிட் ஆகியோர் ராசிபுரம், அத்தனூர், வெண்ணந்தூர் ஆகிய பக... |
தமிழகம் | தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது: தனிப்படையினர் தீவிர விசாரணை | நாமக்கல்: ப.வேலூர் அருகே பிலிக்கல்பாளையம், செங்கப்பள்ளி பகுதியில் அடுத்தடுத்து நடந்த இரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக நான்கு பேரை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள ப.வேலூர், பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதியில் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. கொள்ளை... |
தமிழகம் | எல்லை தாண்டிய இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது | மண்டபம்; இலங்கையை சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேர் பைபர் படகில் நாகப்பட்டினம் கடல்பகுதியில், நேற்று பிற்பகல் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல்படையினர் ஐந்து மீனவர்களையும் படகுடன் பிடித்தனர். "பிடிபட்ட மீனவர்களை இன்று மண்டபம் கொண்டுவர உள்ளனர்' என, மண்டபம் இந்திய கடலோர காவல... |
தமிழகம் | சர்வ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் | ராசிபுரம்: சர்வசித்தி விநாயகர், செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ராசிபுரம் அடுத்த பச்சுடையாம்பாளையம் சர்வசித்தி விநாயகர், செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து கோவில் கும்பாபிஷேக விழா கிராமசாந்தியுடன் துவங்கியது.... |
தமிழகம் | கார்பைட் கல் வைத்த மாம்பழங்கள் பறிமுதல் | நாமக்கல்: மாவட்டம் முழுவதும் உள்ள பழக்குடோன்களில் சோதனை நடத்தி, கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்த 2.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எட்டு டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட பழக்கடைகளில் சோதனை மேற்கொள்ளும்படி கலெக்டர் சகாயம் த்தரவிட்டார். ராசிபுரம், சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங... |
தமிழகம் | மின்கம்பங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் | நாமக்கல்: நாமக்கல் போலீஸாரும், அபெக்ஸ் சங்கமும் இணைந்து சிக்னல் கம்பம் மற்றும் மின்கம்பங்களில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டினர். நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நாமக்கல் மணி கூண்டு சிக்னல், நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை ஓரம் உள்ள மின்கம்பங்களில் இரவில் ஒளிரும் ஸ்டிக்... |
தமிழகம் | லயன்ஸ் நிர்வாகிகள் பதவி ஏற்பு | நாமக்கல்: நாமக்கல் புதன்சந்தையில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. சங்க தலைவர் கவுதம் தலைமை வகித்தார். முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் முத்துசாமி, புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைவராக வீரமலை (எ) தங்கராஜூ, செயலாளர்களாக ராமச்சந்திரன், கணேசன், பொருளாராக சண்முகம் ஆகியோர் பொறுப்... |
தமிழகம் | பஸ் ஸ்டாண்ட் பழக்கடைகளில் ஆய்வு: 3 டன் கார்பைட் மாம்பழங்கள் பறிமுதல் | ப.வேலூர்: ப.வேலூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள பழக்கடைகளில் வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு நடத்தி, கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். ப.வேலூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பழக்கடைகளில் கார்பைட் கல் வைத்து மாங்காய்களை பழுக்க வைப்படுவதாக புகார் எழுந்தது.... |
தமிழகம் | ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் | நாமக்கல்: சமச்சீர் கல்வி முறையை முழுமையாக அமல்படுத்தக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் மாதேஸ்வரன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ரமேஷ்பாபு, மாவட்ட தலைவர் வேலுசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர். அந்த ஆர்ப்பாட்டத... |
தமிழகம் | விவசாய தொழிலாளர் நல வாரிய தலைவராக செல்லமுத்து நியமனம் | சென்னை :விவசாய தொழிலாளர் நல வாரிய தலைவராக செல்லமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைவராக இருந்த கே.பி.ராமலிங்கம், தன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, வாரியத்தின் புதிய தலைவராக செல்லமுத்துவையும், இணைத் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ., ராஜனையும் நியமனம் செய்து, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். |
தமிழகம் | மைதானத்தில் வீசப்பட்டபெண் குழந்தை | உடுமலை : உடுமலை வேலன் நகரிலிருந்து காமராஜர் நகர் செல்லும் ரோட்டிலுள்ள விளையாட்டு மைதானம் பகுதியில், பிறந்த இரண்டு நாளே ஆன அழகான பெண் குழந்தை அனாதையாக கிடந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் உடுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந் தையை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். |
தமிழகம் | கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மின் உற்பத்தி வீடியோ கான்பரன்சிங்கில் முதல்வர் துவக்கினார் | விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இணை மின் நிலையங்கள் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி வீடியோ கான்பரன்சிங்கில் சென்னையிலிருந்து துவக்கி வைத்தார்.
தமிழக அரசு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் நிதி நிலையை மேம்படுத்த இணை மின் நிலையங்கள் மற்றும் நவீனப்ப... |
தமிழகம் | சாயத்தொழிலாளர்கள் ஸ்டிரைக் நீடிப்பு | சின்னாளபட்டி: சின்னாளபட்டியில், சாயத்தொழிலாளர்கள் கூலி உயர்வு பிரச் னைக்கு தீர்வு ஏற்படாததால் மூன்று வாரங்களுக்கு மேலாக ஸ்டிரைக் நீடிக்கிறது. திண்டுக்கல் மாவட் டம் சின்னாளபட்டியில், 40க்கும் மேற் பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகின் றன. இவற்றில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இவ... |
தமிழகம் | அன்னை தெரசா பொறியியல் கல்லூரி எட்டாவது பட்டமளிப்பு விழா | உளுந்தூர்பேட்டை:விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் 8வது பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லூரி தலைவர் பிரகாஷ்மல் சோரடியா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். நிர்வாக இயக்குனர் தினேஷ்குமார் சோரடியா, இயக்குனர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். சென்னை ... |
தமிழகம் | ஏ.ஆர்.,பொறியியல் கல்லூரியில் 11ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் | விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூர் ஏ.ஆர்., பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் வரும் 11,12 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தென்மண்டல தொழில் பழகுனர் பயிற்சி வாரிய இயக்குனர் அய்யாக் கண்ணு கூறியதாவது:
கப்பியாம்புலியூர் ஏ.ஆர்.,பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் 11ம் தேதி கடந்த 2007 முதல் 2009 வரை டிப் ளமோ ப... |
தமிழகம் | காங்கேயத்தை சேர்ந்தவர் கோவில் குளத்தில் சாவு | செஞ்சி:செஞ்சி வெங்கட்ரமணர் கோவில் குளத்தில் காங்கேயத்தை சேர்ந்தவர் இறந்து கிடந்தார்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை வெங் கட்ரமணர் கோவில் குளத் தில் நேற்று காலை ஒருவர் இறந்து கிடந்தார். குளத் தின் படிக்கெட்டில் ஜவுளி கடை பை இருந்தது. வெங்கட்ரமணர் கோவில் பாதுகாப்பு ஊழியர் சுரேஷ் குமார் போலீசில் புகார் செய்தார். போலீச... |
தமிழகம் | ரயில் விபத்தில் இறந்தவர்களில் இருவர் பள்ளி மாணவர் : சோகத்தில் மூழ்கியது கிராமம் | பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே நடந்த ரயில்-மினி பஸ் மோதலில் பலியான ஐந்து பேரில் இருவர் பள்ளி மாணவர்கள். இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நேற்று மாணவர்களின் இறுதிச் சடங்கு நடந்தபோது கிராமமே சோகத்தில் மூழ்கியது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே இடிகரை செல்லும் பாதையில் உள்ள "லெவல் கிராசிங்கில்' கோவை-... |
தமிழகம் | துடியலூரில் சூறாவளி: போக்குவரத்து பாதிப்பு | பெ.நா.பாளையம் : துடியலூர், சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை காற்றுடன் கடும் மழை பெய்தது. இதில், மின்கம்பங்கள், மரங்கள் ரோட்டில் சாய்ந்தன. இதனால், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
துடியலூர் வட்டாரத்தில் நேற்று மாலை இரண்டு மணி நேரம் பெய்த கடும் மழையால் ரோட்டில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.... |
தமிழகம் | உளுந்தூர்பேட்டையில் மா. கம்யூ., பொதுக்கூட்டம் | உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டையில் மா.கம்யூ., அரசியல் விளக்க மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங் கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் சேகர் வரவேற்றார். கிளை செயலாளர்கள் சேகர், வீரமணி முன் னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப் பினர்கள் எம்.எல்.ஏ., நன் மாறன், ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர்... |
தமிழகம் | காங்., தலைவர் நியமனம் | பொள்ளாச்சி : கோவை புறநகர் மாவட்ட காங்., பிற்பட் டோர் பிரிவு தலைவராக பொள்ளாச்சி வக்கீல் குமரவேல் நியமிக்கப்பட்டுள்ளார். சோனியாகாந்தி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் லங்கா ஆகியோர் ஒப்புதலோடு, தமிழ்நாடு காங்., பிற்பட்டோர் பிரிவு தலைவர் தணிகைமணி நியமன உத்தரவு வெளியிட்டுள் ளார். வேட்டைக்காரன்புதூரை சேர்ந்த வக... |
தமிழகம் | மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு வழங்கும் விழா | வால்பாறை : வால்பாறை அடுத்துள்ள கல்யாணப்பந்தல் அன்புக்கரங்கள் சமுதாய மற்றும் கல்வி அறக் கட்டளை சார்பில் லோயர் ஷேக்கல்முடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, பேனா, பென்சில் வழங்கும் விழா நடந்தது. அறக்கட்டளைத்தலைவர் குமரன்சத்தியநாதன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வி மாணவ, மாணவிகளுக்... |
தமிழகம் | முதல்வர் பிறந்தநாள்: மரக்கன்று வினியோகம் | பொள்ளாச்சி : பொள்ளாச்சி உழவர் சந்தையில் தமிழக முதல்வர் பிறந்தநாளை ஒட்டி விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் தலைவர் விஜயராகவன் தலைமை வகித்தார். அரசு வக்கீல் சாதிக்அலி முன்னிலை வகித்தார்.
உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்கள், விவசாயிகள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தொ... |
தமிழகம் | இலவச பாடநூல் வழங்கும் விழா | தியாகதுருகம்:ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள பிரிவிடையாம்பட்டு நடு நிலைப் பள்ளியில் இலவச பாடநூல் வழங்கும் விழா நடந்தது.ஊராட்சி தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கருணாநிதி, துணைத்தலைவி வளர்மதி அங்கமுத்து முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் ராஜேந் திரன் வரவேற்றார். உதவி தொடக்க கல்வி அலுவல... |
தமிழகம் | வால்பாறையில் சூறாவளியுடன் கன மழை : வீடுகளின் மேற்கூரை பறந்தது; மின்கம்பங்கள் சாய்ந்தது | வால்பாறை : வால்பாறை பெய்த சூறாவெளி மழையால் பல இடங்களில் வீடுகளின் மேற்கூரை காற்றில் பறந்தது; 50க்கும் மேற்பட்ட மரங்கள் மின் கம்பத்தின் மீது சாய்ந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
வால்பாறை டவுன் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இடியுடன் கூடிய கன மழை பெய்துவருகிறது. நேற்று முன் தினம் மாலையில... |
தமிழகம் | மணலூர்பேட்டை பள்ளி 87 சதவீதம் தேர்ச்சி | திருக்கோவிலூர்:மணலூர்பேட்டை அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 87 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.மணலூர்பேட்டை அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 238 மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 205 பேர் தேர்ச்சி பெற்று 87 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டியுள்னர்.அஞ்சுகம் என்ற மாணவி 457 மதிப்பெ... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு திண்டிவனத்தில் துவக்கம் | திண்டிவனம்:திண்டிவனம் நகரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியது.திண்டிவனம் நகரில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. ஜெயபுரம் பகுதியில் மாவட்ட தி.மு.க.,துணை செயலாளர் வக்கீல் அசோகன் வீட்டிலிருந்து துவக்கப்பட்டது. திண்டிவனம் புனித பிலோமினாள் ஆரம்பப் பள்ளி உதவி தலைமை ஆசிரியை பிரான்சிஸ்கா ராஜம் நிர்மலா கணக்... |
தமிழகம் | புனித பேதுரு தேவாலயம்பெருவளூரில் திறப்பு விழா | செஞ்சி:செஞ்சி தாலுகா பெருவளூர் கிராமத்தில் புதிதாக கட்டிய புனித பேதுரு தேவாலய திறப்பு விழா நடந்தது.தேவலாய கட்டட குழு தலைவர் ஓய்வு பெற்ற தலைமையாசியர் சாமிக் கண்ணு தலைமை தாங்கினார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கும் கிராம ஊழியர்கள் தொண்டு நிறுவன செயலாளர் குலோத் துங்கன் முன்னிலை வகித்தார். கட்டடக்குழு செயலாளர் ஓய்வு பெற்ற ... |
தமிழகம் | என்.ஜி.பி., கல்லூரியில் உயர்கல்வி கருத்தரங்கு | கோவை : காளப்பட்டி ரோட்டிலுள்ள என்.ஜி.பி., தொழில்நுட்ப கல்லூரியில் உயர்கல்வி குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில், கல்லூரி துணை முதல்வர் பொற்குமரன் வரவேற்றார். என்.ஜி.பி., கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.
அமெரிக்கா, சாண்டியா... |
தமிழகம் | தீவிபத்தில் பாதித்தவர்களுக்குஆரணி எம்.பி., ஆறுதல் | மயிலம்:நெடி மோழியனூர் கிராமத்தில் தீ விபத்தில் பாதித் தவர்களுக்கு ஆரணி எம்.பி., ஆறுதல் கூறினார்.மயிலம் ஒன்றியம் நெடி மோழியனூர் கிராமக் காலனியில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் பாதித்தவர்களை எம்.பி., கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண உதவிளை வழங்கினார். மாவட்ட தொ... |
தமிழகம் | பனையபுரத்தில் மரக் கன்று நடும் விழா | விக்கிரவாண்டி:முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை யொட்டி பனையபுரத்தில் சாலையோரம் மரக்கன்றுகளை எம்.எல்.ஏ., புஷ்பராஜ் நட்டார்.விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் நடந்த விழாவிற்கு எம்.எல்.ஏ., புஷ்பராஜ் தலைமை தாங்கி 87 மரக் கன்றுகளை நட்டார்.
நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ஞானசேகரன், உதவி பொறியாளர் அருண்குமார், சாலை ஆய்வாள... |
தமிழகம் | பணி நிறைவு பாராட்டு விழா | தியாகதுருகம்:ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் பணிபுரிந்த கூடுதல் ஏ.இ.ஓ., விஸ்வநாதன் ஓய்வு பெற்றதையொட்டி அவருக்கு பாராட்டு விழா நடந்தது. உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு ஏ.இ.ஓ., கண்ணன் தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர் அன்பரசு முன்னிலை வகித்தார்.
கண்காணிப்பாளர் அப்துல் ரஷீத் வரவேற்றார்.மாவட்ட தொடக்க கல்வி அலுவல... |
தமிழகம் | நொளம்பூரில் தி.மு.க., நலத்திட்ட உதவி | திண்டிவனம்:முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி நொளம்பூர் கிராமத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, பேனா வழங்கப்பட்டது.விழாவிற்கு ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் சொக்கலிங்கம் தி.மு.க., கொடியை ஏற்றி வைத்தார்.
ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சீத்தாபதி சொக்கலிங்கம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்... |
தமிழகம் | புத்தக தின விழா | கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா நடந்தது. உலகத் தமிழ் புத்தகத் திருநாள் மற்றும் புத்தக கண்காட்சி கள்ளக்குறிச்சி கிளை நூலகம் அருகி லுள்ள பூங்காவில் நடந் தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் கிளை நூலகத்திற்கு புத்தகங் களை நன்கொடையாக வழங்கினர். அதனை பெற்று நூலகம் அருகே அமைந் துள்ள பள்ளிகளு... |
தமிழகம் | முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் 3,741 பேருக்கு அறுவை சிகிச்சை | விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் 3741 பேர் பல்வேறு அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டுள்ளனர்.இது குறித்து கலெக்டர் பழனிசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத் தில் மட்டுமே முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் அதிகளவு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வேறு எங்கும் ... |
தமிழகம் | குழந்தைகளுக்கு தங்க மோதிரம் | விழுப்புரம்:முதல்வர் பிறந்த நாளையொட்டி 4 குழந்தை களுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது.தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில்கோலியனூர் ஒன்றியத்தில் பிறந்த கொட்டப் பாக்கத்துவேளியைச் சேர்ந்த சுதாகர் - நதியா குழந்தைக்கும், கப்பூரைச் சேர்ந்த செந்தில்- மஞ்சுளா குழந்தைக்கும் சேர்மன் சம்பத் தங்க மோதிரங்களை பரிசளித்தார்.
இதே ... |
தமிழகம் | மாணவர்களுக்கு இலவச நோட்டு | விழுப்புரம்:விழுப்புரம் வழுதரெட்டி ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு, பேனா மற்றும் இனிப்புகளை வழுதரெட்டி மன்ற தலைவர் வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உடனிருந்தனர். |
தமிழகம் | விழிப்புணர்வு கூட்டம் | செஞ்சி:செஞ்சி தாலுகா அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.தாசில்தார் சியாமளா தலைமை தாங் கினார். பேரூராட்சி தலைவர் மஸ் தான் பேசினார். துணை தாசில்தார்கள் நாராயணன், கன்னியப்பன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் புண்ணிய கோட்டி, வட்ட வழங்கல் அலுவலர் பூமிநாதன், கவுன்சிலர் சையத் சாதுல்லா உட்பட ப... |
தமிழகம் | டைட்டல் பார்க் அமைக்க ஆய்வு | திண்டிவனம்:திண்டிவனம் அருகே டைட்டல் பார்க் அமைக்க அதிகாரிகள் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திண்டிவனம் பகுதியில் டைட்டல் பார்க் அமைக் கப்படும் என அரசு அறிவித்துள்ளது. டைட்டல் பார்க் அமைக்க 25 ஏக்கர் நிலம் தேவை. இதற்காக திண்டிவனத்தில் செஞ்சி செல்லும் வழியில் பெலாக்குப்பம் கிராமத்தில் பி.வி., பாலிடெக்னிக் அ... |
தமிழகம் | சப்-இன்ஸ்பெக்டர் பலி | திருக்கோவிலூர்:பைக்கில் சென்ற சப் இன்ஸ்பெக்டர் சாலை யோரம் இருந்த மணல் ஜல்லி மீது விழுந்ததால் காயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.விழுப்புரம் மாவட்டம் வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் கலியமூர்த்தி (50). இவர் நேற்று முன் தினம் இரவு 9.40 மணிக்கு தனது பைக்கில் விழுப்புரத்திற்கு சென்றார்.
திருக... |
இந்தியா | தனித்தமிழ் இயக்கம் சார்பில்சிறுகதைப் போட்டி | புதுச்சேரி:புதுச்சேரி தனித்தமிழ் இயக்கம் நடத்தும் சிறுகதைப் போட்டிக்கு கதைகள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து தனித்தமிழ் இயக்கத் தலைவர் தமிழமல்லன் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி தனித்தமிழ் இயக்கம், தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டி நடத்துகிறது. இப் போட்டி, 11வது ஆண்டாக நடத்தப்படுகிறது. இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர... |
தமிழகம் | நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படுமா? : அரைகுறையாக தடுப்பு சுவர்கள் கட்டும் பணி | நீலகிரி மாவட்டத்தில் மழை கொட்டத் துவங்கி விட்டது. கடந்த ஆண்டு மழையின் போது ஏற்பட்ட சேதப்பகுதிகளில், குறிப் பாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இன்னமும் தடுப்பு சுவர்கள் முழுமையாக கட்டி முடிக்கப்பட வில்லை. இந்நிலையில் மீண்டும் மிகப்பெரிய நிலச்சரிவு அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் இம்மாவட்ட மக்கள் கவலையடைந்துள்ளனர்.
தென்மே... |
இந்தியா | மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: விபரங்களை அளிக்க கலெக்டர் வேண்டுகோள் | புதுச்சேரி:மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு பணியின் போது பொதுமக்கள் என்னென்ன விவரங்களை தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.கலெக்டர் ராகேஷ்சந்திரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய மக்கள் தொகை கணக் கெடுப்பு பணி 2 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும... |
இந்தியா | சுகாதாரமான வாழ்வுக்கு மரக்கன்று நட வேண்டும்: ஷாஜகான் பேச்சு | புதுச்சேரி:தென்னந்திய உற்பத்தியாளர் சங்கம், புதுச்சேரி கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்களுடன் இணைந்து நியாய விலை வர்த்தக தினம் மற்றும் சுற்றுச்சூழல் தின விழாவை நேற்று நடத்தினர்.புதுச்சேரி பலநோக்கு சமூக சேவா சங்கத்தில் நடந்த விழாவில் தென்னிந்திய உற்பத்தியாளர் சங்கத் தலைவர் போத்தி ரெட்டி தலைமை தாங்கினார்.செயலர் பஞ்சாட்சர... |
இந்தியா | நாவலர் பள்ளியில் செஸ் போட்டி | புதுச்சேரி:புதுச்சேரி செஸ் கிளப் சார்பில் மாநில செஸ் சாம்பியன் ஷிப் போட்டி நாவலர் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது. வரும் 12ம் தேதி வரை நடைபெறும் இந்த போட் டியை புதுச்சேரி மாநில செஸ் கிளப் செயலர் தேவகுமார் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிங் ஆனந்த் செஸ் கிளப் தலைவர் ஆரோக்கியராஜ், தலைமை பொருப்பாளர் ... |
இந்தியா | உதவித் தொகை வழங்கல் | புதுச்சேரி:ரெட்டியார்பாளையம் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகைகளை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., வழங்கினார்.ரெட்டியார்பாளையம் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு உதவித் தொகையும், சலவையாளர்கள் 6 பேருக்கு இஸ்திரி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடந்தது. பன்னீர் செல்வம் எம்.எல்.... |
இந்தியா | விழிப்புணர்வு நிகழ்ச்சி | புதுச்சேரி:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.புதுச்சேரி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருக்குமரன் (15). தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். இவர், உலக சுற்றுச் சூழல் தினத்தை முன் னிட்டு நேற்று கடற்கரை சாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.... |
தமிழகம் | போலி ஐ.டி.கார்டு மூலம் ஆள் மாறாட்டம் செய்துரூ.10 கோடி நிலங்கள் காற்றாலைக்கு விற்பனை: 9 பேர் கைது; | திருநெல்வேலி:போலி ஐ.டி.கார்டு மூலம் ஆள் மாறாட்டம் செய்து ரூ.10 கோடி மதிப்புள்ள நிலங்களை விற்பனை செய்த வழக்கில் 9 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலத்தை சேர்ந்த மம்மு என்பவர் கேரள மக்களிடம் பணம் வசூல் செய்தார். அதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் தரிசு நிலங்களை வாங்கி முதலீடு செய்தார். அதில் தேக்கு மரங்களை வளர்த்... |
தமிழகம் | வாசு.,அருகே பைக் மீதுபஸ் மோதி இருவர் படுகாயம் | சிவகிரி:வாசுதேவநல்லூர் அருகே பைக் மீது பஸ் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.வாசுதேவநல்லூர் அருகே சுப்பையாபுரத்தை சேர்ந்தவர் நாராயணன் (40). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரும் இவருடைய நண்பர் ஆத்துவழியை சேர்ந்த தர்மர் என்பவரும் வாசுதேவநல்லூர் சென்றுவிட்டு பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஆத்துவழி விளக்கு வந்த... |
இந்தியா | தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை : துணை கலெக்டர் எச்சரிக்கை | புதுச்சேரி:புதுச்சேரியில் 50 மைக்ரான் குறைவான பிளாஸ்டிக் பைகள் உபயோகப் படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.இது குறித்து துணை கலெக்டர் (வடக்கு) அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலிதீன், பிளாஸ்டிக் பைகளை பயன் படுத்தவும் விற்பனை செய்யவும், ... |
தமிழகம் | வாசு.,அருகே குடிபோதையில்கார் ஓட்டியவர் மீது வழக்கு | சிவகிரி:வாசுதேவநல்லூர் அருகே குடிபோதையில் கார் ஓட்டிய டிரைவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் பால்பாண்டியன் மற்றும் போலீசார் தலையணை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை செய்தபோது அவர் மது அருந்தியிருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் புளியங்கு... |
தமிழகம் | கடையம் தலைமலை அய்யன் கோயிலில்17ம் தேதி கும்பாபிஷேகம் | ஆழ்வார்குறிச்சி:கடையம் ராமநதி அணை அருகேயுள்ள தலைமலை அய்யன் கோயிலில் வரும் 17ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.கடையத்தில் ராமநதி அணைக்கு மேற்கே தலைமலை அய்யன் சாஸ்தா, ஆதிசங்கரி அம்பிகை, வனப்பேச்சியம்மன், மாடன், தம்பிரான் மற்றும் பரிவார தேவதைகள் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வர... |
தமிழகம் | சங்கரன்கோவில் அருகே விவசாயி கொலை சம்பவம்:பஞ்.,தலைவர் உட்பட 15 பேர் மீது வழக்கு | சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் அருகே மைப்பாறை கிராமத்தில் விவசாயி இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக பஞ்., தலைவர் உட்பட 15 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ளது மைப்பாறை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் போத்திராஜ்... |
இந்தியா | போலீசாரை பயமுறுத்த வெடிகுண்டு மிரட்டல் சாரணையில் தகவல் | காரைக்கால்:போலீசாலை பயமுறுத்தவே வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக, விசா ரணையில் தெரிய வந்துள்ளது.காரைக்கால் போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கடந்த நான்கு ஆண்டுகளாக மர்ம நபர் கடிதம் மூலமாக மிரட்டி வந்தார். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.கடந்த மாதம் 27ம் தேதி காரைக்கால் ... |
தமிழகம் | வெளிநாட்டில் வேலை வாங்கிதருவதாக ரூ.12 லட்சம் மோசடி: வி.கே.புரத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு | விக்கிரமசிங்கபுரம்:வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 12 லட்ச ரூபாய் வாங்கி கொண்டு மோசடி செய்த விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விக்கிரமசிங்கபுரம் சத்திரம் நடுத்தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு இருப்பதாக இதே... |
தமிழகம் | ஈரோடு மாவட்டத்திற்கு மில் வேலைக்குசென்ற ஆலங்குளம் இளம்பெண் மாயம்; மீட்க கோரி எம்.பி.,க்கு மனு | ஆலங்குளம்:ஈரோடு மாவட்டத்திற்கு மில் வேலைக்கு சென்று மாயமான ஆலங்குளம் இளம் பெண்ணை மீட்டுத்தர கோரி உறவினர்கள் நெல்லை எம்.பி., ராமசுப்புவிடம் மனு கொடுத்தனர்.ஆலங்குளம் அருகேயுள்ள கரும்பனூரை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் வசந்தா (17). இவர் ஈரோடு மாவட்டம் சங்ககிரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். மா... |
இந்தியா | அரசு சட்டக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நாரா கலைநாதன் வலியுறுத்தல் | புதுச்சேரி:அரசு சட்டக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூ., அறிவித்துள்ளது.இதுகுறித்து நாரா கலைநாதன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் நடந்த கல்வித்துறை விவாதத்தில் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நிரந் தர முதல்வர் ... |
இந்தியா | சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல் | காரைக்கால்:சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஷாஜகான் வழங் கினார்.காமராஜர் நிர்வாக வளா கத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சமூக நலத்துறை உதவி இயக்குநர் சையது அகமது வரவேற் றார். கணபதி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் முன்னிலை வகித் தார். அமைச்சர் ஷாஜகான் நலத்திட்ட உதவ... |
தமிழகம் | பாளையஞ்செட்டிகுளம் ஸ்ரீமன் நாராயண வைகுண்டர்தர்மபதி வைகாசி திருவிழா துவக்கம் | திருநெல்வேலி:பாளையஞ்செட்டிகுளம் ஸ்ரீமன் நாராயண வைகுண்டர் தர்மபதி வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பாளையஞ்செட்டிகுளம் ஸ்ரீமன் நாராயண வைகுண்டர் தர்மபதியில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 4ம் தேதி காலை 6 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இனிப்பு தர்மம் வழங்கப்பட்டது.
வரும் 13ம் தேதி அதிக... |
இந்தியா | நிதியுதவி வழங்கல் | புதுச்சேரி:முதலியார்பேட்டையில் குடும்பத் தலைவரை இழந்த 25 குடும்பங்களுக்கு நிதியுதவியை எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.புதுச்சேரி அரசு வருவாய் துறை மூலம் ராஜிவ் காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதலியார் பேட்டை தொகுதியில் குடும்பத் தலைவரை இழந்த 25 குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் வீதம் மொத்தம் 7 லட்சத... |
தமிழகம் | நெல்லையில் காயிதே மில்லத்பிறந்த நாள் விழா கொண்டாட்டம் | திருநெல்வேலி:நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காயிதே மில்லத் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.நெல்லை கைலாசபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்தில் காயிதே மில்லத்தின் 115வது பிறந்த நாள் விழா கொடியேற்றத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது.விழாவிற்கு மாவட்ட தலைவர் துராட்ஷா தலைமை வகித்தார். மாவட்ட செய... |
தமிழகம் | ரேஷன் அரிசி கடத்தலுக்கு மூளையாகசெயல்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது | திருநெல்வேலி:செங்கோட்டையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதற்கு, மூளையாக செயல்பட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.செங்கோட்டையில் இருந்து கேரளாவிற்கு அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்தது. ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்வதும், மீண்டும்... |
இந்தியா | மாணவர் காங்., நிர்வாகிகளுக்குஇரண்டு நாள் பயிற்சி முகாம் | புதுச்சேரி:புதுச்சேரி மாணவர் காங்., நிர்வாகிகளுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் இன்று துவங்குகிறது.புதுச்சேரி மாணவர் காங்., தலைவர் மிதுன் சக்ரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி மாணவர் காங்., நிர்வாகிகளுக்கு அகில இந்திய மாணவர் காங்., சார்பில் பயிற்சி முகாம் நடக்கவுள்ளது. இந்த பயிற்சி இன்று (6ம் தேதி) துவங்கி இரண்டு... |
தமிழகம் | அரசு வக்கீல்கள், போலீசாருக்குபுத்தாக்க பயிற்சி வகுப்பு | திருநெல்வேலி:நெல்லையில் அரசு வக்கீல்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்புகள் நடந்தன.நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட அரசு வக்கீல்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு நெல்லை எஸ்.பி.,அலுவலகத்தில் நேற்று நடந்தது. எஸ்.பி.,ஆஸ்ரா கர்க் தலைமை வகித்தார். டி.டி.பி.,பொறுப்பு ரகிம்... |
தமிழகம் | பாளை., தனியார் ஆஸ்பத்திரியில் 8 வாரம் சிகிச்சை:எஸ்.ஏ.ராஜாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு | திருநெல்வேலி:முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் இரட்டை ஆயுள்தண்டனை பெற்ற எஸ்.ஏ.,ராஜா 8 வாரம் பாளை. தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, அவரது நண்பர் பொன்ராஜ் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எஸ்.ஏ.,ராஜாவிற்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து மத... |
இந்தியா | சிமென்ட் சாலை பணி துவக்கம் | புதுச்சேரி:இடையார்பாளையத்தில் சிமென்ட் சாலை பணியை அனந்தராமன் எம்.எல்.எ. துவக்கி வை தார்.அரியாங்குப்பம் தொகுதி இடையார்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் வீதியில் சிமென்ட் சாலை மற் றும் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்காக ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்தப் பணியை பூமி பூஜை செய்து, அனந்தராமன் எம்.எல்.ஏ., துவ... |
தமிழகம் | ஆலடிப்பட்டி கோயிலில்யாகசாலை பூஜைகள் | ஆலங்குளம்:ஆலடிப்பட்டி வைத்தியலிங்கசுவாமி, அன்னை யோகாம்பிகை கோயில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் துவங்கின.ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி வைத்தியலிங்கசுவாமி, அன்னை யோகாம்பிகை கோயிலில் நாளை (7ம் தேதி) மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு யாகசாலை பூஜை நேற்று துவங்கியது. காலை 5 மணிக்கு விக்னேஸ்... |
இந்தியா | சுய உதவிக்குழு ஆண்டு விழா | புதுச்சேரி:கிருஷ்ணா நகர் சேவை மையம், பெண்கள் சுய உதவி குழுக்களின் 10ம் ஆண்டு விழா நடந்தது.மகேஸ்வரி தலைமை தாங்கினார். வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, முதல்வர் வைத்திலிங்கம் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, ஏழை மக்களுக்கு புடவைகள் வழங்கினர். வைத்தியநாதன், முனுசாமி, அமலோற்பவ மேரி, முரளி, ... |
தமிழகம் | முதல்வர் பிறந்த நாள் விழா:ஆலங்குளம் திமுக தொண்டர்கள் அதிருப்தி | ஆலங்குளம்;ஆலங்குளத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை கொண்டாடததால் திமுக நிர்வாகிகள் மீது தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.ஜூன் 3ம் தேதி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 87வது பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் திமுக வினர் வெகு விமரிசையாக கொண்டாடினர். ஆனால் ஆலங்குளத்தில் பிறந்த நாளை கொ... |
இந்தியா | சட்டசபை முற்றுகை: 110 பேர் கைது | புதுச்சேரி:கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிட முயன்ற பி.ஆர்.டி.சி., பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 110 பேரை போலீசார் கைது செய்தனர். பி.ஆர்.டி.சி.,க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் 110 பேர் தங்களுக்கு பணி நியமண ஆணை வழங்கக் கோரி, நேற்று கம்பன் கலையரங்கில் இருந்து பேரணியாக சட்டசபையை நோக்கி சென்றனர். அண... |
தமிழகம் | நர்சிங் படிப்பிற்கு கல்விக்கடன் மறுப்பு:ஆலங்குளம் மாணவி அவதி | ஆலங்குளம்:ஆலங்குளத்தில் நர்சிங் படிக்கும் ஏழை மாணவிக்கு கல்விக்கடன் வழங்க பாங்குகள் மறுப்பதால் படிப்பை தொடர முடியாத சூழலில் உள்ளார்.ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூர் காசியாபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். தினக்கூலி டிரைவராக வேலை செய்கிறார். இவரது மகள் நந்தினி. இவரை ஆலங்குளம் அருகேயுள்ள தனியார் நர்சிங் கல்லூரில் பாஸ்கர் சேர்த்துள... |
இந்தியா | கல்வி ஊக்கத் தொகைக்கு விண்ணப்பங்கள் வழங்கல் | புதுச்சேரி:எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஆசிரியர்கள் கூட்டுறவு வீட்டுவசதிச் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.புதுச்சேரி ஆசிரியர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளை கல்வியில் ஊக்குவிக் கும் பொருட்டு, எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், பி... |
தமிழகம் | கடையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு:மின்தடையை பயன்படுத்தி மர்ம கும்பல் கைவரிசை | ஆழ்வார்குறிச்சி:கடையத்தில் தொடர்ந்து 8 மணிநேர மின்தடையை பயன்படுத்தி தூங்கி கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.தற்போது கடையம், ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, முதலியார்பட்டி, பொட்டல்புதூர் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மின்தடை ஏற்பட்டுள்ளது. முன் அறிவிப்பு இல்லாமல் சுமார் 8 மணி நே... |
இந்தியா | ரேஷன் கார்டு கணக்கெடுக்கும் பணி: காலக்கெடு நீட்டிக்க கோரிக்கை | புதுச்சேரி:ரேஷன் கார்டு கணக்கெடுக்கும் பணிக்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண் டும் என, வில்லியனூர் லால்பகதூர் சாஸ்திரி மன்றம் கோரிக்கை விடுத் துள்ளது.இது குறித்து மன்றத் தலைவர் கலியமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி உணவு பங்கீடு வழங்கல் துறையின் மூலம் அங்கன்வாடி ஊழியர்களை கொண்டு வீடு வீடாக கணக் கெடுக்கும் பணி சென்ற... |
இந்தியா | மருத்துவ முகாம் | காரைக்கால்:காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை கிளையில் குடல்நோய் சிகிச்சை மருத்துவ முகாம் நடந்தது.காரைக்கால் பாரதி நகரில் உள்ள ஜிப்மர் கிளை மருத்துவ மனையின் தொலைதூர சேவை மையத்தில் வாரந்தோறும் நடக்கும் சிறப்பு மருத்துவ முகாமில் நேற்று குடல் நோய் தொடர்பான மருத்துவ மற்றும் சிகிச்சை முகாம் நடந்தது.இதில் ஜிப்மர் மருத்துவ மனையின... |
தமிழகம் | வீரவநல்லூரில் குடிநீர் கேட்டுபொதுமக்கள் முற்றுகை | வீரவநல்லூர்:வீரவநல்லூர் தம்பிரான் காலனியில் குடிநீர் வினியோகம் இல்லாததால் அப்பகுதி மக்கள் காலிகுடங்களுடன் பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.வீரவநல்லூருக்கு கிழக்கே உள்ளது தம்பிரான் காலனி. இப்பகுதியில் ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 5 நாட்களாக குடிநீர் ... |
இந்தியா | மூடப்பட்ட பாப்ஸ்கோ கடைமீண்டும் திறக்க கோரிக்கை | புதுச்சேரி:வில்லியனூரில் மூடப் பட்ட பாப்ஸ்கோ காய்கறி கடையை மீண்டும் திறக்க வேண்டும் என முன்னாள் துணை சபாநாயகர் பழனிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:வில்லியனூரில் பாப்ஸ்கோ மூலமாக வாரத் தில் 2 நாட்கள் கஸ்தூரிபாய் திருமண நிலையத்தில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்கப்பட்டது. கா... |
தமிழகம் | மருத்துவமனை விரிவாக்க கட்டடத்தில் பிணவறை உண்டா | மதுரை : மதுரை அரசு மருத்துவமனை விரிவாக்க கட்டடம் செயல்பாட்டிற்கு வந்த பின், இறந்தவர்களின் உடல் களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
"இடநெருக்கடியில் தவிக்கும் இம்மருத்துவமனைக்கு, காலியாக இருந்த கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாண்டை ஒதுக்க வேண்டும்' என, தினமலர் பலமுறை சுட்டிக்காட்டிய... |
தமிழகம் | ரேஷன் பொருள் விநியோகம் புதுகையில் குறைதீர் கூட்டம்: கலெக்டர் | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் நிலவரும் முறைகேடுகளை அறவே ஒழக்கும் விதமாக வரும் 18ம் தேதி தாலுகா தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சுகந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
பொதுவினியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை அறவே ஒழிக்கும் விதமாக தாலுகாதோறு... |
தமிழகம் | ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா | பாலமேடு : பாலமேட்டில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஏ.டி.எம் மையம் திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் பிரேமா தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாலசுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் கருப்பையா முன்னிலை வகித்தனர்.வங்கி மேனேஜர் சுப்பிரமணியன் வரவேற்றார். ஏ.டி.எம்., மேனேஜர் தெய்வேந்திரன் ஏ.டி.எம்., மையத்தை திறந்து வைத் தார். "" இ... |
தமிழகம் | பி.எம்.சி., நிறுவனம் ரூ.300 கோடி மோசடி? சி.பி.ஐ., விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் மனு | மதுரை : மதுரையில் பி.எம்.சி., நிறுவனம் மூலம் 300 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக பதிவான வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க கோரிய மனு குறித்து பதிலளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
புதுச்சேரியை சேர்ந்த ராஜேந்திரன் உட்பட 18 பேர் தாக்கல் செய்த மனு: மதுரையில் பி.எம்.சி., நிறுவனத்தில் மாநிலம் முழுதும் 30 ஆயிரம் ... |
தமிழகம் | செம்மொழி மாநாடு பிரச்சார வாகனம் புதுகையில் துவக்கம் | புதுக்கோட்டை: கோவையில் நடைபெறவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பிரச்சார வாகனத்தை மாவட்ட கலெக்டர் சுகந்தி துவக்கி வைத்தார். பொதுஅலுவலக வளாகத்தில் நடந்த துவக்கவிழா நிகழ்ச்சியில் எஸ்.பி., மூர்த்தி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் முத்துசாமி, நகர்மன்ற கவுன்சிலர் இப்றாஹீம் பாபு, ... |
தமிழகம் | முதல்வர் பிறந்த நாள் | வீரவநல்லூர்:வீரவநல்லூர் நகர திமுக சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவில் முன்னாள் கவுன்சிலர் கணபதி அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். முதியோர் இல்லத்திலுள்ள 60க்கு மேற்பட்ட முதியோர்களுக்கு நகர செயலாளர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அவைத்தலைவர் ராமகிருஷ்ணன், பொருளாளர் நடர... |
தமிழகம் | ஆதரவற்ற பெண்களுக்கு உறைவிடம், தொழிற்பயிற்சி | மதுரை : சமூகநலத்துறையின் கீழ் மதுரை உத்தங்குடியில் இயங்கிவரும் ஆதரவற்ற மகளிர் இல்லத்தில் இளம் பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப் பட்ட பெண்களுக்கு இலவச தங்குமிடத்துடன் தொழிற்பயிற்சி அளிக்கப் படுகிறது.
பெற்றோர் இல்லாத 16 வயது நிறைவடைந்த இளம்பெண்கள் வருமான சான்று, இருப்பிடச்சான்று, கல்விச்சான்று தரவேண்டியதில்லை. 16 முதல் ... |
தமிழகம் | தென்காசி - நெல்லைக்கு இரவு நேரம்கூடுதல் அரசு பஸ்கள் இயக்க கோரிக்கை | தென்காசி:தென்காசி-நெல்லைக்கு இரவு நேரம் கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தென்காசியிலிருந்து நெல்லைக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களின் மூலம் அதிகளவு வருமானம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு கிடைக்கிறது. இவ்... |
தமிழகம் | புதுப்பொலிவு பெறும்குற்றாலம் பூங்கா | தென்காசி:சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குற்றாலம் பூங்கா புதுப்பொலிவு பெற்றுள்ளது.குற்றாலத்திற்கு சீசன் காலத்தில் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு பொழுது போக்கும் அம்சங்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐந்தருவி வெண்ணமடை குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு குழ... |
தமிழகம் | நெல்லை-தென்காசி ரோட்டில்அகற்ற வேண்டிய ஆபத்தான மரம் | தென்காசி:நெல்லை-தென்காசி ரோட்டில் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் ஆபத்தான புளிய மரத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தென்காசி அருகே வேட்டைக்காரன் குளத்தில் நெல்லை-தென்காசி ரோட்டில் குறுக்காக செல்லும் அழுதகண்ணியாற்றின் மீது பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்தின் கீழ் பகுதியில் ரோடு வளைந்து செல்கிறது. இப்... |
தமிழகம் | முதல்வர் பிறந்த நாள் | திருவேங்கடம்:குருவிகுளம் ஒன்றிய தி.மு.க.சார்பில் பல்வேறு இடங்களில் முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த தின விழாவை முன்னிட்டு குருவிகுளம் ஒன்றிய பகுதி குருவிகுளம், நாலுவாசன்கோட்டை, அத்திப்பட்டி, திருவேங்கடம், இளையரசனேந்தல் உட்பட பல்வேறு இடங்களில் திமுக க... |
தமிழகம் | இலவச தொழிற்பயிற்சி | மதுரை : கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் சார்பில் டி.கல்லுப்பட்டியில் உள்ள குமரப்பா கிராமியத் தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனத்தில் ஜூன் 16 முதல், பல்வேறு தொழிற் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
ஆறுமாத கால தோல் பொருட்கள் மற்றும் காலணி தயாரிப்பு பயிற்சி, ஐந்து மாதகால தையல், எம்பிராய்ட்ரி(பெண்களுக்கு), நான்கு மாத கால எலக்ட்ரிக... |
தமிழகம் | குருங்குளத்தில் இணை மின்உற்பத்தி திட்டம் 107 கோடி ரூபாயில் நவீனமயம் தமிழக முதல்வர் துவக்கிவைப்பு | தஞ்சாவூர்: சென்னை தலைமை செயலகத்தில் இருந்து குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நவீனப்படுத்துதல் மற்றும் இணை மின் உற்பத்தி திட்டத்துக்கு ரூபாய் 107 கோடி மதிப்பிலான பணிகளை தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள பத்து கூட்டுறவு ஆலைகள் மற்றும் பொதுத்துறை சர்க்கரை... |
தமிழகம் | தென்காசி பள்ளியில்இலவச நோட்டு வழங்கல் | தென்காசி:தென்காசியில் இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு வழங்கப்பட்டது.தென்காசி காட்டுபாவா உயர்நிலைப் பள்ளியில் அனைத்து சமுதாய மாணவ, மாணவிகளுக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலவச நோட்டு வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் இஸ்மாயில் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் உசேன் வரவேற்றார். கவுன்சிலர... |
தமிழகம் | கொட்டாகுளத்தில்மாணவர் சேர்க்கை பேரணி | தென்காசி:கொட்டாகுளத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.கொட்டாகுளம் ஆர்.சி.துவக்கப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. சுமைதீர்ந்தபுரம் பஞ்., தலைவர் வசந்தா கல்யாணி பேரணியை துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோமதிநாயகம் முன்னிலை வகித்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழ... |
தமிழகம் | கீழப்பாவூர் பள்ளியில்நோட்டு வழங்கல் | பாவூர்சத்திரம்:கீழப்பாவூர் ஏ.வி. உயர்நிலைப் பள்ளி ஏழை மாணவ, மாணவிகளுக்கு நோட்டுகள் வழங்கப்பட்டது.கீழப்பாவூர் பொது நூலகத்தின் சார்பில் வாசகர் வட்ட தலைவர் பால்துரை ஏ.வி.உயர்நிலைப்பள்ளி ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டுகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் துரைராஜ், ஆசிரியர் முருகேசன், முருகன் கலந்து கொண்டனர். |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.